header photo

Sunday, July 15, 2012

தனி


சற்றுப் பொறுங்கள்
ஏன் இத்தனை கத்திகள்
அறுவை இதற்கு அவசியமற்றது

ஈரூற்றுக் குருதி
பெருமடங்கு வலி 
இருக்கட்டும்

தாயும் சேயும் நலம் என்பது
ஈருடல்களுக்கானது

நீண்டு கொண்டே செல்லும்
இப் பிரசவம்
நிகழ்ந்துதான் ஆக வேண்டும்

ஒற்றையாக

3 ஊக்கம்::

vasu balaji said...

/தாயும் சேயும் நலம் என்பது ஈருடல்களுக்கானது
நீண்டு கொண்டே செல்லும் இப் பிரசவம் நிகழ்ந்துதான் ஆக வேண்டும்
ஒற்றையாக/

இதை விட கத்தி என்ன பெரிய காயம் செய்துவிடும்.

ம்ம்.

தனி

இந்தக் கவிதை, இது சொல்லும் வலி ஆம்! தனி!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரி(லி)கள்... வாழ்த்துக்கள்...

vasan said...

இவ்வ‌ளவு இர‌த்த‌ம் சிந்திய‌ பின்புமா?
கொஞ்ச‌ம் க‌ண்ட‌தை தின்று ர‌த்த‌ம் ஊறிய‌ பின்!!