அன்று..
நிகழ்தகவு ஒன்று..
நிகழ்தகவு ஒன்று..
மழையொழுக்கின் பிளவுகளில்
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி
கனவுக் காற்றில் தடம் பதித்து
கன கற்றூண்களிடை பாவுகையில்
நனவு நிலம் பட்டெகிறிய துளியில்
பன்னீர் வாசனையுடன் உறங்கிய விடியல்
இன்று..
நிகழ்தகவு பூஜ்யம் புள்ளி ஐந்து..
நிகழ்தகவு பூஜ்யம் புள்ளி ஐந்து..
கற்றூணில் நெற்றி நெட்டித்
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில்
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்...