header photo

Saturday, November 14, 2009

தர்மம் பண்ணு தோழா...


அன்றொரு நாள்... அலுவலகத்தின் முன்... துண்டு விரித்து.. Didgeridoo என்னும் இசைக் கருவியை ஒருவன் ஊதிக் கொண்டிருந்தான்... அது வாசிப்பவர்கள் கஷ்டம் ஒரு பக்கம்... கேட்பவர்கள் கஷ்டம் மறு பக்கம்... நன்றாகத்தான் இருந்தது... அருமையான இசையும் கூட.. ஆனாலும்.. அந்த ஒரு மணி நேர மதிய இடைவேளையில்.. அலுவலகத்தில் தொலைபேசி ஊதல்களிலிருந்து விடுபட்டு... அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...





விரிக்கப் பட்டிருந்த துண்டின் முன்.. சில்லறைகள் சிலவற்றுடன் சிறு திருவோடு ஒன்று உட்கார்ந்திருந்தது... துண்டின் ஓரத்தில்.. ஓநாய் சைஸில் ஒரு நாய்.. முன்னங்கால்களை முன்னால் நீட்டி... அதில் தன்னுடைய தாடையைப் புதைத்து... அப்துல் கலாம் கர்நாடக இசைக்கச்சேரியை ரசித்துக் கேட்கும் பாவனையில்... மிகவும் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு.. சர்வ சாதாரணமாகப் படுத்திருந்தது...

அதன் முகத்தையும்.. கண்களையும் உற்றுப் பார்த்தால்... மிகவும் பிரயத்தனப்பட்டு... சகித்துக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது... அதன் எஜமான் அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று முகத்தை நன்றாக நீட்டி... அந்த வாத்யக் கருவி பக்கத்தில் மறைத்தாற்போல் வைத்துக் கொண்டிருந்தது... பக்கத்தில் வந்த நண்பியிடம்... பாவம் அந்த நாய் என்றேன்...

அந்த அருமையான ஆத்மாவுக்கு...

தோழா...
அதிர்வலைகள்
சகித்துச்
சுகித்தது போலிருந்தாய்
பண்பாடு பேணுவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும்
என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா...!


இதையும் பாருங்க... நான் கதிருக்கு போட்டிருக்கும் பின்னூட்டத்தையும் பாருங்க... அவ்வ்வ்வ்வ்வ்... என்னிய போயீ.. =)
(எனக்கு கலாமும் புடிக்கும்... கர்நாடக சங்கீதமும் புடிக்கும்... ராமவர்மாவும் புடிக்கும்... பாலமுரளிகிருஷ்ணாவும் புடிக்கும்...)



___/\___

37 ஊக்கம்::

vasu balaji said...

/ஓநாய் சைஸில் ஒரு நாய்.. முன்னங்கால்களை முன்னால் நீட்டி... சர்வ சாதாரணமாகப் படுத்திருந்தது.../

கலகலா களமிறங்கிருச்சேஏஏஏஏய்!

ஸ்டார்ட் த மீஜிக்

புதுசா கேக்கறதால நல்லாதான் இருக்கு

/என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா...!/

இது நச்.

ஈரோடு கதிர் said...

//அப்துல் கலாம் கர்நாடக இசைக்கச்சேரியை ரசித்துக் கேட்கும் பாவனையில்//

இது ஏன்!!!!

/உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா//

இது அருமை பிரியா
கண்டிப்பாக தர்மம் கிடைக்கும்,

ஏனெனில் அது நாய் மட்டுமே... வெறிநாய் அல்லவே

கலகலப்ரியா said...

நன்றி வானம்பாடி...

ஐயோ கதிர்... தப்பா நினைசுப்புடாதீய... அப்துல் கலாம் ஐயா எனக்கு ரொம்பப் புடிச்ச ஆள்... அவர் கர்நாடகக் கச்சேரி கேட்பதைப் பார்த்திருக்கிறேன்... அவ்ளோ அழகா இருக்கும்... அவ்ளோதான்... ரொம்ப நன்றி..

பிரபாகர் said...

நாமும் நாயும் ஒன்றாம்...
சங்கீதத்தை
சமகால துயர்களை
சகித்துக் கொள்வதால்...

பிரபாகர்.

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

நாமும் நாயும் ஒன்றாம்...
சங்கீதத்தை
சமகால துயர்களை
சகித்துக் கொள்வதால்...

பிரபாகர்.//

:) vaangannaa..!

பிரபாகர் said...

சகோதரி இன்னும் தூங்கவில்லையா? நேரம் என்ன இப்போது?

ப்ரியமுடன் வசந்த் said...

ஆமா சீக்கிரம் தர்மம் பண்ணிடுங்கப்பா...இல்ல
ஊர் உலகம் தாங்காது...சந்திரமுகி எண்ட்ரி ஆகிட்டாங்கோ..

வெண்ணிற இரவுகள்....! said...

//அதன் முகத்தையும்.. கண்களையும் உற்றுப் பார்த்தால்... மிகவும் பிரயத்தனப்பட்டு... சகித்துக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது... //
நகைச்சுவையாய் இருந்தது சகோதரி

thiyaa said...

//
தோழா...
அதிர்வலைகள்
சகித்துச்
சுகித்தது போலிருந்தாய்
பண்பாடு பேணுவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும்
என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா..
//

நல்ல பதிவு
நல்ல படைப்பு
கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டியது.
அதன்படி நடக்க வேண்டியது.

சிங்கக்குட்டி said...

இதில் அப்துல் கலாம் என்னங்க பண்ணுனாரு :-)

R.Gopi said...

செய்யும் த‌ர்ம‌ம் த‌லைகாக்கும்...

//எனக்கு கலாமும் புடிக்கும்... கர்நாடக சங்கீதமும் புடிக்கும்... ராமவர்மாவும் புடிக்கும்... பாலமுரளிகிருஷ்ணாவும் புடிக்கும்...)//

என‌க்கு பெர்னாட்ஷாவும் பிடிக்கும்... திரிஷாவும் பிடிக்கும்....

பின்றீங்கோ ல‌க‌ல‌க‌.........

அன்பேசிவம் said...

நாயின் வாலிலும் பிறை நிலா உணர், உணர்ந்த ப்ரியாவிற்கு வாழ்த்துகள் :-)

துபாய் ராஜா said...

உண்மைதான் ப்ரியா. அந்தந்த நேரத்தின் மனநிலையைப் பொறுத்தே விருப்பு,வெறுப்புகளும், ரசனைகளும் அமைகின்றன என்பது உண்மையான் உண்மை.

இராகவன் நைஜிரியா said...

// என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா...!//

ஆஹா... தர்மம் போடச் சொல்லுவதையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க...

இராகவன் நைஜிரியா said...

// அலுவலகத்தில் தொலைபேசி ஊதல்களிலிருந்து விடுபட்டு... அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...//

சரியாகச் சொன்னீர்கள். இசையைக் கேட்கவும் ஒரு நல்ல மன நிலை வேண்டும்.

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

சகோதரி இன்னும் தூங்கவில்லையா? நேரம் என்ன இப்போது?//

அண்ணா.. =))... நேத்து பன்ரெண்டு மணி ஆய்டுத்து தூங்க போக.. நாம இடுகை போடுற நேரம் இதுதானுங்களே...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஆமா சீக்கிரம் தர்மம் பண்ணிடுங்கப்பா...இல்ல
ஊர் உலகம் தாங்காது...சந்திரமுகி எண்ட்ரி ஆகிட்டாங்கோ..//

ம்ம்.. இது சந்திரமுகியா... ம்ம்..

கலகலப்ரியா said...

//வெண்ணிற இரவுகள்....! said...

//அதன் முகத்தையும்.. கண்களையும் உற்றுப் பார்த்தால்... மிகவும் பிரயத்தனப்பட்டு... சகித்துக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது... //
நகைச்சுவையாய் இருந்தது சகோதரி//

நன்றி சகோதரா..

கலகலப்ரியா said...

// தியாவின் பேனா said...

//
தோழா...
அதிர்வலைகள்
சகித்துச்
சுகித்தது போலிருந்தாய்
பண்பாடு பேணுவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும்
என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா..
//

நல்ல பதிவு
நல்ல படைப்பு
கண்டிப்பா எல்லாரும் படிக்க வேண்டியது.
அதன்படி நடக்க வேண்டியது.//

நன்றிங்க தியா...

கலகலப்ரியா said...

// சிங்கக்குட்டி said...

இதில் அப்துல் கலாம் என்னங்க பண்ணுனாரு :-)//

avaru evlo cute a music a rasichchu enjoy panraaru paarunga..

கலகலப்ரியா said...

// R.Gopi said...

செய்யும் த‌ர்ம‌ம் த‌லைகாக்கும்...

//எனக்கு கலாமும் புடிக்கும்... கர்நாடக சங்கீதமும் புடிக்கும்... ராமவர்மாவும் புடிக்கும்... பாலமுரளிகிருஷ்ணாவும் புடிக்கும்...)//

என‌க்கு பெர்னாட்ஷாவும் பிடிக்கும்... திரிஷாவும் பிடிக்கும்....

பின்றீங்கோ ல‌க‌ல‌க‌.........//

நன்றி கோபி... வாங்க... ரொம்ப நாளா ஆள காணோம்...

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

நாயின் வாலிலும் பிறை நிலா உணர், உணர்ந்த ப்ரியாவிற்கு வாழ்த்துகள் :-)//

நன்றி முரளி...

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...

உண்மைதான் ப்ரியா. அந்தந்த நேரத்தின் மனநிலையைப் பொறுத்தே விருப்பு,வெறுப்புகளும், ரசனைகளும் அமைகின்றன என்பது உண்மையான் உண்மை.//

ஆமாம் ராஜா... நன்றி..!

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா...!//

ஆஹா... தர்மம் போடச் சொல்லுவதையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க...//

ஹிஹிஹி...

கலகலப்ரியா said...

// இராகவன் நைஜிரியா said...

// அலுவலகத்தில் தொலைபேசி ஊதல்களிலிருந்து விடுபட்டு... அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...//

சரியாகச் சொன்னீர்கள். இசையைக் கேட்கவும் ஒரு நல்ல மன நிலை வேண்டும்.//

அதே..! ஆனாலும் நிறைய வெஸ்டர்ன் மியூசிக் எனக்கு எப்பவுமே கேக்க முடியாது... =).. நன்றி ராகவன்...

ஆ.ஞானசேகரன் said...

//அப்துல் கலாம் கர்நாடக இசைக்கச்சேரியை ரசித்துக் கேட்கும் பாவனையில்... மிகவும் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு.. சர்வ சாதாரணமாகப் படுத்திருந்தது...//

சிரித்தேன்....ஹிஹிஹி

ஆ.ஞானசேகரன் said...

///அலுவலகத்தில் தொலைபேசி ஊதல்களிலிருந்து விடுபட்டு... அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...///

ம்ம்ம்....

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி ப்ரியா...

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...//

நன்றி ஞானசேகரன்...

நசரேயன் said...

//அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...
//

ஏன் உங்களை விட நல்லா வாசித்தாரோ ?

நசரேயன் said...

//பாவம் அந்த நாய் என்றேன்...//
நாயா சொன்ன மாதிரி தெரியலையே !!!

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

//அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...
//

ஏன் உங்களை விட நல்லா வாசித்தாரோ ?//

வாங்க வாங்க... இல்லீங்க எனக்கு தமிழ் மட்டும் வாசிக்க தெரியுமுங்க... ஞானம் இல்லாதது காரணமா இருக்கலாம்...

(ஏனுங்க... பெட்டரா இருந்தா எரிச்சல் வருமாங்க... இப்போ தெரியுது நீங்க என்னோட இடுகைக்கு ஏன் எரிச்சல் எரிச்சலா பின்னூட்டம் போடுறீங்கன்னு... நன்றிங்கோ.. நல்லா இருக்குன்னு மறைமுகமா தெரிய படுத்தினதுக்கு... ஹிஹி...)

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

//பாவம் அந்த நாய் என்றேன்...//
நாயா சொன்ன மாதிரி தெரியலையே !!!//

தோழன்னு சொன்னதுக்கப்புறம்... நானா இருந்தா என்ன நாயா இருந்தா என்ன... வாசிக்கிறவனா இருந்தா என்ன... சொல்லுங்க...

velji said...

படத்தில் தோழரின் போஸ்...ஒரு தினுசாத்தான் இருக்கு.

V.N.Thangamani said...

நல்லாதானப்பா போயீற்றுந்துது ........

கலகலப்ரியா said...

//velji said...

படத்தில் தோழரின் போஸ்...ஒரு தினுசாத்தான் இருக்கு.//

=)) நன்றி வேல்ஜி..

கலகலப்ரியா said...

// வி.என்.தங்கமணி, said...

நல்லாதானப்பா போயீற்றுந்துது ........//

எப்போ என்னங்க ஆச்சு..!