இரும்பிலிருந்து தோன்றும் துருவே
இரும்பிற்குச் சமாதியெழுப்பும்
சாக்கிய முனி செத்துச் சில நூறு திவசத்துக்கப்பால்
செரண்டிப்பில் தேரவாத பௌத்தத்தைப் போதிக்கிறார்..
குறுமுனி தாண்டவக்கோனின் திருமணத்தன்று
தென்திசை சென்றபோது சாக்கியமுனி பிறந்திருக்கவில்லை
எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்..
இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய
அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்..
சாக்கியமுனி சிலை வடிவிலாவது
குறுமுனியைச் சந்தித்து வருந்தியிருப்பாரா என்றால்..
அடையாளமற்றுத் துடைக்கப்பட்டிருக்கும்
அகஸ்திய ஸ்தாபனம் அமைதி காக்கிறது...!
_________________________