header photo

Tuesday, August 3, 2010

சிதறலுக்கு முன்...

வானவில் நிறத்தில் 
ஆங்காங்கு மிதக்கும் 
குமிழிகளின் கூட்டத்தினிடை.. 
கிருத திரேதா துவாபர - தீர்ந்து
கலியுகம் பெருமூச்செறிகிறது











அடர்சூழ் காற்றின் 
அழுத்தம் துளைத்து
ஈலியத்தின் ஒரு கூறாகி 
மிதத்தித் தள்ளுகிறேன்
குண்டுச் சட்டி போன்ற 
நுரைக் குமிழியொன்றை

மைக்ரோ வினாடியொன்று
யுகமாகியும்.. 
வளிமண்டலம் தாண்டிய 
வெற்றிடத்தில் இருப்பிருப்பதான
நம்பிக்கை நீங்குவதாயில்லை.. 
__________________________________________

28 ஊக்கம்::

நசரேயன் said...

விளக்கம் கொடுங்க, அப்புறமா வந்து படிக்கிறேன்

vasu balaji said...

வார்த்தைக் கோர்வை மிரட்டுது. சயன்ஸ்ல சொன்னாலும் ஏதோ லைஃப் பத்தி சொல்லியிருக்கு..நம்பிக்கையை நம்பி இப்புடி தோணுது. சரண்டர். பொழிப்புரை ப்ளீஸ்.

vasu balaji said...

/அடர்சூழ் காற்றின்
அழுத்தம் துளைத்து
ஈலியத்தின் ஒரு கூறாகி
மிதத்தித் தள்ளுகிறேன்
குண்டுச் சட்டி போன்ற
நுரைக் குமிழியொன்றை/

பொடி வச்சிட்டியே பரட்டை..அவ்வ்வ்:((

வினோ said...

சகோ.... எனக்கு நம்பிக்கை இல்ல புரியுமுன்னு... நானும் சரண்டர்... மூன்று தடவை படிச்சேன்... :(

க ரா said...

என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா எதுன்னுதான் புரிய்ல :)

Jey said...

உரைனடைல கவுஜ எழுதுனாவே நமக்கு புரியாது...இதுல.....

எப்படியோ போங்க , ஓட்டு போட்ருக்கேன்.நானும் கவுஜ எழுதுரவங்க ப்க்கம் போகக்கூடாதுன்னுதான் இருக்கேன், இருந்தாலும், ஒருவேலை புரிஞ்சிட்டாம்ன்ற ஒரு நப்பாசை விடமாட்டீங்குது....வானம்பாடிகள் சாருகிட்டதான் கிளாஸ் போகனும், அவர்தான், கவுஜயும் எழுதிகிட்ட், என்ங்க கவுஜ எழுதினாகும், அத புரிஞ்சிகிட்ட் கமெண்ட்ஸ் போடுராரு...

இப்படி பொலம்ப வுடுராங்களே.....

a said...

நீங்க ஏதோ சொல்லுறீங்கன்ணு மட்டும் தெரியுது.... ஆனா காதுக்குள்ள உய்ங்க்ன்னு சத்தம் மட்டும்தான் கேக்குது...

மார்கண்டேயன் said...

நானும் பாக்குறேன், எனகிருக்கிற தமிழறிவ (???) வச்சுகிட்டு, நீங்க எழுதுறத ஒரு தடவையில படிச்சு புரிஞ்சிக்கனும்ன்னு, ம்ஹூம், முடியலையே, இப்ப அறிவியல வச்சு வேற !!!, ஒன்னு நல்ல தெரிஞ்சதுங்க, தமிழும் தடவல், அறிவியலும் அப்படி இப்படின்னு, இதே மாதிரி நூறு கவிதைய எழுதிடீங்கன்னா வானம்பாடிகள் ஐயா கோனார் உரை போட்டுடுவாரு, பிறகென்ன, வழக்கம் போல கோனார் உறைய படிச்சிட்டு கமென்ட் போட்டுறலாம் . . .

அது சரி(18185106603874041862) said...

நடத்துங்க...

அது சரி(18185106603874041862) said...

//
வெற்றிடத்தில் இருப்பிருப்பதான
நம்பிக்கை நீங்குவதாயில்லை.
//

ஆமா...நாளை என்ற நாளை நம்பி....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//வளிமண்டலம் தாண்டிய வெற்றிடத்தில் இருப்பிருப்பதான நம்பிக்கை நீங்குவதாயில்லை//

கண்டிப்பா அந்தாண்ட எங்கயாச்சும் இருக்கும்.. அப்பிடியே மிதந்து கொண்டே நல்லா தேடிப் பாருங்க..

முடிஞ்சா திரும்பி வந்து எங்களயும் கூட்டிட்டுப் போங்க :))

Unknown said...

ஏன் இந்தக் கொலைவெறி?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அக்கோவ்.. அப்படியே கோனார் நோட்ஸ்சும் குடுத்தா புண்ணியமாப்போகும்..

( இந்த கவிதை மட்டும்தான் என் மரமண்டைக்கு(!) புரியமாட்டிங்குது..ஹி..ஹி )

'பரிவை' சே.குமார் said...

விளக்கம் கொடுங்க... ப்ளீஸ்.

மார்கண்டேயன் said...

// இந்த கவிதை மட்டும்தான் என் மரமண்டைக்கு(!) புரியமாட்டிங்குது..ஹி..ஹி //

பட்டா, உங்களின் நேர்மை வியக்க வைக்கிறது, சிறு உதவி, உங்களுக்கு புரிஞ்ச கவிதைகள விளக்கிட்டீங்கன்னா புண்ணியமாப் போகும் . . .

கலகலப்ரியா said...

நன்றி நசரேயன்.. ம்க்கும் விளக்கம் கொடுத்துட்டா மட்டும்.. வெளங்கிருமாக்கும்...

நன்றி வானம்பாடி சார்..

நன்றி வினோ... அவ்வ்..

நன்றி கண்ணன்... அதுவாச்சும் புரியுதே..

நன்றி ஜெய்... செரி செரி ரிலாக்ஸ்.. :))

நன்றி யோகேஷ்.. :))...

நன்றி மார்க்கண்டேயன்.. அது செரி..

நன்றி அதுசரி.. :o) நாளை என்ற நாளை நம்பி மட்டும் புரிஞ்சிடுத்தாக்கும்... :)))

ஹிஹி.. சந்தனா நல்லாருக்கே... நீங்களா வர வேண்டியதுதான்... அது என்ன கூட்டிப் போறது... சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :))

வாங்க முகிலன்... அதுவா... கொஞ்ச நாளா கொலைகாரக் கும்பல் கூடச் சேர்ந்து இப்டி ஆகிப் போச்சு...

பட்டாபட்டி... இந்தக் கவுஜ மட்டும்தானே புரியல பொழைச்சிப் போகட்டும் விடுங்க... :o)..

நன்றி குமார்... முயற்சி செய்கிறேன்..

ஆமாம் பட்டா... மார்க்கண்டு சொன்ன மாதிரி விளக்கினா எனக்கும் உதவியா இருக்கும்... :))))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நானா வர்றதா.. அந்த ஈலியத்துலயே ஒரு எடங் கொடுங்க.. ஏதோ ஒரு ப்ரோட்டானாவோ, ந்யூட்ரானாவோ இல்ல எலெக்ட்ரானாவோ தொத்திகிட்டு வந்துடறேன் :))

மார்கண்டேயன் said...

//மார்க்கண்டு//

அப்பா எம்மேல தான் என்னா காண்டு,

. . . யக்கா ஏங்கா எம்மேல இந்த கொலைவெறி . . . ???

நல்ல வேள கமென்ட் மூலமா வெளிய வந்த்ருச்சு . . .

இல்லைன்னா இன்னும் ஒரு கவிதையால்ல வந்துர்க்கும் ???!!!

//ஈலியத்துலயே ஒரு எடங் கொடுங்க..//

அங்க ஏற்கனவே எடம் காலியில்லன்னு கேள்வி . . .

இனிமே கமெண்டுக்கும் கோனார் நோட்ஸ் போட்டுடுங்கப்பா. .

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஈலியத்துலயே ஒரு எடங் கொடுங்க.. இனிமே கமெண்டுக்கும் கோனார் நோட்ஸ் போட்டுடுங்கப்பா. //

இதென்னது வம்பா போச்சு? :)) ஈலியம்ன்னா Helium - மேலே மேலே மேலே போகக் கூடியது.. இது ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் கவிதை மாதிரி.. அதுல எப்படி உங்களுக்கு இடம்னெல்லாம் கேக்கக் கூடாது :))

மார்கண்டேயன் said...

//ஈலியம்ன்னா Helium//

அப்படீங்களா . . . இப்ப தான் கோனார் உரையோட ஆரம்பம் . . .

Already Helium has 2 protons, 2 neutrons and 2 electrons

that is why:

அங்க ஏற்கனவே எடம் காலியில்லன்னு

கலகலப்ரியா said...

எல்போர்ட்டுக்கும் மார்க்கண்டுக்கும் சண்டை... இடைல மாட்டிக்கிட்டா உடைஞ்சு போகும் மண்டை... ஹிஹி... ஆரோக்யமான விவாதம்... தொடரட்டும்... :))..

ஈலியம் என்ற மூலகத்தின் ஒரு கூறு அப்டின்னு சொன்னேன்.. அது எலக்ட்ரோனாவும் இருக்கலாம்... ப்ரோட்டோனாகவும் இருக்கலாம்...

குமிழி என்பதை வாழ்க்கையெனக் கொள்க... புர்ர்ர்ர்ர்ர்ர்ரியும்ன்னு நினைக்கறேன்... எஸ்கேப்புடா சாமீ..

சந்தனா... சயன்ஸ் ஃபிக்‌ஷன் லெவலுக்கு கொண்டு போயாச்சா... நடக்கட்டு நடக்கட்டு... :)))

vasu balaji said...

இந்த வருடத்து ஐம்பதாவது இடுகையா இது!வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸபா... எனக்கே தெரியாம இப்டி ஒரு சாதனை செஞ்சிருக்கேன்... நன்றி சார்...

vasu balaji said...

ரொம்ப சலிச்சிக்க வேணம். போன வருஷத்த விட இந்த வருஷம் ப்ராக்ரஸ் கம்மி.

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

ரொம்ப சலிச்சிக்க வேணம். போன வருஷத்த விட இந்த வருஷம் ப்ராக்ரஸ் கம்மி.||

அப்டின்னா குட் ப்ராக்ரஸ்ன்னு அர்த்தம்....

vasu balaji said...

இந்த கதை வேணாம். இது ரேங்க் சொல்லலை. மார்க்:-l

Thenammai Lakshmanan said...

இருந்தும் இல்லாததுமான இருப்பு .. கவிதை செறிவு.. அருமை பிரியா..

கலகலப்ரியா said...

நன்றி தேனம்மை :)