கறிக்குதவா..
மாம்பிஞ்சில்
வழிந்தோடும் பிசின்
தோல் பட்டால்
அவிஞ்சு போகும்
”கையைக் கழுவு”
பதறியபடி - உடன்
கை பிடித்துத்
தேய்த்துக் கழுவும்
அம்மா சொன்னதுதான்
வழி காட்டுகிறது
அவள் இருக்காளே
சக்களத்தி
என்று ஆரம்பிக்கும்
எக்கள முனைப்புகளை
அண்ட விடாது...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
22 ஊக்கம்::
Present akka
பிசின் - அறி
=)) லொல்லுக்கு அளவே இல்லையா?
/அவள் இருக்காளே சக்களத்தி என்று ஆரம்பிக்கும் எக்கள முனைப்புகளைஅண்ட விடாது... //
/கறிக்குதவா.. மாம்பிஞ்சில் வழிந்தோடும் பிசின் தோல் பட்டால் அவிஞ்சு போகும்//
அதானே. ஒன்னுத்துக்கு உதவாத வில்லங்கத்த சேர்த்தா கருவாட்டைத் தொட்ட குரங்குதான்:).
எளிமை. அழகுங்க.
அருமைங்க...
/ அவள் இருக்காளே
சக்களத்தி
என்று ஆரம்பிக்கும்
எக்கள முனைப்புகளை
அண்ட விடாது... /
புரியல? :( மன்னிக்கனும்
வணக்கம் ப்ரியா
முதல் பாதி பின் பாதிக்கு உவமையா?
அப்படிஎனில் கவிதை அழகு. என் புரிதல் அப்படியே!
உள்ளேன் அக்கா ...
வாவ்.
எக்கள முனைப்புகளை???? ம்ம்ம்ம்......
வினோவின் பின்னூட்டம் தான் என்னதும்
கவிதை நல்லா தான் இருக்கு. பட், அசினுக்கும் சக்களத்தி சண்டைக்கும் என்ன கனெக்சன்னு புரியலை...
//
வானம்பாடிகள் said...
அதானே. ஒன்னுத்துக்கு உதவாத வில்லங்கத்த சேர்த்தா கருவாட்டைத் தொட்ட குரங்குதான்:).
//
அது என்னா கருவாட்டு கொரங்கு? இல்லை கருவாடு தொட்ட கொரங்கு? கருவாடு தொட்டா குரங்குக்கு என்ன ஆகும்?
பாம்பை தொட்டா தான் அதுக்கு பைத்தியம் பிடிச்சிடும்னு சொல்வாங்க...பட், கருவாடு தொட்டா மூக்கை பொத்திக்கிட்டு ஓடிடும்னு நினைக்கிறேன்...
நல்லா சோப்பு போட்டு கை கழுவிக்கோங்க ப்ரியா..
(புரியலன்னு ஏன் காமிச்சுக்கனும்? :)) )
//அது என்னா கருவாட்டு கொரங்கு? இல்லை கருவாடு தொட்ட கொரங்கு? கருவாடு தொட்டா குரங்குக்கு என்ன ஆகும்?
பாம்பை தொட்டா தான் அதுக்கு பைத்தியம் பிடிச்சிடும்னு சொல்வாங்க...பட், கருவாடு தொட்டா மூக்கை பொத்திக்கிட்டு ஓடிடும்னு நினைக்கிறேன்...//
இல்லை. வீட்டு ஓடையெல்லாம் பிரிச்சிக் கிடாசும்னு, குரங்கு தொல்லை இருக்கிறப்ப கருவாடை பொடியாக்கி போட்டுடுவாங்க.
அத தொட்டுச்சோ, மோந்து பார்க்கும். கையை தரையில தேய்க்கும். திரும்ப மோந்து பாக்கும். திரும்ப தேய்க்கும். ரத்தம் வந்தாலும் விடாது. அப்படியே கெடந்து தேய்ச்சி, மோந்துன்னு செத்துடும்.
பாம்பும் அப்படித்தான். படக்குன்னு கழுத்துகிட்ட புடிசிட்டு தூரமா புடிச்சிகிட்டு மூஞ்சிய திருப்பிக்கும். பாக்குறதும், திருப்பிகிறதும்னு ரெண்டும் பட்டினியிலயே செத்துடும்.
//கருவாட்டைத் தொட்ட குரங்குதான்:)//
கீழ விளக்கமும் படிச்சேன் ஆசானே! தினம் உங்ககிட்ட கத்துக்கறேன். மைனாப்புண்ணு அது இதுன்னு கலக்குறீங்க... நீங்கள் ஒரு பல்கலைக் கழகம்...
(உஸ்...அப்பாடா இப்பத்தான் கொஞ்சம் பாரத்த இறக்கி வெச்சாப்ல இருக்கு. தங்கச்சி இடுகையில் அய்யாவப் பத்தி ஏதாச்சும் சொல்லனும்னு துடிச்சிட்டிருந்தேன்...)
பிரபாகர்...
//அது சரி said...
கவிதை நல்லா தான் இருக்கு. பட், அசினுக்கும் சக்களத்தி சண்டைக்கும் என்ன கனெக்சன்னு புரியலை...//
அதே..
பிசின் + அறி = பிசினாறி..
குறும்பு.
simple with meaningful....
//கறிக்குதவா.. மாம்பிஞ்சில் வழிந்தோடும் பிசின் தோல் பட்டால் அவிஞ்சு போகும்//
எளிமை. அழகுங்க.
எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... டவுட் எல்லாம் வந்து க்ளியர் பண்றேன்... இருங்க..
I better wait for your explanation Priya.
Post a Comment