நறநறநற.. முடியலடா சாமி.. நானும் இலங்கைச் செய்தி படிக்கிறதில்லன்னு ஒரு தீர்மானத்தோட இருக்கப் பார்க்கிறேன், முடியல. என்னைச் சுற்றியுள்ள, தமிழ் ஆதரவாளர்கள் தொல்லை தாங்க முடியல. நேற்று அழகா, நகைச்சுவையா ஒரு கவிதை (நானே கவிதைனுதான் சொல்லிக்கிறதுதான், மத்தவங்க அபிப்பிராயம் எப்படின்னு இன்னும் கேக்கல) எழுதலாம்னு ஆரம்பிச்சா, ஒரு நண்பர் ச்சு கொட்டிக்கிட்டே வந்தவரு, என்ன கொடுமை எல்லாம் நடக்குதுன்னு ஆரம்பித்தார். வந்திச்சு பாருங்க ஒரு கோவம் "யோவ் மனுஷா கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துடப்டாதே, உடனே வந்துடுவீங்களே" வள்ளென்று எரிந்து விழுந்தேன். பாவம் மனுஷன் அரண்டு போயிட்டாரு. ஏதோ தப்புத்தான் பண்ணிட்டோம் போலன்னு மன்னிப்பு எல்லாம் கேட்டாரு.. சை-ன்னு ஆய்டுத்து.
சாவு விழுந்தா, அது பத்தி ஆயிரம் கேள்வி மத்தவங்களுக்கு. ஏன், எதுக்கு, எப்டி, எப்போ.. அது மட்டுமா.. அப்டி இருந்திருக்கலாம், இப்டி இருந்திருக்கலாம்.. இதில திருப்தியாளர்கள், குரூர திருப்தியாளர்கள் முட்டைல முடி பிடுங்குவாங்க பார்க்கணும் அட அட, அத விட எதிர்காலம் பத்தி ரொம்ப நீட்டி முழக்குவாங்க பாருங்கோ, என்னமோ இனிமே அவங்கதான் எல்லா பொறுப்பும் ஏத்துக்கிட்டு வாழ் நாள் பூரா கஞ்சி ஊத்தப்போற மாதிரி. சாவு வீட்ல இருக்கிறவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனோட வலி.
இன்னைக்கும் எத்தன நாளைக்குத்தான், தலைல கை வச்சிண்டு உக்காந்திருக்கிறது, எங்கயாவாது புதுசா படம் வெளியிட்டிருக்காங்களா பார்க்கலாம்னு ஆர்வமா தேடினா.. ஒரு படம்.. villain to hero transformation.. ஐக்கிய இலங்கையின் நாயகன் அவர்கள் பற்றி ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து ஒரு அருமையான பாட்டு. (அந்தத் தமிழுக்கு நான் பொறுப்பில்ல) படம் ஆரம்பிக்க முன்னாடியே நான் வெளில வந்துட்டேன்.
சரி, இடுகைப் பக்கம் போகலாம்னா இடைல ஒரு செய்தி "விடுதலைப் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் ஆரம்பிச்சிட்டாங்களாம்" ஹாஹாஹா... அங்க அடைச்சு வச்சிருக்கிற பாதித் தமிழனையும், மிச்சம் மீதி வெளில இருக்கிற கிழடு கெட்ட, குஞ்சு குழுவான்களையும் ஒவ்வொரு நாளும் கேக்க ஆள் இல்லாத முன்னைய நாட்களைப் போல் விதம் விதமா கொல்றதுக்கு, கொல்லப் போறதுக்கு பேரு இது. முற்று முழுதா ஒரே நாள்ல கொல்றதுக்கு தெனாவெட்டும், பலமும், பக்கபலமும் இருக்கலாம், ஊத்தி அழிக்க அமிலம் இருப்பில இருக்கணுமா இல்லையா?!
அது பக்கத்தில ஒரு கொசுறு.. கோத்தவுக்கும், மஹிந்த ராஜாவுக்கும் கலாநிதி பட்டமாம். மேல உள்ள காணொளிக்காக இருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அட எதுக்கா இருந்தா என்ன, என்னோட தோள்ல நானே தட்டி, இடது கையால சர்க்கரை எடுத்து வலது கைல கொடுத்து, அத என்னோட வாயில போட்டுக்கிறதுக்கு பேரு பட்டம்னா நானும் நிறைய வாட்டி வாங்கி இருக்கேன்.
தலைப்பைப் பார்த்துக் குழம்பறவங்களுக்கு வால்னு குறிப்பிட்டது அடியேளைத்தான். லாஜிக் தேடறவங்களுக்கு, அப்டி ஏதும் அங்க இல்லைங்க! அட அது எங்கதான் இருக்கு சொல்லுங்க..?!
அண்ணாமலைக்கு அரோகரா..
ஐக்கிய இலங்கைக்கு அரோகரா..
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..
தமிழனுக்கு திண்டாட்டம்..
இப்டி கூமுட்டத்தனமா, உணர்ச்சிவசப்பட்டு எழுதறதெல்லாம் எழுத்தில்லைனு சில மேதாவிகள் விசனப்படலாம். என்னங்க பண்றது மரக்கட்டையா பிறந்திருக்கலாம்னு எனக்கும் ஆதங்கம் ரொம்ப நாளா.
சாவு விழுந்தா, அது பத்தி ஆயிரம் கேள்வி மத்தவங்களுக்கு. ஏன், எதுக்கு, எப்டி, எப்போ.. அது மட்டுமா.. அப்டி இருந்திருக்கலாம், இப்டி இருந்திருக்கலாம்.. இதில திருப்தியாளர்கள், குரூர திருப்தியாளர்கள் முட்டைல முடி பிடுங்குவாங்க பார்க்கணும் அட அட, அத விட எதிர்காலம் பத்தி ரொம்ப நீட்டி முழக்குவாங்க பாருங்கோ, என்னமோ இனிமே அவங்கதான் எல்லா பொறுப்பும் ஏத்துக்கிட்டு வாழ் நாள் பூரா கஞ்சி ஊத்தப்போற மாதிரி. சாவு வீட்ல இருக்கிறவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனோட வலி.
இன்னைக்கும் எத்தன நாளைக்குத்தான், தலைல கை வச்சிண்டு உக்காந்திருக்கிறது, எங்கயாவாது புதுசா படம் வெளியிட்டிருக்காங்களா பார்க்கலாம்னு ஆர்வமா தேடினா.. ஒரு படம்.. villain to hero transformation.. ஐக்கிய இலங்கையின் நாயகன் அவர்கள் பற்றி ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து ஒரு அருமையான பாட்டு. (அந்தத் தமிழுக்கு நான் பொறுப்பில்ல) படம் ஆரம்பிக்க முன்னாடியே நான் வெளில வந்துட்டேன்.
சரி, இடுகைப் பக்கம் போகலாம்னா இடைல ஒரு செய்தி "விடுதலைப் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் ஆரம்பிச்சிட்டாங்களாம்" ஹாஹாஹா... அங்க அடைச்சு வச்சிருக்கிற பாதித் தமிழனையும், மிச்சம் மீதி வெளில இருக்கிற கிழடு கெட்ட, குஞ்சு குழுவான்களையும் ஒவ்வொரு நாளும் கேக்க ஆள் இல்லாத முன்னைய நாட்களைப் போல் விதம் விதமா கொல்றதுக்கு, கொல்லப் போறதுக்கு பேரு இது. முற்று முழுதா ஒரே நாள்ல கொல்றதுக்கு தெனாவெட்டும், பலமும், பக்கபலமும் இருக்கலாம், ஊத்தி அழிக்க அமிலம் இருப்பில இருக்கணுமா இல்லையா?!
அது பக்கத்தில ஒரு கொசுறு.. கோத்தவுக்கும், மஹிந்த ராஜாவுக்கும் கலாநிதி பட்டமாம். மேல உள்ள காணொளிக்காக இருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அட எதுக்கா இருந்தா என்ன, என்னோட தோள்ல நானே தட்டி, இடது கையால சர்க்கரை எடுத்து வலது கைல கொடுத்து, அத என்னோட வாயில போட்டுக்கிறதுக்கு பேரு பட்டம்னா நானும் நிறைய வாட்டி வாங்கி இருக்கேன்.
தலைப்பைப் பார்த்துக் குழம்பறவங்களுக்கு வால்னு குறிப்பிட்டது அடியேளைத்தான். லாஜிக் தேடறவங்களுக்கு, அப்டி ஏதும் அங்க இல்லைங்க! அட அது எங்கதான் இருக்கு சொல்லுங்க..?!
அண்ணாமலைக்கு அரோகரா..
ஐக்கிய இலங்கைக்கு அரோகரா..
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..
தமிழனுக்கு திண்டாட்டம்..
இப்டி கூமுட்டத்தனமா, உணர்ச்சிவசப்பட்டு எழுதறதெல்லாம் எழுத்தில்லைனு சில மேதாவிகள் விசனப்படலாம். என்னங்க பண்றது மரக்கட்டையா பிறந்திருக்கலாம்னு எனக்கும் ஆதங்கம் ரொம்ப நாளா.
19 ஊக்கம்::
தமிழனுக்கு வேட்டு
தலைவனுக்கு ஓட்டு
/உணர்ச்சிவசப்பட்டு எழுதறதெல்லாம் எழுத்தில்லைனு சில மேதாவிகள் விசனப்படலாம்./
உணர்ச்சி வசப்படாத பாரதி நல்லாவா இருக்கும். பரம விசிறி இப்படித்தாங்க இருக்கணும். மன்னிக்கணும். சுட்டிய பார்க்க முடியல. தமிழனை மட்டுமில்ல தமிழையே கொல்லுறேனு பண்றாங்களா? ஆயுபோவா இல்ல. நாசமா போவன்னு கத்திட்டேன்.
//பாலா... said...
ஆயுபோவா இல்ல. நாசமா போவன்னு கத்திட்டேன் //
ஷ்ஷ்ஷ்.. மெதுவா கத்துங்க.. ஐக்கிய இலங்கைல இருக்கிறவங்களுக்கு மட்டுமில்ல.. வெளில இருக்கிறவங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்காங்க தெரியுமில்ல.. மதனோட மனிதனுக்குள் ஒரு மிருகம் படிக்கிறப்பவே.. யப்பேன்னு இருக்கும்.. அந்த வரலாற்றில எல்லாம் இல்லாத நிறையக் கொடுமைகள் ஐ.இ ல காணலாம்.. ஜாக்கிரத அப்பு.. மனிதர் அறிந்து கொள்ள இது மனிதக்கொடுமை அல்ல.. அதையும் தாண்டிக் கொடூரமானது..
/மனிதர் அறிந்து கொள்ள இது மனிதக்கொடுமை அல்ல.. அதையும் தாண்டிக் கொடூரமானது../
/ஷ்ஷ்ஷ்.. மெதுவா கத்துங்க./
விசிறியோட பரம விசிரிங்க. பயப்பட மாட்டன்.
விசிறி*
ஏன் சார்.. AC ஒத்துக்காதா..
தலைப்பை பார்த்துவிட்டு நகைச்சுவையா ஏதோ இருக்கும்னு வந்தேன். அனல் பறக்குது.
"அது பக்கத்தில ஒரு கொசுறு.. கோத்தவுக்கும், மஹிந்த ராஜாவுக்கும் கலாநிதி பட்டமாம். மேல உள்ள காணொளிக்காக இருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அட எதுக்கா இருந்தா என்ன, என்னோட தோள்ல நானே தட்டி, இடது கையால சர்க்கரை எடுத்து வலது கைல கொடுத்து, அத என்னோட வாயில போட்டுக்கிறதுக்கு பேரு பட்டம்னா நானும் நிறைய வாட்டி வாங்கி இருக்கேன்"
இத முடிஞ்சா சிங்களத்துல மொழிமாற்றம் பண்ணி அந்த ரெண்டு நாதாரிங்களுக்கும் அனுப்பி வைங்க . அப்பயாவது நாக்க புடிங்கிகிட்டு அந்த ரெண்டு பேரும் சாகட்டும்.
இந்த பதிவு மூலம் லகலகலகலகப்ரியா ஆயிட்டீங்க. அத்தனை கோவம்
என்னைச் சுற்றியுள்ள, தமிழ் ஆதரவாளர்கள் தொல்லை தாங்க முடியல. நேற்று அழகா, நகைச்சுவையா ஒரு கவிதை (நானே கவிதைனுதான் சொல்லிக்கிறதுதான், மத்தவங்க அபிப்பிராயம் எப்படின்னு இன்னும் கேக்கல) எழுதலாம்னு ஆரம்பிச்சா,
எல்லாம் அப்படித்தான் இப்போ எழுதிட்டுஇருக்கோம்
//S.A. நவாஸுதீன் said...
அத்தனை கோவம்//
அது மட்டும்தான் இருப்பில எஞ்சியிருக்கு..!
//இத முடிஞ்சா சிங்களத்துல மொழிமாற்றம் பண்ணி அந்த ரெண்டு நாதாரிங்களுக்கும் அனுப்பி வைங்க . அப்பயாவது நாக்க புடிங்கிகிட்டு அந்த ரெண்டு பேரும் சாகட்டும்//
போங்க.. ஜோக் அடிக்காதீங்க.. அவ்ளோ தூரம் சூடு சுரணை இருந்தா இவங்க இந்நேரம் 100000 வாட்டி நாக்கு பிடுங்கி இருக்கணும்..
//sakthi said...
எல்லாம் அப்படித்தான் இப்போ எழுதிட்டுஇருக்கோம் //
அய்ய்.. அப்போ நானும் நல்லா எழுதுறேன்னு சொல்றீங்களா.. நேரா.. உங்கள் எல்லார் மாதிரி நானும் நல்லா எழுதுறேன்னு பாராட்டாம இவ்ளோ சுத்தி வளைக்கிறீங்க.. நீங்க சுத்த மோசம் போங்க.. =)
ரொம்ப நாள் உங்கள் பேரைத் தவிர உங்கள் வலைப்பக்கத்தில் கலகலப்பே இல்லை. ஆனால் பரவாயில்லை, கொஞ்சம் மாற்றம் உள்ளது. மறக்கவேண்டாம் என்று சொல்லவில்லை, கொடுமையை நினைக்காதீர்கள் (யோவ், நீ என்னதான் சொல்லவர்ர??? அப்படின்னு நீங்க சொல்றது நல்லாவே கேட்குது,..)
//jothi said...
மறக்கவேண்டாம் என்று சொல்லவில்லை, கொடுமையை நினைக்காதீர்கள் (யோவ், நீ என்னதான் சொல்லவர்ர??? அப்படின்னு நீங்க சொல்றது நல்லாவே கேட்குது,..) //
இல்ல ஒரு சின்ன திருத்தம்.. "யோவ்.. நினைக்காம இருக்க விடுறாங்க இல்லை"னுதான் சொல்லிண்டிருக்கேன்..உங்களுக்கு சரியா கேக்கல போல.. =))
//என்னோட தோள்ல நானே தட்டி, இடது கையால சர்க்கரை எடுத்து வலது கைல கொடுத்து, அத என்னோட வாயில போட்டுக்கிறதுக்கு பேரு பட்டம்னா நானும் நிறைய வாட்டி வாங்கி இருக்கேன்//
இது புதுசா இருக்கே!! கலகலப்பு எதிர்பார்த்து வந்தேங்க... ஆனா பரவாயில்லை உங்க உணர்ச்சிகள புரிஞ்சுக்க முடியுது.
வோட்டும் போட்டாச்சு :)
நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க..
www.senthilinpakkangal.blogspot.com
அண்ணாமலைக்கு அரோகரா..
ஐக்கிய இலங்கைக்கு அரோகரா..
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..
தமிழனுக்கு திண்டாட்டம்..
ஆனாலும் நாங்க விடமாட்டோம்!
கலகல பிரியா.. நீங்க கலக்கல் பிரியா
நல்ல ஆதங்கம், ஆக்ரோசமா எழுதியிருக்கீங்க
//S Senthilvelan said...
இது புதுசா இருக்கே!!//
எது சர்க்கரை வாயில போட்டுக்கிறதா?
//கலகலப்பு எதிர்பார்த்து வந்தேங்க... ஆனா பரவாயில்லை//
மன்னிச்சிடுங்க.. கலகலன்னு ரெண்டு இடுகை போடணும்னுதான் இப்டி பேரே வச்சது.. நினைக்கிறதெல்லாம் உடனே நடக்காதுங்களே.. பார்க்கலாம்..
//வோட்டும் போட்டாச்சு :)//
ரொம்ப நன்றிங்க..
//
நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க..//
அழைக்காமலே அதிரடியா வீட்டுக்குள்ள நுழையற ஆளுங்க நாம.. இதோ வந்துட்டோம்ல..
//கலையரசன் said...
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..
தமிழனுக்கு திண்டாட்டம்..
ஆனாலும் நாங்க விடமாட்டோம்!
கலகல பிரியா.. நீங்க கலக்கல் பிரியா//
நன்றிங்க கலையரசன்..
//ஆ.ஞானசேகரன் said...
நல்ல ஆதங்கம், ஆக்ரோசமா எழுதியிருக்கீங்க//
இதுவா...? :-ss... அப்போ நிஜம்மாவே கோபமா எழுதினா என்ன ஆகும்..
// "யோவ்.. நினைக்காம இருக்க விடுறாங்க இல்லை"னுதான் சொல்லிண்டிருக்கேன்..உங்களுக்கு சரியா கேக்கல போல.. =)) //
அடக்கடவுளே, ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி துப்புறுங்களே??? சரி விடுங்க இப்படி துப்பி துப்பியே நாம் கருப்பாய்ட்டோம்,..அது நமக்கு நல்ல நோய் எதிர்ப்புத்தன்மையை தருகிறது,..
//அழைக்காமலே அதிரடியா வீட்டுக்குள்ள நுழையற ஆளுங்க நாம.. இதோ வந்துட்டோம்ல.. //
ம்ம்ம் அதையும் பார்க்கலாம்,....இப்படியே எத்தனை தடவை ஏமாத்துவீங்கன்னு
//ம்ம்ம் அதையும் பார்க்கலாம்,....இப்படியே எத்தனை தடவை ஏமாத்துவீங்கன்னு//
நீங்களே இப்டி சொன்னா எப்டி.. நாம எப்போ வருவோம்.. எப்படி வருவோம்னு தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவோம்...
Post a Comment