Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
இந்து சமுத்திரத்தின் நித்திலம்... தலையாக யாழ்ப்பாணம்... மூளையாக வடமராட்சி.. (இது என்னுடைய வர்ணனை அல்ல.. அனைவரும் அறிந்ததொன்று..).. மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்...
இடிபாடுகள்... வெடிகள்... குண்டுகள்.. பொருளாதாரத் தடைகள்... மின்சாரத் தடை.. ஆப்பிரகாம் லிங்கன் தெரு விளக்கொளியில் படித்தார்... கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகுவர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே...
பள்ளி விடுமுறை தவிர... வருடம் தவறாது மூன்று திங்கள் பிரசவ விடுப்பில் போய்க்கொண்டிருந்து... வகுப்பிற்கு சமூகமளிக்கும் தருணங்களில்... புத்தகத்தில் இருப்பதை ஜெட் வேகத்தில் வாசித்து... பாதியிலேயே தூங்கும் தமிழாசிரியை.. போன்ற புண்ணியவதிகளுக்கும்... மற்றும் மாணவ மணிகளுக்கும்... டியூஷன் வரப்பிரசாதம்.. பள்ளியை விட அது ஒரு படி மேலேயே....
டியூஷனில் கூட... கடைசி வரிசை வாங்கில்கள் உண்டு... பேனாவையும்.. குறிப்பேட்டையும்... வெறுமையாக வைத்திருந்து... காது கிழிபடுபவர்கள் உண்டு... "ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்".... 'எழுந்திருடா... நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... 'போடா வெளில... இனிமே இந்தப் பக்கம் வந்தே... தொலைச்சிடுவேன்'... புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு... பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு... டியூஷன் மந்திரமோ... தந்திரமோ அன்று... அதுவும் ஒரு பாடசாலை.. இதை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...?....
வீட்டில் தினசரி... வத்தக் குழம்பையும்... சோற்றையும் வைத்துக் கொண்டு... மாதா மாதம் டியூஷன் ஃபீஸ் கட்டி.. கட் அவுட் மார்க்ஸிடம்... மல்லுக் கட்டிக் கொண்டிருந்த.. பெரியவர்கள்... குழந்தைகள்... இது பற்றி எல்லாம் சற்றும் கவலையற்று... யாழ்ப்பாணர்... பணத்தில் புரண்டு.. படித்துக் கொண்டிருப்பவர்கள் போல்... காழ்ப்புணர்ச்சியுடன் கறுவி.. (கடைசியில் நாசமாய் போன..).. தமிழர் பலரும்... தமிழரல்லாத சிலரும்... (தமிழர் கவனிக்க..)...
இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... நம் ஊரில் அரங்கேற்றப்பட்ட... வெறியாட்டத்தை... அடுத்த பாகத்தில் படித்து முடித்தபின்.. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...
கட் அவுட் அல்லது கட் ஆஃப் மார்க்ஸ்.. பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்குத் தகுதியான புள்ளிகள்...! மூன்று பாடத்திற்கு... 300 புள்ளிகள்...!
உதாரணமாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 270, 260 புள்ளிகள் பெற்று மருத்துவம் படிக்க இயலும்... யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 290 அல்லது.. அதற்கு மேல் எடுத்திருந்தால் மருத்துவம் படிக்க முடியும்... (புள்ளிகள் சரியான தரவுகள் அல்ல... ஆனால் இவ்வளவு வேறுபாடு இருக்கும்)
அதனால் அவர்கள் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டி இருக்கும்... படித்து 289.5 புள்ளிகள் எடுத்து... மருத்துவம் கிடைக்காது பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருப்பான்... கொழும்பிலுள்ள ஒரு சிங்கள மாணவன் 260 புள்ளிகள் எடுத்து மருத்துவர் ஆகிக் கொண்டிருப்பான்..
(தொடரும்...)
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
இந்து சமுத்திரத்தின் நித்திலம்... தலையாக யாழ்ப்பாணம்... மூளையாக வடமராட்சி.. (இது என்னுடைய வர்ணனை அல்ல.. அனைவரும் அறிந்ததொன்று..).. மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்...
இடிபாடுகள்... வெடிகள்... குண்டுகள்.. பொருளாதாரத் தடைகள்... மின்சாரத் தடை.. ஆப்பிரகாம் லிங்கன் தெரு விளக்கொளியில் படித்தார்... கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகுவர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே...
பள்ளி விடுமுறை தவிர... வருடம் தவறாது மூன்று திங்கள் பிரசவ விடுப்பில் போய்க்கொண்டிருந்து... வகுப்பிற்கு சமூகமளிக்கும் தருணங்களில்... புத்தகத்தில் இருப்பதை ஜெட் வேகத்தில் வாசித்து... பாதியிலேயே தூங்கும் தமிழாசிரியை.. போன்ற புண்ணியவதிகளுக்கும்... மற்றும் மாணவ மணிகளுக்கும்... டியூஷன் வரப்பிரசாதம்.. பள்ளியை விட அது ஒரு படி மேலேயே....
டியூஷனில் கூட... கடைசி வரிசை வாங்கில்கள் உண்டு... பேனாவையும்.. குறிப்பேட்டையும்... வெறுமையாக வைத்திருந்து... காது கிழிபடுபவர்கள் உண்டு... "ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்".... 'எழுந்திருடா... நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... 'போடா வெளில... இனிமே இந்தப் பக்கம் வந்தே... தொலைச்சிடுவேன்'... புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு... பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு... டியூஷன் மந்திரமோ... தந்திரமோ அன்று... அதுவும் ஒரு பாடசாலை.. இதை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...?....
வீட்டில் தினசரி... வத்தக் குழம்பையும்... சோற்றையும் வைத்துக் கொண்டு... மாதா மாதம் டியூஷன் ஃபீஸ் கட்டி.. கட் அவுட் மார்க்ஸிடம்... மல்லுக் கட்டிக் கொண்டிருந்த.. பெரியவர்கள்... குழந்தைகள்... இது பற்றி எல்லாம் சற்றும் கவலையற்று... யாழ்ப்பாணர்... பணத்தில் புரண்டு.. படித்துக் கொண்டிருப்பவர்கள் போல்... காழ்ப்புணர்ச்சியுடன் கறுவி.. (கடைசியில் நாசமாய் போன..).. தமிழர் பலரும்... தமிழரல்லாத சிலரும்... (தமிழர் கவனிக்க..)...
இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... நம் ஊரில் அரங்கேற்றப்பட்ட... வெறியாட்டத்தை... அடுத்த பாகத்தில் படித்து முடித்தபின்.. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...
கட் அவுட் அல்லது கட் ஆஃப் மார்க்ஸ்.. பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்குத் தகுதியான புள்ளிகள்...! மூன்று பாடத்திற்கு... 300 புள்ளிகள்...!
உதாரணமாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 270, 260 புள்ளிகள் பெற்று மருத்துவம் படிக்க இயலும்... யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 290 அல்லது.. அதற்கு மேல் எடுத்திருந்தால் மருத்துவம் படிக்க முடியும்... (புள்ளிகள் சரியான தரவுகள் அல்ல... ஆனால் இவ்வளவு வேறுபாடு இருக்கும்)
அதனால் அவர்கள் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டி இருக்கும்... படித்து 289.5 புள்ளிகள் எடுத்து... மருத்துவம் கிடைக்காது பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருப்பான்... கொழும்பிலுள்ள ஒரு சிங்கள மாணவன் 260 புள்ளிகள் எடுத்து மருத்துவர் ஆகிக் கொண்டிருப்பான்..
(தொடரும்...)
20 ஊக்கம்::
/மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்.../
இது இங்க ரொம்ப பேருக்கு தெரியாது. என்னமோ குடியிருக்கப் போன வீட்டில சொந்தக்காரன் கூட தகராரு பண்ணா மாதிரிதான் நினைச்சிருக்காங்க கொள்ள பேரு.
/கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகு வர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே.../
மகா கொடுமையிது. போர்க்காலத்தில் பார்த்த ஒரு காணொளியில் ஒரு சிறுவனின் பேட்டியில், 7 ஊரு மாறி வந்து விட்டோம். எனக்கு படிக்கணுமைய்யான்னு மேல் சட்டையின்றி ஒட்டிய வயிறோடு சொன்னது கண்டு அழுதேன். இது தானேயடா உங்கள் மேல் இவ்வளவு வஞ்சம் தீர்க்கின்றான் என்று.
/நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... /
கலகலா
ப்ரெஸண்ட் சார்=))
/"விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்.../
இந்திக்காரனுக்கு இங்கிலீஷ் பணத்து விஷயத்துல மட்டும்தாம்மா புரியும். இதுக்கு விடுதலையை வெட்டி விடச் சொன்னாங்கன்னு புரிஞ்சிகிட்டிருப்பான் வெண்ணெய் கம்னாட்டிங்க.
அடுத்த பகுதியில எனக்கு ரத்த அழுத்தம் பிச்சுக்கும்.
//
வடக்கே நீளும் பிரதான வீதி.. அங்கே பாரதி கேட்ட.. காணி நிலம்.. தூணில் அழகியதாய் நல்மாடம்.. மாளிகை.. கேணி.. தென்னைமரம்.. கீற்று.. இளநீர்.. முத்துச் சுடர் போல நிலவொளி.. குயிலோசை.. தென்றல்... தவிர.. வாழை... மா.. பலா.. மல்லிகை.. செம்பருத்தி.. வெண்டை.. கத்தரி.. அரைக்கீரை.. முளைக்கீரை.. அருகம்புல்லுடன்.. கோரைப்புல்லும்.. குரோட்டன்ஸ்.. மற்றும் சில புதர்களும்.. நல்ல பாம்புடன்.. சாரைப் பாம்பும்.. கீரியும்.. பூனையும்.. நன்றி நவில நாய்கள் பலவும்.. கூடிக் கரைய காகங்களும்.. காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.. ஞாயிறும்.. சூரிய நமஸ்காரமும்.. முழி விசேஷமும்.. பஞ்சாங்கமும்
//
அருமையான எழுத்து நடை... அனைத்தும் பாரதியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டது உங்கள் சொற்கள்.
//
"ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்"....
//
அருமையாச் சொன்னீங்க...
//
புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு...
//
:((
//
பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு...
//
ஆமாம் உண்மைதான், இதை மறுக்கவும் முடியுமோ?
ஒவ்வொரு வினைக்கும்//.. அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்//
நிகழனும்.............
//கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது//
அடப்பாவிகளா
ப்ரியா, இடுகை எழுத வந்ததற்கு பலன் உங்களைப்போன்ற ஒரு அன்பு சகோதரி, அருமையான ஆசான் என் அன்பு நண்பரால் கிடைக்கப் பெற்றதுதான். உங்களின் வாழ்வின் நிகழ்வுகள் நிறைய தாக்கத்தையும் மீளாத்துயரத்தையும் ஏற்படுத்துகிறது. எழுதுங்கள், உங்களின் மனப்பாரத்தை எங்களுக்கும் மாற்றி கொஞ்சமாவது மன மாற்றம் பெறுங்கள்...
பிரபாகர்.
//இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... //
வலிகளை கூறுகின்றது ப்ரியா... நியூடன் விதிப்படி எந்த ஒரு செயலுக்கும் எதிர் செயல் இல்லாமலா போகும்... காலம் எத்தனை முறை உதைக்கும் என்றுதான் தெரியவில்லை...ம்ம்ம்ம்ம்
அடுத்த பகுதிக்காக கண்ணீருடன் காத்திருக்கிறேன்....
இந்த கட் அவுட் மார்க்ஸ் அப்பிடின்னா என்னன்னு கொஞ்சம் சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.
// கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது.//
ம்ம்..
இப்போ பொட்டிதட்டுற எஞ்சினியரா ஆகியிருக்கீங்கன்னா அதுக்கு பின்னாடி இவ்ளோ கஷ்டமாக்கா..
சோ பேட்..
இது விதியென்று சொல்லவா
என்னன்று சொல்ல
மனம் உருகியது.....
கண்களில் ஈரம்.....
வாழ்க்கைகதையை படித்து எழுத்திலே எண்ண உணர்ச்சிகளை வடித்து எங்கள் இதய உணர்வுகளைப் மடித்து சொல்ல வார்த்தை இல்லாமல் பிடித்து கலங்கி விடுகிறது சித்தம்....
நன்றி வானம்பாடி சார்...
ரொம்ப நன்றி ரம்யா...
நன்றி கதிர்..
நன்றி பிரபாகர் (அண்ணா..)... நெகிழ்ச்சியா இருக்கு..
நன்றி ஞானசேகரன்... ம்ம்... பார்க்கலாம்..
நன்றி முகிலன்... கட் அவுட் மார்க்ஸ் பத்தி... இடுகைல கடைசில இணைக்கறேன்... இருங்க..
வசந்து... கஷ்டம்தான்... ஆனா... எஞ்சினியர்.. .பொட்டி.. இப்டி உன் கிட்ட யாரப்பா சொன்னது..? அலுவலகத்ல பொட்டி தட்டுறவங்க எல்லாம் என்ஜினியரா..? இப்டி ஏதோ சொல்ல போய்... இவ பொய் மேல பொய் சொல்லி வச்சிருக்கான்னு தப்பா நினைச்சிட போறாங்கப்பு பார்த்துக்க...
தெரியல தியா... விதி மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டுதான்..
நன்றி ராஜா... எழுதாம இருக்க முடியல... :-)..
நல்ல நடையில் சொல்லிகின்றீர்கள். அடுத்த பதிவுக்கு காத்துள்ளேன். நன்றி பிரியா.
இனவெறி, துவேசத்தை விட இந்த கட் செய்யும் துரோகம் இருக்கிறதே அது தான் அடுத்த தலைமுறை தனக்கு கீழே அடிமையாக இருக்க வைக்கச் செய்யும் மந்திரம்.
உணர்ந்தவர் உள்வாங்கியவர் நீங்கள். மிகச் சிறப்பாக எளிமையாக எடுத்து தந்தமைக்கு நன்றி.
ஆனால் இதுவெல்லாம் இன்று நேற்று உருவானது அல்ல. விதை ஊற்றி, தன்னுடைய சுயலாபத்துக்காக தண்ணீர் ஊற்றி வளர்த்த நல்ல பெரிய்ய்யய்ய் தமிழ் தலைவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் வாழ்ந்தவர்கள் கொடுக்கும் சாபம் அவர்களின் வழித்தோன்றல்களையும் பாதிக்கச் செய்யனும். செய்ய வேண்டும்.
டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வேறுபாடுகள் தாண்டி சாதித்து விமானத்தில் பயணிக்கும் தமிழன் எப்போது தலைசிறந்தவன் தான்.
ஓட்டும் போட்டு நகர்த்தியாச்சு. உள்மத்தம் பிடித்தவர்களுக்கும் சேர வேண்டும்.
நன்றி பித்தன்...
நன்றி ஜோதிஜி...
சனிக்கிழைமை மாலை முதல் பேய்மழை இங்கு அப்போ போன மின்சாரம் இப்பதான் வந்தது. இடையில் வந்த பொழுது ஓட்டு மட்டும் போட முடிந்தது. இப்பத்தான் படித்தேன்.
உங்க இந்த தொடர படிக்க படிக்க ஒருபக்கம் கோபம். மறுபக்கம் இயலாமை... முடியலைங்க ..
நீங்க ஏன் ரெளத்திரம் மட்டும் பழகுறீங்க ன்னு இப்ப புரியுது..
பாலா சார் சொன்னது போல அடுத்த பகுதியில் B.P எகிறீடும் போலத்தான் இருக்கு..
//சூர்யா ௧ண்ணன் said...
சனிக்கிழைமை மாலை முதல் பேய்மழை இங்கு அப்போ போன மின்சாரம் இப்பதான் வந்தது. இடையில் வந்த பொழுது ஓட்டு மட்டும் போட முடிந்தது. இப்பத்தான் படித்தேன்.
உங்க இந்த தொடர படிக்க படிக்க ஒருபக்கம் கோபம். மறுபக்கம் இயலாமை... முடியலைங்க ..
நீங்க ஏன் ரெளத்திரம் மட்டும் பழகுறீங்க ன்னு இப்ப புரியுது..
பாலா சார் சொன்னது போல அடுத்த பகுதியில் B.P எகிறீடும் போலத்தான் இருக்கு..//
ரொம்ப நன்றி சூர்யா... :).. இப்டி வந்து சொல்லிட்டு போற மனசுதான் முக்கியம்...:)
தமிழாசிரியர்களின் துணை இல்லாமலும் தலைமுறை தாண்டி வாழும் எம் தமிழ்
//ஈ ரா said...
தமிழாசிரியர்களின் துணை இல்லாமலும் தலைமுறை தாண்டி வாழும் எம் தமிழ்//
நன்றி ஈ ரா..
உங்க.. ப்லாகை இவ்வளவு நாளா எப்படி மிஸ் பண்ணினேன்! :( :( :(
//ஹாலிவுட் பாலா said...
உங்க.. ப்லாகை இவ்வளவு நாளா எப்படி மிஸ் பண்ணினேன்! :( :( :(//
அதானே எப்டி மிஸ் பண்ணீங்க..?
Post a Comment