header photo

Sunday, July 15, 2012

தூறல்

ஓயாது தட்டிக் கொண்டே இருந்தது

சாளரம் திறந்து
”என்ன?” 
செல்லமாக அதட்டினேன்

முகத்தில் ”உப்”பென்று ஊதிவிட்டு 
சற்று விலகிச் சென்று
வெறுமனே 
பார்த்துக் கொண்டிருந்தது


குவளையிலிருந்த தேநீராக
மெல்லக் 
காலியாகிக் கொண்டிருந்தது
வலி 

மெது மெதுவே
எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
இதம் சொல்லிக் கொண்டிருந்த 
என் மழை 

தனி


சற்றுப் பொறுங்கள்
ஏன் இத்தனை கத்திகள்
அறுவை இதற்கு அவசியமற்றது

ஈரூற்றுக் குருதி
பெருமடங்கு வலி 
இருக்கட்டும்

தாயும் சேயும் நலம் என்பது
ஈருடல்களுக்கானது

நீண்டு கொண்டே செல்லும்
இப் பிரசவம்
நிகழ்ந்துதான் ஆக வேண்டும்

ஒற்றையாக