தாரை தாரையான
சாரைகளின் குவியலில்
சிரட்டை ஏந்தி நின்றது
சிறுநீர் வரண்டுவிட்ட
சின்னஞ்சிறிய சிட்டொன்று..
பிணங்கள் புதைந்திருந்த
மலையளவு உமிமேட்டில்
தவழ்ந்தமுங்கி - அரிசிக்
குறுணி பொறுக்கிக் கொண்டிருந்தது
தாய்ப்பறவை..
இரைப்பை புடைத்திருந்த
கழுகின் கழுத்துள்ளிருந்து
விழுந்த முள்ளொன்று
செங்குத்தாய் சிரம் விழுந்ததில்
சுருண்டது சிட்டு சிரட்டையுள் ..
கற்குறுணி கூடக் கிடைக்காத
தாய்ப்பறவையின் முன்
சிரட்டை நீக்கி வீசப்பட்டது சிட்டு..
சிறகொடிந்து சிதைந்து துடியாய்
துடித்தது தாய்ப்பறவை..
பருந்து தாண்டிப் பறந்து
சிறகிருந்துமிழந்து
சதா கண்களில்
குருதி சிந்த விட்டபடி
ஊர்க்குருவியான நான்...!
_______________________________________
28 ஊக்கம்::
/தாரை தாரையான
சாரைகளின் குவியலில்
சிரட்டை ஏந்தி நின்றது
சிறுநீர் வரண்டுவிட்ட
சின்னஞ்சிறிய சிட்டொன்று..//
/பிணங்கள் புதைந்திருந்த
மலையளவு உமிமேட்டில்
தவழ்ந்தமுங்கி - அரிசிக்
குறுணி பொறுக்கிக் கொண்டிருந்தது
தாய்ப்பறவை../
கண்டு கண்டு அழுத நாள் கவனம் வருகிறது. கொடுமை அம்மா.
/இரைப்பை புடைத்திருந்த
கழுகின் கழுத்துள்ளிருந்து
விழுந்த முள்ளொன்று
செங்குத்தாய் சிரம் விழுந்ததில்
சுருண்டது சிட்டு சிரட்டையுள் ../
ஆறாத ரணம். சில நேரம் ஒன்று பலவாய்க்கூட விழுந்தது பறக்கக் வழியின்றி
/கற்குறுணிகள் கூடக் கிடைக்காத
தாய்ப்பறவையின் முன்
சிரட்டை நீக்கி வீசப்பட்டது சிட்டு
சிறகொடிந்து சிதைந்து துடியாய்
துடித்தது தாய்ப்பறவை../
:((. வார்த்தை மீட்டு வருகிறது அந்த அவலத்தைக் கண்முன்.
/பருந்து தாண்டிப் பறந்து
சிறகிருந்துமிழந்து
சதா கண்களில்
குருதி சிந்த விட்டபடி
ஊர்க்குருவியான நான்...!/
உதவாத உறவுக் குருவியாய் நானும். கண்ணீர் வறண்டு:((
அந்தக் கையைக் கொடும்மா. கண்ணில் ஒத்திக்கணும்.
மனதின் வலிகளை
மவுனமாய் பதித்து
நினைவுகள் சிதற
நெஞ்செலாம்................
பிரபாகர்.
ஊர்க்குருவிகளின் கண்களில் ரத்தம்
இன்றைக்கு நிச்சம் மழை வரும் .. எனக்கு கவுஜ புரியுது
பொழிப்புரையே தேவையில்ல.. தானா கண்ணீர் வழியுது கண்ணில்
இனப்பயங்கரவாதம்
இழைத்திட்ட
இன்னலெல்லாம்
இன்னமும் தீராத
ஈழத்தமிழர் நிலை நினைக்கும்போதெல்லாம்
எங்கள் மனமெல்லாம்
வடியுது இரத்தக்கண்ணீர்...
நிரம்ப வலிக்கிறது.
:)
:(
அபடியே ஏழு எட்டு மாதங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டீர்கள்.. என்ன கொடுமை... ம்..ம்..
;-0
உயர் ரக வார்த்தைகளை அருமையாய் கோர்த்து தோரணம் கட்டிவிட்டிருக்கிறீர்கள். கவிதையின் வலி மெல்ல மெல்ல உள் இறங்குஇறது. சூப்பர்.
வலி....
வலி பெருக்கும் வரிகள்.....
மனக்குமுறல் கவிதையாய் வெடித்திருக்கிறது..ஐயா சொன்னது போல் உதவாத ஊர்க்குருவியாய் நானும்...
வலிக்கிறது..
அருமையான நடை..
வலி மனதின் ஏதோ ஒரு ஒரத்தில் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டது....
தலைப்பும், கவிதை வரிகளும் ,குருதியை கொப்பளிக்கிறது,.
//பருந்து தாண்டிப் பறந்து
சிறகிருந்துமிழந்து
சதா கண்களில்
குருதி சிந்த விட்டபடி
ஊர்க்குருவியான நான்...!//
குருவியின் கண்களில் நிச்சயம் கண்ணீர்......
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
என்ன எழுதுறது ..
முடியலைங்க!
மனதை உருக்கும் கவிதை வரிகள்..,
இப்பிடியெல்லாம் கவித எழுத ஆரம்பிச்சிட்டா அப்புறம் நான் எப்பிடி பதிவு தேத்துறது.. ரொம்ப மோசம்..
(முகிலன் நோட்ஸ் பிஸினஸ் படுத்துரும் போல இருக்கே?)
நீங்க எதை குறிப்பிட்டு எழுதி இருக்கிங்கன்னே தெரியலையே குருஜி..
என்னது ஈட்டியை நெஞ்சில்
பாய்க்கிற கவிதையாய்
எழுதுகிறீர்கள்.
நல்ல கவிதை. நன்றி
//சிறகொடிந்து சிதைந்து துடியாய்
துடித்தது தாய்ப்பறவை..//
அருமையான வரிகள்.. மிகவும் ரசித்தேன் கலகலப்ரியா..
beautiful
//தாய்ப்பறவையின் முன்
சிரட்டை நீக்கி வீசப்பட்டது சிட்டு../
நினைத்தே பார்க்கமுடியாத நிஜம்,
நல்ல கவிதை ப்ரியா
கனக்குதுங்க மனசு.
நன்றி வானம்பாடி சார்...
நன்றி அண்ணா...
நன்றி சின்னம்மிணி...
நன்றி நசரேயன்... வந்த மழை போதாதா...
நன்றி முகிலன்... :)
நன்றி ராஜா...
நன்றி குடுகுடுப்பை... :(
நன்றி நேசமித்ரன்... :)
நன்றி வாசு... (மரணப் படுக்கையிலும் மறக்காது..)
நன்றி விசா...
நன்றி பலா...
நன்றி ஆரூர்...
நன்றி புலிகேசி...
நன்றி கௌரி... :)
நன்றி தமிழரசி...
நன்றி ஜெரி..
நன்றி சங்கவி... உங்களுக்கும் வாழ்த்துகள்...
நன்றி மணி... அதான் எழுதியாச்சே...
நன்றி சூர்யா...
முகிலன்... அது எப்டி உங்களுக்கு வேலை வைக்காம விட மாட்டோம்.. =)
சஞ்சய்... உங்களுக்காகதான் லேபல் போட்டிருக்கேனாக்கும்...
நன்றி தங்கமணி... இது என்னோட இதயத்தில் தைத்துக் கொண்டிருக்கும் ஈட்டிங்க...
நன்றி பித்தன்...
நன்றி ருத்ர வீணை...
நன்றி ருத்ரன்...
நன்றி ஜோதி...
நன்றி சந்தனா...
Post a Comment