உன்னை
புனிதர் புடை சூழ்ந்திருந்தது
திடுதிப்பென்று
பண்டோராக் கிரகத்தில் சஞ்சரித்திருக்கிறாய்
இன்னும் சற்று நொடிகளில்
பலத்த சில்லறைத் தட்டுப்பாடு வரும்
அச்சோ என்று மழை பெய்யும்
நடு வீதியில் நனைந்து கொண்டிருப்பாய்
அசரீரிக்குச் சொந்தமானவர்கள்
முன்னிலை படர்க்கை இடத்து
முக்காலமும் அறிந்திருக்கிறார்கள்
காற்பெருவிரல் நுனி வரை தன்னுணர்வுடன்
பூமியில் நடந்து கொண்டிருந்தேன்
இந்த நொடி தவிர
காலம் பற்றிய ப்ரக்ஞை எதுவுமில்லை
தன்மை தவிர
எனக்கு
வேறொன்றும் வேண்டா
1 ஊக்கம்::
/காற்பெருவிரல் நுனி வரை தன்னுணர்வுடன்பூமியில் நடந்து கொண்டிருந்தேன்
இந்த நொடி தவிர காலம் பற்றிய ப்ரக்ஞை எதுவுமில்லை
தன்மை தவிரஎனக்கு வேறொன்றும் வேண்டா //
திரும்பத் திரும்ப இந்த வரி படிக்கச் சொல்றது. படிக்கறப்பவே அந்த தன்னம்பிக்கை அமேஸிங். லவ் திஸ். ஆஸ் யூஷுவல் தலைப்பும்:))
Post a Comment