header photo

Saturday, February 25, 2012

தீ

எதிலும் பட்டுவிடாது 
எரிமலைக் குழம்பருகில்
தழலிரும்பாக 
நடந்து கொண்டிருந்தேன்

அணு அணுவாக
அவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்

Friday, February 24, 2012

ச்ச்சும்மா... ரீஃப்ரெஷிங்கு...


குருடன் யானை பார்த்த கதையாட்டம்... நம்மாளுங்க லிவிங் டுகெதர் அப்டிங்கிற யானைய... அதோட வால் நுனில தொங்கிக்கிட்டிருக்கிற முடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு பண்ணிடுறாங்க...

இதில வேற ஊர்ல நாலு கழுதை வட்டை போட்டு... பின்னங்காலால உதைச்சுக்கிட்டே போகுது... இதுதான் வெளிநாட்டு யானை அப்டிங்கிறாங்க..  இப்போ லிவிங் டுகெதர்ன்னா என்னன்னு பாடம் எடுக்கணும்னா... நிறையப் பேட்டி எல்லாம் எடுத்து... மேற்கோள் எல்லாம் காட்டி எழுதணும் போலருக்கு... அப்டி எழுதிட்டாலும் விளங்கிட்டாலும்... சக மனுஷன புரிஞ்சுக்கிறதில நம்மள மிஞ்ச யாருமே கிடையாது போங்க... 

எதுக்கெடுத்தாலும் சொல்லி வச்சிடுவாய்ங்க... பெரிய பெரிய எழுத்தாளருங்க.. கொள்கைவியாதியாளர் எல்லாம்... அமெரிக்கா மோகம்... ஐரோப்பா மோகம்... அப்டின்னு... இந்த மோகம்ன்னு ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே...முடியல... என்னடா சொல்றீங்கன்னு கொஞ்சமாவது யாராவது சொந்தமா திங்க் பண்றானான்னா... ஊஹூம்.. 

நம்மாளுங்க இருக்கானுங்க பாருங்க... மத்தவங்களப் பாராட்டி ஒரு வார்த்த சொல்றதுன்னா நாக்கு சுளுக்கிக் கழுத்துக்குப் பின் பக்கமாப் போய் ஒளிஞ்சுக்கும்...... உள்ளுக்குள்ள புழுங்கி வெந்து செத்து... அதச் சமாளிக்கிறதுக்கு மத்தவங்கள மட்டம் தட்டி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்... ஓ... அவனா... அந்தக் காலத்தில அவன் பாட்டன் என்ன பண்ணான் தெரியுமா...?!அவன் அப்பனோட மாமனோட மச்சினியோட தங்கச்சி பையன் இருக்கானே... அவன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு ஏதோ சொல்லிக்கிட்டே போவாங்க... இதெல்லாம் ஏன் சொல்றன்னு கேக்க நாதி இருக்காது... 

ஊர்ல ஒருத்தன் உழைச்சுச் சம்பாதிச்சு பங்களா.. கார்ன்னு செட்டில் ஆனான்னு வைங்க... அவனப் பார்க்கறப்போல்லாம்... இளக்காரமாப் பார்த்து... இவன் என்ன ஜாதி தெரியுமா... இவன் அப்பன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு... ஹூம்ன்னு வயித்தெரிச்சலத் தீர்த்துக்கும்.. 

இல்லையின்னா... ஹூம்.. அந்தக் காலத்தில என்னோட பாட்டன் முப்பாட்டன் எப்டி இருந்தான் தெரியுமா... அப்போ உன்னோட தாத்தன் எல்லாம் என்னோட தாத்தன் கிட்ட பிச்சை எடுத்துக்கிட்டிருந்தான்னு ஜம்பமாப் பீத்திக்கிட்டே பிச்சை எடுத்துக்கிட்டிருப்பாங்க.. 

அதயேதான் வெளிநாட்டுக் காரங்களுக்கும் பண்றது... அவன் எங்கயோ போயிட்டிருக்கான்... அதப் பார்த்து மெச்சிக்க ஒரு வார்த்த இல்ல... ஆனா... நம்மளப் போல உண்டுமா... நாறப்பயலுவன்னு ஏதோ தெரிஞ்ச கணக்குக்கு அள்ளி விட்டுக்கிறது...

இங்கன பஸ்ஸில யாரும் யாரயும் உரசவும் காணோம்.. உரசிட்டான்னு யாரும் கூச்சல் போடவும் காணோம்... செருப்பக் கழத்தி அடிக்கவும் காணோம்... பஸ்ஸ நேர போலீஸ்ஸ்டேஷனுக்கு விடுங்கடான்னு சவுண்ட் விடவும் காணோம்... 

காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்... அந்தப் பையன கொண்டு போய் ஜெயில்ல போட்டு மிதிச்சு... அவன் வாழ்க்கையப் பிடுங்கவும் காணோம்...

கண்மணி அன்போடு காதலன் நான்னு... உருகி... உருக்கிட்டு... நான் வேற ஜாதியாம்... எனக்குப் புட்டிப்பால் கொடுத்த அம்மா இப்போதான் ஜாதிப்பால் கொடுத்தாங்க... நானு ஒன்னும் தெரியாத பாப்பா அப்டின்னு யாரும் சொல்லக் காணோம்.. 

ஆனாலும் நம்ம மக்கள் ஆக்ரோஷமாக் கேக்குறாங்க... அவங்க கலாச்சாரம் எல்லாம் நாம கத்துக்கிடணுமாவாம்...

(விதிவிலக்கும்... நல்லது கெட்டதும்... அவங்க கிட்டயும் இருக்கு... ஆனா அந்த 0.001% பிடிச்சு வச்சுக்கிட்டு உதாரணம் காட்டாதீங்கய்யா புண்ணியவான்ஸ்..)

இன்னொண்ணு சொல்றாய்ங்க வெளிநாட்டில எல்லாம் மனநல மருத்துவமனை ஜாஸ்தி ஆயிடிச்சாம்... ஏன்னா மக்கள் எல்லாரும் லூசாட்டம் அலைறாங்களாம்... இத யாரோ ஒருத்தரு சொன்னா... மக்கள் என்னமா கை தட்டுறாங்க தெரியுமா... அமெரிக்காவில ஒரு வயசுக் குழந்தை கூட இங்கிலீசு பேசுதுப்பான்னு சொன்னாக் கை தட்டுற ரேஞ்சுக்கு... 

இங்க மனுஷன்... மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்துட்டு... முடியல... ரொம்ப ஜாஸ்தின்னா... ஓடிப் போய்... இப்டிக் கஷ்டமா இருக்குதுபா... என்ன பண்ண சொல்லுன்னு கேக்கறதுக்கும்... ஒரு குழந்தை இறந்து போச்சுன்னா... மனசு ஒடிஞ்சு செத்துப் போகாம போய்ச் சொல்லி அழுறதுக்கும்... வீட்டில பிக்கல் பிடுங்கல் ஜாஸ்தி ஆயிடிச்சின்னா அதப் பகிர்ந்துக்கிறதுக்கும் கூட... மனநல வைத்தியர் கிட்டதான் போறாங்க... ரொம்பச் சர்வ சாதாரணமாப் போறாங்க... சக மனுஷனப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கிறதால போறாங்க.. நம்மாளுங்கதான் சைக்கியாரிஸ்ட்னு பேரு கேட்டாலே அலர்றாங்க... 

பைத்தியம்னா தலையைச் சொறிஞ்சுக்கிட்டு... சட்டையைக் கிழிச்சுக்கிட்டு இளிக்கறதயும்... அய்யோ ஆள விடுங்கடான்னு மத்த நார்மல்ன்னு சொல்லிக்கிட்டிருக்கிற லூசுங்க கவுண்டமணி ரேஞ்சுக்குப் பாய்ஞ்சுக்கிட்டு ஓடறதயுமே மனக்கண்ணில வச்சுக்கிட்டிருக்கிற... அறிவாளிங்களால அதுக்கு மேல என்ன பண்ண முடியும்.. 

அட மனநல மருத்துவமனை மட்டுமாங்க இருக்கு இங்க..?! எங்க போனாலும் கை கால் முடியாம... சக்கர நாற்காலில இருக்கிறவங்களுக்கு... பார்க்கிங்க்ல அவங்களுக்கு வசதியா பார்க்கிங்க் இருக்கு.... பஸ்ல அவங்க ஏறி இறங்க வசதியா படிக்கு மேல சறுக்குற வழி இருக்கு... அத பஸ்ஸ விட்டு இறங்கி வந்து இழுத்து விடுற ட்ரைவர்... மனுஷன் இருக்கான்... ஹாஸ்பிட்டல்ல இருந்து... ரெஸ்ட்டாரண்ட் வரைக்கும்... அவங்களுக்கு டாய்லெட் இருக்கு... முக்கியமான இடங்கள்ல எல்லாம்... அவங்க ஏறி இறங்க வசதியா நிறைய வசதி இருக்கு... 

ஏன் அதுக்கும் சொல்றதுதானே..?! அங்க ஊனமுற்றவர்களுக்கான கக்கூஸ் ஜாஸ்தியா இருக்குய்யா.... அங்க இருக்கிறவங்க எல்லாம் ஊனமுற்றவங்கன்னு..?! 

திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... ஊனமுற்றவங்கள வச்சுக் காமெடி பண்ணிச் சிரிக்கிற புறம்போக்குங்க.... மத்தவன் நாட்டில ஆஸ்பத்திரி ஜாஸ்தியா இருக்கு... அதனால அவங்க எல்லாம் நோயாளிங்கன்னு பேசற எளவாளிங்க... 

இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டு... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!... 


Tuesday, February 14, 2012

எல்லைக்கு அப்பால்

மண்ணினுள் சுழியோடுவதொன்றும்
பெரிய வித்தையல்ல 

இதைச் சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை

கடவுளரை 
உங்களின் பால் எடை மற்றும் உயரத்தை வைத்து
அளவிடுவது போல் 

தண்ணீரை வைத்துக்கொண்டு
கண்களால் மண்ணைக் குடைகிறீர்கள் 


அவசரப்பட்டு உங்களை - நான்
குற்றம் சாட்டுவதாக எண்ணிக் கொள்கிறீர்கள்

இதைக் கூட என் முன் தீர்மானமாகவே
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் 

நான் மீனுருவில் இருப்பதை
நீங்கள் நன்றாகவே அறிந்திருந்தாலும் 

மண்ணின் அனுபவத்தை வைத்து
தண்ணீரைத் துழாவிக் கொண்டிருக்கிறாய்
என்று விரலை என் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்