சாலையைத் தொலைத்துவிட்டு
அந்த மண்சாலையின் திருப்பத்தில்எதிர்ப்பட்டு
இணைந்து நடந்தோம்
எங்கே என்ற கேள்வி எதிரில் வந்தது
தலையசைத்துக் கடந்தோம்
சாலைகள் பரிச்சயமாகத் தோன்றின
எப்படி என்ற கேள்வி சேர்ந்து கொண்டது
தொலைத்திருந்தது சாலை அல்ல
இப்படியாகத்தான் நம்மைக் கண்டெடுத்தோம்
எப்படிக்கு விடைகொடுத்துத் திரும்பினோம்
மீண்டும் ஒரு சாலை ஆரம்பித்திருந்தது