header photo
Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Saturday, September 11, 2010

நீ பட்ட பாட்டினையறிகுவேன்..

இன்று கோபுரங்கள் சாய்க்கப்படும் நாளென்று விதிக்கப்பட்ட நாளோ?!  

சிகரம் பாரதியை நினைவு கூரும் முகமாக.....!!!! love mah bharathi... love sowmya..!!!
_________________________________________
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்-என்றன்
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை எண்ணித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவன் அடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல உன்னை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
__________________________________

பாட்டைக் கேட்டுத் தாளம் போடுவதற்கு இங்கே சொடுக்கவும்... 

_________________________________________