header photo

Tuesday, September 14, 2010

துருப்பிடிக்காமலிருக்க..

இரும்பிலிருந்து தோன்றும் துருவே
இரும்பிற்குச் சமாதியெழுப்பும் 

சாக்கிய முனி செத்துச் சில நூறு திவசத்துக்கப்பால் 
செரண்டிப்பில் தேரவாத பௌத்தத்தைப் போதிக்கிறார்..

குறுமுனி தாண்டவக்கோனின் திருமணத்தன்று
தென்திசை சென்றபோது சாக்கியமுனி பிறந்திருக்கவில்லை

எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்.. 
இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய 
அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்.. 

சாக்கியமுனி சிலை வடிவிலாவது
குறுமுனியைச் சந்தித்து வருந்தியிருப்பாரா என்றால்..  
அடையாளமற்றுத் துடைக்கப்பட்டிருக்கும் 
அகஸ்திய ஸ்தாபனம் அமைதி காக்கிறது...!

_________________________

36 ஊக்கம்::

vasu balaji said...

//இரும்பிலிருந்து தோன்றும் துருவேஇரும்பிற்குச் சமாதியெழுப்பும் //

wow!!!. simply superb and powerful

/சாக்கிய முனி செத்துச் சில நூறு திவசத்துக்கப்பால் செரண்டிப்பில் தேரவாத பௌத்தத்தைப் போதிக்கிறார்..//

=)). செம:))

//குறுமுனி தாண்டவக்கோனின் திருமணத்தன்றுதென்திசை சென்றபோது சாக்கியமுனி பிறந்திருக்கவில்லை//

ஆஹா! ரசிச்சேன்:))

//எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்.. இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்.. //

அதுக்கெல்லாம் மனசு வேணும். மனுசனா இருக்கணும்.

//அடையாளமற்றுத் துடைக்கப்பட்டிருக்கும் அகஸ்திய ஸ்தாபனம் அமைதி காக்கிறது...!//

அதுதான் சாபக்கேடு:(. இது அமைதியாய்த் தெரியவில்லை. மவுனமாய் நிரந்தர துக்கம் சுமக்கும் ஸ்தாபனம்.

Anyway! again simply superb:)

vasu balaji said...

/எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்.. இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்.. //

ஏனோ தெரியவில்லை. இந்த வரிகள் ரொம்ப இழுக்குது. எவ்வளவு நிதர்சனம். எத்தனை உண்மைகள்.

Ahamed irshad said...

ஏதோ பிரச்சினைனு தெரியுது..

வால்பையன் said...

முழுசா புரியலைனாலும்(எனக்கு முனி, சனியெல்லாம் தெரியாது) எதோ மேட்டர் இருக்குறது மட்டும் தெரியுது!

ரவி said...

கலகலப்ரியா : ஹும். லொக். ஹ.

வானம்பாடிகள் :

ஹூம்.

//பலே பலே///

லொக்.

/ excellent. altimate.//

/ஹ/

அட. ஒரு எழுத்தில் கவிதையா ? இப்படிப்பட்ட உள்ளர்த்தம் வவத்து எழுத இனி ஒருவர் பிறக்கவேண்டும். கீழே விழுந்து தரையில் உருண்டு மண்டை உடைந்து ரசித்தேன். வோவ் வோவ்.

Unknown said...

//Blogger செந்தழல் ரவி said...

கலகலப்ரியா : ஹும். லொக். ஹ.

வானம்பாடிகள் :

ஹூம்.

//பலே பலே///

லொக்.

/ excellent. altimate.//

/ஹ/

அட. ஒரு எழுத்தில் கவிதையா ? இப்படிப்பட்ட உள்ளர்த்தம் வவத்து எழுத இனி ஒருவர் பிறக்கவேண்டும். கீழே விழுந்து தரையில் உருண்டு மண்டை உடைந்து ரசித்தேன். வோவ் வோவ்.//

:-)

Unknown said...

பின் தொடர !

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
//இரும்பிலிருந்து தோன்றும் துருவேஇரும்பிற்குச் சமாதியெழுப்பும் //

wow!!!. simply superb and powerful

/சாக்கிய முனி செத்துச் சில நூறு திவசத்துக்கப்பால் செரண்டிப்பில் தேரவாத பௌத்தத்தைப் போதிக்கிறார்..//

=)). செம:))

//குறுமுனி தாண்டவக்கோனின் திருமணத்தன்றுதென்திசை சென்றபோது சாக்கியமுனி பிறந்திருக்கவில்லை//

ஆஹா! ரசிச்சேன்:))

//எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்.. இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்.. //

அதுக்கெல்லாம் மனசு வேணும். மனுசனா இருக்கணும்.

//அடையாளமற்றுத் துடைக்கப்பட்டிருக்கும் அகஸ்திய ஸ்தாபனம் அமைதி காக்கிறது...!//

அதுதான் சாபக்கேடு:(. இது அமைதியாய்த் தெரியவில்லை. மவுனமாய் நிரந்தர துக்கம் சுமக்கும் ஸ்தாபனம்.

Anyway! again simply superb:)||

நன்றி நண்பா..!!!!

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான். .!!!

என் தாயுமானவனுக்கு... நான் விக்கலெடுத்தாலும்.. ஆச்சரியம்தான்..

நான் நிறைய எழுதணும்.. எழுதுவேன்...

உங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும்... இப்டியே..!!!!!

கலகலப்ரியா said...

அஹமது இர்ஷாத்.. நன்றிப்பா... இந்தக் கவிதை நம்ம ஈழம் பற்றியது...

கலகலப்ரியா said...

நன்றி வால்பையன்... விளக்க உரை வேணா எழுதிடலாம்.. :)..

கலகலப்ரியா said...

வாங்க கரிகாலன்... பாம்போ பழுதோ...

Unknown said...

பிரியா,
நீங்க இலங்கை தமிழரா? உங்களை அறியேன். இலங்கைத் தமிழர்களின் துன்பங்கள் தீர எனது வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவுலக சண்டையை கொஞ்சம் விட்டுவிட்டு மனதை பிற நல்ல காரியங்களில் செலவு செய்ய எனது வேண்டுகோள்.

இன்னல்கள் போதும். வெறுக்கும் உலகம் துரத்திக் கொண்டே இருக்கும். நல்ல மனதுடன் வெள்ளந்தி மனதுடன் எழுத்தும் எழுத்தாளர்களுடன் உங்கள் சிறந்த எழுத்தைப் பயன் படுத்தவும்.
இதற்கு பதில் எழுத வேண்டாம்.

கலகலப்ரியா said...

சேது... ஆமாம் நான் ஈழத் தமிழச்சி..!!!!! நன்றி.. :).. ஈழத்தாலதான் எழுதவே வந்தேன்..

திசைகள் எப்படியெல்லாமோ திருப்பப் படுகின்றன... போய்க்கொண்டிருக்கிறேன்... காற்றோட்டத்தில் பறந்து கொண்டிருக்கும் பூஞ்சிறகாக.. புயலடித்தாலும்... பறந்து கொண்டுதான் இருப்பேன்..!!!!

அது சரி(18185106603874041862) said...

பின் நவீனத்துவத்துல பின்னுற மாதிரி இருக்கே.

அது சரி(18185106603874041862) said...

சாக்கியமுனியும் குறுமுனியும் சந்தித்தால் என்ன பேசுவார்கள் என்று யோசிக்கிறேன்.

குடுகுடுப்பை said...

If I understood correctly, my question to akathiyar also the same.

vasu balaji said...

/நன்றி நண்பா..!!!!

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான். .!!!

என் தாயுமானவனுக்கு... நான் விக்கலெடுத்தாலும்.. ஆச்சரியம்தான்..

நான் நிறைய எழுதணும்.. எழுதுவேன்...

உங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும்... இப்டியே..!!!!!//

என்னம்மா நீ இப்படியெல்லாம். இந்த மனசு எனக்கு பெரிய பகுமானம். ஆமாம்மா. நீ எழுதணும். உன் எழுத்தும், உன் உசரமும் வேறே. உசரப்பற!

vasu balaji said...

செந்தழல் ரவி said...

கலகலப்ரியா : ஹும். லொக். ஹ.

வானம்பாடிகள் :

ஹூம்.

//பலே பலே///

லொக்.

/ excellent. altimate.//

/ஹ/

அட. ஒரு எழுத்தில் கவிதையா ? இப்படிப்பட்ட உள்ளர்த்தம் வவத்து எழுத இனி ஒருவர் பிறக்கவேண்டும். கீழே விழுந்து தரையில் உருண்டு மண்டை உடைந்து ரசித்தேன். வோவ் வோவ்.//

:)). ரொம்ப நன்றி ரவி. எனக்கு எப்போதுமே ப்ராக்ஸி தேவைப்பட்டதில்லை. அதுவும் பாராட்ட யாருக்கும் தேவைப்படவும் படாது. தேவைப்படும்போது கேட்கிறேனே.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

யாரிந்த முனீஸ்?

ம்ம்.. ஈழம் பற்றியது அப்படின்னு பௌத்தத்த பாத்ததும் புரிஞ்சது..

விக்கிபீடியால அகத்தியரப் பத்தி தேடிப் பாக்கறேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//நான் நிறைய எழுதணும்.. எழுதுவேன்... //

கண்டிப்பா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அகழ்வாராய்ச்சி முடிவுகள்:

சாக்கியமுனி = புத்தர்
குறுமுனி = அகத்தியர்
செரண்டிப் = இலங்கைக்கான பெர்ஷியப் பெயர்
தேரவாதம் = புத்த மதத்தின் ஒரு பிரிவு
அகஸ்திய ஸ்தாபனம் = திரிகோணமலையில் தமிழர்களால் பாரமரிக்கப்பட்டது.. சென்ற வருடம் அழிக்கப்பட்டது.

//சாக்கியமுனி சிலை வடிவிலாவதுகுறுமுனியைச் சந்தித்து வருந்தியிருப்பாரா என்றால்.. //

ஆப்கானிஸ்தான்ல அவரையும் தூக்கிட்டாங்களாம்.. மண்ணு வடிவுல சந்திப்பாங்கன்னு நினைக்கறேன்..

//இரும்பிலிருந்து தோன்றும் துருவேஇரும்பிற்குச் சமாதியெழுப்பும்//

கவிதைல இரும்பு எது துரு எது?

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku.

கலகலப்ரியா said...

||அது சரி(18185106603874041862) said...

பின் நவீனத்துவத்துல பின்னுற மாதிரி இருக்கே.||

ம்க்கும்... ஒரு வருஷமா இப்டித்தான் பின்நவீனத்துவம் பின்னறோம்னு சொல்லிட்டு வர்றீங்கோ... எனக்கு இது வரைக்கும் அப்டின்னா என்னான்னு தெரியவே இல்ல...

கலகலப்ரியா said...

||அது சரி(18185106603874041862) said...

சாக்கியமுனியும் குறுமுனியும் சந்தித்தால் என்ன பேசுவார்கள் என்று யோசிக்கிறேன்.||

யோசனை பண்றதோட நிறுத்தாம... அத ஒரு போஸ்ட்டாப் போடவும்..

கலகலப்ரியா said...

||என்னம்மா நீ இப்படியெல்லாம். இந்த மனசு எனக்கு பெரிய பகுமானம். ஆமாம்மா. நீ எழுதணும். உன் எழுத்தும், உன் உசரமும் வேறே. உசரப்பற!||

நன்றி சார்... பகுமானம் வெகுமானம் எல்லாம் இங்க இல்ல சார்... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது இது...

அப்புறம் உசரம் எல்லாம் எதுக்கு.. எங்கயோ படிச்சேன்.. குஞ்சைத் திருடும் பருந்து உயரப் பறப்பதற்குக் காரணம் உண்டு...

அதெல்லாம் வேணாம் சாரே..

பிஞ்சிறகா இருந்தாலே போதும்... மழையில் நனைஞ்சாலும்... உலர்ந்ததும் பறக்கலாம்... ஈஸி... எரியற வரைக்கும்..

கலகலப்ரியா said...

||
குடுகுடுப்பை said...

If I understood correctly, my question to akathiyar also the same.||

குடுகுடுப்பையாரே... என்ன ஸேம்.. அது சரி கேட்ட அதே கேள்வியா...

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அகழ்வாராய்ச்சி முடிவுகள்:

சாக்கியமுனி = புத்தர்
குறுமுனி = அகத்தியர்
செரண்டிப் = இலங்கைக்கான பெர்ஷியப் பெயர்
தேரவாதம் = புத்த மதத்தின் ஒரு பிரிவு
அகஸ்திய ஸ்தாபனம் = திரிகோணமலையில் தமிழர்களால் பாரமரிக்கப்பட்டது.. சென்ற வருடம் அழிக்கப்பட்டது.

//சாக்கியமுனி சிலை வடிவிலாவதுகுறுமுனியைச் சந்தித்து வருந்தியிருப்பாரா என்றால்.. //

ஆப்கானிஸ்தான்ல அவரையும் தூக்கிட்டாங்களாம்.. மண்ணு வடிவுல சந்திப்பாங்கன்னு நினைக்கறேன்..

//இரும்பிலிருந்து தோன்றும் துருவேஇரும்பிற்குச் சமாதியெழுப்பும்//

கவிதைல இரும்பு எது துரு எது?||

சந்தனா... கை கொடுங்க கை கொடுங்க... எனக்கு இப்டி ஒரு சீரியஸ் வாசகியா... ஐ லைக் இட் வெரி வெரி வெரி மச்...

இவ்ளோ கண்டு புடிச்சாச்சு.. துரு மேட்டர் மட்டும் கண்டுபுடிக்கலயாக்கும்..

அந்த வாக்கியத்தைச் சொன்னது புத்தர்... இரும்பில இருந்துதான் துரு உண்டாகிறது என்றாலும்.. அந்தத் துருவே இரும்பை அழிச்சிடும்...

அதனால... சாக்கிரத மக்கான்னு...

ரொம்ம்ம்ப நன்றி..

கலகலப்ரியா said...

||சே.குமார் said...

Nalla irukku.||

நன்றி குமார்..

பவள சங்கரி said...

ப்ரியா எங்கேயோ போயிட்டீங்க.......நீங்க மேன்மேலும் வளர வேண்டும்.ஒரு தாயாக எனது வேண்டுகோள், ரெளத்திரம் இருக்க வேண்டியதுதான்.......ஆனால் அது நம்மையேத் தீண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.......தெய்வ சக்திக்கீடான உங்கள் புலமையை இது போன்ற சிறிய விடயங்களுக்காக செலவிடுவதைவிட்டு இன்னும் நிறைய சாதிக்கலாமே!!!

VR said...

மனதை தொட்ட வரிகள் ......// ....... திசைகள் எப்படியெல்லாமோ திருப்பப் படுகின்றன... போய்க்கொண்டிருக்கிறேன்... காற்றோட்டத்தில் பறந்து கொண்டிருக்கும் பூஞ்சிறகாக.. புயலடித்தாலும்... பறந்து கொண்டுதான் இருப்பேன்..!!!!....... // ......... பறந்து கொண்டே இருங்கள்...... வனத்தில் ஒரு நாள் சந்திக்கலாம்......... உங்கள் அளவுக்கு எனக்கு உயர பறக்க முடிந்தால் ..........

Swamy.

ஈரோடு கதிர் said...

புரிந்தபிறகு ரொம்பவும் ரசித்தேன்

நன்றி

கலகலப்ரியா said...

||நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
ப்ரியா எங்கேயோ போயிட்டீங்க.......நீங்க மேன்மேலும் வளர வேண்டும்.ஒரு தாயாக எனது வேண்டுகோள், ரெளத்திரம் இருக்க வேண்டியதுதான்.......ஆனால் அது நம்மையேத் தீண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.......தெய்வ சக்திக்கீடான உங்கள் புலமையை இது போன்ற சிறிய விடயங்களுக்காக செலவிடுவதைவிட்டு இன்னும் நிறைய சாதிக்கலாமே!!!||

ரொம்ப நன்றி நித்திம்மா.. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க.. (என்னோட அம்மா, தாத்தா எல்லாம் இப்டித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க... இப்போ பாலா சார்.. கூட நீங்களா... உலகம் தாங்குமா..)

சாதிக்கறேனோ இல்லையோ.. சிலவற்றிடமிருந்து ஒதுங்கிப் போவது மேல் என்றுதான் நினைத்தேன்... :)

கலகலப்ரியா said...

||V R said...
மனதை தொட்ட வரிகள் ......// ....... திசைகள் எப்படியெல்லாமோ திருப்பப் படுகின்றன... போய்க்கொண்டிருக்கிறேன்... காற்றோட்டத்தில் பறந்து கொண்டிருக்கும் பூஞ்சிறகாக.. புயலடித்தாலும்... பறந்து கொண்டுதான் இருப்பேன்..!!!!....... // ......... பறந்து கொண்டே இருங்கள்...... வனத்தில் ஒரு நாள் சந்திக்கலாம்......... உங்கள் அளவுக்கு எனக்கு உயர பறக்க முடிந்தால் ..........

Swamy.||

வாங்க Swamy.. நன்றி.. என்னாச்சு எல்லாருக்கும்... நான் எல்லாம் ரொம்ப சாதாராணமான பட்டாம்பூச்சி மாதிரி... (அதும் மாதிரி.. :))

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
புரிந்தபிறகு ரொம்பவும் ரசித்தேன்

நன்றி||

நன்றி கதிர்...

KASBABY said...

Dear priya,
I used to read blogs.But i never have given comment.This is my second comment.The first one comment was also to you.

Your each word is enriched with vast meaning and packed with powerfull themes.

i am surprised each time i read your blogs.....of course,most of time someone has to write THELIURAI to understand.

Best wishes.

கலகலப்ரியா said...

thank you kasbaby...