header photo

Sunday, August 9, 2009

கவிதாயினி கவிதாயினி..

ஆசை ஆசையா..
ஆயிரம் வாசலோடு..
ஆக்கிய அரணதனை..
ஆழிப் பேரலை..
அணு அணுவாய்..
அரிக்கிறப்போ..

அச்சோ தள்ளிப்போ..
பிச்சையா கேக்கறேன்னு..
கெஞ்சி மிஞ்சி மாய்ஞ்சப்போ..
அஞ்சி அதுவும்..
பிஞ்சு போல தவழ்ந்து..
போன கையோட..

பெருமழையா..
அடைமழையா..
அடிச்சு ஊத்தி..
அலைக்கழிச்சு..
பொத்தல் பொத்தலா..
பெரு மணல் பிரகாரம்..

அய்யோ போச்சேன்னு..
அடிச்சுப் புரண்டு..
அழுதப்போ..
என்னாச்சோ ஏதாச்சோ..
சோ என்று பெய்த மழை..
போ என்று போயே போச்சு..

ஆர்ப்பரித்த அலை..
அடங்கிய தருணத்தில்..
ஊதிய புயலொன்று..
கேவிய என்னருகில்..
சிறிதே நிதானித்து..
போடி ஏயே..

போயும் போயும்..
பொடி மண் மாளிகைன்னு..
கடிந்து ஓதியது..
இடியாய் இறங்கியதில்..
சுக்கு நூறாகி..
மக்கி மண்ணானேன்..

ஆழி அலை..
அச்சம் நீங்கி..
ஓடி வந்து..
நீட்டிய கரத்தில்..
அன்னையே என்றலறி..
அணு அணுவா.. என்னையே..!



பின்குறிப்பு: எதுவுமில்லை

______________________________________________

43 ஊக்கம்::

vasu balaji said...

திகைத்துப் போகிறேன். வார்த்தை வரவில்லை பாராட்ட. மனம் கனத்துப் போகிறது.

நட்புடன் ஜமால் said...

அன்னையே என்றலறி..
அணு அணுவா.. என்னையே..!
]]

வானம் பாடியது போல் - வார்த்தைகள் இல்லை

vasu balaji said...

/பின்குறிப்பு: எதுவுமில்லை/

பொய்னாலும் அழகா சொல்லி இருக்கிங்க. சொல்லவும் முடியல. சொல்லாம இருக்கவும் முடியல. சொன்னா அந்த அழகுக்கு குறைபாடு வந்துடுமோன்னு இருக்கு. சொல்லாம விட்டா அய்யோ இந்த அழகை பார்க்காம விட்டுட்டாங்களேன்னு வருத்தமா இருக்கும். வேணும்னு பண்ணீங்கன்னா உங்க திறமை. உங்களுக்கே தெரியாம அமைஞ்சதுன்னா உணர்சிகளின் வெற்றி. நான் குடுக்குறேன் குறிப்பு: ஆழிப் பேரலை=கவிதை.

கலகலப்ரியா said...

நன்றி வானம்பாடி
நன்றி ஜமால்

பி.கு.: கொஞ்சம் சோலிய பார்க்க வேண்டி இருக்கு.. நிதானமா மத்த பின்னூட்டத்துக்கு பதில் சொல்றேன் வானம்..

SUBBU said...

கல கல :))))))

Radhakrishnan said...

பிரமிக்க வைத்த வரிகள், தொடங்கி முடித்த வரிகள் மிகவும் சிறப்பு.

துபாய் ராஜா said...

ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு.அது என்னான்னு புரியலை...... :))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...
நான் குடுக்குறேன் குறிப்பு: ஆழிப் பேரலை=கவிதை//

நீங்க என்ன சொல்றீங்கன்னு உங்களுக்காவது புரியுதா..

கலகலப்ரியா said...

//SUBBU said...

கல கல :))))))//

வாங்க சுப்பு.. நன்றி.. (இவ்ளோ சிரிப்பு எதுக்கோ.. படிக்காமலே போடுவாய்ங்க போல..)

கலகலப்ரியா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

பிரமிக்க வைத்த வரிகள், தொடங்கி முடித்த வரிகள் மிகவும் சிறப்பு.//

வாங்கோ.. மிக்க நன்றி.. :-)

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு.அது என்னான்னு புரியலை...... :))//

ஓஹோ.. அப்போ புரியாமதான் எதுவும் சொல்லாம போயிட்டிருந்தீங்களா.. பரவால்ல.. புரியலன்னா புரியலன்னு சொல்லலாம்.. ஹிஹி..

vasu balaji said...

/கலகலப்ரியா said...

நீங்க என்ன சொல்றீங்கன்னு உங்களுக்காவது புரியுதா../



பேஷா.. போன கவிதைல பூகம்பம்னு சொன்னீங்கள்ள. பூகம்பம் வந்தா ஆழிப் பேரலை வரும் தானுங்களே. அந்த அழகு வேணும்னு பண்ணா மாதிரி தோணலைங்க. தானா வந்ததா நினைக்கிறேன். சரிதானுங்களே?அது ஒரு பிரமிப்புன்னா, கவிதை அமைப்புங்க. இராதாகிருஷ்ணன் கூட சொன்னாரு பாருங்க. முடிவில் தொடக்கம். ஒரு அலை வந்து அடிச்சி திரும்ப அடுத்து அலை வந்து கலந்தா மாதிரி கடைசியில ஒரு தொக்கல்ல விட்டு என்னன்னு இன்னோரு வாட்டி படிக்க போனா ஆரம்பத்தில முடிவு. அங்க நிக்க முடியாம கடைசி வரைக்கும் போய் திரும்ப ஆரம்பம்னு அலை மாதிரியே. அலை எங்க ஆரம்பிச்சி எங்க முடியுதுன்னு சொல்ல முடியாதில்லைங்களா?
இதெல்லாம் விட படிச்சதும் மனசில அலைபாயுதுங்களே. என்னான்னே இல்லாம ஒரு கலக்கம். அதும்தான்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...
இதெல்லாம் விட படிச்சதும் மனசில அலைபாயுதுங்களே. என்னான்னே இல்லாம ஒரு கலக்கம். அதும்தான்.//

ஆ..! "அலைபாயுதே"ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு..! நீங்க எப்பவுமே லேட் வானம்..!

vasu balaji said...

ஏங்க நான் எப்படி சொல்றேன். நீங்க என்னாங்க பதில் சொல்லாம. தானா அமைஞ்சது தானே இந்த ஆழிப் பேரலை.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said... தானா அமைஞ்சது தானே இந்த ஆழிப் பேரலை.//
யோவ்.. யாருய்யா இது.. ஆழிப் பேரலைய அமைஞ்சதுன்னு வேற சொல்லிண்டு..! எல்லாம் இயற்கை அனர்த்தம்தான்..!

SUBBU said...

//கலகலப்ரியா said...
//SUBBU said...

கல கல :))))))//

வாங்க சுப்பு.. நன்றி.. (இவ்ளோ சிரிப்பு எதுக்கோ.. படிக்காமலே போடுவாய்ங்க போல..)

August 10,
//

:((((((((((((((

Maheswaran Nallasamy said...

மொக்கை-னா என்ன அர்த்தம் தெரியுமா? எங்க ஊருல மொக்கை-னா பெருசு-ன்னு அர்த்தம். உதாரணம் :
மொக்கைசாமி - அண்ணன்
சின்னசாமி - தம்பி

பெருசா இருக்குற எதையும் எங்க ஊரு வட்டார வழக்குல எத்தாம் மொக்கையா இருக்குடா சாமீ -ன்னு தான் சொல்லுவாய்ங்க.

நான் ஒன்னும் கருத்து சொல்லுற மாதிரி இல்ல. சொன்னா கலகல பிரியா ரசிகர் மன்ற ஆட்கள் தீ பொறி ஆறுமுகம் எதிர் கட்சி-யா போட்டு தாக்குற மாதிரி இல்ல தாக்குராய்ங்க. ஆனாலும் நல்லா இருந்திச்சுகோவ். பழைய கவிதை மேட்டர் என்ன ஆச்சு.?

vasu balaji said...

/பழைய கவிதை மேட்டர் என்ன ஆச்சு.?

அதானெ. நான் ஆழிக்கடல்ல முங்குனதுல மறந்தே போயிட்டேன். மோவ். எங்கம்மா தூசு தட்டினது?

கலகலப்ரியா said...

//SUBBU said...
:(((((((( //

இன்னாதிது.. எதுனாலும் சொல்லிட்டு சிரி/அழலாம்ல.. முடியல.. :(

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said... //

வாங்க.. வாங்க.. மொக்கைக்கு இவ்ளோ மொக்கையா விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி.. தோடா வசிட்டரு... நன்றிங்கோ...!

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...
//வானம்பாடிகள் said...
பழைய கவிதை மேட்டர் என்ன ஆச்சு.?////

அடப்பாவிங்களா... நீங்க ரெண்டு பெரும் கேட்டுண்டிருக்கிறது.. நீங்க ரெண்டு பேரும் கிறுக்கின பழசுங்களையா... அது பத்த்த்திரமா இருக்கில்ல.. இருக்கில்ல.. இருக்கில்ல.. போட்டுடுவோம்.. இது புரிய எனக்கு இவ்ளோ நாள் புடிச்சது.. அட ச்சே.. !!

கலகலப்ரியா said...

SUBBU... ithu enna no comment aa..???

SUBBU said...

//கலகலப்ரியா said...
SUBBU... ithu enna no comment aa..???
//

:)))))))))))

கலகலப்ரியா said...

aahhhhhhh.. mudiyaladaa saami.. nekku vela irukku.. appuram pesikkiren.. (aamam pesinaa mattummm..)

SUBBU said...

//கலகலப்ரியா said...
aahhhhhhh.. mudiyaladaa saami.. nekku vela irukku.. appuram pesikkiren.. (aamam pesinaa mattummm..)

August 11, 2009 9
//
அந்த பயம் இருக்கட்டும் எப்போதும் :)))))) எங்களால முடியும் சாமி :))))))))

vasu balaji said...

/கலகலப்ரியா said...

அது பத்த்த்திரமா இருக்கில்ல.. இருக்கில்ல.. இருக்கில்ல.. போட்டுடுவோம்.. இது புரிய எனக்கு இவ்ளோ நாள் புடிச்சது.. அட ச்சே.. !!/

தோடா. கடை தேங்கா..வழி பிள்ளையாருங்கறது இதானா. அப்புறம் எங்களுக்கு மண்ட மறத்துப் போறப்ப நாங்க எத போடுறது. இல்லாட்டி உங்க கிட்டதான் நான் கிறுக்கின பழசு இருக்கே. போட வேண்டியது தானேங்கிறீங்களா.

jothi said...

பஞ்ச பூதங்கள் அனைத்தும் வந்துவிட்டது உங்கள் கவிதையில் வந்துவிட்டது,.. நெருப்பு மட்டும் மணல் வீடு கட்டியவரிடம் கோபமாக,..

கலகலப்ரியா said...

// August 11, 2009 10:16 AM
jothi said...
.. நெருப்பு மட்டும் மணல் வீடு கட்டியவரிடம் கோபமாக,..//
என்ன சொல்லுதீக..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said... //
"ç*%/&(())=(/&%&%&& :-l

கலகலப்ரியா said...

//SUBBU said... //

:>:>:>:>

SUBBU said...

//கலகலப்ரியா said...
//SUBBU said... //

:>:>:>:>
//

:((((((((

கலகலப்ரியா said...

//காடுவெட்டி said... //
ithu SUBBU-va illa.. Subbu da proxyaaa..

SUBBU said...

//கலகலப்ரியா said...
//காடுவெட்டி said... //
ithu SUBBU-va illa.. Subbu da proxyaaa..
//

இது சுப்புவோட ஜெராxசி :))))))

கலகலப்ரியா said...

//காடுவெட்டி said...
இது சுப்புவோட ஜெராxசி :))))))//

குடித்தனமே இங்கதானா.. அடப்பாவிங்களா..

SUBBU said...

//கலகலப்ரியா said...
//காடுவெட்டி said...
இது சுப்புவோட ஜெராxசி :))))))//

குடித்தனமே இங்கதானா.. அடப்பாவிங்களா..
//

:((((((((

கலகலப்ரியா said...

:((((((((

jothi said...

//என்ன சொல்லுதீக..//

நீர் - கடல் அலை, மழை
நிலம் - மணல் அரண்
வாயு - அரனை அழித்த காற்று
ஆகாயம் - மழை வந்த வானம்
நெருப்பு - மணல் வீட்டை இழந்து நிற்கும் மனம்,..

புரிகிற மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன்,..

jothi said...

இப்போதெல்லாம் உங்கள் கவிதை சகுந்தலா தேவி புதிர் மாதிரி இருக்கு,..

கலகலப்ரியா said...

//jothi said...

இப்போதெல்லாம் உங்கள் கவிதை சகுந்தலா தேவி புதிர் மாதிரி இருக்கு,..//

ithu yaaru sagunthalaa?

jothi said...

//ithu yaaru sagunthalaa?//

புகழ் பெற்ற கணித நிபுணர்,

கலகலப்ரியா said...

oh.. apdinnaa seri.. ! hihi

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

கலகலப்ரியா said...

//வண்ணத்துபூச்சியார் said...
நல்லாயிருக்கு..//
வாங்க வண்ணத்துபூச்சி.. நன்றிங்..