header photo

Tuesday, August 17, 2010

கனவின் தொடர்ச்சியாக..

கரும்பாறை சுற்றிச்
சலசலக்கும் ஆற்றுநீரோரம்
கந்தக நிறத்திலொரு காகிதம்
ஏந்தி நின்று கொண்டிருக்கிறேன் 
அம்மாச்சி ஒருத்தி கைபிடித்திழுக்கிறாள் 
குளிக்கலாம் வாவென.. 
ஓ.. இங்கேயே என்றியம்பியபடி 
தண்ணீர்க் கரையில் குனிந்து கை நனைக்கிறேன்
எங்கிருந்தோ இன்னொரு அம்மாச்சி வருகிறாள்
அரை அடி ஆழம் கூட இல்லை 
சேறுதான் வருமென நொடிக்கிறாள் 
சற்றுத் தள்ளி ஒரு குன்றைக் காட்டி
அப்போ அங்கே என்கிறேன்.. என் பயம் எனக்கு..
அழுக்கெல்லாம் அடித்துக் கொண்டு
அங்குதான் வந்து சேரும்... நீ வா...
கை நீட்டி அழைத்துச் சென்றது 
அருவி விழும் மலைச்சரிவு.. 
அருகருகில் இருக்கை போலிருந்த பாறைகள் மீது
அஃகேன நிலையிலமர்ந்து 
ஆனந்த நீராடிக் கொண்டிருக்கிறோம்
கைக்கெட்டிய தூரத்தில் கந்தகக் காகிதம் 
சற்றும் நனையாது சலனமற்றிருக்கிறது 
மலைப் பாறையை வெறித்த அம்மாச்சி 
என்னை நேரே பார்த்து வா போகலாம்
என்றபடி சட்டென எழுந்து நடக்கிறாள்..
கடைக்கண்ணில் மற்ற அம்மாச்சியின் 
கடைக்கண் மலைப்பாறைகளை 
நோக்குவது தெரிகிறது.. 
அங்கு பார்க்கும் துணிவற்று 
தன்னிச்சையாய் காகிதம் பற்றி
முகத்திற்குக் கடிவாளமிட்டு முதலாமவள் 
முதுகை வெறித்தபடி தொடர்கிறேன்.. 
மற்றவள் என்னைத் தொடர்ந்தபடி 
முதலாமவளைக் கேட்கிறாள் 
வெள்ளை வரிகளற்ற யானையா அது?
அவள் தலையை மட்டுமசைத்துவிட்டு
விடுவிடென்று நடக்கிறாள் பாறையிடுக்குவழி..
யானைக்கு வரிகளா என்ற எனது ஆறாவது அறிவின் 
வினாவை வாய்க்குள் அடக்குகிறேன் 
அவர்களின் குறியீடு குறிப்பது எதுவானாலும் 
உவப்பானதொன்றல்ல என்று புரிகிறது..  
கண் விழித்து கந்தகக் காகிதத்தைத் தேடுகிறேன்
காணவில்லை.. யானை எப்படி அங்கே.. 
எதுவும் புரிவதாய்க் காணோம்.. 
அதனாலென்ன.. 
எழுதியே ஆக வேண்டுமிதை...
___________________________________________
(மீண்டும் ஒரு சொதப்பல்... ஆனா எனக்கு எழுதியே ஆக வேண்டி இருந்தது... மன்னிக்க..!)

46 ஊக்கம்::

vasu balaji said...

ஒரு கனவு கண்டார்போலிருக்கிறது. ஆனாலும் காட்சிப்படுத்தல் அபாரம். ஆறும், மலையும், சேறும், பாறையும் எங்கோ எப்போதோ பார்த்த, அனுபவித்த காட்சியை கண்முன் நிறுத்திக் கட்டுகிறது. முடிவு பாதிக்கனவில் எழுந்த குழப்பம் போல் இருந்தாலும் விடைதேடும் சுவாரசியம். சொதப்பல் என்று சொல்வது சொதப்பல் என்பேன் நான்.

vasu balaji said...

//கண் விழித்து கந்தகக் காகிதத்தைத் தேடுகிறேன்காணவில்லை.. யானை எப்படி அங்கே.. எதுவும் புரிவதாய்க் காணோம்.. அதனாலென்ன.. எழுதியே ஆக வேண்டுமிதை...//

ஆமாம்மா. எழுதியே ஆகணும் இந்த இடுகையில் கற்றுக் கொள்ள ஒரு வார்த்தை இருந்தது. அஃகேனம். நன்றி.

க.பாலாசி said...

//அஃகேன நிலையிலமர்ந்து //

இந்த காட்சிப்படுத்தலை வெகுவாக ரசிக்கிறேன். கனவை அப்படியே கொடுப்பது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும் இங்கு சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.

Sanjai Gandhi said...

.

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ

vasu balaji said...

/வெள்ளை வரிகளற்ற யானையா அது?/

வெள்ளையாய் நீர்வீழ்ச்சி காய்ந்த பாறை? பழைய குற்றாலம் மாதிரிஅளவா வரியா விழுறாமாதிரி:).

பவள சங்கரி said...

சொதப்பலா......நல்லாயிருக்குங்க.....

sakthi said...

உங்கள் கனவின் தொடர்ச்சி

அருமையான

வார்த்தை அமைப்பு

நன்று

பா.ராஜாராம் said...

acchariyap 'padutthureenga' priya!

moolaiyin kaikkul sikkaatha aroobam, manasin kaikkul sikkum. roobamaagum.

athu, ingu nigazhnthirukkirathu.

fantastic! (pls bear with translation prbs)

Unknown said...

அருவி நீரை அனுபவிக்க முடியா மன ஓட்டம்.
நன்றாக இருக்குங்க.

'பரிவை' சே.குமார் said...

சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.

நசரேயன் said...

//ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ//

எனக்கும் முடியலை

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...
//அஃகேன நிலையிலமர்ந்து //

இந்த காட்சிப்படுத்தலை வெகுவாக ரசிக்கிறேன். கனவை அப்படியே கொடுப்பது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும் இங்கு சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.||

||சே.குமார் said...
சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.||

யப்ப்பா பாலாசி... உனக்குக் கோடி புண்ணியம்... சே.குமார் யாரோ ஒருத்தங்களோட பின்னூட்டத்த முழுசாவோ இல்ல பகுதியாவோ காப்பி பண்ணிப் போடுவாய்ங்க... ஆனா.. இப்டி ஒரு பின்னூட்டத்துக்கு வழிவகுத்த உன்னைக் கொல்ல மனம் துடிக்குதேஏஏ...

sathishsangkavi.blogspot.com said...

அழகாக வரிகள்... அழகான வார்த்தை கோர்வை....

Unknown said...

இப்பிடி எல்லா இடத்துக்கும் கூட்டிகிட்டு போய் கடைசில உங்கள மாதிரியே நட்டாத்துல விட்டுட்டீங்களே 

கும்மாச்சி said...

கவிதையை படிக்கும் பொழுது அருவி சத்தம் கேட்கிறது, எங்கே எப்பொழுதோ பார்த்த காட்சி கண் முன் தோன்றுகிறது.
அருமை

வினோ said...

கனவும் கவிதையாக தான் வருமா தோழி?
காட்சிகள் என் கண்முன்னே விரிகிறது அருமையா இருக்கு...
நன்றி...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரெண்டு அம்மாச்சிங்க கனவுல வந்தா, அன்னிக்கு சொதப்பிடுமோன்னு நினைச்சு எழுதின கவித நல்லா வந்துடும்ன்னு அர்த்தம் :))

உங்க கனவுக்கு நானாரு அர்த்தம் சொல்ல? இருந்தாலும்.. அம்மாச்சிங்க பாதுகாப்புணர்வோட உங்கள பாத்துக்கற மாதிரி இருக்கு... வெள்ளை யானை என்பது வெள்ளை வானை வச்சு வந்திருக்குமோ?

அது சரி(18185106603874041862) said...

வெள்ளை வரிகளற்ற யானை...

மேஜிகல் ரியலிஸம்??

கவிதை மட்டுமல்ல, அதன் வடிவமும் பிடித்திருக்கிறது. இது இப்படி என்று சொல்வதை விட இது என்ன என்று யோசிக்க வைக்கிறது.

You are scaling new heights.

Anonymous said...

கை பிடித்து உங்கள் கனவுக்குள் என்னை அழைத்துச் சென்றது உங்கள் கவிதை வரிகள்...
அருமை தோழி!

மணிஜி said...

ஸோ “ தப்பிடுச்சு

பூங்குழலி said...

யானை எப்படி அங்கே..
எதுவும் புரிவதாய்க் காணோம்..
அதனாலென்ன..
எழுதியே ஆக வேண்டுமிதை...
__

கனவுக் காட்சிகளும் அதில் வரும் அம்மாச்சிகளும் அழகு

ஈரோடு கதிர் said...

சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.

டிஸ்கி: பின்ன நான் மட்டும் ரயில்ல உக்காந்து யோசிக்கனுமாக்கும்

vasu balaji said...

ங்கொய்யால கனவு காணக்கூட சொதந்திரமில்லையா. அத சொல்றதும் சாமிகுத்தமா? இது தெரியாம கனவு காணுங்கள்னு சொல்லிட்டாரே இந்த கலாம். பாரு ஒரு வண்ணன் பங்காளி போய் இப்ப முகில் பங்காளி வேற சோடி போட்டுகிட்டாங்க சோடி:)))

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

ஒரு கனவு கண்டார்போலிருக்கிறது. ஆனாலும் காட்சிப்படுத்தல் அபாரம். ஆறும், மலையும், சேறும், பாறையும் எங்கோ எப்போதோ பார்த்த, அனுபவித்த காட்சியை கண்முன் நிறுத்திக் கட்டுகிறது. முடிவு பாதிக்கனவில் எழுந்த குழப்பம் போல் இருந்தாலும் விடைதேடும் சுவாரசியம். சொதப்பல் என்று சொல்வது சொதப்பல் என்பேன் நான்.||

ரொம்ப நன்றி சார்... வழக்கம் போல எல்லாப் பின்னூட்டத்திற்கும்... உங்க மேலான ஆதரவிற்கும்... நன்றி நன்றி நன்றி...

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...

//அஃகேன நிலையிலமர்ந்து //

இந்த காட்சிப்படுத்தலை வெகுவாக ரசிக்கிறேன். கனவை அப்படியே கொடுப்பது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும் இங்கு சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.||

ரொம்ப நன்றி பாலாசி..

கலகலப்ரியா said...

|| SanjaiGandhi™ said...

.||

...........

கலகலப்ரியா said...

|| SanjaiGandhi™ said...

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ||

தண்ணியைக் குடிங்க தண்ணியைக் குடிங்க.. (நொந்தசாமீல வர்ற ஸேம் வாட்டர் பாஸ்..)

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

/வெள்ளை வரிகளற்ற யானையா அது?/

வெள்ளையாய் நீர்வீழ்ச்சி காய்ந்த பாறை? பழைய குற்றாலம் மாதிரிஅளவா வரியா விழுறாமாதிரி:).||

இப்போ என்னாங்கிறீங்க... என்னோட இல்லாத மூளையைக் கிளறி இதக் கண்டுபுடிக்கணுமாக்கும்... கனவுப் பலன்னு எங்கயாவது பஞ்சாங்கத்தில போட்டிருப்பாய்ங்க பாருங்க சார்...

கலகலப்ரியா said...

||நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
சொதப்பலா......நல்லாயிருக்குங்க.....||

ஏங்க.. என்னங்க இது..? இடைல ஒரு கேள்விக்குறி வருதா... இல்லை அதுவா இதுவா... ஏனுங் இப்பூடீ... அவ்வ்வ்...

கலகலப்ரியா said...

||sakthi said...
உங்கள் கனவின் தொடர்ச்சி

அருமையான

வார்த்தை அமைப்பு

நன்று||

ரொம்ப நன்றி சக்தி...

கலகலப்ரியா said...

||பா.ராஜாராம் said...
acchariyap 'padutthureenga' priya!

moolaiyin kaikkul sikkaatha aroobam, manasin kaikkul sikkum. roobamaagum.

athu, ingu nigazhnthirukkirathu.

fantastic! (pls bear with translation prbs)||

படுத்தல் நோட்டட்... ரொம்ப நன்றி பா.ரா. ...

கலகலப்ரியா said...

||Sethu said...
அருவி நீரை அனுபவிக்க முடியா மன ஓட்டம்.
நன்றாக இருக்குங்க.||

நன்றி சேது..

கலகலப்ரியா said...

|| சே.குமார் said...
சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.||

அவ்”வண்ணமே” நினைக்கக் கடவ..

கலகலப்ரியா said...

||நசரேயன் said...
//ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ//

எனக்கும் முடியலை||

எனக்கும்... உங்க லொள்ள சொன்னேன்..

கலகலப்ரியா said...

||சங்கவி said...
அழகாக வரிகள்... அழகான வார்த்தை கோர்வை....||

ரொம்ப நன்றி சங்கவி..

கலகலப்ரியா said...

||முகிலன் said...
இப்பிடி எல்லா இடத்துக்கும் கூட்டிகிட்டு போய் கடைசில உங்கள மாதிரியே நட்டாத்துல விட்டுட்டீங்களே ||

என்னாங்கடா இது.. நான் நட்டாத்தில நிக்கறேன்னு யாருப்பா ராங் இன்ஃபர்மேஷன் கொடுக்கறது..

கலகலப்ரியா said...

||கும்மாச்சி said...
கவிதையை படிக்கும் பொழுது அருவி சத்தம் கேட்கிறது, எங்கே எப்பொழுதோ பார்த்த காட்சி கண் முன் தோன்றுகிறது.
அருமை||

ரொம்ப நன்றி கும்மாச்சி.. (அம்மாச்சின்னு சொன்னதும் கும்மாச்சி வந்து பின்னூட்டம்.. இன்னாய்யா நடக்குது இஙக.. )

கலகலப்ரியா said...

||வினோ said...
கனவும் கவிதையாக தான் வருமா தோழி?
காட்சிகள் என் கண்முன்னே விரிகிறது அருமையா இருக்கு...
நன்றி...||

அவ்வ்.. நன்றி வினோ... டச்சிங் பின்னூட்டம்..

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ரெண்டு அம்மாச்சிங்க கனவுல வந்தா, அன்னிக்கு சொதப்பிடுமோன்னு நினைச்சு எழுதின கவித நல்லா வந்துடும்ன்னு அர்த்தம் :))

உங்க கனவுக்கு நானாரு அர்த்தம் சொல்ல? இருந்தாலும்.. அம்மாச்சிங்க பாதுகாப்புணர்வோட உங்கள பாத்துக்கற மாதிரி இருக்கு... வெள்ளை யானை என்பது வெள்ளை வானை வச்சு வந்திருக்குமோ?||

ஆகா... சந்தனா... தாயே... அம்மாச்சி... நீங்கதானா அது... இன்னாமா யோசிக்கிறாய்ங்கடா சாமீ..

கலகலப்ரியா said...

||அது சரி said...
வெள்ளை வரிகளற்ற யானை...

மேஜிகல் ரியலிஸம்??

கவிதை மட்டுமல்ல, அதன் வடிவமும் பிடித்திருக்கிறது. இது இப்படி என்று சொல்வதை விட இது என்ன என்று யோசிக்க வைக்கிறது.

You are scaling new heights.||

அட நெசம்மாவா... அவ்வ்.. ரொம்ப ரொம்ப நன்றி அதுசரி...

கலகலப்ரியா said...

||Balaji saravana said...
கை பிடித்து உங்கள் கனவுக்குள் என்னை அழைத்துச் சென்றது உங்கள் கவிதை வரிகள்...
அருமை தோழி!||

ரொம்ப நன்றி பாலாஜி..

கலகலப்ரியா said...

||மணிஜீ...... said...
ஸோ “ தப்பிடுச்சு||

இது என்ன பழிக்குப் பழியா... என்னாஆஆஆ சொல்ல வர்றீங்க மணிஜீ..

கலகலப்ரியா said...

||பூங்குழலி said...
யானை எப்படி அங்கே..
எதுவும் புரிவதாய்க் காணோம்..
அதனாலென்ன..
எழுதியே ஆக வேண்டுமிதை...
__

கனவுக் காட்சிகளும் அதில் வரும் அம்மாச்சிகளும் அழகு||

வாங்க பூங்குழலி... நன்றி...

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
சொதப்பவில்லையென்றே நினைக்கிறேன்.

டிஸ்கி: பின்ன நான் மட்டும் ரயில்ல உக்காந்து யோசிக்கனுமாக்கும்||

ய்ய்யேனுங்க கதிருங்க... குமாரு பண்ணதுக்கு என் தலைல அடிச்சு அழுவுறியளே... இது என்னங்க நியாயம்... செரீ.. என்ன இப்போ... உங்க இடுகைல குமாரு பதில் போடறப்போ நாமளும் பண்ணுவோமில்ல காப்பி அண்ட் பேஸ்ட்டு... நாம மட்டும் ஏரோப்ளேன்ல உக்காந்து திங்க் பண்ணுவோமாக்கும்... இருங்கடி..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
ங்கொய்யால கனவு காணக்கூட சொதந்திரமில்லையா. அத சொல்றதும் சாமிகுத்தமா? இது தெரியாம கனவு காணுங்கள்னு சொல்லிட்டாரே இந்த கலாம். பாரு ஒரு வண்ணன் பங்காளி போய் இப்ப முகில் பங்காளி வேற சோடி போட்டுகிட்டாங்க சோடி:)))||

டென்சன் ஆவாதீங்க சார்... அந்த சோடிக்கு விருந்து வச்சிருக்கேன் இன்னிக்கு...