ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.
"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"
"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"
"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"
"நான் போகணும்"
"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"
இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.
வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.
எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.
யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.
"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!
____________________________________________________________________
"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"
"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"
"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"
"நான் போகணும்"
"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"
இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.
வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.
எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.
யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.
"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!
____________________________________________________________________
37 ஊக்கம்::
உண்மைதான்.
புரியுது!!!
ஆஹா. இந்தக் கத சொல்லவே இல்லையே! அதுஞ்செரிதான். நினைத்தவுடன் அழுகை வந்துடுமா? அங்க எத்தன பேரு புடவை வாங்கித் தரலைன்னு நினைத்து அழுததோ? அதுக்கு இது தேவலாம் தானே?
அப்புறம் வீட்டுக்கு போய் நான் பரிட்சை போச்சேன்னு அழுதா மாமி போய்ட்டாங்கன்னு அழுதேன்னா சொன்னிங்களேனு அவங்கள கிழிக்கலையே?
//ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.//
அப்போவே ரொம்ப தைரியமோ...........
//
"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"//
ஆங்கிலம் படிக்காதது ஆம்பிள புள்ளைக்கு அழகு
//இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.//
அப்போ மட்டுமா?
எப்பயுமே பெண்கள் அப்படித்தான் மூஞ்சியை வைத்துக்கொள்கிறீர்கள்
// ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.//
உங்க படிப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு
//"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!//
இது கொஞ்சம் ஓவர்
__
என்னடா இவன் இத்தனை பின்னூட்டம் போடுறானேன்னு பாக்காதீங்க இது என்னோட ஸ்டைல் பிடிச்சுருந்தா ஒரு ஓட்டு ஒரு பின்னூட்டம் ரொம்ப பிடிச்சுருந்தா இரண்டு ஓட்டு ஏகப்பட்ட பின்னூட்டம்.
வர்ட்டா..........
//துளசி கோபால் said...
உண்மைதான்.//
எது.. ? :-s
//துளசி கோபால் said...
உண்மைதான்.//
அச்சோ மறந்துட்டேன்.. வாங்க :D
//அன்புடன் அருணா said...
புரியுது!!!//
வாங்க அருணா.. நீங்களாவது என்னைப் புரிஞ்சுக்கிறீங்களே..ஹும்.. !
//வானம்பாடிகள் said...
அப்புறம் வீட்டுக்கு போய் நான் பரிட்சை போச்சேன்னு அழுதா மாமி போய்ட்டாங்கன்னு அழுதேன்னா சொன்னிங்களேனு அவங்கள கிழிக்கலையே?//
ச்சே ச்சே.. அப்பப்போ புள்ள பத்தி ரொம்பப் பெருமைப் பட்டுக்கிறாங்களே அப்டின்னு கூச்சப்பட்டு.. ஏன் ஏன் ஏன் ஏன்மா அப்டின்னு வடிவேலு ஸ்டைல்ல கோபப்பட்டதுண்டு.. மத்தபடி இது போன்ற சமயத்தில இப்டி நல்ல புள்ளைன்னு பேரெடுக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா.. ஹிஹி..
அடஙொக்கமக்கா.அப்படி விடுற ஆளாத் தெரியலயே. மறு நாள் பள்ளியோடத்துக்கு போய் பாவமா மூஞ்ச வெச்சிகிட்டு டீச்சர கவுத்து அந்த பரிட்சை எழுதி இருப்பீங்கதானே?
//பிரியமுடன்.........வசந்த் said...
அப்போவே ரொம்ப தைரியமோ...........//
அது என்ன அப்போவே .. இப்போ தைரியம்னு எப்டி கண்டு பிடிச்சீங்க..?
//ஆங்கிலம் படிக்காதது ஆம்பிள புள்ளைக்கு அழகு//
அது எதுக்கு "ஆங்கிலம்" முன்னாடி சேர்க்கறீங்க.. புத்திசாலின்னு நினைப்போ..
//அப்போ மட்டுமா?//
பின்னே பல்ல காட்டணுமோ.. அப்புறம் பசங்க அந்தப் பல்ல வச்சே பல்லாங்குழி ஆடுவாங்கன்னு தெரியாது பாருங்கோ..
//உங்க படிப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு//
பொண்ணா பொறந்து தொலைச்சிட்டோமே அய்யா..!
//இது கொஞ்சம் ஓவர்//
அம்மா பீற்றினதுதானே.. நானும் அப்பவே அதான் நினைச்சேன்.. ஆனா சிரிக்க முடியல..
//ரொம்ப பிடிச்சுருந்தா இரண்டு ஓட்டு ஏகப்பட்ட பின்னூட்டம்.//
ஏகப்பட்ட பின்னூட்டம் சரி..... உஷ்ஷ்.. அந்த கள்ள ஓட்டு எங்க?
//வர்ட்டா//
வாங்க.. வாங்க.. வாங்க.. வாங்க.. வாங்க.. வாங்க.. வாங்க.. << என்னடா இவ்ளோ வாங்க சொல்றாளேன்னு பார்க்கறீங்களா.. ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தலா ஒரு வாங்க.. உங்கள மாதிரி புன்ணியாத்மாவ இந்தப் பதிவுலகத்தில காண்பது அரிதப்பா..!!
//வானம்பாடிகள் said...
மறு நாள் பள்ளியோடத்துக்கு போய் பாவமா மூஞ்ச வெச்சிகிட்டு டீச்சர கவுத்து அந்த பரிட்சை எழுதி இருப்பீங்கதானே?//
aamaango.. oxford uni la vachcha arrears paarungo..
/கலகலப்ரியா said...
aamaango.. oxford uni la vachcha arrears paarungo../
aangila paritchai eluthalannu aangilathila enakku bathila:((. kElvikku bathil enga. eluthiningala illaya
oh.. ithukku peruthaan aangilamo.. ada yaaruyyaa ithu.. aaram vaguppila namma oorla ellaam appuram elutha vida maattaangaiyaa..
நம்மூர்ல இப்படி தவிர்க்க முடியாமன்னா ஐ.ஐ.டி.யிலயே தனியா ஒரு கமிட்டி வெச்சி கஷ்டமோ கஷ்டமா கேள்வித்தாள் குடுத்து எழுத விடுவாய்ங்க. அதான் கேட்டோம்.
நம்ம ஊர்ப் பசங்க ஒரு தும்மல் போட்டு பன்னிக் காய்ச்சல்ன்னு சொல்லி .. தவிர்க்க முடியாத காரணமாக்கிடுவாய்ங்க சாமி.. அதனால இதெல்லாம் சரியா வராது..
நான் தற்போதுதான் உங்கள் வலைத்தளத்திற்கு முதன் முதலாக வருகிறேன் (அன்புடன் அருணா வலையினூடாக)... நிறைய பதிவுகளை படிக்க வேண்டி இருக்கு.... படிச்சுடறேன்.....
//ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.//
இதுல கூட நுண்ணரசியலா??
//பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.//
நிகழ்ச்சி சோகமா இருந்தா கூட எனக்கு இத படிக்கறப்போ சிரிப்பு வருது...
//என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!//
கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு தான் போங்க....
நேரம் கிடைக்கும் போது, என் வலைப்பக்கங்களுக்கும் வருகை தாருங்கள்... நன்றி..
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
ஐயோ பாவம் ... உங்க ஆங்கில பரிக்ஷைக்கு மாமி ரூபத்துல வந்தது தடை ...!! அழுவாச்சிய எத்தன நாளா கண்டினியூ பன்னுநீங்க சகோதரி ....????
//R.Gopi said...
நிறைய பதிவுகளை படிக்க வேண்டி இருக்கு.... படிச்சுடறேன்.....//
படிங்கோ படிங்கோ.. (நன்றி அருணா...)
//இதுல கூட நுண்ணரசியலா??//
அந்த அரசியல புரிஞ்சுக்கிட்டீங்களே.. அதுதான் மாட்டரு.. மேலோட்டமா படிச்சா புரியாதில்ல.. ரொம்ப நன்றிங்..
//நிகழ்ச்சி சோகமா இருந்தா கூட எனக்கு இத படிக்கறப்போ சிரிப்பு வருது...//
அப்பாடா.. நகைச்சுவைன்னு வகைப் படுத்தினதுக்கு பலன் கிடைச்சுடுத்துப்பா.
//கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு தான் போங்க....//
ஏன்...? நல்லாதானே போய்க்கிட்டிருக்கு...! நமீதா போஸ்டர் பார்த்த மாதிரி இல்ல சொல்லுறாய்ங்க..
//வருகை தாருங்கள்... நன்றி..//
வர்றோம்ல...
//லவ்டேல் மேடி said...
ஐயோ பாவம் ... உங்க ஆங்கில பரிக்ஷைக்கு மாமி ரூபத்துல வந்தது தடை ...!! அழுவாச்சிய எத்தன நாளா கண்டினியூ பன்னுநீங்க சகோதரி ....????//
:( அவங்க என் கைல ஸ்வீட்டா ஒரு கூல் ட்ரிங்க்ஸ் திணிக்கிற வரைக்கும்னு நினைக்கிறேன் பிரதர்.. ! (ஹ்ம்ம்.. கிண்டலு.. அந்த அழுகைக்கு பின்னாடி என்ன என்ன அரசியல் காரணங்கள் எல்லாம் இருக்குன்னு உங்களுக்கென்ன தெரியும்.. அத எல்லாம் எழுதினா கொஞ்சம் தற்புகழ்ச்சி மாதிரி.. அலட்டிக்கிற மாதிரி தோணும்னு விட்டிருக்கேன்)
என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!]]
ஏஏஏன்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் சிறப்பு (2008 ஆம் ஆண்டின்) நிகழ்ச்சி முழுவதிற்குமான ஆடியோ லிங்க் என் பதிவிலேயே (பகுதி-9) கொடுத்துள்ளேன்....
கேளுங்கள்.... உங்கள் / எங்கள் அபிமான எழுத்தாளர் பாலகுமாரன் குரலை....
//நட்புடன் ஜமால் said...
ஏஏஏன் //
கிகிகிண்டலா போச்சில்ல..மம்மீ... :(((((((((
//R.Gopi said...
கேளுங்கள்.... உங்கள் / எங்கள் அபிமான எழுத்தாளர் பாலகுமாரன் குரலை....//
நன்றிங்கோ..
பரிட்சைக்கு சரியாப் படிக்காம பல்ளிக்கு மட்டம் போடறததுக்காக அம்மாவுக்கு தெரியாம அவங்க பின்னாடியே மாமி வீட்டுக்கு போய் அதை அம்மா பார்த்து ஏன் பரிட்சைக்கு போகலன்னு கேட்டு அடிச்சதுக்கு ஐயோஓஓஓ ன்னு அழுதுட்டு.........
(எஸ்ஜேசூர்யா மாதிரி மூச்சுவிடாமல் படிக்கவும்)
.......இப்போ கதையவே மாத்திட்டிங்களே கலகலப்ரியா.
//துபாய் ராஜா said...
.......இப்போ கதையவே மாத்திட்டிங்களே கலகலப்ரியா.//
இப்போ மம்மி நீங்க சொல்றத கேட்டா உங்கள உண்டு இல்லைன்னு பண்ணிப்டுவாங்க.. சாக்கிரத.. ! :-l
kalangaathe paappa... kalangaathe!..
//Lotus said...
kalangaathe paappa... kalangaathe!..
//
vaammaa kannuuu.. soukyamaa..
ஆஹா ..... பிரமாதம்!
(உண்மையா நல்லா எழுதுறீங்க, வாழ்த்துக்கள்!)
எங்க வூட்டுலயும் கிட்டதட்ட இப்படிதான்! (நான் அதோட half yearly எல்லா பேப்பரும் கட்!)
//manippakkam said...
ஆஹா ..... பிரமாதம்!
(உண்மையா நல்லா எழுதுறீங்க, வாழ்த்துக்கள்!)
எங்க வூட்டுலயும் கிட்டதட்ட இப்படிதான்! (நான் அதோட half yearly எல்லா பேப்பரும் கட்!)//
நன்றி மணி.. ! (half yearly ellaam no chance.. naane (mela) poirunthalum.. thookkindu poi exam hall a vachi vittiruppanga.. =)) )
//(half yearly ellaam no chance.. naane (mela) poirunthalum.. thookkindu poi exam hall a vachi vittiruppanga.. =)) )//
ஹா ... ஹா ... ஹா .....
:):):)
Post a Comment