header photo

Saturday, August 29, 2009

அன்புக் காணிக்கை..!

அன்பு..

நீர் இருந்தும்..
நான் அற்றிருந்த..
ஒற்றைத் திங்களில்..
இறந்து கிடந்து..
உற்றிருந்த வாரத்தில்..

சட்டென்று துளிர்த்து..
பூத்துக் குலுங்கி..
ஆர்ப்பரித்தாடிய..

ஒற்றை ரோஜாச் செடி.
உணர்த்தியது..

அவசர உலகிலும்..
அன்பின் அவசியம்.. !
____________________________
நட்பு..

பரபரப்பான ஒரு காலையில்..
இரயில் வரக் காத்திருந்தோம்..

எங்கேயோ தொலைந்து..
பொங்கல் இட்லியுடன் திரும்பி..
கொஞ்சமாய் சாப்டு என்று..
கெஞ்சிக் கொண்டிருந்தாய்..

பழியாய் காவல் கிடந்து..
பாரம் சுமந்து வந்த பாட்டன்..
பாப்பா படிக்க..
வெளியூர் போகுதா..
என்று கேட்டு வைக்க..
அவசர அவசரமா..
இல்லையென்று தலை ஆட்டி..
குறுஞ்சிரிப்புடன்..
பார்த்துக் கொண்டிருந்த என்னை..
திரும்பி முறைத்ததில்..
தெரிந்தது..
உன் நட்பின் ஆழமும்..
தந்தையுமானவனின்..
நிரந்தர அன்பும்..!

____________________________

நேற்று உழவன் இட்ட பின்னூட்டத்தைப் பார்த்ததும், "என்ன சொல்லுதீக" என்று மனசில் கேட்டுக் கொண்டு விழித்தேன். அப்புறம், ஆமாம்ல யூத்.. விகடன்.. என்று எங்கயோ screen shot பார்த்திருக்கிறேனே என்று கவனம் வந்தது.

சரி அங்க எப்டி என்னோட இடுகை என்று தாடையைச் சொறிந்து கொண்டிருந்த போது, சுண்டெலி (அதாங்க mouse) தன்னிச்சையாக மின்னஞ்சலுக்கு அழைத்துச் சென்றது. அங்கே விகடன் என்ற சொல் கண்ணில் பட்டதும் சட்டென்று க்ளிக்கினேன். பாலாவாகி, பாமரனாகி, வானம்பாடியாகிப்பறந்து கொண்டிருக்கும் நறுக் கிங் , வேலை மெனக்கெட்டு என்னுடைய அனுமதியின்றி நான் கிறுக்கி வைத்ததை அங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.

அவர்களும் அவங்க மூஞ்சிக்காக Good Blog பகுதியில் அதைப் பிரசுரித்திருந்தார்கள். அதோட போனா பரவால்ல.. அதை நான் இங்கே தண்டோரா போடணும் என்று, இடுகை மறியல் போராட்டம். ஓவர் அலட்டல் உடம்புக்கு ஆகாதுன்னு தெரிந்தும், நான் தண்டோரா போட்டுட்டேன்.

என்னுடைய எழுத்துக்களை, எழுத்தெழுத்தா விமர்சித்து ஊக்குவிக்கும் வானம்பாடிக்கும், வரி விடாமல் படித்து விமர்சித்து, ஊக்குவித்த மற்றும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

சுயநலமற்ற வானம்பாடியின் நட்புக்கு "நட்பை"யும், எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் "அன்பை"யும் காணிக்கையாக்குகிறேன்!


_______/\_______

கதிரின்
இடுகைக்கிணங்க என்னாலானது..
http://eezhapriya.blogspot.com/2009/08/blog-post.html

நன்றி
___/\___

23 ஊக்கம்::

vasu balaji said...

வார்த்தைகளுக்கு வேலையில்லை. உங்கள படம் சொல்கிறது பதில்.அன்பின் அவசியம் அற்புதம்.

க.பாலாசி said...

//ஒற்றை ரோஜாச் செடி.
உணர்த்தியது..
அவசர உலகிலும்..
அன்பின் அவசியம்.. !//

நல்ல சிந்தனை வரிகள் சகோதரியே...

குட் பிளாக்கில் வந்தமைக்கும் எனது வாழ்த்துக்கள்....நீங்களும் முயற்சியுங்கள், முடிந்தவரையில்...

vasu balaji said...

அழகாய். உரிமையாய்
குறும்பாய், பாசமாய்
நட்பூ..மணக்கிறது.

vasu balaji said...

/அவர்களும் அவங்க மூஞ்சிக்காக Good Blog பகுதியில் அதைப் பிரசுரித்திருந்தார்கள். /
இதான் ஓவரு. அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொண்டு வந்த போஸ்ட்மேனாலயா வேலை கிடைக்கும். நல்ல கதை.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

வார்த்தைகளுக்கு வேலையில்லை. உங்கள படம் சொல்கிறது பதில்.அன்பின் அவசியம் அற்புதம்.
//
நன்றி...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

அழகாய். உரிமையாய்
குறும்பாய், பாசமாய்
நட்பூ..மணக்கிறது.
//

good..!

கலகலப்ரியா said...

//க.பாலாஜி said...

//ஒற்றை ரோஜாச் செடி.
உணர்த்தியது..
அவசர உலகிலும்..
அன்பின் அவசியம்.. !//

நல்ல சிந்தனை வரிகள் சகோதரியே...

குட் பிளாக்கில் வந்தமைக்கும் எனது வாழ்த்துக்கள்....நீங்களும் முயற்சியுங்கள், முடிந்தவரையில்...
//
ty.. bro.. ! paarkkalaam..!

Maheswaran Nallasamy said...

athan yellathayum poda sollurom...neenga kettathane.:)

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...

athan yellathayum poda sollurom...neenga kettathane.:)
//

வாங்க வாங்க... வெயில் கொளுத்துறப்பவே இடி இடிக்குதே என்னடான்னு பார்த்தேன்..! இதுதான் மாட்டரா...! நல்லா கெளப்பறாங்கடா பீதிய.. :>

துபாய் ராஜா said...

நல்ல கருத்துள்ள கவிதைகள். விகடனில் 'என்ட்ரி' ஆனதிற்கும் வாழ்த்துக்கள்.

புருவம் திருத்திய பெண்கள்.....
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_29.html
ஆணியல் பார்வைக்கு பெண்ணியல் பார்வையில் கருத்துக்களை கூறுங்கள்.

கலகலப்ரியா said...

நன்றிங்கோ துபாய் ராசா.. ! ஹிஹிஹி நான் வேணும்னா என்னோட போட்டோ ஒண்ணு பளிச்னு போட்டு விடுறேன் பாருங்கோ.. புருவம் அப்டியேதான் இருக்கு.. அத என்னத்த திருத்துறது.. ரோடு போட போறோமா என்ன... எதுக்கும் என்னன்னு பார்க்கறேன்.. !

ப்ரியமுடன் வசந்த் said...

//சட்டென்று துளிர்த்து..
பூத்துக் குலுங்கி..
ஆர்ப்பரித்தாடிய..
ஒற்றை ரோஜாச் செடி.//

அன்பூ...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//சட்டென்று துளிர்த்து..
பூத்துக் குலுங்கி..
ஆர்ப்பரித்தாடிய..
ஒற்றை ரோஜாச் செடி.//

அன்பூ...
//

நன்றி வசந்த்..!

கார்ல்ஸ்பெர்க் said...

//அன்பின் அவசியம்.. !//

-என்றும் அவசியம்!!!

கலகலப்ரியா said...

//கார்ல்ஸ்பெர்க் said...

//அன்பின் அவசியம்.. !//

-என்றும் அவசியம்!!!
//

நன்றி...:)

jothi said...

வாழ்த்துகள் priya

கலகலப்ரியா said...

thanks jothi..!

Sanjai Gandhi said...

விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துகள் ப்ரியா..

லகலகலக.. :))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்ங்கோ...

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துகள் ப்ரியா..

லகலகலக.. :))//
ty sanjay.. ஆள் ஆளுக்கு copy right இல்லாம லகல use பண்ணா எப்டி.. ஹ்ம்ம்..

கலகலப்ரியா said...

//நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்ங்கோ...//

நன்றி ஜமால்..!

vasu balaji said...

மீண்டும் யூத்ஃபுல் விகடன் தலைவாசலில் ஜூட் பகுதியில். வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

nanringa..