ஓயாது தட்டிக் கொண்டே இருந்தது
சாளரம் திறந்து
”என்ன?”
செல்லமாக அதட்டினேன்
முகத்தில் ”உப்”பென்று ஊதிவிட்டு
சற்று விலகிச் சென்று
வெறுமனே
பார்த்துக் கொண்டிருந்தது
குவளையிலிருந்த தேநீராக
மெல்லக்
காலியாகிக் கொண்டிருந்தது
வலி
மெது மெதுவே
எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
இதம் சொல்லிக் கொண்டிருந்த
என் மழை
4 ஊக்கம்::
/மெது மெதுவே எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தது இதம் சொல்லிக் கொண்டிருந்த என் மழை /
லவ்லி
தூறல் மழையான நாள்.
மழைவிட்டும் தூவானம் விடவில்லை
என்பவர்களுக்கல்ல இது
அழகான கவிதை. இப்பொது தான் மழையை பாடுபொருளாய்க் கொண்ட பிரிதொரு கவிதையை மற்றொரு வலைப்பூவில் வாசித்தேன். மழை ஒன்றுதான். ஆனால் ரசனை ததும்பும் கவிமனம் அதனை பார்க்கும், சிலாகிக்கும் விதங்கள் தான் எத்துணை எத்துணை... !
அன்பின் பிரியா,
அழகான வரிகள். இதமான மழைத்துளியில் சுகமாக நனைந்த அனுபவம்! நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
Post a Comment