header photo

Wednesday, August 25, 2010

பச்சை நிறத்திலோர் ஆண்டி..

கண்ணாற் கண்டேன் நான் 
கோண் முதுகுடை மண்ணிற ஓணான்
நாணி அச்சம் கொண்டுறையும் 
தூணின் வண்ணமும் அவ்வண்ணம்..

பொன்வண்டின் நிறமதென்றார் சிலர்
எட்டிப் பார்த்தேன் குட்டிச்சுவரொன்று 
நட்ட வைத்து நின்று கொண்டிருந்தது
ஏரிக்கரை ஒதுங்கும் அழுக்கேறிய பாசிநிறம்

முழு இரவொன்றின் வெளிச்சத்தில்
பழுப்பேறிய சுவற்றில் வால் நீட்டி
பாசிப் படர்வில் தலை நீட்டியிருந்தது
பாதி அது மீதி இது என்ன இது..?

பார்வையைக் கூர்மையாக்கினேன்
ஒரு கண் பாவை வலத்திசை வெறித்தது
மற்றொன்றிடறி இடம் சென்றது
நாக்கு நீண்டு சுருண்டு ஒட்டிக் கொண்டது..

தொற்றுமிடமேற்று நிறமணிந்த இது..
தும்பிக்கு நீளும் நாக்கைக் காக்கைக்கஞ்சி
அண்ணத்தில் ஒட்டிவைத்திருக்கும் இது
கேலிக்கும் அவ்வப்போ வேலிக்கும் சாட்சியாகுமிது
ஒரு வேளை ஓணான் இல்லையோ...

______________________________________________

29 ஊக்கம்::

vasu balaji said...

தலைப்புக்கே நூறு மார்க்:))

/கண்ணாற் கண்டேன் நான்
கோண் முதுகுடை மண்ணிற ஓணான்
நாணி அச்சம் கொண்டுறையும் தூணின் வண்ணமும் அவ்வண்ணம்..
பொன்வண்டின் நிறமதென்றார் சிலர்/

ரொம்ப அருமையா வந்திருக்கு

/ஒரு கண் பாவை வலத்திசை வெறித்தது
மற்றொன்றிடறி இடம் சென்றது
நாக்கு நீண்டு சுருண்டு ஒட்டிக் கொண்டது..

தொற்றுமிடமேற்று நிறமணிந்த இது..
தும்பிக்கு நீளும் நாக்கைக் காக்கைக்கஞ்சி
அண்ணத்தில் ஒட்டிவைத்திருக்கும் இது
கேலிக்கும் அவ்வப்போ வேலிக்கும் சாட்சியாகுமிது/

=)). சிரிச்சு மாளலை. சோ க்யூட்

/ஒரு வேளை ஓணான் இல்லையோ.../

இல்லை:o))

கலகலப்ரியா said...

புரியா என்ற பெயருக்கு உரமேற்றும் பொருட்டு... (ஆ.. கவுஜ கவுஜயாக் கொட்டுதே..இதோட நிறுத்தி நெக்ஸ்ட் கவுஜ எழுதிக்கலாம்..)

வினோ said...

புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு.. இன்னும் இரண்டு தடவைப் படிக்கிறேன்..

sakthi said...

தொற்றுமிடமேற்று நிறமணிந்த இது..
தும்பிக்கு நீளும் நாக்கைக் காக்கைக்கஞ்சி
அண்ணத்தில் ஒட்டிவைத்திருக்கும் இது
கேலிக்கும் அவ்வப்போ வேலிக்கும் சாட்சியாகுமிது
ஒரு வேளை ஓணான் இல்லையோ...

வார்த்தை கோர்த்திருக்கும் விதம் அழகு

இது போன்று தலைப்புகளில் கவிதை எழுதுவதற்கே நிறைய மார்க் போடலாம் தப்பில்லை

Unknown said...

பி இ ஏ யூட்டிஃபுல்.

அப்பாதுரை said...

ரசிக்கும்படியானது

ஆரூரன் விசுவநாதன் said...

கொஞ்சு தமிழ்
நெஞ்சு நிறை
விஞ்சு புகழ்
தஞ்சமென வந்ததுனையே
நஞ்சு நிகர்
வஞ்சர் தினம்
அஞ்சியோட வந்த
குல மகளே......வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

thiyaa said...

அருமையான பதிவு

ஈரோடு கதிர் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க பிரியா

பனித்துளி சங்கர் said...

nalla irukku

Chitra said...

அருமை.

அது சரி(18185106603874041862) said...

//

பொன்வண்டின் நிறமதென்றார் சிலர்
எட்டிப் பார்த்தேன் குட்டிச்சுவரொன்று
நட்ட வைத்து நின்று கொண்டிருந்தது
ஏரிக்கரை ஒதுங்கும் அழுக்கேறிய பாசிநிறம்

//

குட்டிச்சுவரு :)))

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

ஹேமா said...

புரியவில்லை.பச்சோந்தியை வர்ணித்ததுபோல நினைக்கிறேன் ப்ரியா.சரியா ?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//பாதி அது மீதி இது என்ன இது..?//


பழுப்பு நிற ஷார்ட்ஸும் பாசி நிறச் சட்டையும் அணிந்திருந்திருக்குமோ? :)))

பவள சங்கரி said...

மிக அருமையாக உள்ளது.

Anonymous said...

//ஏரிக்கரை ஒதுங்கும் அழுக்கேறிய பாசிநிறம்//
அருமை!

//முழு இரவொன்றின் வெளிச்சத்தில்
பழுப்பேறிய சுவற்றில் வால் நீட்டி
பாசிப் படர்வில் தலை நீட்டியிருந்தது
பாதி அது மீதி இது என்ன இது..?//

அதான், அதே தான் என்ன இது?

பா.ராஜாராம் said...

வாவ்! ப்ரியா!

கலகலப்ரியா said...

நன்றி பாலா சார்...

நன்றி வினோ...

நன்றி சக்தி... அவ்வ்..

நன்றி முகிலன்..

நன்றி அப்பாதுரை...

நன்றி ஆரூர்... ரொம்ப அருமையா இருக்கு... இதுக்கு நான் தகுதிதானாங்கிறது வேற விஷயம்.. ம்ம்..

நன்றி தியா...

நன்றி கதிர்..

நன்றி சங்கர்..

நன்றி சித்ரா...

நன்றி அதுசரி... இதில எதும் உள்க்குத்து இல்லையே... :o)..

நன்றி ஹேமா... சரிதான்...

நன்றி சந்தனா... ஐ லைக் திஸ் கண்டுபுடிப்ஸ்... :))

நன்றி நித்திலம்..

நன்றி பாலாஜி...

வாவ்... நன்றி பா.ரா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாயிருக்குங்க பிரியா

கலகலப்ரியா said...

நன்றி முத்துலெட்சுமி...

கவி அழகன் said...

சும்மா சொல்ல கூடாது நல்லா இருக்கு

கலகலப்ரியா said...

நன்றி யாதவன்.. அதுக்காக காசெல்லாம் கொடுக்க முடியாது..

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அருமை.

RAJA RAJA RAJAN said...

அதகளம்...

சூப்பருங்கோ...!

http://communicatorindia.blogspot.com/

Paleo God said...

ஒரு கண் பாவை வலத்திசை வெறித்தது
மற்றொன்றிடறி இடம் சென்றது
நாக்கு நீண்டு சுருண்டு ஒட்டிக் கொண்டது..
//

அது ஒரு அற்புதம்.

// இது
கேலிக்கும் அவ்வப்போ வேலிக்கும் சாட்சியாகுமிது//

நாம பண்ற கொடுமைக்கெல்லாம் ஒரு சாட்சி வேணுமில்லீங்களா?

/ஒரு வேளை ஓணான் இல்லையோ...//

கவுத்துப் புட்டீங்களே!! :)

vasan said...

சேரிட‌ம் சேர்ந்து,சேர்த்து, சேர்த்த‌தை சேமிக்க‌ குலைந்து,கோணி,கூனி,குறுகி கும்பிட்டு
காக்கையை ம‌யிலேன‌வும், புலியை பூனையென‌வும் நேர‌ம‌றிந்து நிற‌ம‌ற்றி, குர‌ல்மாற்றி
சுவ‌ரை ம‌ட்டும் சுற்றியேயிருக்கும் வால் நீண்ட‌ ப‌ழ‌ங்கால‌த்து ஊர்வ‌ன‌ வ‌கை.

கலகலப்ரியா said...

நன்றி சே.குமார்...

நன்றி ராஜராஜன்..

நன்றி ஷங்கர்..

நன்றி வாசன்..

தமிழ்க்காதலன் said...

உங்களின் எழுத்து நடை மிக நன்றாக இருக்கிறது. சொல்கிறேன் என வருந்த வேண்டாம், நல்ல படைப்புகள் படைக்க நிறைய விடயங்கள் இப்பிரபஞ்சத்தில் கிடக்க, இப்படி கருத்தில்லா பதிவுகள் தேவையா? உங்களின் திறமைகள் வேறுவிதமாய் திரும்பட்டுமே....!! நன்றி.

கலகலப்ரியா said...

||தமிழ்க் காதலன். said...
உங்களின் எழுத்து நடை மிக நன்றாக இருக்கிறது.||

நன்றி

||சொல்கிறேன் என வருந்த வேண்டாம், நல்ல படைப்புகள் படைக்க நிறைய விடயங்கள் இப்பிரபஞ்சத்தில் கிடக்க,||

லைக்... காதல்... மோதல்... சாதல்..? (நோ வருத்தம் அட் ஆல்..)

||இப்படி கருத்தில்லா பதிவுகள் தேவையா?||

கருத்தில்லா? யார் சொன்னா?

||உங்களின் திறமைகள் வேறுவிதமாய் திரும்பட்டுமே....நன்றி||

திரும்பினா பார்ப்போம்.. நன்றிங்க...