header photo

Monday, December 28, 2009

'கலகல' மீள் - பதிவு..

எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) இன்னும் ஒரு மீள் பதிவு கூடப் போடலையே நானுன்னு நினைக்கும்போது... எனக்கே முடியல... அவ்வ்வ்வ்..! எதுனா இருக்கா அப்டின்னு பார்த்தாக்க ஒண்ணுமே உருப்படியா காணோம்.. அவ்வ்வ்வ்..! இப்போதான் தெரியுது நம்ம லட்சணம்... ம்க்கும்..! ஆனாலும் விட்டுடுவோமாக்கும்..! இதோ எந்த ஒரு மாற்றமும் இல்லாத ஒரு மீள் பதிவு..! (மாத்த டயம் லேதுப்பா.... அப்பாலிக்க வந்து பேசிக்கறேன்.. வர்ட்டா... ஜூட்டு..)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.

"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"

"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"

"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"

"நான் போகணும்"

"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"

இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.

வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.

யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!

அவ்வ்வ்வ்.... (இது ஒரு சின்ன மாற்றத்திற்காக...;))

__________

68 ஊக்கம்::

vasu balaji said...

/எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) /

அடங்கொன்னியா! இன்னுமா டவுட்டு. ஏதோ என் ரேஞ்சுக்கு இல்லாட்டியும் (வலைச்சரத்துலயே மைனஸ் வாங்கின பார்ட்டி நாம)=))

/(மாத்த டயம் லேதுப்பா.... அப்பாலிக்க வந்து பேசிக்கறேன்.. வர்ட்டா... ஜூட்டு..)/

அட ஆங்கிலப்பாடத்த கணக்குன்னு மாத்த எவ்வளவு நேரமாகும்.

/"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..!/

இப்புடியெல்லாமா நம்பினாங்க உன்ன:))

/அவ்வ்வ்வ்.... (இது ஒரு சின்ன மாற்றத்திற்காக...;))/

ம்கும். அவ்வ்வ்வ்வ்வ் (இது பெரிய ஏமாற்றத்துக்காக)

க.பாலாசி said...

அப்பறம் ஆறாவது பாஸ் பண்ணீங்களா இல்லையா?

//மாற்றத்திற்காக...;))//

தெளிவா புரியுது.

சென்ஷி said...

:)

வெல்கம் பேக்!

S.A. நவாஸுதீன் said...

கடைசியா அந்த சின்ன மாற்றம் சூப்பர்

துளசி கோபால் said...

குட் ஒன்.

நிலாமதி said...

இன்று தான் வாசித்தேன் மீள்பதிவு என்றாலும் நன்றாக இருக்கிறது.
நம்மக்கள் இன்னும் மாறவில்லியா ?..பாடசாலை வகுப்புகளின் பெருமை கல்வியின் அருமை பற்றி ெரியாமல்....இழந்தது மீண்டும் வருமா?

Subankan said...

வாசித்து முடித்துவிட்டு கடைசியில்தான் லேபிளைப்பார்த்தேன். முதலில் பார்க்காததும் நல்லதுக்குத்தான் :)

cheena (சீனா) said...

கத நலாருக்கு - பத்தரைக்கு பரீச்சை முடிஞ்சு அரை மணி நேரம் ஆச்சா - அப்படியா -


நல்வாழ்த்துகள் கலகலப்ரியா

Unknown said...

கலகலன்னு மீண்டு வாங்கன்னு யாரோ சொன்னது மீள்பதிவோட வாங்கன்னு கேட்டுடுச்சா?

Jerry Eshananda said...

interesting.

திவ்யாஹரி said...

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!

ஹா.. ஹா.. ஹா... சாரிங்க.. உங்க கஷ்டம் புரியுது.. ஆனா சிரிப்பு தான் வருது.. நல்லா இருக்கு உங்க பதிவெல்லாம்..

balavasakan said...

ஆங்கிலப்பரீடசைக்கு போகலைன்னு அழுகையா நானெண்டால் ஊய்... ன்னு விசிலடித்து கொண்டே அந்த அச்சா அம்மா பின்னால ஓடிப்போயிருப்பேன்

ராஜேஷ் said...

அக்கா நான் தன் முதல்ல.,.,.,
படிப்பு மேல அவ்வளவு ஆர்வம இப்ப எனக்கு அழுகை வருது.......................

நசரேயன் said...

என்னது ௬ட்டம் குறைவா இருக்கா .. அதுவே தமிழ் பரிசையா இருந்தா நாங்க எல்லாம் தப்பிச்சி இருக்குப்போம் உங்க புரியாத கவிதைக்கு

☀நான் ஆதவன்☀ said...

என்னா வில்லத்தனம்! :))

பா.ராஜாராம் said...

:-))

thamizhkudi said...

சகோதரி.. தாங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி.. நானும் எனது ஊரில் இழவு வீட்டிற்கு செல்லும் போது சொந்த பந்ததுடன் சென்றிருக்கிறேன்.. அதில் பெண்கள் இழவு வீட்டிற்கு நாலு வீடு வரை நன்றாகவே பேசிக்கொண்டு வருவார்கள் ..சவம் இருக்கும் வீட்டை அடைந்தவுடன் தானாகவே வாயிலும் வயிற்றுலும் அடித்து கொண்டு அழ ஆரம்பித்துவிடுகிறார்கள் நானும் பல நேரம் நினைப்பதுண்டு நன்றாக நாலு வீடு வரை பேசிகொண்டு வந்தவர்கள் திடீரென அழ ஆரம்பிக்கிறார்களே ..சிறிது கால அவகாசம் வேண்டாமா என?. அதிலும் இறந்து போனவர் தனக்கு இன்ன இன்ன உதவி செய்தார்.. என்று விலாவாரியாக புட்டு புட்டு வைத்து அழுவார்கள்.. இது எப்படி என சகோதரனுக்கு உரிய விளக்கம் அளிக்கவும்..

துபாய் ராஜா said...

எப்படியோ 'கலகல'(ப்பு) மீண்டு(ம்) வந்தா சரி....

பிரபாகர் said...

என்ன ராஜா மீண்டு வரது...

தங்கச்சி குழம்பவும் இல்ல, தெளியவும் தேவையில்ல.

இத படிச்சிட்டு வழக்கம்போல நாம அழுத கதை ஒன்னு ஞாபகம் வந்து எழுதி முடிச்சி டிராப்ல நிக்குது.

பிரபாகர்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) /

அடங்கொன்னியா! இன்னுமா டவுட்டு. ஏதோ என் ரேஞ்சுக்கு இல்லாட்டியும் (வலைச்சரத்துலயே மைனஸ் வாங்கின பார்ட்டி நாம)=)) //

ம்க்கும் .. இதில உங்க புகழ் பத்தி பீத்திக்கணுமாக்கும்...


/(மாத்த டயம் லேதுப்பா.... அப்பாலிக்க வந்து பேசிக்கறேன்.. வர்ட்டா... ஜூட்டு..)/
அட ஆங்கிலப்பாடத்த கணக்குன்னு மாத்த எவ்வளவு நேரமாகும்.//

அதுக்கும் அதே பதில்தானே.. =))..

/"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..!/
இப்புடியெல்லாமா நம்பினாங்க உன்ன:))//

நீங்க வேறைங்க... அவங்களுக்கு நம்ம வில்லத்தனம் தெரியும்... ஆனாலும் வெளில விட்டுக் கொடுக்க முடியுமா... =))

//அவ்வ்வ்வ்.... (இது ஒரு சின்ன மாற்றத்திற்காக...;))/

ம்கும். அவ்வ்வ்வ்வ்வ் (இது பெரிய ஏமாற்றத்துக்காக)//

ஏனுங்க... நானு பைனான்சு கம்பனி வச்சிருக்கிற மாதிரி பேசுறிய... இதெல்லாம் நல்லால்ல சொல்லிப்புட்டேன்...

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...

அப்பறம் ஆறாவது பாஸ் பண்ணீங்களா இல்லையா?//

பாஸ்... என்ன கேள்வி பாஸ்... ஹிஹி... நாம எல்லாம் ஆறாம்வோப்பு படிச்சோமின்னு நீங்க நம்பறதே பெரிய விஷயம் பாஸ்...

//மாற்றத்திற்காக...;))//

தெளிவா புரியுது.//

சில நேரத்தில ரொம்பத்தான்யா தெளிவா இருக்காய்ங்க மக்கள்... =)).. நன்றி பாலாசி..

கலகலப்ரியா said...

//சென்ஷி said...

:)

வெல்கம் பேக்!//

நன்றி சென்ஷி... வந்துட்டோம்ல வந்துட்டோம்ல வந்துட்டோம்ல.. =)) (ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கமோ..=))

கலகலப்ரியா said...

//S.A. நவாஸுதீன் said...

கடைசியா அந்த சின்ன மாற்றம் சூப்பர்//

நன்றி நவாஸு... :)..

கலகலப்ரியா said...

//துளசி கோபால் said...

குட் ஒன்.//

டீச்சர்... நீங்க இப்போல்லாம் வெரி குட் சொல்லுறதில்லையா...=)).. நன்றி துளசி..

கலகலப்ரியா said...

// நிலாமதி said...

இன்று தான் வாசித்தேன் மீள்பதிவு என்றாலும் நன்றாக இருக்கிறது.
நம்மக்கள் இன்னும் மாறவில்லியா ?..பாடசாலை வகுப்புகளின் பெருமை கல்வியின் அருமை பற்றி ெரியாமல்....இழந்தது மீண்டும் வருமா?//

அச்சச்சோ... என்னோட அம்மா படிக்கிறதுக்குன்னா பயந்தாங்குளி எனக்கு பக்கத்தில நைட்டு ஃபுல்லா கண் முழிச்சிக்கிட்டு இருந்து சப்போர்ட் பண்ணுவாங்க நிலாமதி... இப்டி மாட்டர்னா ஊர் சொல்லும்... லோகம் நொள்ளும்-ன்னு... பயந்தே சாவாங்க... நாம இந்த விஷயத்ல பயப்ட மாட்டோம்ல... ஹிஹி..நன்றிங்க..

கலகலப்ரியா said...

//Subankan said...

வாசித்து முடித்துவிட்டு கடைசியில்தான் லேபிளைப்பார்த்தேன். முதலில் பார்க்காததும் நல்லதுக்குத்தான் :)//

என்ன சொல்லுறா சுபாங்கன்..=)).. குழப்பமா இருக்கே...

கலகலப்ரியா said...

//cheena (சீனா) said...

கத நலாருக்கு - பத்தரைக்கு பரீச்சை முடிஞ்சு அரை மணி நேரம் ஆச்சா - அப்படியா -


நல்வாழ்த்துகள் கலகலப்ரியா//

அட நெசமா நடந்த கதைதானுங்க சீனா..! நன்றிங்க..:)

கலகலப்ரியா said...

//முகிலன் said...

கலகலன்னு மீண்டு வாங்கன்னு யாரோ சொன்னது மீள்பதிவோட வாங்கன்னு கேட்டுடுச்சா?//

ஸ்ஸ்ஸ்... வேற சரக்கில்லைன்னு... இத போட்டு தேத்தினா... இப்டியா வில்லத்தனம் பண்ணிப் போட்டுக் கொடுப்பாய்ங்க... இன்னொரு வாட்டி டைட்டில் படிக்கவும்.. =))

கலகலப்ரியா said...

//ஜெரி ஈசானந்தா. said...

interesting.//

meiyaalumevaa..? avv... ty jerry..=)

கலகலப்ரியா said...

//திவ்யாஹரி said...

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!

ஹா.. ஹா.. ஹா... சாரிங்க.. உங்க கஷ்டம் புரியுது.. ஆனா சிரிப்பு தான் வருது.. நல்லா இருக்கு உங்க பதிவெல்லாம்..//

நன்றி திவ்யா.. :)சிரிப்பு வருதா... அப்பச்செரி...

கலகலப்ரியா said...

//Balavasakan said...

ஆங்கிலப்பரீடசைக்கு போகலைன்னு அழுகையா நானெண்டால் ஊய்... ன்னு விசிலடித்து கொண்டே அந்த அச்சா அம்மா பின்னால ஓடிப்போயிருப்பேன்//

ம்ம்... இது நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமா வாசு.. =))...

கலகலப்ரியா said...

//RAJESH said...

அக்கா நான் தன் முதல்ல.,.,.,
படிப்பு மேல அவ்வளவு ஆர்வம இப்ப எனக்கு அழுகை வருது.......................//

ஏம்பா...? உணர்ச்சிவசப்படாத.. என்ன.. :-s

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

என்னது ௬ட்டம் குறைவா இருக்கா .. அதுவே தமிழ் பரிசையா இருந்தா நாங்க எல்லாம் தப்பிச்சி இருக்குப்போம் உங்க புரியாத கவிதைக்கு//

translation please..:-/..

கலகலப்ரியா said...

// ☀நான் ஆதவன்☀ said...

என்னா வில்லத்தனம்! :))//

hihi.. O))..

vasu balaji said...

//நசரேயன் said...

என்னது ௬ட்டம் குறைவா இருக்கா .. அதுவே தமிழ் பரிசையா இருந்தா நாங்க எல்லாம் தப்பிச்சி இருக்குப்போம் உங்க புரியாத கவிதைக்கு//

translation please..:-/..

முகுந்தன் அடுத்த அசைன்மெண்ட் ரெடி:)). அண்ணாச்சி அங்கயே இருக்கறதால கேட்டு நோட்ஸ் போட ஈஸி.

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

:-))//

:)

கலகலப்ரியா said...

// thamizhkudi said...

சகோதரி.. தாங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி.. நானும் எனது ஊரில் இழவு வீட்டிற்கு செல்லும் போது சொந்த பந்ததுடன் சென்றிருக்கிறேன்.. அதில் பெண்கள் இழவு வீட்டிற்கு நாலு வீடு வரை நன்றாகவே பேசிக்கொண்டு வருவார்கள் ..சவம் இருக்கும் வீட்டை அடைந்தவுடன் தானாகவே வாயிலும் வயிற்றுலும் அடித்து கொண்டு அழ ஆரம்பித்துவிடுகிறார்கள் நானும் பல நேரம் நினைப்பதுண்டு நன்றாக நாலு வீடு வரை பேசிகொண்டு வந்தவர்கள் திடீரென அழ ஆரம்பிக்கிறார்களே ..சிறிது கால அவகாசம் வேண்டாமா என?. அதிலும் இறந்து போனவர் தனக்கு இன்ன இன்ன உதவி செய்தார்.. என்று விலாவாரியாக புட்டு புட்டு வைத்து அழுவார்கள்.. இது எப்படி என சகோதரனுக்கு உரிய விளக்கம் அளிக்கவும்..//

ஆஹா... ஆஹா.. என்னே அறிவுத்தேடல்..! நான் அப்டி பண்றதில்லை... அதனால தெரியல..! (அடக்கி அடக்கி வச்சிருக்கிறதெல்லாம் பொங்கிக்கிட்டு வரும் போல.. என்னோட அம்மம்மா இறந்தப்போ... நான் அழாம இருந்தா தப்பாச்சேன்னு (சின்னப் பொண்ணுதான் அப்போ..) அழ ட்ரை பண்ணி.... முடியல... அப்புறம்... அவங்கள கொண்டு போறதுக்குன்னு தூக்கின நொடில கதறிட்டேன்... ! காதல்னா ஏன் சாவுராங்கன்னு தெரிஞ்சிக்கணும்னா காதல் செய்யணுமாம்... அதே போலதான் இதுவும் போல..!

பாதி சீரியஸ்... பாதி டெட் சீரியஸ்..... =))

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...

எப்படியோ 'கலகல'(ப்பு) மீண்டு(ம்) வந்தா சரி....//

தோடா... அதை எங்க அடமானமா வச்சிருக்கோம்... அதெல்லாம் இருக்கு... டோன்ட் வொர்ரி.. :)

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

என்ன ராஜா மீண்டு வரது...

தங்கச்சி குழம்பவும் இல்ல, தெளியவும் தேவையில்ல.

இத படிச்சிட்டு வழக்கம்போல நாம அழுத கதை ஒன்னு ஞாபகம் வந்து எழுதி முடிச்சி டிராப்ல நிக்குது.

பிரபாகர்.//

அண்ணா.. சில நேரத்தில... சிக்ஸர் அடிக்கிறீங்க பிரம்மாதமா... அதே..! நோ குழப்பம்ஸ்...!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

//நசரேயன் said...

என்னது ௬ட்டம் குறைவா இருக்கா .. அதுவே தமிழ் பரிசையா இருந்தா நாங்க எல்லாம் தப்பிச்சி இருக்குப்போம் உங்க புரியாத கவிதைக்கு//

translation please..:-/..

முகுந்தன் அடுத்த அசைன்மெண்ட் ரெடி:)). அண்ணாச்சி அங்கயே இருக்கறதால கேட்டு நோட்ஸ் போட ஈஸி.//

சார்... ஏன் இந்தக் கொலை வெறி..! நசரேயன் நீங்களே சொல்லுங்க.. முகிலனுக்கு வேற அசைன்மென்ட் இருக்கு.. =))

நசரேயன் said...

என்னது பின்னூட்டதுக்கு விளக்கமா !!!!!!!!!!!!

முகிலன் விருதுபட்டியிலே முகாமிட்டு இருக்கிறதாலே இந்த தன்னிலை விளக்கம்.

இப்ப நல்லா கவனிங்க.. கடையிலே ௬ட்டம் குறைவா இருக்குன்னா, பின்னூட்டம் குறைவா இருக்குன்னு அர்த்தம். நீங்க பின்னூ ட்ட பொட்டிய பூட்டி வச்சி இருக்கீங்கன்னு அப்புறமா தெரிஞ்சது. இதுக்கு மேல முடியலை சாமி.

அடுத்த விளக்கம் தான் ரெம்ப முக்கியம், அதாகப்பட்டது நீங்க ஆங்கில பரிட்சை எழுத விடாம மேல போன மாமி, தமிழ் பரிட்சை இருந்த அன்றைக்கு மேல போய் இருந்தா, எனக்கு புரியாத மாதிரி கவிஜ எழுத முடியாம போய் இருக்கும்ன்னு சொல்ல வாரேன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா - நல்லாயிருந்தது உங்க வில்லத்தனம்.

//அடுத்த விளக்கம் தான் ரெம்ப முக்கியம், அதாகப்பட்டது நீங்க ஆங்கில பரிட்சை எழுத விடாம மேல போன மாமி, தமிழ் பரிட்சை இருந்த அன்றைக்கு மேல போய் இருந்தா, எனக்கு புரியாத மாதிரி கவிஜ எழுத முடியாம போய் இருக்கும்ன்னு சொல்ல வாரேன்.//

இது இன்னமும் நல்லாயிருக்கு :)))

கலகலப்ரியா said...

நசரேயன்... சரி ... சரி... & இன்னொரு சரி...! டென்சனு ஆவாதீங்க..! நான் இங்க்லீஷ்பிஷ் பரீச்ச... ஐ மீன்... கவுஜ... எழுதிட்டு சொல்லுறேன்... புரியுதான்னு பார்த்து சொல்லுங்க... =))

கலகலப்ரியா said...

நன்றி சந்தனா..! ஹிஹி..

புலவன் புலிகேசி said...

//பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.//

அடக் கொடுமையே..எங்களையெல்லாம் பரீட்சைக்கு போக வேணாம்னு சொன்னா அப்புடியே வரும் பாருங்க ஒரு.....சந்தோசம்.

//"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..!//

அம்மா நல்லாவே சமாளிக்கிறாங்க...

Anonymous said...

என்னா வில்லத்தனம்!!!
அதானே

thiyaa said...

திரும்பவும் பதிவிலிட்டதால எனக்கும் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது

அன்பேசிவம் said...

உண்மையிலேயே கலகல்வென்றிருக்கிறது. வாழ்த்துகள் ப்ரியா.

சீரியஸான உங்க பின்னுட்டம் மனதை பிசைகிறது.

பித்தனின் வாக்கு said...

இது மீள் பதிவா அல்லது மாண்டவர் பதிவா(மாள் பதிவு).

நல்ல நகைச்சுவை. உங்களின் அழுகை அபாரம்.

அமுதா கிருஷ்ணா said...

குட்..படிப்பு மீது இவ்வளவு ஆசையா...

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...
//பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.//

அடக் கொடுமையே..எங்களையெல்லாம் பரீட்சைக்கு போக வேணாம்னு சொன்னா அப்புடியே வரும் பாருங்க ஒரு.....சந்தோசம்.

//"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..!//

அம்மா நல்லாவே சமாளிக்கிறாங்க...//



எனக்கு வீட்ல போர் புலிகேசி.... ! ஆமாமா சமாளிப்பாங்க.. அவ்வ்வ்வ்..

கலகலப்ரியா said...

//சின்ன அம்மிணி said...
என்னா வில்லத்தனம்!!!//

நமக்கு அதுதான் செட் ஆவுது விடுங்க.. விடுங்க... =))

கலகலப்ரியா said...

// தியாவின் பேனா said...
திரும்பவும் பதிவிலிட்டதால எனக்கும் படிக்க ஒரு சந்தர்ப்பம் //

நன்றி தியா...

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
உண்மையிலேயே கலகல்வென்றிருக்கிறது. வாழ்த்துகள் ப்ரியா.

சீரியஸான உங்க பின்னுட்டம் மனதை //

நன்றி முரளி.. :)

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...
இது மீள் பதிவா அல்லது மாண்டவர் பதிவா(மாள் பதிவு).

நல்ல நகைச்சுவை. உங்களின் அழுகை //

நன்றி பித்தன்... அவ்வ்வ்வ்.. (அழுகைய கூட பாராட்ட ஒரு ஆளுங்கிறப்போ.. எனக்கு இன்னும் அழுவனும் போல வருது.. =))

கலகலப்ரியா said...

//அமுதா கிருஷ்ணா said...
குட்..படிப்பு மீது இவ்வளவு ஆசையா..//

அபரிமிதமான ஆசைங்க..! (ஏன்னு தெரியல..)

+Ve Anthony Muthu said...

நலமாயிருக்க வாழ்த்துக்கள்.

கெக்க பிக்கே போதாதா??????

ஹ்ம்ம்ம்!!!!!!!!!!

Ok. Happy new year!

கலகலப்ரியா said...

//+Ve Anthony Muthu said...
நலமாயிருக்க வாழ்த்துக்கள்.

கெக்க பிக்கே போதாதா??????

ஹ்ம்ம்ம்!!!!!!!!!!

Ok. Happy new year!//

நன்றி முத்து..!

போதும் போதும்..! =)

same to you... wish you a fantastic new year muthu..!

குடுகுடுப்பை said...

உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.
//

ஆறாவது படிக்கும்போதே மூஞ்சி ஒரு முழத்துக்கு இருந்துச்சா, இப்ப எப்படியும் நீங்க இருபத்தஞ்சாவது படிப்பீங்க(பெரிய படிப்பு). ஆனந்தவிகடன் மதன் மாதிரி யோசிச்சா பயமா இருக்குதே.

குடுகுடுப்பை said...

எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) இன்னும் ஒரு மீள் பதிவு கூடப் போடலையே நானுன்னு நினைக்கும்போது... எனக்கே முடியல... அவ்வ்வ்வ்..! //

அட நீங்க வேற நான் எழுதின பதிவுகளோட மீள்பதிவுகள்தான் அதிகம். அப்படிப்பாத்தா நான் ரொம்ப பேமஸான பதிவர்.

குடுகுடுப்பை said...

மத்தபடி கதை நல்லாதான் இருக்கு.அது என்னமோ தெரியலங்க இப்பவெல்லாம் ஜோக்குகெல்லாம் கூட கோபம் வருது.

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...
உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.
//

ஆறாவது படிக்கும்போதே மூஞ்சி ஒரு முழத்துக்கு இருந்துச்சா, இப்ப எப்படியும் நீங்க இருபத்தஞ்சாவது படிப்பீங்க(பெரிய படிப்பு). ஆனந்தவிகடன் மதன் மாதிரி யோசிச்சா பயமா இருக்குதே.//

=))

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...
எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) இன்னும் ஒரு மீள் பதிவு கூடப் போடலையே நானுன்னு நினைக்கும்போது... எனக்கே முடியல... அவ்வ்வ்வ்..! //

அட நீங்க வேற நான் எழுதின பதிவுகளோட மீள்பதிவுகள்தான் அதிகம். அப்படிப்பாத்தா நான் ரொம்ப பேமஸான பதிவர்.//

அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லையே...=)

கலகலப்ரியா said...

// குடுகுடுப்பை said...
மத்தபடி கதை நல்லாதான் இருக்கு.அது என்னமோ தெரியலங்க இப்பவெல்லாம் ஜோக்குகெல்லாம் கூட கோபம் வருது//


கோபம் வரக்கூடாது... வந்தால் அதை உள்ளே புதைத்து, முடிந்தால் சேர்ந்து புதைந்து விட வேண்டுமென்பது.. எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத விதியாகவோ அல்லது தலைவிதியாகவோ இருக்கிறது. சாலை விதியைப் போல்.. தலைவிதியையும் என்னால் மீற முடியவில்லை..! :)

பனித்துளி சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியாவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!


என்றும் அன்புடன்
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/

கலகலப்ரியா said...

நன்றி சங்கர்...

+Ve Anthony Muthu said...

கடவுளே!
நான் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டேனா?

ஏன் அவ்விதம் செய்தேன் என்பது இன்னும் புரியவில்லை.

மனதில் வலி ஏற்ப்பட்டிருந்தா....ல்....

தயவு செய்து, தயவு செய்து......... மன்னியுங்கள்.

அப்பின்னூட்ட்ம் பொருட்படுத்த வேண்டாம்.

கலகலப்ரியா said...

what happened muthu...? nothing is wrong.. dun wry..! hv a good day..!