இப்போல்லாம் மனிதர்களுக்கு என்ன வியாதி எப்போ வருமென்று சொல்ல முடியவில்லை. என்னுடைய வழிகாட்டியாகவும், நண்பியாகவும் இருந்த அலுவலகத் தோழி சரியாக ஒரு வருடத்திற்கு முன் திடீரென்று தொலைந்து போனாள். எப்பொழுதும் அவள் உதட்டில் உறைந்திருக்கும் மாறாப் புன்னகை அவள்பால் அனைவரையும் ஈர்த்திருந்தது. தடுப்பூசி போடப் போன இடத்தில், இதயம் கிழிந்திருந்ததைக் கண்டு பிடித்தார்கள், அந்தக் கண்டுபிடிப்பின் சில மணித் துளிகளிலேயே கத்தியின்றி, இரத்தமின்றி அவள் உயிர் கரைந்து விட்டது.
இப்போ பன்னிக் காய்ச்சல் என்று ஒன்று மனிதனைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. எல்லா வியாதியை விடவும் பயம் என்ற வியாதி ரொம்பக் கொடுமையானது. தெனாலி என்ற ஒரு திரைப்படத்தில் கமல் சொன்ன பயங்கள் தவிர்ந்த சொல்லாத நிறையப் பயங்களுக்கும் சொந்தக்காரி நான். ஆனால் மரணபயம் என்பது ஏனோ என்னிடத்தில் இல்லை. மரணம் வரும் வழி பற்றிய அந்தச் சில வினாடிகளோ, சில வருடங்களோ அதற்குத் தயாராகும் காலகட்டம்தான் பயமளிக்கும் விடயம். இந்த விடயத்தில் எனது நண்பி புண்ணியாத்மா. என்னுடைய தாத்தாவின் மரணமும் இவ்வாறு ஒரு சில வினாடிகளில் சம்பவித்த ஒன்றே!
இதை எழுத ஆரம்பித்து இரு பத்திகள் முடிக்கு முன்பாகவே நான் , எனது என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லி விட்டேன். இந்த நான் என்பது என்ன? எனது உடலா? மனதா? இரண்டும் இல்லை என்று வேத, உபநிடதங்கள் சொல்கின்றன. இதில் யாருக்கு என்ன மாற்றுக் கருத்து இருப்பினும், எனக்கு எந்த வித மாற்று எண்ணமும் இல்லை. இதை ஏன் சொல்றேன்னா நான் என்ற அது அப்படியேதான் இருக்கிறது. பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் மனதும், அதன் மூலம் உடலும் , உடலின் உபாதைகள் மூலம் மனதும் மாறி மாறி வியாதியின் பிடியில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய உலகில் வியாதியே இல்லாத மனிதர்கள் எங்கயாவது இருப்பார்களா தெரியவில்லை. சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு, அமைதியாகத் தூங்கி, அதிகாலையில் எழுந்து, அளவாக உண்டு, அவன் கடன் செய்து கொண்டிருக்கும் கிராமத்து மனிதர் யாராவது அவ்வாறிருக்க வாய்ப்புண்டு.
இந்த வியாதி என்னையும் விட்டு வைக்கல. வியாதிகளுக்கு பெயர் வைக்கிற அழகே தனி. இதனாலேயே சினிமாவில் நகைச்சுவை என்ற பேரில் எடுத்து விடப்படும் "ஜிங்காலகடிஜிரிகிடிபோபியா" என்று சொன்னால், இது உண்மையாகவே இருக்கும் வியாதியா என்று ஒரு நொடி தோன்றும். அப்படி ஒரு பெயர் சொல்லி, மண்டை ஓட்டைத் திறந்து மூளை இருக்கா என்று பார்க்க ஆசைப் பட்டாங்க. எங்க நம்ம குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று நான் மறுத்து விட்டேன்.
அவ்வப்போது வந்த வியாதி விஸ்வரூபம் எடுக்காதிருக்கவும், வேறு வியாதி வராதிருக்கப் பாடுபடும் முயற்சியிலும் வைத்திய ஆலோசனை பெறுவதுண்டு. நேற்று தலைமை வைத்தியர் என்னிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். உடல், மனம், நரம்பு மண்டலம், மூளை என்று பேசிக் கொண்டிருந்த அவர் நான் என்ற அகம் பற்றிச் சிறிய விளக்கம் கொடுத்தார். "அகம் பிரம்மாஸ்மி", நான் கடவுள் என்பதே அதன் சாராம்சம். நாம் தொடர்ச்சியாக எதைப் பற்றியோ எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒரு எண்ணத் தொடர்பு அறுந்து, இன்னொன்றாக இந்தச் செயல்த் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போ, இங்கே என்கிற நிகழ்காலத்தை மறந்து விட்டு, கடந்த காலம், எதிர் காலம் என்று நம் எண்ண அலைகள் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருக்கின்றன. எண்ணத்தை முழுதாகக் கடிவாளமிட்டு, அகத்தை நாம் வெளியிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் சூனிய நிலை சற்றுக் கடினமானது. ஆனால் நம் எண்ண அலைகளைக் கட்டுப் படுத்தும் ஆற்றல் நமக்கு இருக்கிறது. அது ஒரு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், நான் எனப்படும் அகத்தைச் சற்றுக் கவனித்தால் பல தொல்லைகள் அற்றுப் போகும்.
ஜக்கி வாசுதேவ் என்ற மாமேதை நான் நேசிக்கும் ஒரு மனிதம். அதே போன்று வேறு சில எழுத்தாளர்களும் இவரைப் போன்று மனதில் சில பாதச் சுவடுகளை உண்டாக்கியிருக்கிறார்கள். என்னுடைய தலைமை வைத்தியரை இந்த வரிசையில் நேரிலிருந்து போதிக்கும் குருவாகக் கண்டேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் மனது இலகுவாகி, மனதில் தங்கிவிட்ட சில, பல குப்பைகளில் சில தூர்களை அகற்ற முடிந்தது. இந்த நொடி மனது மிகவும் நெகிழ்ந்திருக்கிறது, அகம் சற்றுத் திருப்தியாக இருக்கிறது. இதை, இங்கே இப்போ முடிச்சுக்கிறேன். எதிர்காலம், நிகழ்காலம் ஆகும்போது பார்க்கலாம்.. =)
இப்போ பன்னிக் காய்ச்சல் என்று ஒன்று மனிதனைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. எல்லா வியாதியை விடவும் பயம் என்ற வியாதி ரொம்பக் கொடுமையானது. தெனாலி என்ற ஒரு திரைப்படத்தில் கமல் சொன்ன பயங்கள் தவிர்ந்த சொல்லாத நிறையப் பயங்களுக்கும் சொந்தக்காரி நான். ஆனால் மரணபயம் என்பது ஏனோ என்னிடத்தில் இல்லை. மரணம் வரும் வழி பற்றிய அந்தச் சில வினாடிகளோ, சில வருடங்களோ அதற்குத் தயாராகும் காலகட்டம்தான் பயமளிக்கும் விடயம். இந்த விடயத்தில் எனது நண்பி புண்ணியாத்மா. என்னுடைய தாத்தாவின் மரணமும் இவ்வாறு ஒரு சில வினாடிகளில் சம்பவித்த ஒன்றே!
இதை எழுத ஆரம்பித்து இரு பத்திகள் முடிக்கு முன்பாகவே நான் , எனது என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லி விட்டேன். இந்த நான் என்பது என்ன? எனது உடலா? மனதா? இரண்டும் இல்லை என்று வேத, உபநிடதங்கள் சொல்கின்றன. இதில் யாருக்கு என்ன மாற்றுக் கருத்து இருப்பினும், எனக்கு எந்த வித மாற்று எண்ணமும் இல்லை. இதை ஏன் சொல்றேன்னா நான் என்ற அது அப்படியேதான் இருக்கிறது. பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் மனதும், அதன் மூலம் உடலும் , உடலின் உபாதைகள் மூலம் மனதும் மாறி மாறி வியாதியின் பிடியில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய உலகில் வியாதியே இல்லாத மனிதர்கள் எங்கயாவது இருப்பார்களா தெரியவில்லை. சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு, அமைதியாகத் தூங்கி, அதிகாலையில் எழுந்து, அளவாக உண்டு, அவன் கடன் செய்து கொண்டிருக்கும் கிராமத்து மனிதர் யாராவது அவ்வாறிருக்க வாய்ப்புண்டு.
இந்த வியாதி என்னையும் விட்டு வைக்கல. வியாதிகளுக்கு பெயர் வைக்கிற அழகே தனி. இதனாலேயே சினிமாவில் நகைச்சுவை என்ற பேரில் எடுத்து விடப்படும் "ஜிங்காலகடிஜிரிகிடிபோபியா" என்று சொன்னால், இது உண்மையாகவே இருக்கும் வியாதியா என்று ஒரு நொடி தோன்றும். அப்படி ஒரு பெயர் சொல்லி, மண்டை ஓட்டைத் திறந்து மூளை இருக்கா என்று பார்க்க ஆசைப் பட்டாங்க. எங்க நம்ம குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று நான் மறுத்து விட்டேன்.
அவ்வப்போது வந்த வியாதி விஸ்வரூபம் எடுக்காதிருக்கவும், வேறு வியாதி வராதிருக்கப் பாடுபடும் முயற்சியிலும் வைத்திய ஆலோசனை பெறுவதுண்டு. நேற்று தலைமை வைத்தியர் என்னிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். உடல், மனம், நரம்பு மண்டலம், மூளை என்று பேசிக் கொண்டிருந்த அவர் நான் என்ற அகம் பற்றிச் சிறிய விளக்கம் கொடுத்தார். "அகம் பிரம்மாஸ்மி", நான் கடவுள் என்பதே அதன் சாராம்சம். நாம் தொடர்ச்சியாக எதைப் பற்றியோ எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒரு எண்ணத் தொடர்பு அறுந்து, இன்னொன்றாக இந்தச் செயல்த் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போ, இங்கே என்கிற நிகழ்காலத்தை மறந்து விட்டு, கடந்த காலம், எதிர் காலம் என்று நம் எண்ண அலைகள் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருக்கின்றன. எண்ணத்தை முழுதாகக் கடிவாளமிட்டு, அகத்தை நாம் வெளியிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் சூனிய நிலை சற்றுக் கடினமானது. ஆனால் நம் எண்ண அலைகளைக் கட்டுப் படுத்தும் ஆற்றல் நமக்கு இருக்கிறது. அது ஒரு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், நான் எனப்படும் அகத்தைச் சற்றுக் கவனித்தால் பல தொல்லைகள் அற்றுப் போகும்.
ஜக்கி வாசுதேவ் என்ற மாமேதை நான் நேசிக்கும் ஒரு மனிதம். அதே போன்று வேறு சில எழுத்தாளர்களும் இவரைப் போன்று மனதில் சில பாதச் சுவடுகளை உண்டாக்கியிருக்கிறார்கள். என்னுடைய தலைமை வைத்தியரை இந்த வரிசையில் நேரிலிருந்து போதிக்கும் குருவாகக் கண்டேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் மனது இலகுவாகி, மனதில் தங்கிவிட்ட சில, பல குப்பைகளில் சில தூர்களை அகற்ற முடிந்தது. இந்த நொடி மனது மிகவும் நெகிழ்ந்திருக்கிறது, அகம் சற்றுத் திருப்தியாக இருக்கிறது. இதை, இங்கே இப்போ முடிச்சுக்கிறேன். எதிர்காலம், நிகழ்காலம் ஆகும்போது பார்க்கலாம்.. =)
21 ஊக்கம்::
Format pannuvathil konjam probs.. appuram paarthukkiren.. mannichukkunga..
ஆணி கொஞ்சம் ஜாஸ்தி. கொஞ்சம் நேரம் கழித்து வந்து படிக்கிறேன்
நல்ல பதிவு. ஆனா என்ன ஆச்சு இப்படி ஞானி மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டிங்க,..மெய்ப் பொருள் காண்பதறிவு
கலகலப்பாகவே பல விசயங்களைக் குறித்து மிகவும் அழகாக எழுதப்பட்ட பதிவு.
விதி யாரை விட்டது என வரவேற்பு மிகவும் இரசிக்க வைத்தது. ஹா ஹா!
மகாகவி பாரதியாரின் 'சென்றதினி மீளாது மூடரே' எனும் கவிதையை அறிந்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். மனதை இலேசாக வைக்க நினைத்தே பலர் தங்களை கடினப்படுத்திக் கொள்கிறார்கள்.
கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஒன்று 'மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா' என்று இருக்கும்.
பல நோய்களுக்கு 'மன அழுத்தம்' ஒரு காரணம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
கலகலப்பாகவே இருங்கள், காய்ச்சல் பறந்துவிடும், அதேவேளையில் மருத்துவரை அணுகவும் தவறிவிடாதீர்கள் என அறிவுறுத்தும் நல்லதொரு பதிவும் கூட.
மிக்க நன்றி சகோதரி.
நம்ம கடையாண்டே கொஞ்சம் எட்டி பாருங்களேன்....
//S.A. நவாஸுதீன் said...//
அது சரி..
//jothi said...//
அட நீங்க வேற.. ஏதோ தோணிச்சு.. எழுதினேன்.. நம்மளுக்கும் ஞானத்துக்கும் ரொம்ப தூரமுங்கோ.. (அவர் எங்க இருக்கார், நீங்க எங்க இருக்கீங்கன்னு எல்லாம் இடக்கு முடக்கா கேள்வி கேக்கப்டாது)
//வெ.இராதாகிருஷ்ணன் said...//
வாங்க இராதாகிருஷ்ணன்! உங்களையும் விதி விடலையா..? சென்றதினி மீளாது அப்படிங்கிறத நம்ம பசங்க போன பஸ்சுக்கு கை காண்பிச்சு என்ன புண்ணியம் அப்படிம்பாங்க..
பின்னூட்டத்திற்கு நன்றி =)
//நையாண்டி நைனா said...//
நீங்க எப்போல இருந்து சந்திரமுகன் ஆனீங்க..
நல்லா எழுதிருக்கீங்க!!
நன்னாயிருக்கு.......
புரியுது.... ஆனா.... புரியில.....!!!!!
ஜக்கி மாதிரி கல கலன்னு எழுதிண்டே இருங்க. நீங்களும் உங்க மூலம் நாங்களும் அகம் லேசாகி திருப்தியா இருப்போம்ல. உத்தி புதுமையா இருக்கு. முடிவில தொடங்கி எதிர்காலத்தை நம்பிக்கையா பார்க்க வைக்குது உங்க இடுகை.
//அன்புடன் அருணா said... //
நன்றி அருணா
//பிரியமுடன்.........வசந்த் said... //
நன்றி வசந்த்
//லவ்டேல் மேடி said... //
ஹிஹிஹி
//பாலா... said... //
நன்றி மோர்
ரொம்ப , நாளிக்கி அப்பால நானு வந்தாலும், சோக்கான ஒரு பதிவு பட்ச திருப்தி கீது .
"வாழ்க நலமுடன்"
நன்றி பாண்டி.. ! :)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment