முக்கியமான நாவல் என்று ”அவரே” சொல்லி விட்டதால், நேரே பாலா சாரிடம் சென்று “மணற் கடிகை” வேணும் என்று சொல்லி வருடம் ஒன்றிற்கு மேல். அது “மணற்” இல்லை “மணல்” என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வருடம் ஆகி விட்டதென்றார். எப்படியோ தேடிப் பிடித்து என்னுடைய இந்தப் பிறந்த நாளிற்குக் கிஃப்ட்டாக அனுப்பி வைத்தார். நன்றி சொல்வதற்கில்லை.
நிற்க..
வாசிக்காது ஷெல்ஃபில் இருக்கும் புத்தகங்களில் ஓரிரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தூண்டும். அதில் சில வாசிக்கத் தூண்டும். அதிலும் சிலதே வாசித்து முடிக்கத் தூண்டும். மணல் கடிகை மூன்றாவது ரகம். இதுதான் இந்த நாவலின் வெற்றி. என்ன செய்வது? எதற்கெடுத்தாலும் வெற்றி, வெற்றி என்று சொல்லியே பழகிவிட்டது.
சாண்டில்யனின் கடல் புறா மூன்றையும் மூச்சு விடாது வாசித்து முடித்த காலம் உண்டு. வாசிப்பின் வேகத்திற்கு சாண்டில்யன் ஆங்காங்கு தூவியிருக்கும் காதல் தீண்டல்கள் உறுதுணையாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. என் நேர்மை எனக்குப் பிடிக்கவில்லைதான். என்ன செய்வது? இலக்கிய உலகு. சாண்டில்யன் நாவல்களை நான் பள்ளிக் காலத்தில் படித்ததால், அவர் விவரிக்கும் தொடை தழுவல் காட்சிகள் “பகீர்” என்ற தாக்கத்தை உண்டாக்கி, ”இதை வாசிப்பது தவறோ?” என்ற ஒரு குற்ற உணர்ச்சியையும் உண்டாக்கியிருந்தது. பின்பு பளிச்சென்று விலகி விட்டது. எனக்குப் பிடித்த அனுராதா ரமணன், சாண்டில்யன் நாவல்களில் பிடித்தது “காதல்” என்று சொன்னது கூடக் காரணமாக இருக்கலாம். எனக்கு அவரின் நாவலில் பிடித்தது போர்த் தந்திரமும் அதை அவர் விவரிக்கும் பாணி... கப்பல் கட்டுமானத்தை, அதன் விவரங்களை சுவாரஸ்யமாக விளக்கும் பாணி. இத்யாதி இத்யாதி.
கோபாலகிருஷ்ணன் நாவலில் சாண்டில்யன் எங்கு வந்தார் என்றால்: காரணம் இருக்கிறது. மணல் கடிகை படித்து முடிக்கத் தூண்டியதற்கு அதில் வரும் காதல், தவறு, கலவி சத்யமாகக் காரணமல்ல. ஆரம்பத்தில் அது ஒரு விதமான சலிப்பை உண்டாக்கி (ஆரம்ப கட்ட வாசகி), பின்பு ஒரு விதமான வெறுத்த மன நிலை உண்டாகியிருந்தது.
”முரண்தொடை” டெல்டா சொன்னது போல் நானும் நாவல் வாசிப்பதற்கு முன், பின் அட்டையையும், முன்னுரையையும் கவனமாகப் படித்தேன். “ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன” என்று பின் அட்டையிலும், “இது திருப்பூர் பற்றிய நாவல் அல்ல, மனிதனைப் பற்றியது” என்று முன்னுரையிலும் குறிப்பிட்டிருந்தார். நாவல் படித்து முடித்த பிறகு, அக இயல்புகள் என்பது பின் அட்டையில் குறிப்பிட்ட வாசகத்துடன் நின்று விட்டது என்பதும் (ஐயா நீங்கள் ஏன் ஐயா அவர் கூப்பிடுமிடத்திற்குப் போக மாட்டேன் என்கிறீர்கள்), “இது திருப்பூர் பற்றிய நாவல்தான், மனிதன் பற்றியதல்ல” (ராஜா அண்ணாமலை புரத்துக்குப் போறதுக்கு இது மூஞ்சி அல்ல, கண்ணம்மாப் பேட்டை போற மூஞ்சிதான் இது..) என்பதும் முடிந்த முடிபாகியது.
இந்த நாவல் மூலம் நான் திருப்பூர் பற்றி அறிந்து கொண்டதே அதிகம். வியாபாரம், துரோகம், ஒருவன் தலையின் மேல் ஏறி மேலே போய் அதே வேகத்தில் கீழே வருவது, குழந்தைத் தொழிலாளர், சுற்றுப்புறம் மாசுபடுதல், மேலும் வட இந்தியாவிற்கு சரக்கு அனுப்பி, வசூல் செய்து விட்டு வரும்போது ஏற்படும் உயிர் அபாயங்கள் சிக்கல்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல், மிகச் சாதாரணமாக நிகழும் முறையற்ற கலவிகள்.
தெரிந்து கொண்டே எந்த விதமான மனக் கட்டுப்பாடுமின்றி தன் போக்கில் செல்லும் சிவா. அறம் என்பதற்கும் அந்த நபருக்கும் எந்த சம்மந்தமுமில்லை. கூட இருப்பவன் திறமைசாலி, எப்படியாவது நீக்கி விட வேண்டுமென்று நீக்கிவிட்டு மேலே வரும் ஒரு நபர். இவளை விட இவள் பரவாயில்லை, இவளை விட இவள் இன்னும் கொஞ்சம் பரவாயில்லை என்ற மேலோட்டமான உறவுகள். திருமணத்திற்குப் பின்பும் மிகச் சாதாரணமாக முன் உறவாடியவளிடம் சிரித்துக் கொண்டே போகக் கூடிய கதாபாத்திரம். எங்கும் ஒட்டவில்லை. விலகல் ஏன் வருகிறது என்று சிவா நினைப்பதாக ஒரு வரி வரும். அந்த மனப்பாங்கினால்தான் வருகிறது என்று ஆழமாக எதயும் கதாசிரியர் சொல்லவில்லை. அவர் சொல்ல வேண்டுமென்று நான் எதிர் பார்ப்பது அவர் மன ஆழங்கள் பற்றி, அக இயல்புகள் பற்றி முன்னுரையிலும், பின்னுரையிலும் குறிப்பிட்ட ஒரே காரணத்தினாலேயே.
சண்முகம் ஒரு பாரடொக்ஸ். இன்றுடன் பட்சிகளின் எண்ணிக்கை 25 என்று கொண்டாடும் இவர், சிவாவின் மனச்சாட்சியை நேரடியாகக் கேள்வி கேட்கிறார். கோணங்கித் தனமாக கவிதை எழுதுகிறார். கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார். குழந்தை இவருடையதில்லை என்ற பேருண்மை உணர்ந்து, திடுக்கிட்டு விழித்து, விபூதி வைத்துக் கொள்கிறார்: என்னுடைய அறிவுக்கு மன ஆழங்கள் இங்கும் எட்டவில்லை.
சட்டென்று ஒருத்தியைப் பார்த்து அண்ணலும் நோக்க, அவளும் நோக்க காதலில்(?!) விழுந்து (அந்த ஊரிலிருக்கும் 99.99% பேர் போலவே) இரண்டு மாதங்களில் கல்யாணமென்று முடிவு செய்து, கல்யாணத்தின் போதே இது தப்பென்று தெரிந்தும் செய்து நொந்து கொள்வது பரந்தாமன் என்ற கதாபாத்திரம். மீண்டும் யாரையோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே என்றதன் உள், வெளி அழுத்தங்களினால் செய்து கொண்டு, அதையும் தொலைத்து விட்டு, சண்முகத்தின் அடல்ட்ரி அலட்டல்களைக் கேட்டு மனம் புழுங்கி, எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஒடுங்கிப் போவது: இதிலும் அக இயல்புகள்.. ஊஹூம் காணவே காணோம்.
திரு ஒரு நியாயமான சீட்டு வியாபாரி. நேர்மையான குடும்பஸ்தன். அந்த 0.01% இல் அடக்கக் கூடிய ஒரு சராசரி மனிதன்.
அன்பழகன் திருவின் இன்னொரு எமோஷனல் உருவம். முறையில்லாத பெண் தொடுகைக்கு பயப்படும், நேர்மையில்லாத வியாபாரத்திற்குத் துணியாத இன்னொரு 0.01%.
நவாப், உமா, சிங்காரம், செட்டியார், செட்டியார் மனைவி, செட்டியார் மனைவியின் மகள், விமலா, சித்ரா, அருணா, கண்ணம்மா இத்யாதி இத்யாதி இத்யாதிக் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்வதற்கு சுவாரஸ்யமாக சமாச்சாரங்கள் இருக்கின்றன.
முக்கியமாக சுப்பிரமணி, செட்டியாரையும், எல்லா நடப்புகளையும் பார்த்து “இது சரிதானா?” என்று கேள்வி எழுப்பி விட்டு அவர்களுடன், அவைகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு 0.01%.
இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்து ஒவ்வொரு அத்தியாயங்களாக நகர்த்தியபோது, சில பல சிறுகதைகளைச் சிதற வைத்து, jigsaw puzzle போன்று நேர்த்தியாகவும், சிலவற்றை வன்முறையுடனும் இணைத்து இழுத்துச் சென்றதாகவே எனக்குத் தோன்றியது. இதை இலக்கிய உலகிலிருந்து சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” போன்று எழுதி இருந்தால் சலிப்பு ஏற்படாது இருந்திருக்கலாம். ஆனால் கோபால கிருஷ்ணன் சொன்ன மன ஆழமும், அக இயல்பும் “மணல் கடிகை”யை விட ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில்” இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
ஆனால் நேர்மையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்... "It's a good read; had a good time pass"
நிற்க..
வாசிக்காது ஷெல்ஃபில் இருக்கும் புத்தகங்களில் ஓரிரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தூண்டும். அதில் சில வாசிக்கத் தூண்டும். அதிலும் சிலதே வாசித்து முடிக்கத் தூண்டும். மணல் கடிகை மூன்றாவது ரகம். இதுதான் இந்த நாவலின் வெற்றி. என்ன செய்வது? எதற்கெடுத்தாலும் வெற்றி, வெற்றி என்று சொல்லியே பழகிவிட்டது.
சாண்டில்யனின் கடல் புறா மூன்றையும் மூச்சு விடாது வாசித்து முடித்த காலம் உண்டு. வாசிப்பின் வேகத்திற்கு சாண்டில்யன் ஆங்காங்கு தூவியிருக்கும் காதல் தீண்டல்கள் உறுதுணையாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. என் நேர்மை எனக்குப் பிடிக்கவில்லைதான். என்ன செய்வது? இலக்கிய உலகு. சாண்டில்யன் நாவல்களை நான் பள்ளிக் காலத்தில் படித்ததால், அவர் விவரிக்கும் தொடை தழுவல் காட்சிகள் “பகீர்” என்ற தாக்கத்தை உண்டாக்கி, ”இதை வாசிப்பது தவறோ?” என்ற ஒரு குற்ற உணர்ச்சியையும் உண்டாக்கியிருந்தது. பின்பு பளிச்சென்று விலகி விட்டது. எனக்குப் பிடித்த அனுராதா ரமணன், சாண்டில்யன் நாவல்களில் பிடித்தது “காதல்” என்று சொன்னது கூடக் காரணமாக இருக்கலாம். எனக்கு அவரின் நாவலில் பிடித்தது போர்த் தந்திரமும் அதை அவர் விவரிக்கும் பாணி... கப்பல் கட்டுமானத்தை, அதன் விவரங்களை சுவாரஸ்யமாக விளக்கும் பாணி. இத்யாதி இத்யாதி.
கோபாலகிருஷ்ணன் நாவலில் சாண்டில்யன் எங்கு வந்தார் என்றால்: காரணம் இருக்கிறது. மணல் கடிகை படித்து முடிக்கத் தூண்டியதற்கு அதில் வரும் காதல், தவறு, கலவி சத்யமாகக் காரணமல்ல. ஆரம்பத்தில் அது ஒரு விதமான சலிப்பை உண்டாக்கி (ஆரம்ப கட்ட வாசகி), பின்பு ஒரு விதமான வெறுத்த மன நிலை உண்டாகியிருந்தது.
”முரண்தொடை” டெல்டா சொன்னது போல் நானும் நாவல் வாசிப்பதற்கு முன், பின் அட்டையையும், முன்னுரையையும் கவனமாகப் படித்தேன். “ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன” என்று பின் அட்டையிலும், “இது திருப்பூர் பற்றிய நாவல் அல்ல, மனிதனைப் பற்றியது” என்று முன்னுரையிலும் குறிப்பிட்டிருந்தார். நாவல் படித்து முடித்த பிறகு, அக இயல்புகள் என்பது பின் அட்டையில் குறிப்பிட்ட வாசகத்துடன் நின்று விட்டது என்பதும் (ஐயா நீங்கள் ஏன் ஐயா அவர் கூப்பிடுமிடத்திற்குப் போக மாட்டேன் என்கிறீர்கள்), “இது திருப்பூர் பற்றிய நாவல்தான், மனிதன் பற்றியதல்ல” (ராஜா அண்ணாமலை புரத்துக்குப் போறதுக்கு இது மூஞ்சி அல்ல, கண்ணம்மாப் பேட்டை போற மூஞ்சிதான் இது..) என்பதும் முடிந்த முடிபாகியது.
இந்த நாவல் மூலம் நான் திருப்பூர் பற்றி அறிந்து கொண்டதே அதிகம். வியாபாரம், துரோகம், ஒருவன் தலையின் மேல் ஏறி மேலே போய் அதே வேகத்தில் கீழே வருவது, குழந்தைத் தொழிலாளர், சுற்றுப்புறம் மாசுபடுதல், மேலும் வட இந்தியாவிற்கு சரக்கு அனுப்பி, வசூல் செய்து விட்டு வரும்போது ஏற்படும் உயிர் அபாயங்கள் சிக்கல்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல், மிகச் சாதாரணமாக நிகழும் முறையற்ற கலவிகள்.
தெரிந்து கொண்டே எந்த விதமான மனக் கட்டுப்பாடுமின்றி தன் போக்கில் செல்லும் சிவா. அறம் என்பதற்கும் அந்த நபருக்கும் எந்த சம்மந்தமுமில்லை. கூட இருப்பவன் திறமைசாலி, எப்படியாவது நீக்கி விட வேண்டுமென்று நீக்கிவிட்டு மேலே வரும் ஒரு நபர். இவளை விட இவள் பரவாயில்லை, இவளை விட இவள் இன்னும் கொஞ்சம் பரவாயில்லை என்ற மேலோட்டமான உறவுகள். திருமணத்திற்குப் பின்பும் மிகச் சாதாரணமாக முன் உறவாடியவளிடம் சிரித்துக் கொண்டே போகக் கூடிய கதாபாத்திரம். எங்கும் ஒட்டவில்லை. விலகல் ஏன் வருகிறது என்று சிவா நினைப்பதாக ஒரு வரி வரும். அந்த மனப்பாங்கினால்தான் வருகிறது என்று ஆழமாக எதயும் கதாசிரியர் சொல்லவில்லை. அவர் சொல்ல வேண்டுமென்று நான் எதிர் பார்ப்பது அவர் மன ஆழங்கள் பற்றி, அக இயல்புகள் பற்றி முன்னுரையிலும், பின்னுரையிலும் குறிப்பிட்ட ஒரே காரணத்தினாலேயே.
சண்முகம் ஒரு பாரடொக்ஸ். இன்றுடன் பட்சிகளின் எண்ணிக்கை 25 என்று கொண்டாடும் இவர், சிவாவின் மனச்சாட்சியை நேரடியாகக் கேள்வி கேட்கிறார். கோணங்கித் தனமாக கவிதை எழுதுகிறார். கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார். குழந்தை இவருடையதில்லை என்ற பேருண்மை உணர்ந்து, திடுக்கிட்டு விழித்து, விபூதி வைத்துக் கொள்கிறார்: என்னுடைய அறிவுக்கு மன ஆழங்கள் இங்கும் எட்டவில்லை.
சட்டென்று ஒருத்தியைப் பார்த்து அண்ணலும் நோக்க, அவளும் நோக்க காதலில்(?!) விழுந்து (அந்த ஊரிலிருக்கும் 99.99% பேர் போலவே) இரண்டு மாதங்களில் கல்யாணமென்று முடிவு செய்து, கல்யாணத்தின் போதே இது தப்பென்று தெரிந்தும் செய்து நொந்து கொள்வது பரந்தாமன் என்ற கதாபாத்திரம். மீண்டும் யாரையோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே என்றதன் உள், வெளி அழுத்தங்களினால் செய்து கொண்டு, அதையும் தொலைத்து விட்டு, சண்முகத்தின் அடல்ட்ரி அலட்டல்களைக் கேட்டு மனம் புழுங்கி, எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஒடுங்கிப் போவது: இதிலும் அக இயல்புகள்.. ஊஹூம் காணவே காணோம்.
திரு ஒரு நியாயமான சீட்டு வியாபாரி. நேர்மையான குடும்பஸ்தன். அந்த 0.01% இல் அடக்கக் கூடிய ஒரு சராசரி மனிதன்.
அன்பழகன் திருவின் இன்னொரு எமோஷனல் உருவம். முறையில்லாத பெண் தொடுகைக்கு பயப்படும், நேர்மையில்லாத வியாபாரத்திற்குத் துணியாத இன்னொரு 0.01%.
நவாப், உமா, சிங்காரம், செட்டியார், செட்டியார் மனைவி, செட்டியார் மனைவியின் மகள், விமலா, சித்ரா, அருணா, கண்ணம்மா இத்யாதி இத்யாதி இத்யாதிக் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்வதற்கு சுவாரஸ்யமாக சமாச்சாரங்கள் இருக்கின்றன.
முக்கியமாக சுப்பிரமணி, செட்டியாரையும், எல்லா நடப்புகளையும் பார்த்து “இது சரிதானா?” என்று கேள்வி எழுப்பி விட்டு அவர்களுடன், அவைகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு 0.01%.
இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்து ஒவ்வொரு அத்தியாயங்களாக நகர்த்தியபோது, சில பல சிறுகதைகளைச் சிதற வைத்து, jigsaw puzzle போன்று நேர்த்தியாகவும், சிலவற்றை வன்முறையுடனும் இணைத்து இழுத்துச் சென்றதாகவே எனக்குத் தோன்றியது. இதை இலக்கிய உலகிலிருந்து சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” போன்று எழுதி இருந்தால் சலிப்பு ஏற்படாது இருந்திருக்கலாம். ஆனால் கோபால கிருஷ்ணன் சொன்ன மன ஆழமும், அக இயல்பும் “மணல் கடிகை”யை விட ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில்” இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
ஆனால் நேர்மையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்... "It's a good read; had a good time pass"