header photo

Thursday, July 30, 2009

ஆடி அடங்கும் போதினிலே..

அட ஒண்ணுமில்ல.. ஆடி மாசம் பத்தித்தான்.. நீங்க வேற!

ஆடித் தள்ளுபடி அப்படிங்கிற ஒரு விடயம் இருக்கிறது தெரியும், அது என்னவென்று எனக்குத் தெரிய வாய்ப்புக் கிடைத்தது இந்த வருடம்தான்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு சென்ற பொழுது ஐந்து வாரங்கள் வைத்தியசாலை வளாகத்திலேயே கரைந்து போனது. மீதி இரண்டு வாரங்கள், தினமும் இரு தடவை ஓடி ஓடித் தியானம் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் கல்கி ஐயா போன்றவர்கள் எழுத்திலும், என் எண்ண ஓட்டத்திலும் பார்த்த பல இடங்களைச் சந்தர்ப்பம் கிடைத்தும் சென்று பார்க்கத் தவறி விட்டேனே என்ற ஆதங்கம் அரித்துக் கொண்டே இருந்தது.

அதனால் இம்முறை விடுமுறையை முறையாகச் செலவிடுதல் வேண்டும் என்று நினைத்தாலும் எதையும் திட்டமிட முடியவில்லை. கோலம் போட்டாலும் கோல மாவுடன் கோலமிடும் இடத்தில் உட்கார்ந்ததன் பிற்பாடு சிந்திக்காமலேயே கோலமிடுவதுதான் என்னுடைய வழக்கம். திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாலோ, அல்லது திட்டமிடாது செயல்படுவதில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாலோ தெரியவில்லை, இரண்டாவது வழியே வசதியாக இருக்கிறது.

இவ்வாறு திட்டமிடாது சென்று பார்த்து, பிரமித்து, வியந்து, ரசித்த இடங்கள் தவிர, ஒழுங்காகத் திட்டமிடாததால் பாதி நாள் புகையிரதத்திலேயே கழிந்து விட்டது. சென்னையில் செலவிடக் கிடைத்தது ஓரிரு நாட்களே.

இவ்வாறு இரு தடவை நெடிய விடுமுறையில் வந்து ரங்கநாதன் தெரு பார்க்கவில்லை என்று சொன்னால், சின்னக் குழந்தை கூடக் கையும் காலும் அடித்துக் கொண்டு சிரிக்கும் என்று நக்கலடித்த நண்பரின் வார்த்தையில் சுரணை வந்து, அதையும் பார்க்கலாம் என்று அவரின் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.

எந்தக் கடை என ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டு, அதையும் திட்டமிடாமலே இங்கே, இங்கே என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு கடையாக சன அலைகளின் உதவியுடன் மிகவும் நிதானமாக நீந்த ஆரம்பித்தோம். நண்பரின் மகள் நான் அச் சமுத்திரத்தில் தொலைந்து போய் விடக் கூடாது என என் கையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். அத்திரளில் மிகவும், இயல்பாகவும், லாவகமாகவும் உரசக் கற்றுக் கொண்டவர்களின் முயற்சியைக் கண்ணாலேயே துப்பி முறியடித்து, அன்னை போன்று இந்தப்பக்கம் வந்துடு, அந்தப் பக்கம் வந்துடு என்று என்னை அழைத்துச் சென்றதை அவளறியாமலேயே ரசித்துச் சிரித்தேன்.

நாம் எந்தத் தளத்திற்குப் போவது என்பதையும் கூட்டமே முடிவு செய்தது. வேண்டாம் வீட்டுக்குப் போய் விடலாம் என்பதையும் அதுவே முடிவு செய்தது. மிகவும் மும்முரமாக அக்கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு நீச்சலடித்துச் சென்று கொண்டிருந்த நண்பரும், அவரின் அடிச்சுவட்டை அச்சுப் பிசகாது பிடித்து நீந்திச் சென்ற அவர் மனைவியும் எங்களை விடப் பத்து அடிகள் முன்னாலிருந்தார்கள். நாம் பல அடிகள் பின் தங்கி விட்டோம் என்பதைத் திடீரென்று உணர்ந்தவர்களாக, பக்கத்திலிருந்த கண்ணாடி மேசையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பத்து அடியை நாம் அடைவதற்குப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அவர்களை அடைந்து, அப்பாடா என்று மூச்சு வாங்கி, நண்பரின் மகள் காதருகில் குனிந்து, இதைத்தான் "ஆடித்தள்ளுபடி" என்று சொல்லுறாங்களா? என்று கேட்டேன்.
____________________________________________________________________

20 ஊக்கம்::

vasu balaji said...

நீங்க வேறைங்க. திநகர்ல கடைக்குப் போறதுன்னா தீர்மானம் பண்ணிட்டெல்லாம் போக முடியாது. அதுக்கு சன்னியாச பொறுமை வேணும். ரங்கநாதன் தெருவில கைக்குட்டை வாங்கணும்னு அந்த கடைகிட்ட நிதானிச்சா ஜட்டி கடை எதிர்ல தள்ளிட்டு வந்துடுவாங்க. அடுத்த வாட்டி வரப்போ கருக்கல்ல போய் பார்த்துக்கலாம். ஹி ஹி. இந்த ஆடித் தள்ளுபடிக்காக போக்கு வரத்தையே மாற்றி அய்யோ என் வீடு இந்த தெருவிலன்னு அலறினாலும், அத்தாட்சி காட்டு இல்லன்னா 5 கி.மீ சுத்திட்டு போன்னு நடக்கற கூத்து லோகத்துல வேற எங்கயும் உண்டுமா தெரியல.

vasu balaji said...

/கண்ணாலேயே துப்பி முறியடித்து, அன்னை போன்று இந்தப்பக்கம் வந்துடு, அந்தப் பக்கம் வந்துடு என்று என்னை அழைத்துச் சென்றதை அவளறியாமலே ரசித்துச் சிரித்தேன்./
/பக்கத்திலிருந்த கண்ணாடி மேசையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்./

அந்தக் களேபரத்துல இதெல்லாம் வேற பார்க்க முடிஞ்சதா? என்னா லுக்கு!

கலகலப்ரியா said...

//பாலா... said...
அந்தக் களேபரத்துல இதெல்லாம் வேற பார்க்க முடிஞ்சதா? என்னா லுக்கு!//
சுனாமில அடித்துச் செல்லப்பட்டு தப்பித் திரும்பி வந்தவங்க இருப்பாங்க போய்க் கேளுங்கோ. கதை கதையா சொல்லுவாங்க. அப்டியே வெள்ளம் என்னை அடிச்சுண்டு போய்க்கிட்டே இருக்கு, திடீர்னு கைல ஏதோ அகப்பட்டுது, மூழ்கிறவன் குச்சிய பிடிக்கிறாப்போல, லபக்குனு புடிச்சி பார்த்தா, கைல கொளகொளன்னு நெளியுது, பார்த்தா நீர்ப்பாம்பு, யப்பேன்னு தூக்கி தூரமா வீசிட்டு, இந்தப்பக்கம் பார்த்தா ஒரு வாத்து ஒற்றைக் கால்ல நின்னு மீன் பிடிச்சிண்டிருக்குன்னு.. அதே மாதிரிதான் இதும்.. எல்லாம் ஓரக் கண்ணில பட்டது...

vasu balaji said...

அதான் மெச்சிகிட்டேனே! என்னா லுக்குன்னு.

கார்த்திக் said...

துணிக் கடல்-னு சும்மாவா சொல்றாங்க...

தினேஷ் said...

ஆடி -அடி

கலகலப்ரியா said...

வாங்க கார்த்திக் & சூரியன்.. :)

jothi said...

ஆடி மற்றவங்களுக்கு எப்படியோ ஆனால் முக்கிய இரு துறைகளான விவசாயத்திற்கும் கல்விக்கும் அது முக்கிய மாதமாக ஆகிவிட்டது. ஆடிப்பட்டம் என அழைக்கப்படும் ஆடி மாதத்தில்தான் நெல் விதைப்பு ஆரம்பிக்கும், கல்வியும் அப்படியே.

கலகலப்ரியா said...

வாங்க ஜோதி.. நான் ஒண்ணும் ஆடி பத்தி தப்பா சொல்லல.. என்னமா ரோஷம் வருதுப்பா.. அதில்லாம இப்டி பெருமையான விஷயங்கள் சொன்னதுக்கு நன்றி.. ஏன்னா.. நாம பொறந்ததும் இந்த மாசத்திலதான்... ஹிஹி..

vasu balaji said...

/ஏன்னா.. நாம பொறந்ததும் இந்த மாசத்திலதான்... ஹிஹி../


ஓஹோ. அதான் சமைக்கிறது படிக்கறது ரெண்டுலயும் அசத்துறீங்களோ?

கலகலப்ரியா said...

//பாலா... said...
ஓஹோ. அதான் சமைக்கிறது படிக்கறது ரெண்டுலயும் அசத்துறீங்களோ?//

ஆஹா.. வேணாம் ஐயா.. இப்டி ஒரு புரளிய கெளப்பி விட்டு.. ஆடித் தள்ளுபடின்னு அலைபாயற கூட்டமெல்லாம்.. ஆடிப் பிரசவம்னு ஆசுப்பத்திரில அலை மோத வச்சிடாதீங்கப்பு..

தேவன் மாயம் said...

திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாலோ,//

ஆமாம்............ திட்டமிடப் பொறுமையிருப்பதில்லை...

தேவன் மாயம் said...

வாங்க எங்க ஏரியாவுக்கெல்லாம்!

கலகலப்ரியா said...

//தேவன் மாயம் said...

ஆமாம்............ திட்டமிடப் பொறுமையிருப்பதில்லை...//

mm.. apdiyaa.. :-s


//வாங்க எங்க ஏரியாவுக்கெல்லாம்!//
athukkenna..

jothi said...

//நான் ஒண்ணும் ஆடி பத்தி தப்பா சொல்லல.. என்னமா ரோஷம் வருதுப்பா..//

ரோசமா,.. அதுவும் எனக்கா?? ஹய்யோ. ஹய்யோ,..

நீங்கள் ஆடியை பற்றி நெகடிவ்வா சொன்னது மாதிரி இருந்துச்சு,.. கொஞ்சம் பாஸிட்டிவா சொல்லலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள,..

//அதான் சமைக்கிறது படிக்கறது ரெண்டுலயும் அசத்துறீங்களோ?//

அப்படியா,..சொல்லவேயில்ல,..

கலகலப்ரியா said...

aahaa.. mattikkittinglaa.. maattikkittingalaa.. maattikkittinglaa.. negative-a sonna maathiri irunthichchaamla.. apdinnaa olungaa padikkalainu artham.. inimelaavathu olungaa padichchittu pinnoottam podungo sollipten..

AANAA PADIKKALAINAALUM VOTE PODALAAM =))

jothi said...

//AANAA PADIKKALAINAALUM VOTE PODALAAM =))//

ஹி ஹி,.. நாங்க வழக்கமா அதுதான பண்றது,..

கலகலப்ரியா said...

aahaa.. ipdi thondargal irukkira varaikkum namakkenna kashtam.. unga vote-ku nanri..hehe

vasu balaji said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

ty & same to ya..