சற்றுப் பொறுங்கள்
ஏன் இத்தனை கத்திகள்
அறுவை இதற்கு அவசியமற்றது
ஈரூற்றுக் குருதி
பெருமடங்கு வலி
இருக்கட்டும்
தாயும் சேயும் நலம் என்பது
ஈருடல்களுக்கானது
நீண்டு கொண்டே செல்லும்
இப் பிரசவம்
நிகழ்ந்துதான் ஆக வேண்டும்
ஒற்றையாக
3 ஊக்கம்::
/தாயும் சேயும் நலம் என்பது ஈருடல்களுக்கானது
நீண்டு கொண்டே செல்லும் இப் பிரசவம் நிகழ்ந்துதான் ஆக வேண்டும்
ஒற்றையாக/
இதை விட கத்தி என்ன பெரிய காயம் செய்துவிடும்.
ம்ம்.
தனி
இந்தக் கவிதை, இது சொல்லும் வலி ஆம்! தனி!
நல்ல வரி(லி)கள்... வாழ்த்துக்கள்...
இவ்வளவு இரத்தம் சிந்திய பின்புமா?
கொஞ்சம் கண்டதை தின்று ரத்தம் ஊறிய பின்!!
Post a Comment