header photo

Monday, July 19, 2010

அகம் போன போக்கில்...

ஃபண்டாஸ்டிக்கோ... ர்ரொமாண்டிக்கோ... ப்யூட்டிஃபுல்... வுண்டர்ஸ்ஷோஉன்... வெனிஸ் நகரக் கால்வாயில் மிதந்து கொண்டிருந்த கொண்டோலாக்கள் பேசிய மொழிகளினூடு நித்யாவின் குரல் அமிழ்ந்து மெதுவாக ஒலித்தது... 


”நான் காசிக்குப் போலாம்னு இருக்கேன் சார்..”.. செல்ஃபோனை.. இடது காதுக்கு மாற்றினாள்... 


”ம்ம்... வேணாம்... யூ காண்ட் ஸ்டாண்ட் இட்...”

நேப்பியர் பாலத்தில் கூவ நதியின் நாற்றத்திற்கு இயல்பாக்கம் அடைந்திருந்த நாசியில் கை வைத்து கண்ணாடியைச் சரி செய்தவாறே நடந்து கொண்டிருந்தார் வெங்கட்ரமணி.... 

”வெல்... ஐ வாண்ட் டு ஸ்டே தேர்...”

”கிழிஞ்சது போ...”

மனம் விசித்திரம்... வாழ்க்கையின் பாதி நாள் ஐரோப்பாவில் கழிந்திருக்கிறது... சுத்தம்.. அழகு... நேர்த்தி இவைக்கெல்லாம் உடலும், மனதும் பழக்கப்பட்டிருக்கிறது... அடிக்கடி விரும்பும் தனிமையும், அமைதியும் வாய்த்திருக்கிறது... எல்லாம் மிக நன்றாக ஆனால் மிக மிக மேலோட்டமாக இருக்கிறது.. எதுவும் ஒட்ட மறுக்கிறது.. 

திருவிழாவில் தொலைந்த குழந்தை... பஞ்சு மிட்டாயை நீட்டினாலும்.. பார்பி பொம்மையை நீட்டினாலும்.. தட்டி விட்டுக் கண் மூடி..  அம்மா... அம்மா என்று வீறிடுவதைப் போல்... மனதிற்கு அண்மையானவற்றையே அது தேடிக் கொண்டிருக்கிறது.. 

"காசி தெரியுமா உனக்கு..? கங்கையைப் பார்த்தா வயிறு எரியும்..”.. வெங்கட்ரமணியின் குரல் எங்கேயோ கேட்டது.. 

..காசி... ஏதோ ஒரு டாக்குமெண்டரி எப்பவோ பார்த்த நினைவிருக்கிறது... ’நான் கடவுளில்’ பார்த்த காட்சிகள்... மூடிக் கட்டிய பிரேதங்கள்... அடுக்கி மூட்டிய சிதைகள்... உயிருடனும்... உயிரற்றும் உடல் சுமக்கும் கங்கை... அங்கே என்ன இருக்கிறது..? 

”தெரியல சார்... போய்ப் பார்த்தா தெரியலாம்..”

நிஜமாகவே தெரியவில்லை.. சட்டென ஒரு நினைப்புத் தோன்றி.. சில மணி நேரங்களில் வேரூன்றி.. விருட்சமாக மற்ற எல்லாவற்றையும் மறைத்தபடி நின்று கொண்டிருக்கிறது... இதுவும் மாய மான் மாதிரி.. இதோ கொண்டோலாவின் அருகில் தோன்றும் நீர் வட்டம் மாதிரிக் கலைந்து காணாது போய் விடுமா..? நிச்சயமாகத் தெரியவில்லை... 

கொண்டோலாவில் நித்யா பக்கத்தில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட தோரணையில் உட்கார்ந்திருந்த ரோஸ் கடைக்கண்ணில் தெரிந்தாள்... 

வெனிஸின் கோட்டை மண்டபத் தூபிகளுக்கிடையில் மிதந்தபடி... ’ஓ மை காட் நித்யா...  எய்ண்ட் இட் வொண்டர்ஃபுல்..? ஐ திங்க் ஐ வாஸ் ஹியர் இன் மை லாஸ்ட் பர்த்... டோண்ட் யூ ஃபீல் த ஸேம்..?’... அவள் கேட்டது நினைவு வந்தது... 

’.. இட் ரியலி இஸ் மார்வலஸ் ரோஸ்..’  கட்டட அமைப்புகளும்... அதன் பிரமாண்டமும் பிரமிக்கச் செய்தது உண்மைதான்... ஆனால்  போன பிறவியில் இங்கிருந்தது போன்ற எந்த நினைப்பும் வரவில்லை... சிவகாமியின் சபதத்தில் சிவகாமி நடனம் ஆடியபோது சேர்ந்தாடிய மனமும்... எங்கோ ஏதோ ஒரு சோழன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி வேல்.. வீரவேல் என்று புறப்படும் உள்ளும்.. உணர்வும்... எழுத்துகளில் மட்டுமே தெரியும் கோட்டை மதில்களில் ஒட்டி உறவாடும் உயிரும்... இங்கில்லை...  

இதற்குக் காரணம் முன்பிறவிப் பயனா.... அல்லது சிறு வயதிலிருந்தே.. படித்தவையும்... கேட்டவையும்... நாமும் நாம் சார்ந்தவையுமென மூளையின் மூலையொன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் கதைகளா தெரியவில்லை... சில மனிதர்களைப் பார்த்தவுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்படுவதும்.. சிலரைப் பார்த்த உடனேயே ’விலகு’ என்று தோன்றுவதும்... எதனாலென்று தெரியவில்லை... 

மறு முனையில் பேசிக் கொண்டிருக்கும் ரமணியைச் சில வருடங்களுக்கு முன் யாரென்றே தெரியாது... இப்பொழுது முக்கியமோ... இல்லையோ... எதுவானாலும்... “ரமணி சார் கிட்ட சொல்லணும்..” என்று தோன்றி விடுகிறது... ”காசிக்குச் சென்று பார்த்தாலென்ன..” என்று தோன்றிய எண்ணம் உட்பட... 

”அங்க ஏதாவது குடிசை.. கூடாரம் மாதிரி வாடகைக்கு கிடைக்குமா சார்..” இது ஏன் கேட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை... மனம் போன போக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறாளா... அல்லது உள்ளுணர்வின் வழி நடத்தலா... இரு விதமாகவும் சொல்லிக் கொள்ளலாம்... 

 “உன்னை என்ன செய்ய..?”  தலையிலடித்துக் கொண்டிருப்பாரா தெரியாது..

“ம்ம்..”

“குடிசை எல்லாம் வாடகைக்குக் கிடைக்காது... ஃப்ளோட்டிங் பாப்யுலேஷன்.. வீடு கிடைக்கலாம்... என்ன இது..?”

செல்ஃபோன் சூடாகிக் காதுமடல் எரிந்தது... எரிச்சலாக இருந்தது... சற்று விலக்கிப் பிடித்துக் கொண்டாள்.. 

நித்யா முகம் சுளித்ததைப் பார்த்து ரோஸ் சிரித்தாள்... 

“விசாரிச்சு வைங்க சார்...  அப்புறம் பேசறேன்.. டேக் கேர்..”

“அது சரி... பை... டேக்..கே...” சொல்லி முடிப்பதற்குள்.. செல்ஃபோனின் சிவப்புப் பொத்தானை அழுத்திக் கைப்பையில் போட்டாள்... 

ரோஸ் ”ம்ம்..?” என்பதைக் கேள்வியாக்கினாள்... 

”ஐ வாண்ட் டு கோ டு ஸம்வேர் ரோஸ்..”.. முடிவே இல்லாத ஒன்றை இவளுக்கு விளம்பியே ஆக வேண்டுமா.. ஒரு வேளை யாருக்காவது சொன்னால்.. முடிவில் உறுதியாக இருக்கலாமென்ற நப்பாசையா... 

”வாட்... வேர்..?”

“ஸம்வேர் இன் ஏசியா... இன் இண்டியா...”

”ஓ.. ஐ வில் மிஸ் யூ தென்..”

நித்யா மூன்று நாள் விடுமுறையில் போனால்... “ஓ காட்... வாட் வில் ஐ டு வித் அவுட் யூ..” என்று அங்கலாய்க்கும் இவளின் நட்பை அவளும் இழக்க நேரும்... எண்ணங்கள் கிளறும்போதே...”யூ காண்ட் மிஸ் வாட் யூ நெவர் ஹேட்..” கவனம் வந்தது... 

அப்போ காசியும்..?.. ”ம்ம்”.... சில முடிவுகள் மிகச் சில நொடியிலேயே எடுக்கப் படுகின்றன.. எப்பவோ படித்த புத்தகத்தின் தலைப்பு நினைவில் வந்தது... “இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”.. ரோஸைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்... 

”ஐ டூ வில் மிஸ் யூ ரோஸ்..”.. 

(அனைத்தும் புனைவல்ல..)
______________________________________________________________________________

46 ஊக்கம்::

பிரபாகர் said...

புரிகிறது சகோதரி.... அனைத்தும் புனைவல்ல!

பிரபாகர்...

க ரா said...

//இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”..//

உண்மைதான்.

vasu balaji said...

கண்முன்னாடி கொண்டோலாவும் கூவமும்..எங்கயோ ஊசலாட வைக்குது.

vasu balaji said...

/திருவிழாவில் தொலைந்த குழந்தை... பஞ்சு மிட்டாயை நீட்டினாலும்.. பார்பி பொம்மையை நீட்டினாலும்.. தட்டி விட்டுக் கண் மூடி.. அம்மா... அம்மா என்று வீறிடுவதைப் போல்... மனதிற்கு அண்மையானவற்றையே அது தேடிக் கொண்டிருக்கிறது.. /

அட அட. அட்சரலட்சம் பெறும். எல்லாரும் எப்போவாவது ஒரு தருணத்தில் அனுபவிச்சதுதான். சொன்னவிதம் நேர்த்தி.

/சிவகாமியின் சபதத்தில் சிவகாமி நடனம் ஆடியபோது சேர்ந்தாடிய மனமும்... எங்கோ ஏதோ ஒரு சோழன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி வேல்.. வீரவேல் என்று புறப்படும் உள்ளும்.. உணர்வும்... எழுத்துகளில் மட்டுமே தெரியும் கோட்டை மதில்களில் ஒட்டி உறவாடும் உயிரும்... இங்கில்லை... /

நான் சொன்னேன்ல பொறாமைன்னு. இதுக்குதான். சிம்ப்ளி க்ரேட்.

/முடிவுகள் மிகச் சில நொடியிலேயே எடுக்கப் படுகின்றன.. எப்பவோ படித்த புத்தகத்தின் தலைப்பு நினைவில் வந்தது... “இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”.. ரோஸைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்...
”ஐ டூ வில் மிஸ் யூ ரோஸ்..”.//

ம்ம். கன கச்சிதம்.

அடிக்கடி இப்படி எழுதேன்மா. ப்ளீஸ்.

பனித்துளி சங்கர் said...

////ஃபண்டாஸ்டிக்கோ... ர்ரொமாண்டிக்கோ... ப்யூட்டிஃபுல்... வுண்டர்ஸ்ஷோஉன் //////////



எல்லாம் நல்லா இருக்குங்க ஆனால் பாருங்க இந்த மேல குறிபிட்டு இருக்கும் இந்த வார்த்தைகளை மட்டும் படிக்கும்போது எனக்கு எதோ திகில் படம் பார்பதுபோல இருக்கு . சற்று இதற்கான விளக்கம் கொடுத்திருந்தால் நல்லது . பகிர்வுக்கு நன்றிங்க

vasu balaji said...

//இதற்குக் காரணம் முன்பிறவிப் பயனா.... அல்லது சிறு வயதிலிருந்தே.. படித்தவையும்... கேட்டவையும்... நாமும் நாம் சார்ந்தவையுமென மூளையின் மூலையொன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் கதைகளா தெரியவில்லை... சில மனிதர்களைப் பார்த்தவுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்படுவதும்.. சிலரைப் பார்த்த உடனேயே ’விலகு’ என்று தோன்றுவதும்... எதனாலென்று தெரியவில்லை... //

அட ஆமாம். எனக்கும் இப்படித் தோணும். ஆனா இப்படி அழகா யோசிக்கத்தெரியலை:)

Muruganandan M.K. said...

அலையும் மனத்தின்
விசித்திர யாத்திரை.
புனைவு அருமை.

யாசவி said...

so nice.

Justification and thinking is so beautiful

good :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//திருவிழாவில் தொலைந்த குழந்தை... பஞ்சு மிட்டாயை நீட்டினாலும்.. பார்பி பொம்மையை நீட்டினாலும்.. தட்டி விட்டுக் கண் மூடி.. அம்மா... அம்மா என்று வீறிடுவதைப் போல்... //

Lost child அப்படின்னு ஒரு கதை இருக்கு இத வச்சே..

// அல்லது சிறு வயதிலிருந்தே.. படித்தவையும்... கேட்டவையும்... நாமும் நாம் சார்ந்தவையுமென மூளையின் மூலையொன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் கதைகளா தெரியவில்லை..//

இதாத் தான் இருக்கும்..

ம்ம்.. அப்பப்போ இப்படித் தேடி நாமும் தொலைந்து தான் போறோம்..

Jey said...

// “இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”..//

இத சொன்னது ஆரு அம்மனி, நச்-னு சொல்லிருகாரு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா இருக்குங்க ..
\\முடிவே இல்லாத ஒன்றை இவளுக்கு விளம்பியே ஆக வேண்டுமா.. ஒரு வேளை யாருக்காவது சொன்னால்.. முடிவில் உறுதியாக இருக்கலாமென்ற நப்பாசையா... //
அதும் இது போல பலர் செய்வதுண்டு ,சொல்லிவச்சிக்கலாம்..அப்பத்தான் செய்யலைன்னா யாராச்சும் கேப்பாங்கன்னு..

இரண்டு மூன்று முறை படித்தால் வெவ்வேறு கோணங்களைத் தரும் பதிவு.

'பரிவை' சே.குமார் said...

அட... அட... புரிகிறது சகோதரி.... அனைத்தும் புனைவல்ல!

பகிர்வுக்கு நன்றிங்க

கயல் said...

ரொம்ப நல்லாயிருக்குப்பா!

vasan said...

முர‌ண்க‌ள் வேறான‌வையா, க‌ற்பித‌மா,
ஒன்றையே ப‌ல‌ கோண‌ங்க‌ளில் பார்த்து
யானை பார்த்த‌ குருட‌ர்க‌ளாய் அலைகிறோமா?
காண்ப‌துவ‌ரை க‌ற்ப‌னை வாழ்கிற‌து.
ஒன்றை ம‌ட்டும் பார்க்கும் போது வேறு,
ஒன்றோடென்றாய் வேறு மாதிரி,
எதிர்திசையில், ப‌ற‌வை பார்வையில்,
ஒன்றே ப‌ல‌வாய், எல்லாம் ஒன்றாய்.
(க‌ல‌க‌ல‌ பிரியா, ப‌திவை ப‌டித்த‌ எப‌க்ட்.
குழ‌ப்ப‌னுது குற்ற‌மா? குழ‌ப்பிய‌து குற்ற‌மா?) 'அக‌ம்' போன‌ போக்கில், அந்த‌ வார்த்தை ஒரு 'ச‌ய‌னைட்'
ச‌கோத‌ரி.

க.பாலாசி said...

இடைச்செருகலான மனவோட்டம் கொஞ்சநேரம் லயித்துபோகச்செய்கிறது...

//முடிவே இல்லாத ஒன்றை இவளுக்கு விளம்பியே ஆக வேண்டுமா.. ஒரு வேளை யாருக்காவது சொன்னால்.. முடிவில் உறுதியாக இருக்கலாமென்ற நப்பாசையா... //

இந்த நப்பாசைக்கு ஆட்படாத மனது எனக்கும் வாய்த்ததில்லை. சொல்லியபின் அதன் மீதுள்ள அழுத்தம் மேலும் ஒருபிடி இறுகுவதைப்போன்ற உணர்வு.. அருமை....

பா.ராஜாராம் said...

அப்பா!!!

கலக்கி இருக்கீங்க ப்ரியா!

Jerry Eshananda said...

லாவகமான நடையில், சுகமாய் வாசித்தேன்.

ரிஷபன் said...

சில மனிதர்களைப் பார்த்தவுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்படுவதும்.. சிலரைப் பார்த்த உடனேயே ’விலகு’ என்று தோன்றுவதும்... எதனாலென்று தெரியவில்லை...
உண்மை. என்னதான் பகுத்தறிவு பேசினாலும் இந்த உணர்வுக்கு தர்க்க ரீதியான விளக்கம் இல்லை.

Unknown said...

காசிக்கு எப்போ போறீங்க

Sanjai Gandhi said...

வெல்கம் டூ இந்தியா..

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கலான பதிவு.இங்கிலீஷை குறைத்துக்கொண்டால் இன்னும் நல்லாருக்கும்.

ஈரோடு கதிர் said...

காசிக்கு போகும் போது நித்யாவ அகோரிகளை கேட்டதா சொல்லுங்க

கலகலப்ரியா said...

||பிரபாகர் said...
புரிகிறது சகோதரி.... அனைத்தும் புனைவல்ல!

பிரபாகர்...||

அது சரி... நன்றிண்ணா...

கலகலப்ரியா said...

|| இராமசாமி கண்ணண் said...
//இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”..//

உண்மைதான்.||

நன்றி கண்ணன்..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
கண்முன்னாடி கொண்டோலாவும் கூவமும்..எங்கயோ ஊசலாட வைக்குது.||

நன்றி சார்...

கலகலப்ரியா said...

|| வானம்பாடிகள் said...
/திருவிழாவில் தொலைந்த குழந்தை... பஞ்சு மிட்டாயை நீட்டினாலும்.. பார்பி பொம்மையை நீட்டினாலும்.. தட்டி விட்டுக் கண் மூடி.. அம்மா... அம்மா என்று வீறிடுவதைப் போல்... மனதிற்கு அண்மையானவற்றையே அது தேடிக் கொண்டிருக்கிறது.. /

அட அட. அட்சரலட்சம் பெறும். எல்லாரும் எப்போவாவது ஒரு தருணத்தில் அனுபவிச்சதுதான். சொன்னவிதம் நேர்த்தி.

/சிவகாமியின் சபதத்தில் சிவகாமி நடனம் ஆடியபோது சேர்ந்தாடிய மனமும்... எங்கோ ஏதோ ஒரு சோழன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி வேல்.. வீரவேல் என்று புறப்படும் உள்ளும்.. உணர்வும்... எழுத்துகளில் மட்டுமே தெரியும் கோட்டை மதில்களில் ஒட்டி உறவாடும் உயிரும்... இங்கில்லை... /

நான் சொன்னேன்ல பொறாமைன்னு. இதுக்குதான். சிம்ப்ளி க்ரேட்.

/முடிவுகள் மிகச் சில நொடியிலேயே எடுக்கப் படுகின்றன.. எப்பவோ படித்த புத்தகத்தின் தலைப்பு நினைவில் வந்தது... “இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”.. ரோஸைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்...
”ஐ டூ வில் மிஸ் யூ ரோஸ்..”.//

ம்ம். கன கச்சிதம்.

அடிக்கடி இப்படி எழுதேன்மா. ப்ளீஸ்.||

அவ்வ்வ்... ரொம்ப ரொம்ப நன்றி சார்...

கலகலப்ரியா said...

|| !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
////ஃபண்டாஸ்டிக்கோ... ர்ரொமாண்டிக்கோ... ப்யூட்டிஃபுல்... வுண்டர்ஸ்ஷோஉன் //////////



எல்லாம் நல்லா இருக்குங்க ஆனால் பாருங்க இந்த மேல குறிபிட்டு இருக்கும் இந்த வார்த்தைகளை மட்டும் படிக்கும்போது எனக்கு எதோ திகில் படம் பார்பதுபோல இருக்கு . சற்று இதற்கான விளக்கம் கொடுத்திருந்தால் நல்லது . பகிர்வுக்கு நன்றிங்க||

நன்றிங்க... அதுதான் தெரிஞ்ச வார்த்தையா போட்டேன்... ஃபண்டாஸ்டிக்... ரொமாண்டிக்... அப்டின்னுட்டு..

கலகலப்ரியா said...

|| வானம்பாடிகள் said...
//இதற்குக் காரணம் முன்பிறவிப் பயனா.... அல்லது சிறு வயதிலிருந்தே.. படித்தவையும்... கேட்டவையும்... நாமும் நாம் சார்ந்தவையுமென மூளையின் மூலையொன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் கதைகளா தெரியவில்லை... சில மனிதர்களைப் பார்த்தவுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்படுவதும்.. சிலரைப் பார்த்த உடனேயே ’விலகு’ என்று தோன்றுவதும்... எதனாலென்று தெரியவில்லை... //

அட ஆமாம். எனக்கும் இப்படித் தோணும். ஆனா இப்படி அழகா யோசிக்கத்தெரியலை:)||

அது சரி... இதெல்லாம் ரொம்ப ஒவர் சார்... ரொம்ப நன்றி சார்...

கலகலப்ரியா said...

||Dr.எம்.கே.முருகானந்தன் said...
அலையும் மனத்தின்
விசித்திர யாத்திரை.
புனைவு அருமை.||

வாங்க டாக்டர்... நன்றி... :)

கலகலப்ரியா said...

||யாசவி said...
so nice.

Justification and thinking is so beautiful

good :)||

நன்றி யாசவி..

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//திருவிழாவில் தொலைந்த குழந்தை... பஞ்சு மிட்டாயை நீட்டினாலும்.. பார்பி பொம்மையை நீட்டினாலும்.. தட்டி விட்டுக் கண் மூடி.. அம்மா... அம்மா என்று வீறிடுவதைப் போல்... //

Lost child அப்படின்னு ஒரு கதை இருக்கு இத வச்சே..

// அல்லது சிறு வயதிலிருந்தே.. படித்தவையும்... கேட்டவையும்... நாமும் நாம் சார்ந்தவையுமென மூளையின் மூலையொன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் கதைகளா தெரியவில்லை..//

இதாத் தான் இருக்கும்..

ம்ம்.. அப்பப்போ இப்படித் தேடி நாமும் தொலைந்து தான் போறோம்..||

நன்றி சந்தனா... ம்ம்... lost child படிச்சதில்ல... நீங்க ரெகமண்ட் பண்ணா... 2012-ற்கிடையில் படிக்க ட்ரை பண்றேன்... நிறைய பெண்டிங்ஸ்... 2012 வரைக்கும் ஒத்திப் போட்டிருக்கேன்... :o)

கலகலப்ரியா said...

||Jey said...
// “இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”..//

இத சொன்னது ஆரு அம்மனி, நச்-னு சொல்லிருகாரு...||

நன்றிங்க... இது சொன்னது... willie jolley... சிம்பிளா சொல்லிருக்காரு... படிச்சுப் பாருங்க..

கலகலப்ரியா said...

||முத்துலெட்சுமி/muthuletchumi said...
ரொம்ப நல்லா இருக்குங்க ..
\\முடிவே இல்லாத ஒன்றை இவளுக்கு விளம்பியே ஆக வேண்டுமா.. ஒரு வேளை யாருக்காவது சொன்னால்.. முடிவில் உறுதியாக இருக்கலாமென்ற நப்பாசையா... //
அதும் இது போல பலர் செய்வதுண்டு ,சொல்லிவச்சிக்கலாம்..அப்பத்தான் செய்யலைன்னா யாராச்சும் கேப்பாங்கன்னு..

இரண்டு மூன்று முறை படித்தால் வெவ்வேறு கோணங்களைத் தரும் பதிவு.||

ம்ம்.. ரொம்ப நன்றி முத்துலெட்சுமி... :)

கலகலப்ரியா said...

||சே.குமார் said...
அட... அட... புரிகிறது சகோதரி.... அனைத்தும் புனைவல்ல!

பகிர்வுக்கு நன்றிங்க||

நன்றிங்க குமார்... (அண்ணா உங்க பின்னூட்டத்த ஒருத்தரு காப்பி பண்ணிப் போட்டிருக்காரு பாருங்க...)

கலகலப்ரியா said...

|| கயல் said...
ரொம்ப நல்லாயிருக்குப்பா!||

நன்றி கயல்.. :)

கலகலப்ரியா said...

||vasan said...
முர‌ண்க‌ள் வேறான‌வையா, க‌ற்பித‌மா,
ஒன்றையே ப‌ல‌ கோண‌ங்க‌ளில் பார்த்து
யானை பார்த்த‌ குருட‌ர்க‌ளாய் அலைகிறோமா?
காண்ப‌துவ‌ரை க‌ற்ப‌னை வாழ்கிற‌து.
ஒன்றை ம‌ட்டும் பார்க்கும் போது வேறு,
ஒன்றோடென்றாய் வேறு மாதிரி,
எதிர்திசையில், ப‌ற‌வை பார்வையில்,
ஒன்றே ப‌ல‌வாய், எல்லாம் ஒன்றாய்.
(க‌ல‌க‌ல‌ பிரியா, ப‌திவை ப‌டித்த‌ எப‌க்ட்.
குழ‌ப்ப‌னுது குற்ற‌மா? குழ‌ப்பிய‌து குற்ற‌மா?) 'அக‌ம்' போன‌ போக்கில், அந்த‌ வார்த்தை ஒரு 'ச‌ய‌னைட்'
ச‌கோத‌ரி.||

நன்றிங்க.. ம்ம்.. குழப்பியது குற்றமா... குழம்ப வைத்தது குற்றமா எல்லாம் தெரியல... குழப்பிட்டீங்க... அவ்வ்... ம்ம்... சயனைட்டா... அது எப்டி..? எனக்கு நெசம்மாவே புரியல.. இது பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்... இடுகை போட்டாலும் பரவால்ல...

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...
இடைச்செருகலான மனவோட்டம் கொஞ்சநேரம் லயித்துபோகச்செய்கிறது...

//முடிவே இல்லாத ஒன்றை இவளுக்கு விளம்பியே ஆக வேண்டுமா.. ஒரு வேளை யாருக்காவது சொன்னால்.. முடிவில் உறுதியாக இருக்கலாமென்ற நப்பாசையா... //

இந்த நப்பாசைக்கு ஆட்படாத மனது எனக்கும் வாய்த்ததில்லை. சொல்லியபின் அதன் மீதுள்ள அழுத்தம் மேலும் ஒருபிடி இறுகுவதைப்போன்ற உணர்வு.. அருமை....||

நன்றி பாலாசி...

கலகலப்ரியா said...

|| பா.ராஜாராம் said...
அப்பா!!!

கலக்கி இருக்கீங்க ப்ரியா!||

ரொம்ப நன்றி பா.ரா...

கலகலப்ரியா said...

||ஜெரி ஈசானந்தன். said...
லாவகமான நடையில், சுகமாய் வாசித்தேன்.||

நன்றி ஜெரி.. :)

கலகலப்ரியா said...

||ரிஷபன் said...
சில மனிதர்களைப் பார்த்தவுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்படுவதும்.. சிலரைப் பார்த்த உடனேயே ’விலகு’ என்று தோன்றுவதும்... எதனாலென்று தெரியவில்லை...
உண்மை. என்னதான் பகுத்தறிவு பேசினாலும் இந்த உணர்வுக்கு தர்க்க ரீதியான விளக்கம் இல்லை.||

நன்றி ரிஷபன்... :)

கலகலப்ரியா said...

||முகிலன் said...
காசிக்கு எப்போ போறீங்க||

போயிட்டு கடிதம் போடறேனே... (என்ன அவசரம்..)

கலகலப்ரியா said...

|| SanjaiGandhi™ said...
வெல்கம் டூ இந்தியா..||

ம்க்கும்... மத்தவங்க கஷ்டப் படறத பார்க்கறதுன்னா எம்பூட்டு சந்தோஷம்... பார்க்கலாம்... டாங்ஸு

கலகலப்ரியா said...

||சி.பி.செந்தில்குமார் said...
கலக்கலான பதிவு.இங்கிலீஷை குறைத்துக்கொண்டால் இன்னும் நல்லாருக்கும்.||

நன்றி செந்தில்... ம்ம்.. தேவைப்பட்டதால பயன்படுத்த வேண்டியதா போச்சு.. தமிழும் சரியா வந்திருக்கலாம்... அடுத்த தடவை முயற்சி பண்றேன்..

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
காசிக்கு போகும் போது நித்யாவ அகோரிகளை கேட்டதா சொல்லுங்க||

கண்டிப்பா சொல்றேன் கதிர்.. என்ன கேட்டதா சொல்றது... அப்புறம் யார் கேட்டதா சொல்றது.. பிரபல ப்ளாக்கர் கதிர்ன்னா தெரியும்ல அவங்களுக்கு..?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அதுவொரு சிறுகதை ப்ரியா (பள்ளிப்பாடம்).. Irony என்றார் என் ஆங்கில ஆசிரியர்.. நீங்க சொன்ன விஷயமே தான் - வர்ணனைகள், உணர்வுகள், விவரிப்போடு, கதையாக.. என்னவொரு coincidence! நாலஞ்சு பக்கந்தான்..

2012 ல உலகம்ன்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா கேட்பேன் :)).. லிங்க் தேடித் தந்திருக்கேன்.. ஆசிரியர் - Mulk Raj Anand..

http://books.google.com/books?id=QVK2zoEEFZ8C&pg=RA1-PA6&lpg=RA1-PA6&dq=the+lost+child+short+story+mulk+raj+anand&source=bl&ots

பக்கம் மூன்றில் இருந்து ஆரம்பிக்குது.. சேர்ச் பாக்ஸ் ல the lost child என்று போட்டா வந்துடும்..

கலகலப்ரியா said...

ty sooo much chandana... v.v.nice of you... :-)