header photo
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, October 7, 2010

கொடுமை கொடுமைன்னு தியேட்டருக்கு போனா...

மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு மக்கா... புரட்சி செஞ்சு ரொம்ப ரொம்ப நாளாச்சு.... சரி இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்துடுவோம்...

முதல்ல நிவிஸ் படிங்க மக்கா....  (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)



போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...


நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________

கையப் பரபரன்னு தேய்ச்சுக்கிட்டு யார் முடியப் பிடிக்கலாம்னு பார்த்தா மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி.

அவரு “ஆடி வெள்ளி”ன்னு ஒரு படம் எடுத்தாராமே... அதில ஒரு நாகப்பாம்பு நடிச்சுதே... அதுக்குப் பல்லே இல்லையாம்... அது எப்டி பல்லே இல்லாத பாம்பை நடிக்க வைக்கலாம்..?! பாம்புக்கான தகுதியே அந்தப் பல்லிலதானேய்யா இருக்கு...  அந்தப் பாம்புக்கு என்ன பேருன்னு எனக்குத் தெரியல.. (எங்கைய்யா நான் படம் பார்த்தாதானே.. இந்த எளவெல்லாம் தெரியறதுக்கு... போராடவே நேரம் பத்தல..) பேரு.. நாகராணியா இருக்கலாம்..  ஒரு வாட்டி ஏதோ நடந்தது நடந்து போச்சு... அப்போ நாம மிளகுப் பொங்கல் கொஞ்சம் அதிகமா சாப்ட்டு அசந்து தூங்கிட்டோம்..  ஸோ போனாப் போறதுன்னு விட்டுடலாம்... ஆனா இனிமே “போடி கள்ளி”ன்னு ஏதாவது படம் கிடம் எடுக்கிறப்போ... நாகராணி அம்மாவ நடிகையாப் போட்டா உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்...  நல்லா கோல்கேட் அட்-ல வர்ற மாதிரி.. பளிச்சுன்னு பல்லுள்ள பாம்பா பார்த்துப் போடனும்.... சும்மா பொட்டுன்னு ஒரு போடு போட்டா பொட்டுன்னு போற மாதிரி இருக்கனும்... ம்க்கும்.. எங்க இருக்கிறது... சாவனும்யா... பாம்புன்னா படம் எடுத்தா மட்டும் போதுமாய்யா..... நீங்களும்தான் எடுக்கறீங்க படம்... அதுக்காக நீங்க பாம்பா நடிச்சிட முடியுமா.... படமாய்யா எடுக்கிறீங்க படம்...

__________________________
அப்புறம்... சங்கர் சார ஒரு புடி புடிக்கலாம்...

என்னையா டைரக்டரு நீரு... சப்பான் நாட்ல தடுக்கி விழுந்தா ரோபோன்னு இருக்கிறப்போ.... வேலை மெனக்கெட்டு போயும் போயும் ஒரு மனுஷனுக்கு மேக்-அப் போட்டு ரோபோன்னு சொல்லி இருக்கீரே... யாரை அய்யா ஏமாத்துறீங்க.... நம்ம மூஞ்சில கேனன்னு எழுதி ஒட்டி இருக்கா என்ன... அட வீணாப் போனவைங்களே.... ஒரு ரோபோ வாங்க ரசினிக்குக் கொடுத்த சம்பளத்தில பாதி கூட வேணாம்யா... அறிவு வேணாம்... புடிங்கைய்யா கொடிய... தூக்குங்கைய்யா ரசினிய...

___________________________
நெக்ஸ்ட் யாருப்பா...

யோவ் மணி... எங்க ஒளியறீரு... முன்னாடி வாரும்யா.... அறிவிருக்காய்யா உமக்கு... இல்ல தெரியாம கேக்கறேன் அறிவிருக்காய்யா.... ஐசுவர்யா ராய் யாருய்யா..?! அபிசேக்கு பொஞ்சாதிதானே.... என்னா தெனாவெட்டுய்யா உமக்கு... தமிழ்ப் படத்தில அந்தம்மாவ எவனோ பிருத்வியோ... பருத்துவியோ அவனுக்கு பொண்டாட்டின்னு நடிக்க வச்சீரு...  அத விட மோசமா.... ஹிந்திப் படத்தில... அபிசேக்க ராவணனாக்கி... விக்ரம ஐசுவரியாக்கு ஆம்படையான் ஆக்கினீரே... மன்னிக்கவே முடியாதுய்யா.... விக்ரம தூக்கறமோ இல்லயோ... உம்மைத் தூக்கறோம்...

___________________________
அப்புறம்.... ஆ... எல்லாரும் வரிசை கட்டி வர்றாய்ங்களே.... என்னங்கையா இது... எங்க பார்த்தாலும் இதே எழவாப் போச்சு... யோ... எல்லாரும் நல்லாக் கேட்டுக்கிடுங்க... இனிமே... ஒரு படத்தில ஒருத்தன் நடிச்சா வேற படத்தில நடிக்கவே ப்டாது.... அந்தப் படத்தில அவன் அவனாவேதான் நடிக்கனும்... அவனுக்கு பொண்டாட்டி இருந்தா... அவதான் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கனும்... அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்...

சுமங்கலிய விதவையா... விதவைய சுமங்கலியா.... நல்லவன கெட்டவனா.. கெட்டவன நல்லவனா... பொறுக்கிய புறம்போக்கா... புறம்போக்க பொறுக்கியா... பல்லிய ஆமையா... ஆமைய பல்லியா... எல்லாம் நடிக்க வச்சீங்க கையக் கால உடைச்சி அடுப்பில வச்சிடுவோம்....

அப்புறம் மனுசப்பசங்க எல்லாம் சாமி வேடம் போட்டா கொன்னே போட்ருவோம்... ராமரு வேஷம் ராமர்தான் போடனும்.... லெட்சுமணன் வேடம் லெட்சுமணந்தேன் போடனும்... யேசு யேசுவாதான் இருக்கனும்...

நாம எல்லாம் இளிச்சவாயிங்களா என்ன.... கொக்கமக்கா... இருங்கடி வந்து பேசிக்கறேன்...
___________________________

Wednesday, March 10, 2010

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா........ அவ்வ்வ்வ்...

ஐயையோஓ.... இந்த நாயத்த கேக்குறதுக்கு யாருமில்லையா...?

//ஏன் கபாலி அழுறா..//
வா ராஜா வா உட்காரு..

//என்னது கால்ல கட்டு..//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா

//தங்கச்சிக்கு நாய் கட்சா நீ ஏன்யா கால்ல கட்டு போட்ருக்க//
அதாம்பா சொல்றேன் தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
குட்சயாண்ட போனேன் .. ஓஒன்னு அய்துகினிருந்தா.. அண்ணாத்த கீழாண்ட நாய் கட்சிட்டிச்சின்னு.. இன்னாம்மா இது  சொல்லிக்கினு.. இன்னா எனக்கு அர்த்தம் புரியலியேன்னேன்.. உட்னே காலாண்ட நாய் கட்சிட்சின்னா.. அண்ணாத்த நில்லுன்னு... நம்சு ஸ்கான இஸ்துகினு... நேர சூளமேடு வைத்தியர்கிட்ட போனேன்.. வைதியரே வைதியரே தங்கச்சிய நாய் கட்சிட்சி தங்கச்சிய இட்டார்டானு கேட்டா.. அவன் சொல்லிகிறான்பா நாய இட்டான்னுகினான்.. எனக்கு கோவம் வந்துகினு இன்னா வைதியரே சொலிகின நீநு கேட்டுகிநிருக்க  அவன் சொல்றான்.... அது பித்தம் புட்ச நாயா..........  பித்தம் புடிக்காத நாயா...... வெறி புட்ச நாயா.... வெறி  புடிக்காத நாயா....... நா பாக்க வேணாமானு கேட்டுகுனான்..
நாயம் தானபா..?
//நாயம்தான்//

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...

சரினு சொல்லிகினு நானும் துலுகானமும் மாரிதாசும் டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துக்கினு நேரா தங்கச்சி கிட்ட போனேன்..
தங்கச்சி தங்கச்சி எந்த நாய்மா உன்ன கட்சிதுனு கேட்டேன்... அவ கேட்டுகிரா ஒரு கேள்வி.. இன்னா அண்ணாத்த வெளாட்றியா... கட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?
நாயம்தானபா..?
//நாயம்தான்//

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...

அது எந்த நாய் பார்துகிலாம்னு சொல்லிகினு நானும் துலுக்கானமும் மாரிதாசும்,டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துகினு கெளம்பினோம்.. பாதி வழில துலுக்கானம் சொல்லிகினான் எனக்கு மூட் அவுட் ஆய் போச்சி பொண்டாட்டி நாபகம் வர்து நான் கயடிக்கிரேன்னுகினான்..
மாரிதாசன் எனக்கு மண்ட வலிக்குது நான் கயட்டிக்கிரேனுகினான்.. 
டில்லி சொல்லிகினான் ஒம்பதாவது சுத்து நாபகம் வருது நானும் கயட்டிக்கிறேனு கயட்டிகினான்.. கட்சில... சரி போங்கடா கய்திங்கலான்னு அப்டியே பார்த்தம்பா.. மார்கழி மாசமா.. எல்லா நாய்களும் மஜால இருக்குதுபா...
சகஜம் தானபா
//சகஜம்தான்//

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..

கட்சில அப்டியே பாத்துகினிருந்தம்பா.. ஒரு நாய் என்னியேஏ பார்த்துனிந்துது... இன்னாடா இது டிக்கா குடுக்குதேன்னு அப்டியே பாத்தம்பா.. லொல்னு கொற்சிதுபா... கட்சில இந்த நாய்தான் தங்கச்சிய கட்சிருக்கும்னு சொல்லி ஒரே அமுக்கு அமுக்குனம்பா...
அந்த நாய் என் காலையும் கட்சிட்சிப்பாஆ.... 

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...! 

முக்கிய குறிப்பு: 
தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... 
________________________________________________________________________________

Monday, December 28, 2009

'கலகல' மீள் - பதிவு..

எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) இன்னும் ஒரு மீள் பதிவு கூடப் போடலையே நானுன்னு நினைக்கும்போது... எனக்கே முடியல... அவ்வ்வ்வ்..! எதுனா இருக்கா அப்டின்னு பார்த்தாக்க ஒண்ணுமே உருப்படியா காணோம்.. அவ்வ்வ்வ்..! இப்போதான் தெரியுது நம்ம லட்சணம்... ம்க்கும்..! ஆனாலும் விட்டுடுவோமாக்கும்..! இதோ எந்த ஒரு மாற்றமும் இல்லாத ஒரு மீள் பதிவு..! (மாத்த டயம் லேதுப்பா.... அப்பாலிக்க வந்து பேசிக்கறேன்.. வர்ட்டா... ஜூட்டு..)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.

"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"

"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"

"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"

"நான் போகணும்"

"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"

இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.

வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.

யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!

அவ்வ்வ்வ்.... (இது ஒரு சின்ன மாற்றத்திற்காக...;))

__________

Tuesday, December 1, 2009

சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"

(இது ஔவையிடமிருந்து முதல் காப்பி.. எனக்கு எனக்கு.. எனக்கே எனக்கு அறிவுரையாக..)

யார் யாரோ... எப்டி எல்லாமோ காப்பி அடிக்கிறாங்க.. நானும்.. ஒரு காப்பி இடுகை... அல்லது இடுகை மொழியில் சொன்னால் மொக்கை..! மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சில்ல... (யாரது... அங்க.. ம்க்கும் எல்லாம் அதுதான்னு நொடிக்கிறது... இருடி ஆட்டோ அனுப்பறேன்..)

தம்பி வசந்து... நீ கேட்டுக் கொண்டதுக்கிணங்க...பு(ப)டிச்சவிக மாஆஆதிரி... எழுதுறேன்..! பார்த்துக்க..! அப்புறம் உன்னை யாரும் கண்டுக்கலை.. காதுக்கலைன்னு எல்லாம் சொல்லப்டாது..!

படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!
_____________________________________________________________
வசந்து கவிதை:

அரை அடி கூட இல்லை..
நமக்கிடையில் இடைவெளி..
இடையில் ஒரு இதயம்..
எங்கோ துடிக்கிறது..
ஓருடலில் தங்கி..
ஒன்றாய் சுவாசித்து..
ஆனாலும் கைக்கெட்டிய நீ..
வாய்க்கெட்டவில்லை பார்..
இதுதான் வாழ்க்கை...!

டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)

பின்னூட்டம்

ப்ரியா: //இடையில் ஒரு இதயம்.. // போட்டேன்னா... இதயம் இடையிலயாடா துடிக்குது..? முதல்ல டாக்டர் கிட்ட போ நீயி..!


____________________________________________________________
வானம்பாடிகள்:

நறுக்: 345.2 v.56

"ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது: அனோமா பொன்சேகா"

அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!

பின்னூட்டம்

ப்ரியா: ஜெனரல் பதவி போனாலும் பாரியார் அம்மணி சோதிடம் சொல்லி குடும்பத்த காப்பாத்திடும்பா..!

வானம்பாடி கவிதை:

மழைமுகில்கள் விலக்கி
எட்டிப் பார்த்துக் கண்ணடித்த
பிறைநிலவைப்
புறக்கணித்துச் சிரித்தேன்
என்னவள் புருவத்தின்
ஒரு முடிக்கு ஈடாகுமா
உன்னழகு..!

பின்னூட்டம்

ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..!


____________________________________________________________
அது சரி:

கிடைக்கோடுகள்... நெடுங்கோடுகள்...
பாலஸ்தீனியம்.. இஸ்ரேல்.. ஒபாமா..
எக்ஸ் ஈகுவல் டு மைனஸ் டூ
ப்ளஸ் ஸ்குவாயர்ட் பிராக்கெட்
மைனஸ் வை மைனஸ் த்ரீ
பிராக்கெட் க்ளோஸ்ட்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
பதில் கிடைக்காது போகலாம்..
கிடைத்த பதில் இரண்டாக இருக்கலாம்
இதில் எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!

பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)


____________________________________________________________
கதிர்:

கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!


____________________________________________________________
(அண்ணா) பிரபாகர்:

சரளா கிட்ட வடிவேலு அடி வாங்கிப் பார்த்திருப்பீங்க.. அண்ணன் அண்ணிகிட்ட அடி வாங்கிப் பார்த்ததில்லையே..

ஒரு நாள் எங்க வீட்டு வாசல்ல நின்னு தபூ சங்கர் கவிதை படிச்சுக்கிட்டிருந்தேன்.. பக்கத்தில பக்கத்து வீட்டு ரங்கமணி, எங்க வீட்டு தோட்டக்காரன் மாரியப்பனோட மகன் கிட்டா கிட்ட வெத்தல வாங்க வந்திருந்தான். எதிர் வீட்டுக் கிணத்தடில ஒரு பாட்டி குளிச்சுக்கிட்டு இருந்திருக்கு.. எனக்கு சத்தியமா அதப் பத்தி ஒண்ணும் தெரியாது...

கவிதை ரொம்ப இண்டரஸ்டிங்கா போச்சு "கர்ப்பக் கிரகம் தன்னைத் தானே அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?" என்று உரத்துப் படித்துவிட்டு மீண்டும் மௌனமாகத் தொடர்ந்தேன்.

முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க. ஒன்றும் புரியாம கேட்டதுக்கு பதில் சொல்லணும்னு "கோபித்துக் கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே என்றேன்" அதுவும் கவிதைதான்.

மீண்டும் கண் மூடித் திறப்பதற்குள் இருபது முப்பது அடிகள் விழுந்தன. அப்புறம் ஒன்றும் பேசாமல் போயி அடுப்பங்கரைல உக்காந்துட்டாங்க. அப்புறம் நாலு நாள் கழித்து ரங்கமணி சொன்னப்போதான் விஷயம் தெரிஞ்சது. உடனேயே ஒரு கவிதை கிறுக்கிக் கொண்டு போய் என் மனைவியிடம் நீட்டினேன்.

"இந்தா என் இதயம்
அதை நீ விளையாடும் வரை
விளையாடி விட்டு
தூக்கிப் போட்டு விடு

அதற்குத்தான் இது
படைக்கப்பட்டது"

அதுவும் தபூ சங்கர் கவிதைதான். அப்புறம் சமாதானமாயிட்டாங்க. பாவம் ரங்கமணி அவன் சொந்த செலவில வெத்தல வாங்கினதா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.

பிடிச்சிருந்தா சொல்லுங்க.. இல்லைனா முடிவு மாத்தி எழுதிடலாம்.

பின்னூட்டம்

ப்ரியா: அண்ணி அடி பின்னிட்டாங்க..! (ஏற்கனவே பாசமலர், டி ஆர் ன்னு நக்கல் ஜாஸ்தி ஆய்டுத்து..! இதுக்கு என்ன சொல்லுவாய்ங்களோ...)


____________________________________________________________
நேசமித்ரன்:

ஆண்ட்ரோஜன் அடுக்குகளின் இடுக்கில்
மோனலிசாக்களின் மோனப்புன்னகையில்
சைட்டோ டாக்சிக் ஏறிய செல்களுடன்
பிகாசஸ் வரையும் பிக்காசோ பாப்லோக்கள்

பின்னூட்டம்:

ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!


____________________________________________________________


மக்கா... இங்க திட்டுறது சரி... நோ ப்ரோப்ளம்... அது திட்டின கையோட.. இன்னைக்கு போட்ட இன்னொரு இடுகை (கவிதைன்னு பேரு வச்சிருக்கேன் அதுக்கு..) அங்கன கிடக்கு.. அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு போங்க.. சொல்லிப்புட்டேன்..! (இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்... அதான் ஒரு நாள்ல ரெண்டு இடுகை... ஹிஹி..) நோ பாட் வோர்ட்ஸ் ப்ளீஸ்..! (இன்னும் கொஞ்ச பேரு லிஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்டாங்க.. அப்புறம் பார்த்துக்கறேன்..)
____________________________________________________________

Sunday, November 22, 2009

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன..?



இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)

பை த வே நான் சொல்ல வந்தது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்... ஆனா பாருங்க சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு.

சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... சாரி கொள்ளுத் தாத்தா இருந்தாருங்க.. ஐயோ அவர நான் கண்ணால கூட பார்த்ததில்லீங்க... (இது யாருப்பா கண்டு புடிச்சது... கண்ணைத் தவிர வேற எத வச்சு பார்க்கறாங்களாம்.. ஹ்ம்ம்... எல்லாம் நேரம்..)... ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். அந்தாளோட 'நச்' விமர்சனங்கள் அட்டகாசம். ஜேசுதாஸ் போல பெரிய பெரிய பாடகர்கள் எல்லாம் அவரு கச்சேரிக்கு வர்றாருன்னா வயித்தப் புடிச்சுக்கிட்டு ஓடுவாங்களாம். சுதா ரகுநாதன் சங்கீதத்த கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணுவாராம். ரொம்ப தில்லான ஆளு...!

இப்போல்லாம் சுதா ரகுநாதன் பேட்டி கொடுக்கிறப்போ "சுப்புடு மாமா...".. "சுப்புடு மாமா"... என்னோட குறைகளைச் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டினது அவங்கதான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுறாங்க. சுப்புடுவும் படிப்படியா சுதா ரகுநாதனோட ரசிகராகி ஆஹா... ஓஹோன்னு புகழ்ந்துட்டுதான் போனாரு.

இவரோட விமர்சனம் படிக்கிறவங்க வாய சப்புக்கொட்டிக்கிட்டே படிக்கலாம்... என்னா கிண்டலு... என்னா நக்கலு... ஆனா விமர்சனத்துக்கு ஆளானவங்க பாடு மகா திண்டாட்டம். ஆனாலும் பாருங்கோ ஆரோக்யமான விமர்சனம் மிகவும் அவசியம். விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லையெனில்... ஒன்றும் செய்யாதிருங்கள்... ஒன்றும் சொல்லாதிருங்கள்... ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...( ஐயோ அது நானில்லீங்கோ..)

நம்ம ஆளுங்கதான் எதிர்மறையான விமர்சனம்னா பூச்சிமருந்து சாப்ட்ட மாதிரி வாந்தி வாந்தியா எடுக்கிறாங்க. ஒரு ஆபீஸ்ல பாஸ் வந்து.. இங்க பாரு இதில ஒரு தப்பு நடந்து போச்சுன்னா... 'ஓ ஐ ஆம் வெரி சாரி... ஐ ஷால் பி மோர் கேர்ஃபுல்' அப்டின்னு ஈஸியா எடுத்துக்கிட்டு கவனமா இருக்கிறவங்க எத்தன பேரு..? (ஐரோப்பா போன்ற மேலைத்தேய நாடுகளில் இது சர்வ சாதாரணம்..) ஆனா நாம வானம் வசப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை... உணர்ச்சிவசப்படுவதில் பிரியப்படுகிறோம். ஆரோக்யமான விவாதங்கள் கூட வைப்பதில்லை. என்னய்யா பண்ணிட்டான்னு கேட்டா போதும்.. 'நீ மட்டும் கொம்பா...'... 'நீ பண்ணாத தப்பா..' .. 'உன் தாத்தா பண்ண தப்பு தெரியுமா' என்று பத்தாவது தலைமுறை தாண்டி இழுத்து, தப்புக் கண்டு பிடிப்பார்கள்.

இதனால் யாருக்கும் எதுவும் ஆகப் போறதில்லை. தற்பாதுகாப்பு இதற்கு அவஸ்யமில்லை. ஆரோக்யமான விமர்சனங்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆரோக்யமாக விவாதிக்கப்பட வேண்டியவை. வன்மத்தில் விளைந்த விமர்சனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு வேலை மெனக்கெட்டு பக்கம் பக்கமாக விரிவுரையாற்ற வேண்டியதில்லை... அலட்சியப்படுத்தி விடலாம்... அல்லது ஒரு புன்னகையைப் பதிலாக்கலாம்.. (ரொம்பத்தான் ஓவரா போய்க்கிட்டிருக்கேனோ...)

'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '

நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா... நெசம்மாவே அப்டித்தானா அப்டின்னு எனக்கு ரொம்ப மண்டைக் குடைச்சலுங்க....! அதான் மாடரேஷன் போட்டிருக்கேன்ல... ரொம்ப ஓவர்னா சைலண்டா விம் போட்டு கழுவிடலாம்...

இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!


தலைப்புக்கு விடை: சத்தியமா நான் இல்லை...

_____

Sunday, October 18, 2009

வடிவேலு vs. வெடிவாலு..

காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..!

ப்ளாக் பக்கம் பாய்ந்து, பாவம் பார்த்து பின்னூட்டம் போட்டுச் சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றியைச் சொல்லி.. ஜிமெயில் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வடிவேலு ஆன்லைனில் இருந்து கொண்டு.. 'அடியே வெடிவாலு' என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. காலம் கடந்து உதித்த ஞானோதயம்.. இதை வச்சு சூப் கூட பண்ண முடியாது.. சமாளிப்போம்.

வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..?

வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..

வெடிவாலு: ஹிஹிஹி..

வடிவேலு: ஆங்.. சிரிக்கிறியா நீயி..? ஏண்டி.. நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா? காதில பஞ்சு கிஞ்சு வச்சிருக்கியா..?

வெடிவாலு: வெடியாவது.. கடியாவது.. அதெல்லாம் எனக்கு கேக்காதுண்ணே..

வடிவேலு: ஏண்டியம்மா.. காது கேக்"காது" போயிடிச்சா.. ஏன்.. ஏன் கேக்காதுங்கிறா நீயி..

வெடிவாலு: ரொம்பத்தாண்ணே கிண்டலு.. உங்க வெடில இருந்து ஒரு பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில உக்காந்துட்டிருக்கேன் நானு.. நீங்க ராஜபக்சேக்கு ராக்கெட்ல வெடி போட்டாலும் எனக்கு கேக்காதுண்ணே..

வடிவேலு: அட தீபாவளிக்கு நம்ம ஒபாமாவில இருந்து எல்லாரும் வாழ்த்து சொல்லுறாய்ங்க.. பட்டாசு வெடிக்க விட மாட்டாய்ங்களோ ...

வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?

வடிவேலு: என்னாது..? நக்கல் பண்றியா நீயி..? எனக்கு லொள்ளுன்னு நீ சொல்லுறியா..

வெடிவாலு: அட மெய்யாலுமே தெரியாதுங்கண்ணே...

வடிவேலு: அப்போ நேத்து தீபாவளி பத்தி இடுகை எல்லாம் போட்டியே..

வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..

வடிவேலு: அடப் பன்னாடையே.. எப்பவுமே இப்டித்தானா.. இல்ல இப்போதானா..?

வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல..

வடிவேலு: அப்போ பட்டாசு...?

வெடிவாலு: நாம கொடுத்து வச்சவைங்கண்ணே.. காசு கொடுத்தெல்லாம் பட்டாசு வாங்க வேணாம்.. நீங்க வெடிக்கிற வெங்காய வெடி, அந்த வெடி, இந்த வெடி எல்லாம் இல்லைங்கண்ணே.. பத்துப் பதினைஞ்சு ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. எல்லாம் வந்து விதம் விதமா வித்தை காட்டி வெடிப்பாய்ங்கண்ணே... நானு பாட்டி பண்ண பலகாரத் தட்ட மாமரம் கீழ வச்சிக்கிட்டு.. காத பொத்திக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டிருப்பேண்ணே...

வடிவேலு: அடி ஆத்தீ.. பெரிய ஆளுதாண்டியம்மா நீயி... நீ காதப் பொத்திக்கிட்டிருந்தா.. பலகாரத்த காக்கா கொத்திக்கிட்டு போய்டுமேடி.. நீ எப்போ பலகாரத்த சாப்டுவா..

வெடிவாலு: அடப் போங்கண்ணே.. அப்போ ஒரு ஈ காக்கா பறக்காதுண்ணே.. அப்புறம்.. என்னதான் வானத்தில பறந்து வெடிச்சாலும்.. பறந்து பறந்து வெடிக்க முடியாதுண்ணே.. காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..

வடிவேலு: ஆஹா.. உன்னை நான் என்னமோன்னு நினைச்சேன்.. ரொம்ம்ம்ம்ம்ப.. டெக்நி(ந)க்கலாதான் பலகாரம் சாப்ட்டிருக்கா நீயீ... அவ்வ்வ்வ்வ்வ்..

வெடிவாலு: ஹிஹி..

வடிவேலு: இப்போ அந்த பலகாரம் எல்லாம் மிஸ் பண்ணலியா நீயி..

வெடிவாலு: பலகாரம்.. பாட்டி.. அம்மி.. ஆட்டுக் குட்டி.. எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. ஆனா பட்டாசுச் சத்தம் கேக்கலைன்னு ஒரு நிம்மதி அம்புட்டுதேன்..

வடிவேலு: அடிப்பாவி.. இப்டி கூலா சொல்லுறியே.. எனக்கு காமெடி மறந்து போய்டும் போல இருக்கேடி... ஆத்தீ மகமாயீ... இவ கிட்ட போயி வாயைக் கொடுத்து என் தொழிலுக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே..

வெடிவாலு: அண்ணே.. என்னண்ணே ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு.. நம்ம இஸ்கூல்ல தீபாவளிக்கு கட்டுக் கட்டா தீபாவளிக் கார்டு வாங்கி.. விதம் விதமா வாழ்த்துச் சொல்லி.. நண்பிங்க பார்க்காத சமயம் பார்த்து புத்தகத்ல ஒளிச்சு வச்சிடுவோம்ண்ணே.. அதில எப்டி எப்டி எல்லாம் எழுதி இருக்கும்னு எடுத்து விடுறேன்.. கேட்டுக்கிட்டு இந்த பிஞ்சு போன பட்டாசுக்கெல்லாம் பயப்டாம ஷூட்டிங் போயீ.. பஞ்சு டயலாக் விட்டு அசத்துங்கண்ணே..

வடிவேலு: ஆங்.. ? அப்டிங்கிறா..? ச்செரி சொல்லு பார்க்கலாம்...:-?

வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..

வடிவேலு: என்னாது.. அடிப் பாவிங்களா.. ஒரு ஈவு இரக்கம் இல்லாம இப்டி ஒரு வாழ்த்தா.. எத்தன பேரு வடிவேலு ரசிகையா இருக்காகளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

வெடிவாலு: இருங்கண்ணே உணர்ச்சிவசப் படாதீங்க.. அப்டி யாரும் இல்லீங்கண்ணே..

வடிவேலு: அடிப்பாவி இதுக்கு அதுவே மேல் ஆச்சே.. அவ்வ்வ்வ்.. ச்செரி சொல்லு..

வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "

வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..

வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..

வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு..

வெடிவாலு: "மேல"..

வடிவேலு: ஆ...! எலிவாலுன்னு பேரு வச்சிருக்கனும்டி உனக்கு.. கடிக்காம மேல சொல்லு தாயீ.. அவ்வ்வ்வ்...

வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..

வடிவேலு: நிறுத்து நிறுத்து நிறுத்து.. அது என்ன .. ஆம்பள நடிகருங்க பேராவே சொல்லிக்கிட்டு போறா..

வெடிவாலு: ஹிஹி.. பொண்ணுங்க ராஜ்யம் அண்ணே.. பொம்பளப் பசங்க படிக்கிற இஸ்கூலு.. சொல்லி முடிக்க விடுங்கண்ணே..

வடிவேலு: ஆஹா.. அப்டிப் போகுதா கத.. கொலைகாரக் கூட்டமால்ல இருக்கு.. நல்ல வேளை நான் மழைக்கு கூட இஸ்கூல் பக்கம் ஒதுங்கல.. யப்பா.. நீ சொல்லு.. நீ சொல்லு..

வெடிவாலு: ம்ம்.. மங்களா டீச்சர் செத்தாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செத்தாலும்..

வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..

வெடிவாலு: அட ச்சே.. இதாண்ணே உங்க கூட.. வரலாற்றில ஐன்ஸ்டீன் வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காரு..

வடிவேலு: ஓஹோ.. அப்டி வர்றியா நீயி... எது கேட்டாலும் பதில் வச்சிருக்காளே இவளு.. ச்செரி சொல்லு..

வெடிவாலு: ச்சே விடுங்கண்ணே.. நிறுத்து.. நிறுத்துன்னு.. அபசகுனமா பேசிக்கிட்டு.. எனக்கு சொல்லுற மூடே போச்சு.. அப்போ இருந்தத விடுங்க.. இப்போ இருக்கிறதில ஒண்ணு ரெண்டு பிட்ட போட்டு நான் எஸ்கேப் ஆவுறேன்.. மக்கள் கொலை வெறியோட படிச்சுக்கிட்டு இருக்காங்க..

வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..

வெடிவாலு: அது சரி.. த்தோ முடிச்சிட்டோம்ல.. "பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."

வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..

வெடிவாலு: ஃபீல் பண்ணாதீங்கண்ணே.. நாளைக்கு....

வடிவேலு: என்னாது..? நாளைக்குமா..? ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...

வெடிவாலு: அண்ணே..

ஜிமெயில் : We're experiencing technical difficulties that may prevent your chats from being sent...

வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..

பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..


______

Sunday, October 11, 2009

திக்குத் தெரியாத காட்டில் ஈ தேடி இளைத்தேன்..

ஆபீஈஸ்ல ஈ விரட்ட ட்ரை பண்ணி.. கடைசில ஈ என்னை விரட்டி வீட்டுக்கு வந்து உக்காந்து ஒரு ஈ .. ச்சே.. காப்பிஈ சாப்டலாம்னு பார்த்தா போன் டிரீஈங் டிரீஈங்-னு ரீங்காரிக்குது. இதுக்கு ஈயே ஓட்டி இருக்கலாம்னு சலிச்சுக்கிட்டு போன் எடுத்து.. யா ப்ரியா அப்டின்னா.. எதிர்ல.. ஒரு அம்முனி ஜெர்மன்ல பதட்டமா பேசுதுங்க.

போன்ல அசால்டா ஹல்லோ சொல்லி எதிர்ல திடீர்னு டமில் தவிர்ந்த வேற பாஷை கேட்டிச்சின்னா நாம உஷாராகி ஃபுல் அட்டென்சன்ல பேசுவோம்ல.

சொல்லுங்கம்முனி..

நான் மனோதத்துவ நிபுணிஈ.. இங்க ஒரு பிரச்சன.. ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஈஸ்..

சொல்லுங்க.. என்ன..?

இல்ல ஒரு டமில் ஃபமிலீஈ.. (என் காதில ப்ரூஸ் லீஈ ன்னு கேக்குது).. கொஞ்சம் பிரச்சன.. நேர வர முடியுமா ப்ளீஸ்..

(கராத்தே தெரியலைனாலும் கைய மடக்கிக்கிட்டு..) எப்போ.. இப்போவா?

ஹிஹி.. ஆமாம் ப்ளீஸ்.. சாரிஈ.. இட்ஸ் அன் எமெர்ஜென்சிஈ..

ஹ்ம்ம்.. உங்க அட்ரஸ்? ............ ஓகே.. ஆம் ஆன் த வே..

தாங்க் யூ.. தாங்க் யூ.. இட்ஸ் வெரி நைஸ் ஆஃப் யூ..

ஹிஹி.. நோ ப்ராப்ளம்..

காப்பீஈ மேக்கர சோகமா பார்த்து.. ஒரு கைல ஹான்ட்பாக் எடுத்துக்கிட்டு.. மத்த கைல ஷூ எடுத்து கால்ல மாட்டிக்கிட்டு.. கார் கீஈய வாயால கவ்விக்கிட்டு கார் வரைக்கும் தத்தி தத்தி ஷூ மாட்டி முடிச்சு.. கார கிளப்பி.. டிராபிக் ஜாம்ல அவிஞ்சு அங்க போனா..

ஒரு அம்முனி வாசல்லையே கைய பிசைஞ்சுக்கிட்டு நிக்குது.. என்னிய பார்த்ததும் ஈஈன்னு இருக்கிற பல்லு ஃபுல்லா காண்பிச்சு சந்தோஷமா சிரிக்குது... அட அட.. காப்பியாவது ஈயாவது.. இந்த ஈஈ டானிக் போதும்..

பதிலுக்கு ஒரே ஒரு ஈய திருப்பி.. அறிமுகம் பண்ணிக்கிட்டு.. இன்னா மாட்டருன்னா.. கிட்ட கிட்ட அழுதுடிச்சி அந்தம்முனி..

மெதுவா கைய குலுக்குற சாக்கில ஆறுதலா கைய தட்டிக் கொடுத்து.. என்னங்கம்முனின்னு இதமா கேட்டா..

இல்ல.. ஒரு டமில் ஃபாமிலீஈ.. அஞ்சு மணிக்கு வச்ச அப்பாயின்ட்மென்ட்.. இப்போ ஆறு மணி ஆச்சு.. இன்னும் வரலை.. எனக்கு ஆறரைக்கு அடுத்த அப்பாயின்ட்மென்ட் இருக்கு.. இவங்க இப்போ போன் பண்ணி.. அட்ரஸ் தெரியாம கிழக்கால வர்றதுக்கு மேற்கால போய்ட்டாங்களாம்.. அவங்களுக்கு புரிய வைக்கிறதும் கஷ்டமா இருக்கு.. நான் போன்ல அப்டி இப்புடின்னு கொஞ்சம் கோபமா பேசிப்புட்டேன்.. தப்பா.. அப்டின்னு அழுவுது..

(அட ச்சை.. சப்ப மாட்டரு.. இதுக்கு போய்.. ஒரு காப்பிய மிஸ் பண்ண வச்சுட்டியளே அவ்வ்வ்வ்வ்வ்.. ச்சே நானும் அழலாமா..) ச்சே ச்சே.. நீங்க வேறைங்கம்முனி.. நம்மாளுங்களுக்கு இதெல்லாம் உறைக்காது.. நீங்க திட்டினதெல்லாம் திட்டே இல்லிங்கம்முனி.. நம்ம ஊர்ல சூப்பரா திட்டுவாங்கம்முனி.. பார்த்துக்கலாம் உக்காருங்க..

ஈஈ.. தாங்க் யூ.. டீஈ.. காப்பீஈ..?

ஹிஹி.. டீஈ ப்ளீஸ்... (இது போடுற கஷ்டத்திலதானே காப்பீஈ மேக்கர நாடினோம்.. நம்ம இஷ்டக் கடவுள் முருகன் எப்டி எல்லாம் நமக்கு ஹெல்ப் பண்றாரு.. தாங்க்ஸ்பா..)

சரியா டீஈ.. சாப்ட்டு முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்திச்சு.. (இதில நம்மாளுங்க ரொம்ப கரீஈட்டா இருப்பாய்ங்க..)

மணிச் சத்தத்தில.. முத்தாக இருந்த அம்முனியின் மூஞ்சி சிவந்து ரூபியாகி ஜொலித்தது... மெய்யாலுமே திட்டலாம்கிறியா அப்டின்னு இன்னொரு வாட்டி உறுதிப்படுத்தி.. நான் திட்டுறத நீ அப்டியே உன்னோட பாஷைல திட்டணும் செரியான்னு.. கேட்டுக்கொண்டு.. கதவைத் திறந்தது..

அந்த மூஞ்சிங்கள பார்த்ததும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.. கைல எம்ப்டியா இருந்த டீஈ கப் தூக்கி சாப்டுற மாதிரி சிரிப்ப மறைச்சு.. சமாளிச்சுக்கிட்டு பார்த்தா.. அந்த மூஞ்சிங்க என் மூஞ்சிய அங்க எதிர் பார்க்காததால விதிர்விதிர்த்து போய் நிக்குதுங்க..

வேற ஒண்ணுமில்லீங்க.. செரியா ரெண்டு நாள் முன்னாடி.. ஒரு மீட்டிங்ல.. இதே மாதிரி ஒரு மணி நேரத்துக்கு மேல லேட்டா வந்து.. அட்ரஸ் மாறிப் போயிட்டோம்னு சொன்ன அதே மூஞ்சிங்க.. அவங்க நேரம்.. அங்கயும் நான்தான் குடுமி பிரிக்க போயிருந்தேன்.. ( அட.. குடுமி பிடி சண்டைன்னா.. விளக்கி/விலக்கி விடுறதுதானுங்கோ.. இவங்கள எல்லாம் திருத்த போயீ முடியுற காரியமா ஸ்ஸ்ஸப்பா..)

இந்த அம்முனி அவங்களுக்கு என்னிய அறிமுகப் படுத்த.. அவங்க ஈஈஈன்னு.. எனக்கு கும்பிடு போட.. அப்போதான் பார்க்கறாப்ல ஹல்லோ சொல்லி உள்ளார கூப்பிட்டு.. ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி திட்டி.. (அதுதானுங்க.. அந்தம்முனியும்.. நானும்.. மாத்தி மாத்தி கிட்டத்தட்ட ஒரே மாதிரித் திட்டி..) அனுப்பிச்சு.. அம்முனிட தாங்க்ஸ் அண்ட் ஈஈ.. வாங்கிக்கிட்டு திரும்பி வர்றப்போ.. சிடி ப்ளேயர்ல சஞ்சய் சுப்ரமணியம் "திக்குத் தெரியாத காட்டில்.. தேடி தேடி......ஈஈ இளைத்தேன்" (அட இங்கயும் நம்ம பாரதி..) பாடிக் கொண்டிருந்தது கோ-இன்சியா தெரியலீங்க.

(சில பேரு நான் தமிழினத் துரோகின்னு நினைக்கிறதுக்கும் இப்படியான நிகழ்வுகள் வழி வகுத்ததுண்டு.. அதுவும் எப்போவாவது சொல்லுவோமில்ல..)

.....

Tuesday, September 22, 2009

நக புராணம்..

"புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும்"

மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின. "ஐயோ.. வெள்ளிக்கிழமை!", "நகம் வெட்டலை". "சிவபுராணம் முடிந்ததும், நக புராணம் ஆரம்பிப்பாங்களே". "படிப்பு விஷயத்தில அடி வாங்காத உனக்கு, விதி நக ரூபத்தில வருதேடி".

"ஈசன் 'அடி'போற்றி, எந்தை 'அடி'போற்றி
தேசன் 'அடி'போற்றி, சிவன் சே'வடி'போற்றி
நேயத்தே நின்ற நிமலன் 'அடி'போற்றி
மாயப் பிறப்பறுக்கும், மன்னன் 'அடி' போற்றி"

நேரம் காலம் தெரியாதவங்கப்பா.. இப்போ போய் எத்தனை 'அடி', புள்ளயோட பிரச்சனை புரியாம.

ப்ரியாவிடம் அப்பவே மாணிக்கவாசகர் ஆழ்ந்த அன்பு வைத்திருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் 'சிவபுராண'த்தை இவ்வளவு நீட்டி இருக்க மாட்டார்.

நல்ல வேளை இந்த "கரங்குவிவார்" ஆரம்பத்திலேயே வந்திச்சோ, தப்பிச்சோம். இங்கதான் நிக்கறார் நம்ம பரிமேலழகர்.

பாட்டியின் பாசமரத்தில் கட்டிக் காத்த மாங்காயை பழுக்க முன்னாடியே பதம் பார்த்த பரதேசி.. உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி.

அவளின் அசாதாரண உயரத்தின் உபயம், எப்பொழுதும் முதல் வரிசை. வாய் தன் பாட்டுக்கு "கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி" பாட, கண் மெதுவே உயர்ந்து, சித்ரா டீச்சரின் பொசிஷன் பார்த்தது. ஆ..! தெய்வம் டீச்சர் நீங்க. கண் மூடி, பக்திப் பழமாக நின்றிருந்தார்கள்.

மெதுவாக அடி அடியாக "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகி" பின்னால் நகர்ந்து.. "செல்லா நின்ற, இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா.

"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் ", ப்ரியா அரவமற்று அவள் நகங்களை, தன் பற்கள் கொண்டு அழிக்க ஆரம்பித்தாள்.

"தயாவான தத்துவனே.. இதோ கடைசிச் சுண்டு விரல் நகம் மட்டும் பாக்கி. "அப்பாடா அதுவும் ஆச்சுடா.. "மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே"! மலர்க்கரங்கள்.

"போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்.. மீட்டிங்கு வந்து,".. வந்துட்டோம்ல முதல் வரிசைக்கு. டீச்சர் கண்ணை திறந்தப்போ, ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, பரவசமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்.

திருச்சிற்றம்பலம்
____/\____

Friday, September 18, 2009

கடைசி வரை யாரோ...?

வேற ஒண்ணுமில்லீங்க.. இந்த ப்ளாக் படுத்தும் பாடு தொடருதுங்கோவ்...

இடுகைக்கு டைட்டில் வைக்கிறதில நாமதான் கில்லாடின்னு இருந்தா.. கில்லாடிக்கு கில்லாடி நாட்டில உண்டுன்னு.. கன்னத்தில சப்புன்னு அறைஞ்சு சொன்னாதான் நம்ம மரமண்டைக்கு உறைக்குதுங்க.

அன்னிக்கு இப்டித்தான் பாருங்க...


'கொஞ்சம் சீரியஸ்' அப்டின்னு போஸ்ட் டைட்டில் போட்டு, தமிழ்மணம்-ல கோர்த்து விட்டு.. அப்டேட் பண்ணிட்டாய்ங்களான்னு பார்க்கலாம்னு போனா, 'நீ செத்துப் போவாய்'ன்னு யாரோ புண்ணியவான்/வாள் போட்ட இடுகையோட டைட்டில்ல தூக்கி வாரிப் போட்டுடிச்சுங்க. (அவசரப்பட்டு 'கூக்ள' வேண்டாம்.. எல்லாத்தையும் நம்பிடுறதா மக்கா..)

அதிர்ச்சில உறைஞ்சு போயீ.. நிஜம்மாவே போய்டுவேன் போலயேன்னு, என்னையே ஒரு உலுக்கு உலுக்கிக்கிட்டு ஓடிப் போய்.. 'Tom & Jerry' ல வர்ற Tom Cat மாதிரி கண்ணாடி முன்னாடி நின்னு நாக்கு, மூக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு அப்பாடான்னு வந்து நம்ம, ப்ளாக் பக்கத்த பார்த்தா.. வானம்பாடிகள் ஐயா.. இடுகை 'தொலைந்து போனவர்கள்'ன்னு இருக்குதுங்க.

எனக்கு ஒரு நிமிஷம் .. நாம இப்போ பூலோகத்ல இருக்"கோமா"? இல்ல நர/மேல் லோகத்ல இருக்"கோமா"?ன்னு புரியாம 'கோமா' லெவலுக்கு போயிட்டேனுங்க. ஆட்டோமட்டிக்கா மேல் லோகத்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, நாம இல்லைன்னா உடனேயே குஷியாகி 'தொலைஞ்சா'ன்னு ப்ளாக் போடறாங்கடா ங்கொக்கமக்கான்னு கோபம் கோபமா வருதுங்க.

இதில வேற அகதா கிறிஸ்டிய படிச்சிட்டிருக்கிறாப்ல நான் செத்ததுக்கு யாரு காரணம்னு டிடெக்டிவ் ரூட் ஒரு மூலைல ஓடிக்கிட்டிருக்கு. அந்த 'நீ செத்துப் போவாய்'தான் காரணமோ? அது என்னதான்னு பார்த்துடலாமான்னு பார்த்தா.. மேல போய்ட்டோம்ங்கிற நினைப்ப மீறி பயம்மா இருக்குதுங்க.

உள்ள போய் படிச்சா.. நீ இந்த இடுகைய இருநூறு பேருக்கு அனுப்பு.. இல்லைன்னா செத்துப் போவாய்ன்னு சொல்லுவாய்ங்களோன்னு வலது பக்க மூளை சம்மந்தமே இல்லாம லாஜிக் தேடுதுங்க. பொத்துடி உனக்கும் லாஜிக்குக்கும் என்ன சம்மந்தம்னு இடது பக்க மூளை, வலது பக்க மூளைய பக்கம் பக்கமா திட்டுதுங்க. நான் மூளையே இல்லாம செண்டர்ல நின்னு இவங்க கூட மல்லுக் கட்ட முடியுமா சொல்லுங்க?

வெறுத்துப் போய்.. இன்னொரு திரட்டில எட்டிப் பார்த்தா "நீங்களும் வெட்டியான் ஆகலாம்".. அலறிட்டேனுங்க. என்னய்யா சொல்லுதீக..? உயிர் இருக்கா இல்லியான்னே இன்னும் கன்ஃபார்ம் ஆகல. அதுக்குள்ள நான் வெட்டியான் கோர்ஸ் படிச்சு எனக்கே கொள்ளி வைக்கணுமா.. அடங்கொன்னியான்னு..

ஹார்ட் கன்னாபின்னான்னு அடிக்குதுங்க.. எத சாப்ட்டா பித்தம் தெளியும்னு.. கழுத கெட்டா குட்டிச்சுவரு.. திரும்பவும் சந்திரமுகி பக்கத்தில எட்டிப் பார்த்தா.. நம்ம பிரதர் லவ்டேல் மேடி 'மீண்டும் மலர்வாய்' அப்டின்னு திருவாய் மலர்ந்தருளி இருந்தாங்க. உஸ்ஸ்ஸப்பா.. சுடுகாட்டில விறகு தேடிக்கிட்டிருந்த என்னோட உசிருக்கு.. அப்போதானுங்க உடல் வந்திச்சு.. (அட எப்பவுமே உசிர் வந்திச்சுதானா.. வித்யாசமா திங்க் பண்ணுங்கப்பா நம்மள மாதிரி ஹிஹி..).

நாம் பட்ட துன்பத்த மத்தவங்க கிட்ட சொல்லி துன்பப் படுத்தலைன்னா நாம உயிரோட இருக்கிறதுக்கு (அப்பாடா ரீகன்ஃபார்ம்ட்டு) என்ன அர்த்தம் சொல்லுங்க...! அதான் கிளம்பிட்டேன்யா.. கிளம்பிட்டேன்.. வர்ட்டா...டாட்டா.. ஜூட்டு....!

_______

Sunday, September 13, 2009

நகைச்சுவை உணர்வாளர்களுக்கு மட்டும்..

இந்த ப்ளாக் படுத்தும் பாடு இருக்கே... சொல்லி மாளாதுங்க.

விடியக் காலைல தூங்க போயி.. உடனேயே எழுந்திரிச்சு வந்து மூணு மாசம் முன்னாடிப் போட்ட ப்ளாக்ல பின்னூட்டம் இருக்கா, எவ்ளோ வோட் தேறி இருக்குன்னு ஒரு வாட்டிக்கு, நாலு வாட்டி ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்து, ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.

அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க. அட ச்சே.. தலைல உன்னை வச்சதுக்கு பதிலா ஒரு தேங்காய வச்சிருக்கலாம்னு (என்ன.. தேங்காதான் வச்சிருக்கீங்களா எல்லாரும்.. செரி செரி..) நொந்துக்கிட்டு, மத்தவங்க தேங்கா என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்னு போனா, பீதிய கெளப்பறாய்ங்கப்பு!

நான் எழுத டயம் இல்லைன்னாக்க (அட நெசம்மாலுமுங்க.. மூளை வேலை நிறுத்தம் பண்ணா கூடத்தான்.. உஷ்..) என்னோட தொண்டர்கள் மற்றும் வாசகர்களுக்கு, கொஞ்சம் இருங்க வரேன்னு ஒரு செய்தி போட்டு போவேனுங்க. பின்ன என்னங்க சினிமால பிரபல நடிகருங்க எல்லாம் லாங் கேப் விட்டாக்க, மக்கள் மறந்துடுவாய்ங்க... கடுப்பாய்டுவாய்ங்கன்னு பயமுறுத்துறாங்கல்ல. நாம எம்மாத்திரம்?

அன்னிக்கு பாருங்க அப்ப அப்ப எட்டிப் பார்க்குற இடுகைகள் சிலது, அப்டேட் பண்ணி இருக்காங்கன்னு போயீ, சின்சியரா வோட் அண்ட் பின்னூட்டம் போட்டு கிளம்பறப்போ வழிலேயே ஒரு இடுகை வழி மறிச்சு... "நீ எங்க போனா எனக்கென்ன... யாருக்கும் அக்கறையில்ல... சும்மா ஆறு மாசம் ஜெயிலுக்கு போற மாதிரில்ல அலட்டிக்கிற.. போறியா போய்க்கின்னே இரு..." சொல்லாதன்னு வையோ வைன்னு வையுதுங்க. எனக்கு.. ஓஹோ.. இப்டி வேற ஒரு மேட்டர் இருக்குதுங்களா... இப்போ நான் சொல்லிட்டு போணுமா.. சொல்லாம போணுமான்னு பயங்கர கன்பீசன் ஆயிடுத்துங்க.

அப்புறம்.. நடக்கறது நடக்கட்டும்னு நடைய கட்டுறப்பவே, கனவில வர்றா மாதிரி ஒரு இடுகை கவனம் வருது. ஆமாம்ல.. அந்த இடுகைல அந்தாளு அவங்க முக்கோண காதல் கதைய மூணு பகுதியா சொன்னாங்களே... ஃபர்ஸ்ட் பார்ட் படிக்கல.. ஆனா செகண்ட் பார்ட் படிச்சி தொலைச்சிட்டேனே. இப்போ மூணாவது பார்ட் என்னனு தெரியலையே. அந்த இடுகை பேரு என்ன? ஆளு பேரு என்ன? ஐயோ.. மண்டைய குடையுதே.. நான் என்னன்னு போயி எங்க தேடுவேன்... அவளுவ பேரையாவது கவனம் வச்சிருந்தா நம்ம கூகிள்ட்ட கேக்கலாம்.. அப்டின்னு என்ன அவஸ்தைங்கிறீங்க.

இதில வேற யாராவது ஏதாவது இடுகை போட்டு பெரிய புராணம் பத்தி விளக்கம் எழுதினா... அதில அவன் லக்கம்-ன்னு ஏதோ எழுதினா.. ஆஹா.. "லக்க"ன்னு சொல்லுறானே.. என்னிய பத்தி ஏதாவது சொல்லுறானா அடங்கொன்னியான்னு (வார்த்தை உபயம் லவ்டேல் மேடி-நன்றி) ரெண்டு வாட்டி படிச்சும், பொல்லாத சந்தேக புத்தி.. ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.

ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி... ஒரே நாள்ல புலம்பி தீர்க்கற விஷயமாங்க இது? இருங்க.. வந்து மீதி புலம்பறேன்.

(அய்யய்யோ மக்கா.. இங்க நான் யாரையும் சொல்லல.. படிச்சதில மனசில தோணின என்னோட சொந்தப் பயம் சோகக் கதைய சொன்னேன்.. அம்புட்டுதேன்... அது யாரா இருந்தாலும் அவங்க அவங்க எண்ணத்த.. மத்தவங்க மூக்கில பஞ்சு வைக்காத மாதிரி சொல்லலாம்ங்கிற கொள்கை உடையவங்க நானு... இதனால உங்க மூக்கு டமேஜ் ஆனா, முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.. மூக்கில குத்தாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ஜலதோஷம்..)

______

Saturday, September 12, 2009

மெரீனாவில் ஒரு விழுக்காடு..

நான் மெரீனா கடற்கரைக்கு போன கதைங்க இது..

இந்த விடுமுறை நாளொன்றில் என்னுடைய தோழி ஒருத்தியுடன் மெரீனா கடற்கரைக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அவளுடைய அம்மா, அப்பா சமேதராய், என் தோழியும் நானும் உடன் சென்றோம்.

வீட்டிலிருந்து கிளம்பறப்பவே, இழுபறி ஆகிப் போச்சுங்க. அன்னிக்கு பார்த்து அவங்க வீட்ல ஒரு டெலிவரி. ச்சே ச்சே.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஒரு சோஃபா ஆர்டர் கொடுத்திருந்தாங்க, அவ்ளோதான்! அன்னைக்கு அதை வீட்ல கொண்டு வந்து வச்சுட்டு போறதா சொல்லி, அவங்க வந்து, பொண்ண புகுந்த வீட்ல செட்டில் பண்ற மாதிரி சோஃபாவ அலுங்காம நலுங்காம வச்சுட்டு, கண்ணைத் துடைச்சுக் கொண்டு கிளம்பிப் போனதுக்கப்புறம், நாம கிளம்பி அந்த சென்னை டிராஃபிக் ஜாம்ல மாட்டி மெரீனா பீச்சாண்ட போறப்பவே ஜாம் ஆகி இருந்தோம்.

லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, பேசாம கடலை போட்டு.. சாரி.. கடலை சாப்ட்டு போக வேண்டியதுதான்னு நடக்க ஆரம்பிச்சோம். கடல் கிட்ட போக போக தோழிக்கும் எனக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தம்பதி சமேதர் ஏதோ ஒரு நேத்திக்கடன் நிறைவேத்த வந்தாப்ல ஒரு தீர்மானத்தோட கரைய குறி வச்சு நடந்து போய்க் கொண்டிருந்தாங்க.

ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும் அம்மணி 'சடன் பிரேக்' போட்டு நின்னுட்டாங்க. வேற ஒண்ணுமில்ல தண்ணி இருக்கிற இடமெல்லாம் வழுக்கி விழுந்து, இசகு பிசகா அடிபடுறதே பொழைப்பா போனதால, கொஞ்சம் சாக்கிரதையா தண்ணி எட்டாத இடத்திலேயே நின்னுட்டாங்க. ஐயா அதுக்கும் ஒரு மீட்டர் முன்னாடியே நின்னுட்டாங்க. நாம இதெல்லாம் கவனிக்காம, கடல் அலையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தோம்.

தோழி அடிக்கடி பின்னால் திரும்பி, "யம்மா வாங்க, யம்மா வாங்க" என்று கூவிக் கொண்டிருந்தாள். அம்மாவும் சளைக்காம சப்பாணி பாஷைல "நான் மாட்டேன் போ" என்று கிளிப்பிள்ளை பாடம் சொல்லிக் கொண்டிருந்தாங்க. நேரமாச்சு, இனிமே கிளம்ப வேண்டியதுதான்னு கிளம்பவும், தோழி "லாஸ்ட் ட்ரை" என்று அவள் அம்மாவ கூப்ட, அதிசயமா அவங்க அடி மேல் அடி எடுத்து வச்சு முன்னால வரவும் சரியாக இருந்தது.

விதி யாரை விட்டது! பாவம் அம்முனி வந்து நின்னு அரை நிமிஷம் கூட ஆகி இருக்காது இசகு பிசாகா ஒரு அலை வந்து, காலை வாரி விட்டுடிச்சுங்க. நாம அங்க இங்க கால வச்சு சமாளிச்சுக்கிட்டு பார்த்தா இந்த அம்மணி, பப்பரப்பேன்னு, சினிமால எல்லாம் காட்டாத ஒரு கோணத்தில அலங்க மலங்க விழுதுங்க. அடி ஆத்தீன்னு கைய புடிச்சு தடுத்து நிறுத்தலாம்னு நான் இந்தப் பக்கம், பொண்ணு அந்தப் பக்கம்னு புடிச்சு தூக்கறோம், அலை விடுவேனான்னு நம்மளையும் சேர்த்து இழுக்குது. யப்பேன்னு அலறி அடிச்சுக் கொண்டு அம்மணி விழுந்தே போச்சு. நாம போனாலும் பரவால்ல அம்முனிய விடப்டாதுன்னு முழங்கால்ல உக்காந்து, தண்ணில முழுகுற தலைய தேடிப் புடிச்சு தூக்கி, மேரி அம்மா ஜேசு பேபிய ஏந்தி வச்சிருக்கிறாப்ல, தலைய ரெண்டு கைலயும் ஏந்திக்கிட்டு... விடாம பிடிச்சு இழுத்துக் கொண்டிருந்த அலை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, தோழியும் நானும் சேர்ந்து அம்முனிய கரை சேர்த்தோம்.

ரொம்ப அக்கறையா அந்த இருட்டில ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஐயா, ரொம்ப ரொம்ப லேட்டா சுதாரிச்சு கையிலிருந்த வாட்டர் பாட்டில் கொண்டு வந்து நீட்டினார். அரை மயக்கத்தில் 'நான் விழுந்துட்டேன்', 'நான் விழுந்துட்டேன்'ன்னு விடாம சொல்லிக் கொண்டிருந்த அம்மாவ தண்ணி குடிக்க வச்சு ஒரு நிலைக்கு கொண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சுங்க.


இந்தியன் கிரிக்கெட் டீம் ரன்ஸ் எடுத்த மாதிரி, சாதிச்சிட்டோம்டின்னு தலைய நிமிர்த்திக் கொண்டு நின்ன நம்மளுக்கு வந்திச்சுங்க ஒரு சோதனை. அம்மணி சாதாரணமா(?) பேச ஆரம்பிச்சதும் கேள்வி மேல கேள்வி அடுக்க ஆரம்பிச்சாங்க பாருங்க.. :((.. யப்பே இதுக்கு அலை கிட்டயே மல்லுக் கட்டி இருக்கலாம்னு தோணிச்சுன்னா பார்த்துக்குங்க:

பொண்ணு கிட்ட: ஏண்டி நான் விழுந்தப்போ நீ கால் மாட்டில இருந்தியா, தலை மாட்டில இருந்தியா? (கை மாட்டில இருந்தோமுங்க.. எந்த நேரத்ல என்ன கேள்விடா சாமி..) டயர்ட் ஆகி கொஞ்சமா வாட்டர் சாப்டலாம்னு ஆரம்பிச்சிருந்த நான் முடியாம.. தூன்னு துப்பிட்டு அடக்க மாட்டாம சிரிக்கறேன்.

இவ ஏன் சிரிக்கிறா? (சத்யமா முடியலீங்க..)

கொஞ்சம் அவகாசம் கொடுத்து திரும்ப வாட்டர் சாப்டலாம்னு ஆரம்பிக்க, அவங்க "ஏண்டி நான் விழுறப்போ உங்கப்பா என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு?" (திரும்ப வாயிலிருந்து தண்ணீரை துப்பி விட்டு.. ) "போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க.." என்று மாட்டி விட்டேன்.

"ஏண்டி எப்டிடீ விழுந்தேன்?"
பொண்ணு பொறுக்க மாட்டாம "சும்மா பப்பரப்பேன்னு விழுந்தாம்மா"
"என்னடி நக்கலா?"
"அதொண்ணுமில்லம்மா உனக்கு தண்ணில கண்டம்னு நினைக்கிறேன்.. "
அம்மணி சீரியசாகி "ஆமாம்டி நானும் அப்டித்தான் நினைக்கிறேன்"
"ஐயோ.. இப்போ தண்ணிக்கு கண்டமா.. உனக்கா?"
"ஏண்டி அப்பா என்ன போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாரா நான் விழுந்தப்போ"
"ஐயோ கொஞ்சம் நிறுத்துறியா, அந்தாள டெஸ்ட் பண்றதுக்குன்னே விழுவியா நீ?"
அம்முனி கழுத்த தடவி செயின கைல எடுத்துப் பார்த்து "நல்ல வேளை செயின் போகல"
"ம்க்கும், கழுத்து போகலையேன்னு சந்தோஷப்படு"

இப்டியே நீண்டு கொண்டு போன விடையில்லாக் கேள்வி காருக்குள் ஏறி உக்காந்ததும், டிரைவருக்கு மேட்டர் தெரிய வேண்டாமே என்றோ என்னமோ கொஞ்சம் மட்டுப் பட்டது. ரெண்டு நிமிஷம் கழிச்சு "இல்லைடி, நான் அன்னிக்கு விழுந்தப்பவும் இந்தப் புடவைதான் கட்டி இருந்தேன், புடவைதான் சரியில்ல" (ஆ, கண்டம் தண்ணில இருந்து புடவைக்கு மாறிடிச்சுடா! நல்ல வேளையாக நான் காருக்குள்ள வாட்டர் சாப்டல)

இனிமே முடியாதுடா சாமின்னு இருக்க, அம்மணியே அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டினாங்க.. "யார் கிட்டயும் சொல்ல வேணாம் இது பத்தி, நம்மளுக்குள்ளயே இருக்கட்டும்". நான் ரொம்ப சாதுவாக "ஏனுங்க இந்நேரம் தினத்தந்தில எல்லாம் போட்டிருப்பாங்களே". அவங்க என்னை முறைச்சு "உனக்கு நக்கலா இருக்கா?". நான் பயந்த மாதிரி "இல்ல இல்ல, சாரி.. ஓ.கே. இங்கயே இதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்" அப்டின்னேன்.

கொஞ்ச நேரத்ல அம்மணியின் போன் சிணுங்கியது. அமெரிக்கால இருந்து அவங்க பையன் கூப்பிட்டிருந்தான். இவங்க சொன்ன முதல் வார்த்தை "நான் விழுந்துட்டேன்டா"! இதுக்கப்புறமும் எப்டிங்க நாம சும்மா பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? "சரிதான், நியூ யார்க் டைம் பெஸ்ட் செல்லர் ஆயிடும், இப்டியே லோக்கல்லயும் இவங்களே வித்துடுவாங்க, இந்த லட்சணத்தில மத்தவங்கள சொல்ல வேணாமாம்" னு நொடித்துக் கொண்டு, கையில் இன்னமும் குடிக்காம வச்சிருந்த வாட்டர் பாட்டலை திறந்து, நிதானமா வாட்டர் சாப்ட ஆரம்பித்தேன்.

______

Sunday, September 6, 2009

தீண்ட தீண்ட... காய்ச்சல்...

இந்தப் பன்னிக் காய்ச்சல் படுத்துற பாடு கொஞ்சமா நஞ்சமாங்க.. ஒரு முடிவுக்கும் வர முடியாம.. ஜனங்க எப்டி எல்லாம் அவஸ்தைப் படுறாங்க.. சூப்பர் மார்கெட்ல ஒரு ஆளு ஹச்சூன்னு தும்மினா... கையிடுக்கில தும்முய்யான்னு சொல்லிக்கிட்டே ஒரு காத தூரம் பாயுறாங்க.. என்னமோ.. இன்னாத்த சொல்றது.. நடந்ததுதான் இதெல்லாம் படிச்சு பார்த்து ஒரு முடிவுக்கு வாங்கோ...

தாய் சேய் நல மையத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம்:

இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் (இப்பவே கண்ணை கட்டுதே..) ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின் தொலைபேசி மூலம் உங்கள் குடும்ப வைத்தியருக்கு அறியப் படுத்துங்கள். வைத்தியரின் ஆலோசனை /அனுமதியின்றி நேரில் செல்ல வேண்டாம்.

அது பற்றி மேலதிக தகவல் தேவையெனில் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் இங்கு வரும் பட்சத்தில்.. நாங்கள் உங்களுடன் கை குலுக்கிக் கொள்ள மாட்டோம் (தீண்டாமை கேசில உள்ள போடுவோம்). உங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வரவும். (குழந்தைய கையால தொடுவீங்களா?)

_________________________
சிகிச்சை மையம் ஒன்றில்...

கேஸ் 1:

டிரிங் டிரிங்...
வைத்தியர் நாக்கமுக்க உதவியாளர் காக்ககாக்க குட் மார்னிங்..
.............
ம்ம்...
...........
ம்ம்...
.........
ஃபீவர் மட்டுமா...?
.......
இருமல்..?
.......
ஓகே... ரியலி.. இருமல், ஃபீவர் ரெண்டும் சேர்ந்து வந்தாதான் பயப்டணும்..
.....
நோ நோ.. நீங்க வந்து புண்ணியமில்ல.. வெயிட் பண்ணி வீட்ல உக்காந்து.. (இல்லைன்னா ரூம் போட்டு) யோசிச்சிட்டு வாங்கோ..
.......
நோ.. நாம எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்ண மாட்டோம்.. இட் காஸ்ட்ஸ் எ லாட்..
......
உஸ்ஸ்ஸ்.. இல்லம்மணி.. பாருங்க.. பார்த்துட்டு வாங்க.. சாரி.. இன்னொரு லைன் வருது.. ஏதாவதுன்னா திரும்ப போன் பண்ணுங்க.. பை பை..

_________________________
கேஸ் 2:

வைத்யர் நாக்கமுக்க.. காக்க காக்க..
....
ம்ம்..
....
ம்ம்..
இருமல் மட்டுமா..? காய்ச்சல் இருக்கா..?
......
ஓ.. நோ.. காய்ச்சலும் சேர்ந்து வந்தாதான்.. இல்லைனா நோ ப்ராப்ளம்..
...
ஆஃப் கோர்ஸ் நாட்..
...
ஹிஹி... ஓகே.. பை பை..

_________________________
கேஸ் 3:

டிரிங் டிரிங்..
வைத்யர் நாக்க முக்க.. காக்க காக்க..
.....
ம்ம்..
......
வயித்து வலி.. வயித்து போக்கு... மட்டுமா..? வாந்தி இல்லையே..?
.....
அப்டின்னா நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ரியலி எவ்ரிதிங் டுகெதர்..
....
இல்ல வேணாம்.. வயித்து போக்க நிறுத்த ஏதாவது கொடுங்கோ போதும்..
......
விச் டப்லெட்?... ம்ம்.. நிறைய தண்ணி சாப்டணும்.. (விச் தண்ணி..?)
....
ஓ தட் டப்லெட்... ம்ம்ம்.. (தலைய சொறிஞ்சுக்கிட்டு..) கொடுங்க நோ ப்ராப்ளம்..
______________________________

200 பேரு வேலை செய்யும் ஒரு ஆபீஸ்ல இருந்து பாஸ்.. Dr.டெடி.. போன் எடுத்து அவரின் Dr.தாடிக்கு டயல் செய்து..

ஹல்லோ டாக்டர் தாடி.. ஐ ஆம் டெடி..
ஹல்லோ டெடி ஹவ் ஆர் யூ? எனி ஹெல்ப்?
ஆமாம்.. நம்ம கிட்ட 200 பேரு வேலை செய்யுறாங்க.. இந்த பன்னிக் காய்ச்சல் பத்தி ஏதாவது தகவல் குடுக்கலாம்னா குடுக்கலாமின்னு..
ஹெஹெஹெ... டெடி.. சாதாரணமா வர்ற ஃப்ளு இந்த பன்னிய விட கொடுமையானது.. என்ன.. உடம்பில எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிற குஞ்சு குளுவான்.. அத சுமக்கிற பொள்ளத்தாச்சி பொம்பளைங்க.. ஆஸ்த்மா கீஸ்த்மான்னு இருக்கிறவங்க கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்.. நோக்கு வயசாச்சுன்னா நீயும் பயப்டணும்..
ஓஹோ.. அப்போ இந்தப் பன்னிக் காய்ச்சல் அடுத்த வருஷம் வர்றதுக்கு இப்பவே வர்றது பெட்டர்ங்கிறியா...
ஆமாங்கிறேன்..
ஹிஹி... தகவலுக்கு நன்றி தாடி... விஷ் யு எ ஸ்பீடி ஸ்வைன் ஃப்ளு...
சேம் டு யு டெடி... பை பை..
பை பை...
____________________________
ஏதாவது புரிஞ்சா பாருங்கோ... அன்னமா இருந்து தேவையானத எடுத்துக்கோங்கோ.. டாக்டர்ஸ் என்னிய கன்னாபின்னான்னு திட்டுங்கோ.. நோ ப்ராப்ளம்.. எல்லாம் ஒண்ணா சேர்ந்து திட்டினாதான் கஷ்டம்.. அப்போ வர்ட்டா... பை பை...
___________________________

Friday, August 14, 2009

சொந்தக் கதை சோகக் கதை...

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.

"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"

"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"

"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"

"நான் போகணும்"

"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"

இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.

வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.

யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!
____________________________________________________________________

Thursday, July 30, 2009

ஆடி அடங்கும் போதினிலே..

அட ஒண்ணுமில்ல.. ஆடி மாசம் பத்தித்தான்.. நீங்க வேற!

ஆடித் தள்ளுபடி அப்படிங்கிற ஒரு விடயம் இருக்கிறது தெரியும், அது என்னவென்று எனக்குத் தெரிய வாய்ப்புக் கிடைத்தது இந்த வருடம்தான்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு சென்ற பொழுது ஐந்து வாரங்கள் வைத்தியசாலை வளாகத்திலேயே கரைந்து போனது. மீதி இரண்டு வாரங்கள், தினமும் இரு தடவை ஓடி ஓடித் தியானம் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் கல்கி ஐயா போன்றவர்கள் எழுத்திலும், என் எண்ண ஓட்டத்திலும் பார்த்த பல இடங்களைச் சந்தர்ப்பம் கிடைத்தும் சென்று பார்க்கத் தவறி விட்டேனே என்ற ஆதங்கம் அரித்துக் கொண்டே இருந்தது.

அதனால் இம்முறை விடுமுறையை முறையாகச் செலவிடுதல் வேண்டும் என்று நினைத்தாலும் எதையும் திட்டமிட முடியவில்லை. கோலம் போட்டாலும் கோல மாவுடன் கோலமிடும் இடத்தில் உட்கார்ந்ததன் பிற்பாடு சிந்திக்காமலேயே கோலமிடுவதுதான் என்னுடைய வழக்கம். திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாலோ, அல்லது திட்டமிடாது செயல்படுவதில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாலோ தெரியவில்லை, இரண்டாவது வழியே வசதியாக இருக்கிறது.

இவ்வாறு திட்டமிடாது சென்று பார்த்து, பிரமித்து, வியந்து, ரசித்த இடங்கள் தவிர, ஒழுங்காகத் திட்டமிடாததால் பாதி நாள் புகையிரதத்திலேயே கழிந்து விட்டது. சென்னையில் செலவிடக் கிடைத்தது ஓரிரு நாட்களே.

இவ்வாறு இரு தடவை நெடிய விடுமுறையில் வந்து ரங்கநாதன் தெரு பார்க்கவில்லை என்று சொன்னால், சின்னக் குழந்தை கூடக் கையும் காலும் அடித்துக் கொண்டு சிரிக்கும் என்று நக்கலடித்த நண்பரின் வார்த்தையில் சுரணை வந்து, அதையும் பார்க்கலாம் என்று அவரின் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.

எந்தக் கடை என ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டு, அதையும் திட்டமிடாமலே இங்கே, இங்கே என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு கடையாக சன அலைகளின் உதவியுடன் மிகவும் நிதானமாக நீந்த ஆரம்பித்தோம். நண்பரின் மகள் நான் அச் சமுத்திரத்தில் தொலைந்து போய் விடக் கூடாது என என் கையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். அத்திரளில் மிகவும், இயல்பாகவும், லாவகமாகவும் உரசக் கற்றுக் கொண்டவர்களின் முயற்சியைக் கண்ணாலேயே துப்பி முறியடித்து, அன்னை போன்று இந்தப்பக்கம் வந்துடு, அந்தப் பக்கம் வந்துடு என்று என்னை அழைத்துச் சென்றதை அவளறியாமலேயே ரசித்துச் சிரித்தேன்.

நாம் எந்தத் தளத்திற்குப் போவது என்பதையும் கூட்டமே முடிவு செய்தது. வேண்டாம் வீட்டுக்குப் போய் விடலாம் என்பதையும் அதுவே முடிவு செய்தது. மிகவும் மும்முரமாக அக்கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு நீச்சலடித்துச் சென்று கொண்டிருந்த நண்பரும், அவரின் அடிச்சுவட்டை அச்சுப் பிசகாது பிடித்து நீந்திச் சென்ற அவர் மனைவியும் எங்களை விடப் பத்து அடிகள் முன்னாலிருந்தார்கள். நாம் பல அடிகள் பின் தங்கி விட்டோம் என்பதைத் திடீரென்று உணர்ந்தவர்களாக, பக்கத்திலிருந்த கண்ணாடி மேசையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பத்து அடியை நாம் அடைவதற்குப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அவர்களை அடைந்து, அப்பாடா என்று மூச்சு வாங்கி, நண்பரின் மகள் காதருகில் குனிந்து, இதைத்தான் "ஆடித்தள்ளுபடி" என்று சொல்லுறாங்களா? என்று கேட்டேன்.
____________________________________________________________________