header photo

Tuesday, December 1, 2009

சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"

(இது ஔவையிடமிருந்து முதல் காப்பி.. எனக்கு எனக்கு.. எனக்கே எனக்கு அறிவுரையாக..)

யார் யாரோ... எப்டி எல்லாமோ காப்பி அடிக்கிறாங்க.. நானும்.. ஒரு காப்பி இடுகை... அல்லது இடுகை மொழியில் சொன்னால் மொக்கை..! மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சில்ல... (யாரது... அங்க.. ம்க்கும் எல்லாம் அதுதான்னு நொடிக்கிறது... இருடி ஆட்டோ அனுப்பறேன்..)

தம்பி வசந்து... நீ கேட்டுக் கொண்டதுக்கிணங்க...பு(ப)டிச்சவிக மாஆஆதிரி... எழுதுறேன்..! பார்த்துக்க..! அப்புறம் உன்னை யாரும் கண்டுக்கலை.. காதுக்கலைன்னு எல்லாம் சொல்லப்டாது..!

படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!
_____________________________________________________________
வசந்து கவிதை:

அரை அடி கூட இல்லை..
நமக்கிடையில் இடைவெளி..
இடையில் ஒரு இதயம்..
எங்கோ துடிக்கிறது..
ஓருடலில் தங்கி..
ஒன்றாய் சுவாசித்து..
ஆனாலும் கைக்கெட்டிய நீ..
வாய்க்கெட்டவில்லை பார்..
இதுதான் வாழ்க்கை...!

டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)

பின்னூட்டம்

ப்ரியா: //இடையில் ஒரு இதயம்.. // போட்டேன்னா... இதயம் இடையிலயாடா துடிக்குது..? முதல்ல டாக்டர் கிட்ட போ நீயி..!


____________________________________________________________
வானம்பாடிகள்:

நறுக்: 345.2 v.56

"ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது: அனோமா பொன்சேகா"

அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!

பின்னூட்டம்

ப்ரியா: ஜெனரல் பதவி போனாலும் பாரியார் அம்மணி சோதிடம் சொல்லி குடும்பத்த காப்பாத்திடும்பா..!

வானம்பாடி கவிதை:

மழைமுகில்கள் விலக்கி
எட்டிப் பார்த்துக் கண்ணடித்த
பிறைநிலவைப்
புறக்கணித்துச் சிரித்தேன்
என்னவள் புருவத்தின்
ஒரு முடிக்கு ஈடாகுமா
உன்னழகு..!

பின்னூட்டம்

ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..!


____________________________________________________________
அது சரி:

கிடைக்கோடுகள்... நெடுங்கோடுகள்...
பாலஸ்தீனியம்.. இஸ்ரேல்.. ஒபாமா..
எக்ஸ் ஈகுவல் டு மைனஸ் டூ
ப்ளஸ் ஸ்குவாயர்ட் பிராக்கெட்
மைனஸ் வை மைனஸ் த்ரீ
பிராக்கெட் க்ளோஸ்ட்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
பதில் கிடைக்காது போகலாம்..
கிடைத்த பதில் இரண்டாக இருக்கலாம்
இதில் எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!

பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)


____________________________________________________________
கதிர்:

கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!


____________________________________________________________
(அண்ணா) பிரபாகர்:

சரளா கிட்ட வடிவேலு அடி வாங்கிப் பார்த்திருப்பீங்க.. அண்ணன் அண்ணிகிட்ட அடி வாங்கிப் பார்த்ததில்லையே..

ஒரு நாள் எங்க வீட்டு வாசல்ல நின்னு தபூ சங்கர் கவிதை படிச்சுக்கிட்டிருந்தேன்.. பக்கத்தில பக்கத்து வீட்டு ரங்கமணி, எங்க வீட்டு தோட்டக்காரன் மாரியப்பனோட மகன் கிட்டா கிட்ட வெத்தல வாங்க வந்திருந்தான். எதிர் வீட்டுக் கிணத்தடில ஒரு பாட்டி குளிச்சுக்கிட்டு இருந்திருக்கு.. எனக்கு சத்தியமா அதப் பத்தி ஒண்ணும் தெரியாது...

கவிதை ரொம்ப இண்டரஸ்டிங்கா போச்சு "கர்ப்பக் கிரகம் தன்னைத் தானே அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?" என்று உரத்துப் படித்துவிட்டு மீண்டும் மௌனமாகத் தொடர்ந்தேன்.

முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க. ஒன்றும் புரியாம கேட்டதுக்கு பதில் சொல்லணும்னு "கோபித்துக் கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே என்றேன்" அதுவும் கவிதைதான்.

மீண்டும் கண் மூடித் திறப்பதற்குள் இருபது முப்பது அடிகள் விழுந்தன. அப்புறம் ஒன்றும் பேசாமல் போயி அடுப்பங்கரைல உக்காந்துட்டாங்க. அப்புறம் நாலு நாள் கழித்து ரங்கமணி சொன்னப்போதான் விஷயம் தெரிஞ்சது. உடனேயே ஒரு கவிதை கிறுக்கிக் கொண்டு போய் என் மனைவியிடம் நீட்டினேன்.

"இந்தா என் இதயம்
அதை நீ விளையாடும் வரை
விளையாடி விட்டு
தூக்கிப் போட்டு விடு

அதற்குத்தான் இது
படைக்கப்பட்டது"

அதுவும் தபூ சங்கர் கவிதைதான். அப்புறம் சமாதானமாயிட்டாங்க. பாவம் ரங்கமணி அவன் சொந்த செலவில வெத்தல வாங்கினதா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.

பிடிச்சிருந்தா சொல்லுங்க.. இல்லைனா முடிவு மாத்தி எழுதிடலாம்.

பின்னூட்டம்

ப்ரியா: அண்ணி அடி பின்னிட்டாங்க..! (ஏற்கனவே பாசமலர், டி ஆர் ன்னு நக்கல் ஜாஸ்தி ஆய்டுத்து..! இதுக்கு என்ன சொல்லுவாய்ங்களோ...)


____________________________________________________________
நேசமித்ரன்:

ஆண்ட்ரோஜன் அடுக்குகளின் இடுக்கில்
மோனலிசாக்களின் மோனப்புன்னகையில்
சைட்டோ டாக்சிக் ஏறிய செல்களுடன்
பிகாசஸ் வரையும் பிக்காசோ பாப்லோக்கள்

பின்னூட்டம்:

ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!


____________________________________________________________


மக்கா... இங்க திட்டுறது சரி... நோ ப்ரோப்ளம்... அது திட்டின கையோட.. இன்னைக்கு போட்ட இன்னொரு இடுகை (கவிதைன்னு பேரு வச்சிருக்கேன் அதுக்கு..) அங்கன கிடக்கு.. அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு போங்க.. சொல்லிப்புட்டேன்..! (இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்... அதான் ஒரு நாள்ல ரெண்டு இடுகை... ஹிஹி..) நோ பாட் வோர்ட்ஸ் ப்ளீஸ்..! (இன்னும் கொஞ்ச பேரு லிஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்டாங்க.. அப்புறம் பார்த்துக்கறேன்..)
____________________________________________________________

117 ஊக்கம்::

vasu balaji said...

மொத நானு=))

vasu balaji said...

/படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!/

யக்கானு அலறப்போறான் வசந்து=))

/டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)/

=)) அடிப்பாவி சான்ஸேஇல்லை

இதுக்கு பின்னூட்டம் சூபர்ப்

vasu balaji said...

/எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!

பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)//

=)). வேதாளத்துக்கு நல்ல பிஸினஸ் ஆகும் இன்னைக்கு=))

vasu balaji said...

கதிர்:

/பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!/

எத. கவிதையா? விளக்கு மாத்தையா=)).ஆண்டாவா முடியல சாமி.

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா அவதானிச்சு எழுதி இருக்கீங்க ஒவ்வொருத்தரையும்

நம்பளையும் ஆட்டதுக்கு சேர்த்துகிட்டதுக்கு நெம்ப நன்றி

பிரியா

ஆனாலும் இம்புட்டு புரியாமயா இருக்கு என்னோட கவிதை

???

ஈரோடு கதிர் said...

அடடா... கலக்கல்

இன்னிக்கு கவிதை புரிலையேனு எஸ்கேப் ஆயிட்டேன்...

அதுக்கு காம்பன்சேட் பண்ணீட்டீங்க போங்க...

லிஸ்ட்ல சிலபேர் தப்பிச்சிட்டாங்களா... ம்ம்ம் கொடுத்துவச்சவங்க

vasu balaji said...

பின்னூட்டம்:

/ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!/

ஐ. அப்ப நானா. நானுமில்லிங்கோ=))

vasu balaji said...

(அண்ணா) பிரபாகர்:

/முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான்./

=)). பிரபாகர் அப்பீட்டு

/பாவம் ரங்கமணி அவன் சொந்த செலவில வெத்தல வாங்கினதா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்./

இது அண்ணா டச்.

vasu balaji said...

கதிர்:

/பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!/

எத. கவிதையா? விளக்கு மாத்தையா=)).ஆண்டாவா முடியல சாமி.

vasu balaji said...

/எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!


பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)//

=)). வேதாளத்துக்கு இன்னைக்கு கேள்வியா?

vasu balaji said...

/வானம்பாடி கவிதை:

மழைமுகில்கள் விலக்கி
எட்டிப் பார்த்துக் கண்ணடித்த
பிறைநிலவைப்
புறக்கணித்துச் சிரித்தேன்
என்னவள் புருவத்தின்
ஒரு முடிக்கு ஈடாகுமா
உன்னழகு..!


பின்னூட்டம்

ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..! /

அட கடவுளே. விட்டு வைக்கமாட்டியா=))

vasu balaji said...

/படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!/

யக்கானு அலறப்போறான் வசந்து=))

/டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)/

=)) அடிப்பாவி சான்ஸேஇல்லை

இதுக்கு பின்னூட்டம் சூபர்ப்

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
test

//

ஈரோடு வாங்கனு சொன்னா Exam இருக்குனு சொல்லிட்டு... இங்கே test எழுதறீங்களோ.....

Prathap Kumar S. said...

//அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!//

ஆஹா....என்ன கற்பனை என்ன கற்பனை...

ஹஹஹ நம்ம வானம்பாடிகள் ஐயாவை ஒரு வழிப்பண்ணீட்டீங்க... பாவம் அண்ணன் கதிருக்கே நிலைமைன்னா, அண்ணன் பிரபாவோட நிலைமை அதைவிட டரியல்., தல வசந்த் இப்போ ஆஸ்பத்திரி இருக்காராம்ல...

ஆத்தா இப்படி எத்தனை நாளா பிளானு பண்ணிட்டு இருந்தீக.... இன்னும் யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காக..

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
/ ஈரோடு வாங்கனு சொன்னா Exam இருக்குனு சொல்லிட்டு... இங்கே test எழுதறீங்களோ...../

அதென்னா? இவ்ளோ பெரிய இடுகைக்கு டெஸ்ட் மாதிரி பின்னூட்டம். இதுல குசும்பு வேறா=))

ஈரோடு கதிர் said...

//ஏற்கனவே பாசமலர்,//

இதுக்கு கிழக்குச் சீமையிலேனு சொல்லுவோம்....

எங்கே ராதிகா மாதிரி... அண்....ணே னு இழுத்துக் கூப்பிடுங்க இரு தடவை

ப்ரியமுடன் வசந்த் said...

நைனா எனக்கு போட்ட பின்னூட்டத்த மாடரேசன் பண்ணிருக்கணும் கண்டிப்பா எனக்குதெரியும்...

ஈரோடு கதிர் said...

ஆத்தாடி.. உங்க அண்ணன் தங்கமணியா ஊருக்கு அனுப்பிட்டு...

தம்பிக்கு போன் போட்டு இடுகை எழுத மேட்டர் தேத்திக்கிட்டிருக்காராமே

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/நைனா எனக்கு போட்ட பின்னூட்டத்த மாடரேசன் பண்ணிருக்கணும் கண்டிப்பா எனக்குதெரியும்.../

இல்ல. மாடரேஷன் போட்டதெல்லாம் போஸ்ட் பண்ண முடியலையாம். அதான் எடுத்து விட்டுச்சி. இப்பொ நமக்கு தெரியர பின்னூட்டம் அதுக்கு தெரியலையாம். இரு ராஜா.

கலகலப்ரியா said...

test...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
test...//

pass

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
ரொம்ப நல்லா அவதானிச்சு எழுதி இருக்கீங்க ஒவ்வொருத்தரையும்

நம்பளையும் ஆட்டதுக்கு சேர்த்துகிட்டதுக்கு நெம்ப நன்றி

பிரியா

ஆனாலும் இம்புட்டு புரியாமயா இருக்கு என்னோட கவிதை

???//

தம்பி நேசா இது உங்களுக்கே ரொம்ப ஜாஸ்தியா தெரியல..

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்..

மீ த எஸ்கேப்பு பார்டி

இராகவன் நைஜிரியா said...

// படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!//

இதுக்கெல்லாம் கொலை வெறி ஆவாங்களா என்ன...

கலகலப்ரியா said...

=((... எல்லாருக்கும் ரொம்ப நன்றி..! பின்னூட்டம் வியூ பண்ண முடியல..! படுத்துறது..! காலைல பார்க்கறேன்..:((..

ப்ரியமுடன் வசந்த் said...

//நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)//

ரொம்ப திமிர்தான்...

ப்ரியமுடன் வசந்த் said...

நான் சொன்னதுக்காக இந்த இடுகைய வெளியிட்டதுக்கு மிக்க நன்றிங்க மேடம்ம்ம்.......

கலகலப்ரியா said...

windows - no use... apple - no use... strawberry might help...!

கலகலப்ரியா said...

// ஈரோடு கதிர் said...

அடடா... கலக்கல்

இன்னிக்கு கவிதை புரிலையேனு எஸ்கேப் ஆயிட்டேன்...

அதுக்கு காம்பன்சேட் பண்ணீட்டீங்க போங்க...

லிஸ்ட்ல சிலபேர் தப்பிச்சிட்டாங்களா... ம்ம்ம் கொடுத்துவச்சவங்க//

ம்ம்.. எஸ்கேப் வேற நடக்குதோ..! குறிச்சு வச்சுக்கிறேன்..!

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா அவதானிச்சு எழுதி இருக்கீங்க ஒவ்வொருத்தரையும்

நம்பளையும் ஆட்டதுக்கு சேர்த்துகிட்டதுக்கு நெம்ப நன்றி

பிரியா

ஆனாலும் இம்புட்டு புரியாமயா இருக்கு என்னோட கவிதை

???//

ஹிஹி.. நன்றி நேசமித்ரன்..! ச்சே ச்சே... இம்பூட்டு எல்லாம் இல்ல... அம்பூட்டும் புரியல.. =))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

பின்னூட்டம்:

/ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!/

ஐ. அப்ப நானா. நானுமில்லிங்கோ=))//

இதிலயுமா காப்பி...

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...


அட கடவுளே. விட்டு வைக்கமாட்டியா=))//

ம்ம்... போன பஸ்சுக்கு கை காண்பிச்சு என்ன புண்ணியம்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கதிர்:

/பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!/

எத. கவிதையா? விளக்கு மாத்தையா=)).ஆண்டாவா முடியல சாமி.//

ரொம்பதான் யோசிக்கிறீங்க..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

யக்கானு அலறப்போறான் வசந்து=))//


சில கணிப்பீடுகள் தவறி விடுகின்றன..!

// =)) அடிப்பாவி சான்ஸேஇல்லை

இதுக்கு பின்னூட்டம் சூபர்ப்//

நன்றி சார்...

கலகலப்ரியா said...

//நாஞ்சில் பிரதாப் said...

//அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!//

ஆஹா....என்ன கற்பனை என்ன கற்பனை...

ஹஹஹ நம்ம வானம்பாடிகள் ஐயாவை ஒரு வழிப்பண்ணீட்டீங்க... பாவம் அண்ணன் கதிருக்கே நிலைமைன்னா, அண்ணன் பிரபாவோட நிலைமை அதைவிட டரியல்., தல வசந்த் இப்போ ஆஸ்பத்திரி இருக்காராம்ல...

ஆத்தா இப்படி எத்தனை நாளா பிளானு பண்ணிட்டு இருந்தீக.... இன்னும் யாரெல்லாம் லிஸ்ட்ல இருக்காக..//

நன்றி பிரதாப்... =))..

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//ஏற்கனவே பாசமலர்,//

இதுக்கு கிழக்குச் சீமையிலேனு சொல்லுவோம்....

எங்கே ராதிகா மாதிரி... அண்....ணே னு இழுத்துக் கூப்பிடுங்க இரு தடவை//

இந்தப் பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி...! ராதிகா மாமி பிலிம் எல்லாம் நாம பார்த்ததில்லீங்கோ..! அவங்க எப்டி கூப்டுவாங்கன்னு நீங்க கொஞ்சம் ரெகார்ட் பண்ணி அனுப்புங்கோ.. பார்க்கலாம்..!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

நைனா எனக்கு போட்ட பின்னூட்டத்த மாடரேசன் பண்ணிருக்கணும் கண்டிப்பா எனக்குதெரியும்...//

????

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
test...//

pass//

நன்றி ராகவன்..!

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்..

மீ த எஸ்கேப்பு பார்டி//

எங்க போய்ட போறீங்க.. இருங்க இருங்க...!

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!//

இதுக்கெல்லாம் கொலை வெறி ஆவாங்களா என்ன...//

ஆவுராங்களே..!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)//

ரொம்ப திமிர்தான்...//

இதுவாப்பா..? சரிதான்..! நன்றி..!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

நான் சொன்னதுக்காக இந்த இடுகைய வெளியிட்டதுக்கு மிக்க நன்றிங்க மேடம்ம்ம்.......//

most welcome sir..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...


அட கடவுளே. விட்டு வைக்கமாட்டியா=))//

ம்ம்... போன பஸ்சுக்கு கை காண்பிச்சு என்ன புண்ணியம்...//

அப்பாடா. எவ்ளோ நாளாச்சி பின்னூட்டத்தில கலகலா பார்த்து:))

ப்ரியமுடன் வசந்த் said...

//ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..! //


நைனா யார் அந்த சின்னம்மா?

:-)

ப்ரியமுடன் வசந்த் said...

//கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!//

யக்கா இன்னும் சிரிப்ப அடக்க முடியல...

கதிர்சார் எத்தனை பதிவுல எங்கக்கா மாதிரி பின்னூட்டம் பொட்டூ டரியலாக்குனீங்க இன்னிக்கு உங்களை டரியலாக்கீட்டாங்களே

அவ்வ்வ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

மத்த மூணுபேரையும் கிண்டல் பண்ணுற அளவுக்கு நான் அவங்கள் கிட்ட பழகல..

ஜூட்....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ நைனா யார் அந்த சின்னம்மா?

:-)/

தோடா. சின்னம்மா பெரியம்மால்லாம் புருவ முடி வெச்சே கண்டு பிடிச்சிடுவியா? லொல்லா?

பா.ராஜாராம் said...

:-)))

ஆ.ஞானசேகரன் said...

ப்ரியா,... நல்லா கலக்கலா இருக்குங்க

Thenammai Lakshmanan said...

Priya
ellamee superb

nalla humarous sense ungalukku

NESAN pathi enna ezuthi irukiingannu paarka vanthen

quite good

புலவன் புலிகேசி said...

நீங்க ரொம்ப நக்கலான ஆளுதான்..

Unknown said...

இன்னிக்கி லகலகப்ரியாவ வெளிய விட்டாச்சுப் போல இருக்கே..

வசந்த், வானம்பாடிகள், அது சரி, கதிர், பிரபாகர், நேசமித்திரன் ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

எல்லாம் ரொமாண்டிக்கா இருக்கு. சாமியே சரணம் அய்யப்பா. வரட்டா?

sathishsangkavi.blogspot.com said...

ஏனுங்க பிரியா........

எல்லாரையும் பின்னி எடுத்துட்டீங்க.....

இனி பின்னூட்டம் போடவே யோசிக்கனும் போல.........

balavasakan said...

:-p

அவ்..அவ்...

V.N.Thangamani said...

ஏதேதோ சொல்லறீக, பேசறீக எனக்கு சரியா புரியரதில்லம்மா.
நான் கொஞ்சம் லேட்டுத்தான்.
சரி அந்த அவ்வ்வ்வ் என்னது.
வடிவேல் சொல்ற அவ்வ்வ்வ்வா?

சிவாஜி சங்கர் said...

கலக்கிடீங்க போங்க ....

பிரபாகர் said...

தங்கச்சி.....

அண்ணன இப்படி டரியலாக்கிட்டேயம்மா!

முடியல, சிரிச்சி தாளல!

பிரபாகர்.

thiyaa said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

சத்ரியன் said...

//முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க//

ஆத்தாடி,

பாவம் பூரிக்கட்டை.! சொரணை கெட்டவன் மேல விழுந்தட்டமேன்னு அழுதிருக்கும்.!

நல்ல வேளை. நானெல்லாம் "தபூ சங்கரோட கவிதைப் புத்தகம் " வாங்குன வேகத்துலயே எம் மனைவி கிட்ட குடுத்து படிக்க சொல்லிட்டு தான் மறு (எல்லா) வேலைய பாக்குறது. அதனால தான் இதுவரைக்கும் சேதாரமில்லாமா உடம்ப காப்பாத்திக்கினு வர்றேன்.

கலகலப்ரியா said...

சத்ரியன் has left a new comment on your post "சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...":

//முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க//

ஆத்தாடி,

பாவம் பூரிக்கட்டை.! சொரணை கெட்டவன் மேல விழுந்தட்டமேன்னு அழுதிருக்கும்.!

நல்ல வேளை. நானெல்லாம் "தபூ சங்கரோட கவிதைப் புத்தகம் " வாங்குன வேகத்துலயே எம் மனைவி கிட்ட குடுத்து படிக்க சொல்லிட்டு தான் மறு (எல்லா) வேலைய பாக்குறது. அதனால தான் இதுவரைக்கும் சேதாரமில்லாமா உடம்ப காப்பாத்திக்கினு வர்றேன்.

கலகலப்ரியா said...

sila comments... publish panna mudiyala... avvvv... ipdi paste panna vendiyathuthan.. :((.. brb guys..

Nathanjagk said...

ம்! பின்னூட்டமே ஒரு இடுகையாக!!
நல்லாத்தான் கல்லா கட்டறீங்க! ​பேஷ்!

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

:-)))//

ஹிஹி...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!//

யக்கா இன்னும் சிரிப்ப அடக்க முடியல...

கதிர்சார் எத்தனை பதிவுல எங்கக்கா மாதிரி பின்னூட்டம் பொட்டூ டரியலாக்குனீங்க இன்னிக்கு உங்களை டரியலாக்கீட்டாங்களே

அவ்வ்வ்வ்வ்வ்//

இதில எது நிஜ முகம்...?! நன்றி வசந்த்..!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...


அட கடவுளே. விட்டு வைக்கமாட்டியா=))//

ம்ம்... போன பஸ்சுக்கு கை காண்பிச்சு என்ன புண்ணியம்...//

அப்பாடா. எவ்ளோ நாளாச்சி பின்னூட்டத்தில கலகலா பார்த்து:))//

ம்ம்..

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

ப்ரியா,... நல்லா கலக்கலா இருக்குங்க//

நன்றி ஞானசேகரன்...

கலகலப்ரியா said...

// thenammailakshmanan said...

Priya
ellamee superb

nalla humarous sense ungalukku

NESAN pathi enna ezuthi irukiingannu paarka vanthen

quite good//

ean.. nesamithran paththi sollalainaa vara maattiyalo..! hihi... ty..!

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

நீங்க ரொம்ப நக்கலான ஆளுதான்..//

அத இப்டி நக்கலா சொல்லிட்டிய...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

இன்னிக்கி லகலகப்ரியாவ வெளிய விட்டாச்சுப் போல இருக்கே..

வசந்த், வானம்பாடிகள், அது சரி, கதிர், பிரபாகர், நேசமித்திரன் ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

இருங்க இருங்க... உங்களுக்கும் அனுதாபம் சொல்ல வைக்கறேன்..

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

எல்லாம் ரொமாண்டிக்கா இருக்கு. சாமியே சரணம் அய்யப்பா. வரட்டா?//

சாமியே சரி ஐயப்பா...

கலகலப்ரியா said...

//Sangkavi said...

ஏனுங்க பிரியா........

எல்லாரையும் பின்னி எடுத்துட்டீங்க.....

இனி பின்னூட்டம் போடவே யோசிக்கனும் போல.........//

ஏனுங்க..? பின்னூட்டத்ல பின்னிடுவோமுன்னா...?

கலகலப்ரியா said...

//Balavasakan said...

:-p

அவ்..அவ்...//

என்ன சொல்லுறா..? அவ்வ்வ்வ்.... :P

கலகலப்ரியா said...

//வி.என்.தங்கமணி, said...

ஏதேதோ சொல்லறீக, பேசறீக எனக்கு சரியா புரியரதில்லம்மா.
நான் கொஞ்சம் லேட்டுத்தான்.
சரி அந்த அவ்வ்வ்வ் என்னது.
வடிவேல் சொல்ற அவ்வ்வ்வ்வா?//


ஆமாங்க வடிவேல் சொல்ற ஜவ்வுதான்...

கலகலப்ரியா said...

//Sivaji Sankar said...

கலக்கிடீங்க போங்க ....//

நன்றி சிவாஜி சங்கர்...

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

தங்கச்சி.....

அண்ணன இப்படி டரியலாக்கிட்டேயம்மா!

முடியல, சிரிச்சி தாளல!

பிரபாகர்.//

சாரிண்ணா... சும்மா டமாசு..!

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html//

அன்புக்கு ரொம்ப நன்றி தியா..!

கலகலப்ரியா said...

//சத்ரியன் has left a new comment on your post "சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...":

//முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க//

ஆத்தாடி,

பாவம் பூரிக்கட்டை.! சொரணை கெட்டவன் மேல விழுந்தட்டமேன்னு அழுதிருக்கும்.!

நல்ல வேளை. நானெல்லாம் "தபூ சங்கரோட கவிதைப் புத்தகம் " வாங்குன வேகத்துலயே எம் மனைவி கிட்ட குடுத்து படிக்க சொல்லிட்டு தான் மறு (எல்லா) வேலைய பாக்குறது. அதனால தான் இதுவரைக்கும் சேதாரமில்லாமா உடம்ப காப்பாத்திக்கினு வர்றேன்.//

அண்ணே... சத்ரியன் அண்ணே... இதுதான் சாக்குன்னு எங்கண்ணாவ திட்ட வேணாம் சொல்லிட்டேன்..!

கலகலப்ரியா said...

//ஜெகநாதன் said...

ம்! பின்னூட்டமே ஒரு இடுகையாக!!
நல்லாத்தான் கல்லா கட்டறீங்க! ​பேஷ்!//

ithu left handed or right handed? neway... நன்றிங்க்னா...!

அது சரி(18185106603874041862) said...

//
கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!
//

இது செம காமெடியா இருக்கே...:0))))))

அது சரி(18185106603874041862) said...

//
கிடைக்கோடுகள்... நெடுங்கோடுகள்...
பாலஸ்தீனியம்.. இஸ்ரேல்.. ஒபாமா..
எக்ஸ் ஈகுவல் டு மைனஸ் டூ
ப்ளஸ் ஸ்குவாயர்ட் பிராக்கெட்
மைனஸ் வை மைனஸ் த்ரீ
பிராக்கெட் க்ளோஸ்ட்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
பதில் கிடைக்காது போகலாம்..
கிடைத்த பதில் இரண்டாக இருக்கலாம்
இதில் எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!
//

கவிதை செமையா இருக்கு...ஆனா தலைப்பு வைக்காது விட்டுட்டீங்களே?

அது சரி(18185106603874041862) said...

//
ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)
//

ம்ம்ம்...கேள்வியின் உள் பதில் இருக்கலாம்...பதிலின் பதிலாக கேள்வியும் இருக்கலாம்...கேள்வியின் கூட்டல் பதிலா இல்லை பதிலின் கழித்தல் கேள்வியா??

:0))))

அது சரி(18185106603874041862) said...

//
(இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்...
//

நெசமாவா சொல்றீங்க?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
காற்றுபுகா முறுதிரிகயிற்றில் நெரிந்து சக்கையாகி
எஞ்சி நீண்ட வால்நுனியில் மாம்மத் யானையின்
கொம்புடைத்து கபளீகரம் செய்து கொண்டிருந்தது
பசியடங்கியும் இரை தேடும் நாலுவால் மலைப்பாம்பு..!
//

இது ரொம்ப பிடிச்சிருக்கு...

பாம்புகளின் பசி என்றைக்கும் தீராது...தன்னையே ஒரு நாள் முழுதாய் புசித்து முடிக்கும் வரை....

கலகலப்ரியா said...

//

அது சரி said...

//
கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!
//

இது செம காமெடியா இருக்கே...:0))))))//

ஹிஹி...

//கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!
//கவிதை செமையா இருக்கு...ஆனா தலைப்பு வைக்காது விட்டுட்டீங்களே?//

"அது சரி"ன்னு வச்சிருக்கேனே... =))...

கலகலப்ரியா said...

//ம்ம்ம்...கேள்வியின் உள் பதில் இருக்கலாம்...பதிலின் பதிலாக கேள்வியும் இருக்கலாம்...கேள்வியின் கூட்டல் பதிலா இல்லை பதிலின் கழித்தல் கேள்வியா??

:0))))//

(ஓஹோ... இப்டித்தான் பதில் சொல்லுவாய்ங்களாம்.. கேட்டுக்குங்க மக்கா..!).. கேள்வியின் கூட்டல் பதிலின் பெருக்கல்... பதிலின் கழித்தல் கேள்வியின் வகுத்தல்...! (கேள்விய கூட்டினா பதில் பெருகும்... பதில தட்டிக் கழிச்சா... கேள்வி கேட்டு வகுந்துடுவோம்...)

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
(இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்...
//

நெசமாவா சொல்றீங்க?? :0)))//

பின்னே.. கேள்விய 'பார்'ரா(?)

பெசொவி said...

நாங்கல்லாம் பதிவுக்கு என்னடா பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கோம், இங்க என்னன்னா ஒரு அம்மணி வெவ்வேறு பதிவுகள்ல போட வேண்டிய பின்னூட்டத்தை எல்லாம் தொகுத்து பதிவா போடறாங்க. இதுக்கு கிட்டத்தட்ட தொண்ணூறு பின்னூட்டம் வேற. எல்லாம் வயித்தெரிச்சக் கொடுமைடா சாமி.

விக்னேஷ்வரி said...

உங்களுக்குப் பின்னூட்டப் புலின்னு பட்டம் குடுத்திடுவோமாங்க...

கலகலப்ரியா said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நாங்கல்லாம் பதிவுக்கு என்னடா பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கோம், இங்க என்னன்னா ஒரு அம்மணி வெவ்வேறு பதிவுகள்ல போட வேண்டிய பின்னூட்டத்தை எல்லாம் தொகுத்து பதிவா போடறாங்க. இதுக்கு கிட்டத்தட்ட தொண்ணூறு பின்னூட்டம் வேற. எல்லாம் வயித்தெரிச்சக் கொடுமைடா சாமி.//

ஏனுங்க... இது பின்னூட்டம் மட்டும்களாங்க..? ஆனா வயித்தெரிச்சக் கொடுமைன்னு சொன்னீங்க பாருங்க.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

கலகலப்ரியா said...

//விக்னேஷ்வரி said...

உங்களுக்குப் பின்னூட்டப் புலின்னு பட்டம் குடுத்திடுவோமாங்க...//

புலிக்கு மாத்ஸ் மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன்... பின்னூட்டமுமா... சரி என்னானாலும் ஒரு ரசிகை ஆசைக்கு தடை விதிக்க நான் யாரு.. நடக்கிறது நடக்கட்டு... ம்ம்..

jothi said...

//windows - no use...
apple - no use...
strawberry might help...!//

கவிதை சூப்பர்

வெண்ணிற இரவுகள்....! said...

கலகல பிரியா

Chitra said...

"அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!" ..................கலக்குறீங்க, கலகலபிரியா!

thiyaa said...

நல்லா கலக்கலா இருக்கு

சிங்கக்குட்டி said...

வசந்தை கண்டுபிடித்து என்னிடம் தருபவர்களுக்கு... ஒரு ஐந்து நட்சத்திர விடுதி விருந்து :-)

ஹ ஹ ஹ ...

கலகலப்ரியா said...

// jothi said...

//windows - no use...
apple - no use...
strawberry might help...!//

கவிதை சூப்பர்//

ம்ம்... நக்கலு..இருக்கட்டு இருக்கட்டு..

கலகலப்ரியா said...

//வெண்ணிற இரவுகள்....! said...

கலகல பிரியா//

நன்றி வெ.இ.

கலகலப்ரியா said...

//Chitra said...

"அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!" ..................கலக்குறீங்க, கலகலபிரியா!//

நன்றி சித்ரா... வாங்க..

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

நல்லா கலக்கலா இருக்கு//

நன்றி தியா..

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

வசந்தை கண்டுபிடித்து என்னிடம் தருபவர்களுக்கு... ஒரு ஐந்து நட்சத்திர விடுதி விருந்து :-)

ஹ ஹ ஹ ...//

எனக்கு கையேந்திபவன்தான் புடிக்கும்..! அதனால புடிச்சுக் கொடுக்கிற வேலைய யாராவது பார்த்துக்கட்டும்..!

☀நான் ஆதவன்☀ said...

:))

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

:))//

hihi..

தமிழ் அஞ்சல் said...

எப்டி எல்லாம் மொக்கை..!..?

கமலேஷ் said...

எப்படி அழகா ஒரு குடும்பம் போல
நீங்க எல்லோரும் பழகரிங்க...
வாழ்க்கைல நெறைய விஷத்தை
லேட்டா தெரிஞ்சிக்கிறேன் நினைகிறேன்...
உங்க குடும்பத்துல என்னையும் சேத்துபிங்களா..

கலகலப்ரியா said...

//திருப்பூர் மணி Tirupur mani said...

எப்டி எல்லாம் மொக்கை..!..?//

இப்டி எல்லாம்தான்..

கலகலப்ரியா said...

//கமலேஷ் said...

எப்படி அழகா ஒரு குடும்பம் போல
நீங்க எல்லோரும் பழகரிங்க...
வாழ்க்கைல நெறைய விஷத்தை
லேட்டா தெரிஞ்சிக்கிறேன் நினைகிறேன்...
உங்க குடும்பத்துல என்னையும் சேத்துபிங்களா..//

இது என்ன கேள்வி... அதான் சேர்ந்தாச்சே..!

துபாய் ராஜா said...

//கமலேஷ் said...

எப்படி அழகா ஒரு குடும்பம் போல
நீங்க எல்லோரும் பழகரிங்க...
வாழ்க்கைல நெறைய விஷத்தை
லேட்டா தெரிஞ்சிக்கிறேன் நினைகிறேன்...
உங்க குடும்பத்துல என்னையும் சேத்துபிங்களா..//

//கலகலப்ரியா said...
இது என்ன கேள்வி... அதான் சேர்ந்தாச்சே..!//

ஆமாமா. வாங்க கமலேஷ் வாங்க. நல்லா பழகுவோம் வாங்க.

இது தானா சேர்ந்த கூட்டமில்லை. தாய்த்தமிழால் சேர்ந்த குடும்பம்.
ஆள் பார்த்து சேர்ந்த கூட்டமில்லை. அன்னைத்தமிழ் அருளால் இணைந்த குடும்பம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா - நானும் ரெண்டு மூணு வாட்டி படிச்சுப் பாத்துட்டேன் - நீங்க போட்ட கவிதை கட்டுரையெல்லாம் அவங்க எழுதற மாதிரி நீங்களே எழுதியிருக்கீங்களா இல்லை அவங்க எழுதினதுக்கு உங்க கமெண்ட்ஸ் ஓட சேர்த்து இங்க கொடுத்திருக்கீங்களா? எனிவே, சிரிக்கும்படியா இருந்தது.

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//கமலேஷ் said...

எப்படி அழகா ஒரு குடும்பம் போல
நீங்க எல்லோரும் பழகரிங்க...
வாழ்க்கைல நெறைய விஷத்தை
லேட்டா தெரிஞ்சிக்கிறேன் நினைகிறேன்...
உங்க குடும்பத்துல என்னையும் சேத்துபிங்களா..//

//கலகலப்ரியா said...
இது என்ன கேள்வி... அதான் சேர்ந்தாச்சே..!//

ஆமாமா. வாங்க கமலேஷ் வாங்க. நல்லா பழகுவோம் வாங்க.

இது தானா சேர்ந்த கூட்டமில்லை. தாய்த்தமிழால் சேர்ந்த குடும்பம்.
ஆள் பார்த்து சேர்ந்த கூட்டமில்லை. அன்னைத்தமிழ் அருளால் இணைந்த குடும்பம்.//

ஆகா... அருமை.. நன்றி ராஜா..!

கலகலப்ரியா said...

//Chandhana said...

ப்ரியா - நானும் ரெண்டு மூணு வாட்டி படிச்சுப் பாத்துட்டேன் - நீங்க போட்ட கவிதை கட்டுரையெல்லாம் அவங்க எழுதற மாதிரி நீங்களே எழுதியிருக்கீங்களா இல்லை அவங்க எழுதினதுக்கு உங்க கமெண்ட்ஸ் ஓட சேர்த்து இங்க கொடுத்திருக்கீங்களா? எனிவே, சிரிக்கும்படியா இருந்தது.//

இல்ல சந்தனா... கஷ்டப்பட்டு (படாம..) அவங்கள மாதிரியே நான் எழுதினதுதான்...! புரிஞ்சுக்காம நிறைய பேரு பின்னூட்டம் வச்சு இடுகைன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க... இதுதான் நம்ம வெற்றி.. =))...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹா ஹா!! சிரிக்க வைக்கறீங்க ப்ரியா!! அப்படியா எழுதறாங்க அவங்களெல்லாம்? :) :) :) அதுவும் - அந்த கிடைக்கோடுகள் நெடுங்கோடுகள் ல வர பார்முலா, அப்புறம் அந்த பரிமளம் (வித் இட்ஸ் பின்னூட்டம்:) ), அந்த ஆண்ட்ரோஜன் கவிதை - டாப்!! அதான் காப்பியடிக்கப்பட்டவங்க எல்லாம் டரியல் டரியல்ன்னு சொல்லிட்டு போறாங்களா!!! ஹா ஹா!!

சரியாச் சொன்னீங்க - நகலைப் பாத்து அசல்ன்னு ஏமாந்து போறது தான் இத்தோட வெற்றி (ஹி ஹி - நானும் போயி அவங்க பதிவெல்லாம் படிச்சுப் பாத்துட்டு தான் இந்த மாதிரி எதையும் காணோமேன்னு மறுபடியும் உங்க கிட்டே வந்து நின்னேன் :))

கலகலப்ரியா said...

//Chandhana said...

ஹா ஹா!! சிரிக்க வைக்கறீங்க ப்ரியா!! அப்படியா எழுதறாங்க அவங்களெல்லாம்? :) :) :) அதுவும் - அந்த கிடைக்கோடுகள் நெடுங்கோடுகள் ல வர பார்முலா, அப்புறம் அந்த பரிமளம் (வித் இட்ஸ் பின்னூட்டம்:) ), அந்த ஆண்ட்ரோஜன் கவிதை - டாப்!! அதான் காப்பியடிக்கப்பட்டவங்க எல்லாம் டரியல் டரியல்ன்னு சொல்லிட்டு போறாங்களா!!! ஹா ஹா!!

சரியாச் சொன்னீங்க - நகலைப் பாத்து அசல்ன்னு ஏமாந்து போறது தான் இத்தோட வெற்றி (ஹி ஹி - நானும் போயி அவங்க பதிவெல்லாம் படிச்சுப் பாத்துட்டு தான் இந்த மாதிரி எதையும் காணோமேன்னு மறுபடியும் உங்க கிட்டே வந்து நின்னேன் :))//

ஹிஹி... அவ்ளோ தூரமா கஷ்டப்பட்டீங்க.. =))... ரொம்ப நன்றி சந்தனா... நான்தான் அங்க போட்டிருக்கேன்ல... அவங்கள மாஆதிரி எழுதுறேன்னு... அத செரியா படிக்கலைன்னா இப்டித்தான் ஆகும்..! பாருங்க அந்த தம்மாதுண்டு பின்னூட்டம் வச்சு நான் கல்லா கட்றேன்னு கூட சொல்லிட்டு போயிருக்காக..! என்ன பண்றது... இதுக்கு பக்கம் பக்கமா தினத்தந்தில விளக்கமா கொடுக்க முடியும்... =))..

உங்கள மாதிரி... நிதானமா ஆராய்ஞ்சு விளக்கம் கேட்டா... பதில் சொல்லலாம்.. =))... மீண்டும் நன்றி சந்தனா... =)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//நான்தான் அங்க போட்டிருக்கேன்ல... அவங்கள மாஆதிரி எழுதுறேன்னு... அத செரியா படிக்கலைன்னா இப்டித்தான் ஆகும்..! //

ஏனுங்க - காப்பி அடிக்கறேன்னு சொல்லி அதையும் செய்யுளா இல்ல (எங்களுக்கு புரியாத மொழியில :) ) எழுதிப் போட்டிருந்தீங்க? :) அதத்தேன், காப்பி பேஸ்ட் பண்ணிட்டதா என்னைப் போல எளியவங்க நினைச்சு ஏமாந்து போயிட்டோம். ஆனாலும், சரி நக்கல் பார்ட்டி தான் நீங்க :)

//அவ்ளோ தூரமா கஷ்டப்பட்டீங்க// - இல்லை - உங்க புண்ணியத்தால இன்னும் கொஞ்சம் பதிவாளர்களோட அறிமுகம் கிடைக்கப் பெற்றோம் :)

எனிவே - கல்லா கட்டறுதுக்காக நீங்க எழுதலைன்னு தெரியும். சொல்லறவங்க சொல்லிட்டுப் போறாங்க.

கலகலப்ரியா said...

Chandhana said...

//நான்தான் அங்க போட்டிருக்கேன்ல... அவங்கள மாஆதிரி எழுதுறேன்னு... அத செரியா படிக்கலைன்னா இப்டித்தான் ஆகும்..! //

ஏனுங்க - காப்பி அடிக்கறேன்னு சொல்லி அதையும் செய்யுளா இல்ல (எங்களுக்கு புரியாத மொழியில :) ) எழுதிப் போட்டிருந்தீங்க? :) அதத்தேன், காப்பி பேஸ்ட் பண்ணிட்டதா என்னைப் போல எளியவங்க நினைச்சு ஏமாந்து போயிட்டோம். ஆனாலும், சரி நக்கல் பார்ட்டி தான் நீங்க :)

//அவ்ளோ தூரமா கஷ்டப்பட்டீங்க// - இல்லை - உங்க புண்ணியத்தால இன்னும் கொஞ்சம் பதிவாளர்களோட அறிமுகம் கிடைக்கப் பெற்றோம் :)

எனிவே - கல்லா கட்டறுதுக்காக நீங்க எழுதலைன்னு தெரியும். சொல்லறவங்க சொல்லிட்டுப் போறாங்க.//

அட எடுத்துச் சொன்னா நக்கலாங்க... அவ்வ்வ்வ்... =))... ரொம்ப நன்றி சந்தனா..!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலகலப்ரியா.. கலக்கலாக ஒவ்வொருவருடைய பாணியிலும் எழுதியுள்ளீர்கள்.. அதில் வசந்த் பின்னூட்டம் அசத்தல் :))

கலகலப்ரியா said...

நன்றி செந்தில்...