வேரறுந்த மரங்கள் நாம்..

வேடர்கள் வேங்கைகளை..
வேட்டையாடி வென்றனராம்..
வேலினிற்கோ வில்லினிற்கோ..
வேறுபாடு தெரியலையாம்..
அம்புக்கு அது பற்றி..
அறிந்து கொள வழியேதாம்..
அக்கு வேறாய் ஆணி வேறாய்..
அங்கங்கே கிடக்கின்றோம்..
வேந்தர்கள் வெஞ்சினத்தால்..
வேரறுத்த மரங்கள் நாம்..
விடியலின் முன் பொழுதில்..
வானரங்கள் வசை பாடும்..
குதித்தோடி விளையாடி..
குந்தியிருந்து பேன் பார்த்து..
குதூகலித்த நாள் போச்சு..
குய்யோ.. முறையோ என்று..
ஐயோ போச்சென்று..
அரசரவை ஒன்று கூடி..
குறைப்பட்டு முடிவெடுப்பர்..
குரங்குகளின் குடியிருப்பு..
வீடு கட்ட மரமெல்லாம்..
கட்டைகளாய் அடுக்கி வைத்து..
அடுக்கடுக்காய் மரவீடு..
காடு வீடாய் மாறிவிடும்..
வேரிழந்த மண்..
மண்ணுக்குள் மண்ணாக..
மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!

வேடர்கள் வேங்கைகளை..
வேட்டையாடி வென்றனராம்..
வேலினிற்கோ வில்லினிற்கோ..
வேறுபாடு தெரியலையாம்..
அம்புக்கு அது பற்றி..
அறிந்து கொள வழியேதாம்..
அக்கு வேறாய் ஆணி வேறாய்..
அங்கங்கே கிடக்கின்றோம்..
வேந்தர்கள் வெஞ்சினத்தால்..
வேரறுத்த மரங்கள் நாம்..
விடியலின் முன் பொழுதில்..
வானரங்கள் வசை பாடும்..
குதித்தோடி விளையாடி..
குந்தியிருந்து பேன் பார்த்து..
குதூகலித்த நாள் போச்சு..
குய்யோ.. முறையோ என்று..
ஐயோ போச்சென்று..
அரசரவை ஒன்று கூடி..
குறைப்பட்டு முடிவெடுப்பர்..
குரங்குகளின் குடியிருப்பு..
வீடு கட்ட மரமெல்லாம்..
கட்டைகளாய் அடுக்கி வைத்து..
அடுக்கடுக்காய் மரவீடு..
காடு வீடாய் மாறிவிடும்..
வேரிழந்த மண்..
மண்ணுக்குள் மண்ணாக..
மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!
____________________
31 ஊக்கம்::
/வேந்தர்கள் வெஞ்சினத்தால்..
வேரறுத்த மரங்கள் நாம்../
/குறைப்பட்டு முடிவெடுப்பர்..
குரங்குகளின் குடியிருப்பு../
அமில வரிகள்.
/வேரிழந்த மண்..
மண்ணுக்குள் மண்ணாக..
மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!/
சோகம் சுமந்த வரிகள்.
வலியை உணர வைக்கிறீர்கள் ப்ரியா..:(
(என்னாச்சி.. தொடர்ந்து சீரியஸ் பதிவுகள்? )
வருத்தமாயிருக்கு ப்ரியா........
அருமையான அதிரடி வரிகள்... வலிகள் உணரப்படுகின்றது... பாராட்டுகள்
சம்திங் ராங் வித் லகலக... ஒரே சீரியஸ் பதிவா இருக்கு...
ஆனாலும், பதிவு நல்லா இருக்கு பிரியா...
வரிகள்
வலிகள்
//அக்கு வேறாய் ஆணி வேறாய்..
அங்கங்கே கிடக்கின்றோம்//
ஆனாலும் உணர்வால் ஒன்றானோம்.
//வேரிழந்த மண்..
மண்ணுக்குள் மண்ணாக..
மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!//
விதைக்கப்பட்ட வேர்கள்.
மிகவும் அருமை!
//வானம்பாடிகள் said...
அமில வரிகள்.
சோகம் சுமந்த வரிகள்.//
ம்ம்..
//SanjaiGandhi said...
வலியை உணர வைக்கிறீர்கள் ப்ரியா..:(
(என்னாச்சி.. தொடர்ந்து சீரியஸ் பதிவுகள்? )//
எங்க அப்பாத்தா சொல்லிச்சி.. வாழ்க்கைல கொஞ்சம் சீரியஸா இருடின்னு.. மூஞ்சிய அப்டி வச்சி பார்த்தேன்.. செரியா வரலை.. அதேன்.. இப்டி.. கொஞ்சமாவது அப்பாத்தா சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா...! :(
//பிரியமுடன்...வசந்த் said...
வருத்தமாயிருக்கு ப்ரியா........//
:(.. வேற எப்டி இருக்க முடியும்..
//ஆ.ஞானசேகரன் said...
அருமையான அதிரடி வரிகள்... வலிகள் உணரப்படுகின்றது... பாராட்டுகள்//
நன்றிங்க..! இப்டி புலம்பி தீர்த்துட்டா.. கொஞ்சம் தூங்கலாம்னுதான்.. !
//R.Gopi said...
சம்திங் ராங் வித் லகலக... ஒரே சீரியஸ் பதிவா இருக்கு...
ஆனாலும், பதிவு நல்லா இருக்கு பிரியா...//
wrong nu wrong a purinjikkittaa wrong a thaan irukkum.. wrong a right a purinjikkittaa ivlo probs illaye.. :((..
//நட்புடன் ஜமால் said...
வரிகள்
வலிகள்
//
வாங்க ஜமால்.. நன்றி.. !
//துபாய் ராஜா said...
//அக்கு வேறாய் ஆணி வேறாய்..
அங்கங்கே கிடக்கின்றோம்//
ஆனாலும் உணர்வால் ஒன்றானோம்.
//வேரிழந்த மண்..
மண்ணுக்குள் மண்ணாக..
மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!//
விதைக்கப்பட்ட வேர்கள்.//
:) நன்றி துபாய் ராஜா..
//கயல் said...
மிகவும் அருமை!
//
வாங்க கயல்.. நன்றி...!
வேந்தர்கள் வெஞ்சினத்தால்..
வேரறுத்த மரங்கள் நாம்..
போர்களும், இழப்புகளும், எவரோ, எங்கோ, எதற்கோ எடுக்கும் முடிவுகளில் மட்டுமே ஏற்படுகின்றன. காரணமாகமல்,காரணம் தெரியாமல், இலவசமாய் இழக்கப்படுவது "மனிதம்' தான்.
அன்புடன்
ஆரூரன்
//ஆரூரன் விசுவநாதன் said...
வேந்தர்கள் வெஞ்சினத்தால்..
வேரறுத்த மரங்கள் நாம்..
போர்களும், இழப்புகளும், எவரோ, எங்கோ, எதற்கோ எடுக்கும் முடிவுகளில் மட்டுமே ஏற்படுகின்றன. காரணமாகமல்,காரணம் தெரியாமல், இலவசமாய் இழக்கப்படுவது "மனிதம்' தான்.
அன்புடன்
ஆரூரன்//
வாங்க ஆரூரன்.. ! தொலைந்த மனிதம் தேடப் போய்.. மனிதம் தொலைந்ததை கண்டு பிடித்திருக்கிறோம்.. !
கலகலப்ரியா said...
/வாங்க ஆரூரன்.. ! தொலைந்த மனிதம் தேடப் போய்.. மனிதம் தொலைந்ததை கண்டு பிடித்திருக்கிறோம்.. !/
பின்-ஊக்கத்தில கவிதையெல்லாம் நாங்கதான் போடலாம். இது போங்காட்டம்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:O.. நான் பேசறது கூட கவிதையா தெரியுது பாருங்கோ.. ச்சே.. டச் பண்ணிட்டீங்க வானம்.. மனச டச் பண்ணிட்டீங்க.. :((
ஏற்கனவே ஏன் தொடர்ந்து சீரியசான்னு கேக்குறாய்ங்க இதுல அழுவாச்சி வேற. எனக்கு டின்னு கட்டவா?
:((((((
அருமை.
ரொம்ப நாளைக்கு பின் உங்க கவிதை புரியுது.(அழுகாச்சி காவியம்??)
வேரோடு சாய்க்க இது மரமில்லை.
இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை.
கண்டிப்பாக விடிவு உண்டு.
//நான் பேசறது கூட கவிதையா தெரியுது பாருங்கோ.. //
முடியல,
//jothi said...
அருமை.
ரொம்ப நாளைக்கு பின் உங்க கவிதை புரியுது.(அழுகாச்சி காவியம்??)
வேரோடு சாய்க்க இது மரமில்லை.
இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை.
கண்டிப்பாக விடிவு உண்டு.
//
நம்பிக்கை இருக்க வேண்டியதுதான்.. விடியறப்போ நாம எத்தனையாவது பிறவில இருப்போமோ.. ஹும் பார்க்கலாம்..
//jothi said...
//நான் பேசறது கூட கவிதையா தெரியுது பாருங்கோ.. //
முடியல,
//
கண்ட்ரோல் கண்ட்ரோல்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
//மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!//
வலிக்கும் வரிகள்
கவிதை அருமை
//கதிர் - ஈரோடு said...
//மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!//
வலிக்கும் வரிகள்
கவிதை அருமை//
நன்றி கதிர்..
பிரமாதமான கவிதை. ஒவ்வொரு வரியும் ஒரு அழகிய பாடம் சொல்லிச் சென்றது. படத்துடன் இருப்பதால் கவிதையின் நோக்கம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் அருமை.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
பிரமாதமான கவிதை. ஒவ்வொரு வரியும் ஒரு அழகிய பாடம் சொல்லிச் சென்றது. படத்துடன் இருப்பதால் கவிதையின் நோக்கம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் அருமை.//
நன்றிங்க..
Post a Comment