ஓயாது தட்டிக் கொண்டே இருந்தது
சாளரம் திறந்து
”என்ன?”
செல்லமாக அதட்டினேன்
முகத்தில் ”உப்”பென்று ஊதிவிட்டு
சற்று விலகிச் சென்று
வெறுமனே
பார்த்துக் கொண்டிருந்தது
குவளையிலிருந்த தேநீராக
மெல்லக்
காலியாகிக் கொண்டிருந்தது
வலி
மெது மெதுவே
எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
இதம் சொல்லிக் கொண்டிருந்த
என் மழை