நாம இப்டியும் மொக்கை போடுவோம்ல... (copy right கேட்பவர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவும்..)
என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை. என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு, அவளையே அவள் மெச்சிக் கொள்வது இன்னொரு கொடுமை. விகடன் மின்னிதழில் வந்த என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை. என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை.
_____________________________________________________________________________________________
ஸ்விம்மிங் ஞானம் மிக மிகக் குறைவாக இருந்தும் நேற்றைய முன்தினம் அவளுடன் ஸ்விம்மிங் கிளம்பியது என்னுடைய அசட்டுத் துணிச்சல். ஃபைண்டிங் நிமோவில் ஸ்டிங் ரே முதுகில் ஏறிச் சென்ற கடற்குதிரை போல்... அவள் முதுகைப் பற்றியபடி கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது அனிமேஷன் ஃபிகராக (அஹெம்) மாறிப் போனேன்.
_______________________________________________________________________________________________
முப்பது வருஷமாக நெட்பால் ஆடும் ஒரு டீமில் கத்துக்குட்டியாக join பண்ணி அவர்களின் வேகத்திற்கும், பலத்திற்கும் ஈடு கொடுக்க முடியாது, அமெரிக்கன் ஃபூட்பால் டீமுக்கிடையில் சாரி சுற்றிக் கொண்டு ஸ்லோ மோஷனில் ஓடி அனிமேஷன் புறாவைக் கையில் பிடித்து, அதே ஸ்லோ மோஷனில் பறக்க விடுவது போல் நான் பந்தைப் பாவித்தது எனக்கே கொடுமையா தெரிஞ்சாலும், அவங்க பெருந்தன்மையா bravo என்று தட்டிக் கொடுத்தது இதமாக இருந்தது. எதுக்கும் இருக்கட்டுமென்று நியூ இயர் வரை தள்ளிப் போட்டு விட்டேன். நியூ இயர் resolution - இற்கு மேட்டர் தேட வேண்டாம் பாருங்க.
_______________________________________________________________________________________________வீட்டுத் தோட்டத்திலிருந்த ரப்பர் பூட்ஸ் பாதியைக் காணவில்லை. மீதி பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. என்ன கொடுமை சரவணி என்று பக்கத்து வீட்டு அம்மணியிடம் கேட்டேன். சற்றுத் தள்ளிக் காடு இருப்பதால் நரி நடமாட்டம் இருக்கிறது என்று சொன்னாள். அப்புறம் தோட்டப் பக்கம் பார்க்கவே ப்ப்ப்பயமாக இருக்கிறது. ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
_______________________________________________________________________________________________
சமீபத்தில் எந்தப் படமும் பார்க்கவில்லை, எந்தப் பாட்டும் கேட்கவில்லை. ப்ளாக் மட்டும் அவ்வப்பொழுது (!) பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாளரம் திறந்து எட்டிப் பார்த்தால் குளிர்ந்தது. மேல் விழுந்த பஞ்சு கையில் கரைந்து நீராக ஓடியது. அட ஸ்னோ. வின்டர் ஆரம்பித்து விட்டது. குளிர் முதுகுத் தண்டில் சில்லிடுகிறது. இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்..
110 ஊக்கம்::
/என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு, அவளையே அவள் மெச்சிக் கொள்வது இன்னொரு கொடுமை. /
மொழி?=)).
/என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை./
கொடுமை கொடுமைன்னு முதப்பேரா முழுசும் சொல்லி பெருமைன்னு முடிச்சது அருமை. தோட்டம் அழகுன்னா அப்படி ஒரு அழகு.
/அவள் முதுகைப் பற்றியபடி கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது /
தொடா. தண்ணில நடக்கறதுக்கு பேரு நீச்சலா உங்கூருல=))
/எதுக்கும் இருக்கட்டுமென்று நியூ இயர் வரைக்கும் தள்ளிப் போட்டு விட்டேன். நியூ இயர் resolution - இற்கு மேட்டர் தேட வேண்டாம் பாருங்க./
அது சரி. இடுகையா! டக்னு போட. ரெசெல்யூஷனாச்சே.
/ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். /
புது ப்ரேண்ட்னு உன்கிட்டயே வித்தாலும் விக்கும். உசாரு.
/அட ஸ்னோ. வின்டர் ஆரம்பித்து விட்டது. குளிர் முதுகுத் தண்டில் சில்லிடுகிறது. இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்../
ஆஹா. இந்த பலூன்ல போனா குளிரவே குளிராதில்ல. அதான் அடுப்பு எரியுமே=))
// "பிய்ந்து போன டயரி... நைந்து போன நரி.." //
தலைப்பு சூப்பர்...
காப்பி ரைட் போட்டு வச்சுகுங்க.. யாராவது தமிழ் படத்துக்கு பேரா வச்சுறப் போறாங்க..
// ஃபைண்டிங் நிமோவில் ஸ்டிங் ரே முதுகில் ஏறிச் சென்ற கடற்குதிரை போல்... //
இந்த வர்ணனையை ரொம்பவே ரசிச்சிச்சேன்..
வந்துட்டோம்ல....வருவோம்ல...:0)))
//என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை.//
பாலிவுட் இவங்களை எல்லாம் மயக்கீடுச்சு. என் தோழி ஒருத்தி மான்சூன் வெட்டிங் பாத்துட்டு ஏதாவது பாலிவுட் படம் கொடுன்னு நச்சிக்கிட்டே இருப்பாள். :)
//
விகடன் மின்னிதழில் வந்த என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை
//
எல்லாக் கவிதையையும் இப்பிடி ப்ரிண்ட் போட்றது தான் எங்களுக்கு பழக்கம் :0)))) பிரிஞ்சாலும் பிரியாட்டியும் ச்சும்மா பீலா விட்டுக்கலாம்ல :0))))
//
என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு,
//
ஒஹோ...அப்பிடியா மேட்டரு :0))))
அபிநய சரஸ்வதி கலகலப்ரியா நாட்டிய மன்றம் ஆரம்பிச்சிடலாமா?? :0))
//
அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
//
ஏன்?? நரிக்கிட்ட இருந்து திரும்பி பிடிங்கிக்கிற ப்ளான் இருக்கா??
//
இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்..
//
குட்டு நைட்டுங்கோ....
ஆஹா - இதுவன்றோ மொக்கை :)
இது மொக்கை அல்ல. இராகவன் நைஜிரியா சொன்னதை வழிமொழிகின்றேன்.Voted
//ஸ்விம்மிங் ஞானம் மிக மிகக் குறைவாக இருந்தும் நேற்றைய முன்தினம் அவளுடன் ஸ்விம்மிங் கிளம்பியது என்னுடைய அசட்டுத் துணிச்சல். //
எனக்கும் நீச்சல் தெரியாது ப்ரியா...தலைப்பும் பகிர்வும் அருமை..
//என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை. //
அவுங்களுக்கு கோலிவுட் படங்கள் போட்டு காட்டிடாதீங்க,
//கொடுமை. அருமை. பெருமை.//
இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு ஆள் தேடுறாங்களாம்,
//யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்//
ஆஹா, கவித
//என்ன கொடுமை சரவணி//
சகோதரி.. இப்படித்தான் நீங்க சொல்வீகளா? என்ன கொடுமை சரவணன்...
பிரபாகர்.
//இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்.//
இப்போ தான் தூங்கி எழுந்திருக்கேன், அதனால், குட் மார்னிங்
--)
ரசனையான பதிவு.....மிகவும் ரசித்தேன்
சந்தோஷமாக எங்களுடன் பகிர்ந்து கொண்ட இடுகைக்கு நன்றி. அருமை.
///ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ///
இந்த செருப்ப நீதான் use பண்ணினியான்னு கேக்க போகுது உசாரு!
//என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை.
//
எல்லா எழுத்தும் தெரிஞ்ச எனக்கே அந்தக் கவித புரியல. பாவம் அந்தத் தோழி.
//அவள் முதுகைப் பற்றியபடி கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது //
கழுத்தழவு நீருல செய்யிறதுக்குப் பேரு நீந்தல் இல்ல நிற்றல்.
//அவங்க பெருந்தன்மையா bravo என்று தட்டிக் கொடுத்தது இதமாக இருந்தது.//
இந்த வெள்ளக்காரனுங்களே இப்படித்தான் எதுக்குப் பாராட்டுரதுன்னே தெரியாது. வானம்பாடி சார் மாதிரியே.
// சற்றுத் தள்ளிக் காடு இருப்பதால் நரி நடமாட்டம் இருக்கிறது என்று சொன்னாள்//
இப்போ உங்க ஷூவைக் கடிச்சிட்டுப் போயிடுச்சில்ல. இனி அந்த ஏரியாலயே நரி தொல்லை இருக்காது.
//இன்றைக்கு யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாளரம் திறந்து எட்டிப் பார்த்தால் குளிர்ந்தது. மேல் விழுந்த பஞ்சு கையில் கரைந்து நீராக ஓடியது. அட ஸ்னோ. வின்டர் ஆரம்பித்து விட்டது. குளிர் முதுகுத் தண்டில் சில்லிடுகிறது. இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்//
இதுல என்னோட ப்ளாக் பேரை சேக்காதத வன்மையாக் கண்டிக்கிறேன். (காலைல எந்திரிச்சி ஆபிஸுக்கு ஓடனுமேன்னு பிதற்றிக்கிட்டே இழுத்துப் போத்தி அப்பிடின்னு எழுதியிருக்கலாம்ல? ம்ஹூம் எடுத்தெல்லாம் குடுக்க வேண்டியிருக்கு)
//என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை//
நல்லாயிருக்கு வரிகள்.........
ஏன் நரி நைந்து போச்சு
முடியல :))))))
அதுவும்...
//என்ன கொடுமை சரவணி//
:)
ப்ரியா கலகலப்ரியாவா ரீஃப்ரெஸ் ஆன மாதிரியான இடுகை.
தலைப்பு எக்கச்சக்கமா இருக்கு. சூப்பர்
//ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//
பயப்படாதிங்க...இந்நேரம் அந்த நரி செத்திருக்கும்ங்கறது என்னோட வியூகம். அப்டியே உயிரோட இருந்தா அந்த ஷூ உங்களோடதா இருக்காது....எப்டி என்னோட கண்டுபிடிப்பு....
க.பாலாசி said...
//பயப்படாதிங்க...இந்நேரம் அந்த நரி செத்திருக்கும்ங்கறது என்னோட வியூகம். அப்டியே உயிரோட இருந்தா அந்த ஷூ உங்களோடதா இருக்காது....எப்டி என்னோட கண்டுபிடிப்பு....
//
Wise men think alike.. :))
அருமையான தோழி. என்னது கூடைப் பந்து ஆடுறீங்களா? கூடைக்குள்ள வெங்காயம் போடுறது எல்லாம் கூடைப் பந்து விளையாட்டுன்னு யாரு சொன்னா?.
நரி வேறயா அது அந்த சூ நாத்தம் சகிக்காமல் பரலோக பிராப்தி அடைந்துருக்கும்.
நல்ல பதிவு பிரியா இரசித்தேன்.சிரித்தேன் நன்றி.
தூங்காதீங்க....எழுந்திருங்க..நிறைய பின்னூட்டம் வந்திருக்கு :)
அழகான பகிர்தல்கள்.
பாரதியின் பரம விசிறி ஞான் என மலையாளம் பறஞ்சது ஏனோ?
குட்டு நைட்டு
//மொழி?=)). //
nonverbal..!
//கொடுமை கொடுமைன்னு முதப்பேரா முழுசும் சொல்லி பெருமைன்னு முடிச்சது அருமை. தோட்டம் அழகுன்னா அப்படி ஒரு அழகு. //
இன்று இல்லாத என் அம்மாவின் கைப் பக்குவம்...
//தொடா. தண்ணில நடக்கறதுக்கு பேரு நீச்சலா உங்கூருல=))//
நான் நீந்தத்தான் செய்தேன்..! நடந்தாலும் பாதகமில்லை. (நீங்க அதுவும் முடியாதே..)
//அது சரி. இடுகையா! டக்னு போட. ரெசெல்யூஷனாச்சே.//
ye... break பண்றதுக்காகவே தவறாம ஒரு resolution வச்சுப்பேன் நானு... (கொள்கைப் பிடிவாதம்../ பிடிமானம்..)
//புது ப்ரேண்ட்னு உன்கிட்டயே வித்தாலும் விக்கும். உசாரு.//
அது ரெண்டு மூன்று இளிச்சவாய்கள் பிச்சுப் பிடுங்கி வாங்கி விட்டதாகத் தகவல்..
//ஆஹா. இந்த பலூன்ல போனா குளிரவே குளிராதில்ல. அதான் அடுப்பு எரியுமே=))//
மன்னிக்கவும்... நான் எதுக்கோ போட்ட படத்தை இதுக்கு லிங்க் பண்ணுவது தவறு...
//இராகவன் நைஜிரியா said...
// "பிய்ந்து போன டயரி... நைந்து போன நரி.." //
தலைப்பு சூப்பர்...
காப்பி ரைட் போட்டு வச்சுகுங்க.. யாராவது தமிழ் படத்துக்கு பேரா வச்சுறப் போறாங்க..//
ரைட்டு...! சாக்கிரதையா இருக்கணும் சாமியோ..!
//இராகவன் நைஜிரியா said...
// ஃபைண்டிங் நிமோவில் ஸ்டிங் ரே முதுகில் ஏறிச் சென்ற கடற்குதிரை போல்... //
இந்த வர்ணனையை ரொம்பவே ரசிச்சிச்சேன்..//
காலர் தூக்கி விட்டுஃபை... நன்றி..!
//அது சரி said...
வந்துட்டோம்ல....வருவோம்ல...:0)))//
ஆமாமா... வாக்குறுதிய அள்ளித் தெளிக்க வேண்டியதுதான்... :-|
//சின்ன அம்மிணி said...
//என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை.//
பாலிவுட் இவங்களை எல்லாம் மயக்கீடுச்சு. என் தோழி ஒருத்தி மான்சூன் வெட்டிங் பாத்துட்டு ஏதாவது பாலிவுட் படம் கொடுன்னு நச்சிக்கிட்டே இருப்பாள். :)//
அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க..! இவளுக்கு பாட்டு மட்டும்தான் புடிக்கும்..! நம்ம சினிமா ஆளுங்க கஷ்டப்பட்டு அரைக்கால் சட்டை போட்டு ஆஸ்திரேலியாவ சுத்தி ஆடினா புடிக்காது... பாந்தமா நம்ம ஊர் கலர்புல் டிரஸ்ல நாப்பது பேரு சுத்தி சுத்தி ஆடுறதுதான் புடிக்கும்... அவ்வ்வ்வ்.... (hush... இதக் கேள்விப்பட்ட பாலிவுட்... கோலிவுட் எல்லாம் நாக்க பிடுங்கிப்பாங்க..)
//அது சரி said...
//
விகடன் மின்னிதழில் வந்த என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை
//
எல்லாக் கவிதையையும் இப்பிடி ப்ரிண்ட் போட்றது தான் எங்களுக்கு பழக்கம் :0)))) பிரிஞ்சாலும் பிரியாட்டியும் ச்சும்மா பீலா விட்டுக்கலாம்ல :0))))//
நம்ம கவிதைய கூடவா...? சொல்லவே இல்ல... (ப்ரிண்டிட்டாலும்..)
//அது சரி said...
//
என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு,
//
ஒஹோ...அப்பிடியா மேட்டரு :0))))
அபிநய சரஸ்வதி கலகலப்ரியா நாட்டிய மன்றம் ஆரம்பிச்சிடலாமா?? :0))//
ஆஹா... அனிதா ரத்னம் ரேஞ்சுக்கு நினைச்சுக்கிடாதிய மக்கா...! நமக்கு நாட்டியம்ன்னு பேரு மட்டும்தான் தெரியும்..!
//அது சரி said...
//
அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
//
ஏன்?? நரிக்கிட்ட இருந்து திரும்பி பிடிங்கிக்கிற ப்ளான் இருக்கா??//
இத்துப்போன ரப்பர் அதுவே வச்சிக்கட்டும்... =))
//அது சரி said...
//
இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்..
//
குட்டு நைட்டுங்கோ....//
ஏன் இந்தக் குட்டு... :-?? அவ்வ்வ்வ்...
//எல் போர்ட் said...
ஆஹா - இதுவன்றோ மொக்கை :)//
எனக்கே தெரியாத definition..! இதுக்கே இப்டி ஒரு பாராட்டா...! நன்றி சந்தனா..!
//ஜோதிஜி said...
இது மொக்கை அல்ல. இராகவன் நைஜிரியா சொன்னதை வழிமொழிகின்றேன்.Voted//
ஆஹா... வாங்க ஜோதிஜி... பார்த்துப் பல காலம்... நன்றி...
//புலவன் புலிகேசி said...
//ஸ்விம்மிங் ஞானம் மிக மிகக் குறைவாக இருந்தும் நேற்றைய முன்தினம் அவளுடன் ஸ்விம்மிங் கிளம்பியது என்னுடைய அசட்டுத் துணிச்சல். //
எனக்கும் நீச்சல் தெரியாது ப்ரியா...தலைப்பும் பகிர்வும் அருமை..//
எனக்கு நீச்சல் தெரியும்... பட் ரொம்ப எல்லாம் தெரியாது..! உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு... =))
//சங்கர் said...
//என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை. //
அவுங்களுக்கு கோலிவுட் படங்கள் போட்டு காட்டிடாதீங்க,//
அதெல்லாம் தவறாம பார்த்துக்கிட்டுதான் இருக்கா... ஆனாலும் இக்கரைக்கு அக்கரை மேல் அக்கறை... =))
//சங்கர் said...
//கொடுமை. அருமை. பெருமை.//
இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு ஆள் தேடுறாங்களாம்,//
அதுக்கு அந்தக் கொசுக் கவிதை எழுதின கவிஞனே போறுமே..! கொசுத்தொல்லை தாங்காமலே எல்லாம் ஓட்டுப் போட்டுடுவாய்ங்க.. =))
//சங்கர் said...
//யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்//
ஆஹா, கவித//
மொக்கையில் கவிதை காணும் கலைஞனே நீர் வாழ்க..
//பிரபாகர் said...
//என்ன கொடுமை சரவணி//
சகோதரி.. இப்படித்தான் நீங்க சொல்வீகளா? என்ன கொடுமை சரவணன்...
பிரபாகர்.//
சரவணாக்கு பெண்பால் அதுதானுங்களே அண்ணா..
//சங்கர் said...
//இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்.//
இப்போ தான் தூங்கி எழுந்திருக்கேன், அதனால், குட் மார்னிங்//
நான் தூங்கி எழுந்திரிச்சி ரொம்ப நேரமாச்சு... குட் ஆஃப்டநூன்...
//ஈ ரா said...
--)//
ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன்... இதுக்கு என்ன அர்த்தம் ஈ ரா...
oh.. me the 50th...
//ஆரூரன் விசுவநாதன் said...
ரசனையான பதிவு.....மிகவும் ரசித்தேன்//
ரொம்ப நன்றி ஆரூர்...
//Chitra said...
சந்தோஷமாக எங்களுடன் பகிர்ந்து கொண்ட இடுகைக்கு நன்றி. அருமை.//
இத எல்லாம் பொறுமையா கேட்ட உங்களுக்கு என் நன்றிகள் சித்ரா...
//இளவட்டம் said...
///ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ///
இந்த செருப்ப நீதான் use பண்ணினியான்னு கேக்க போகுது உசாரு!//
அவ்வ்வ்வ்.... எல்லாம் கேப்பாய்ங்க... கேட்டுக்கிடதான் வேணும்...
//முகிலன் said...
எல்லா எழுத்தும் தெரிஞ்ச எனக்கே அந்தக் கவித புரியல. பாவம் அந்தத் தோழி.//
உங்களுக்கு அதுவே புரியலன்னா... பாவம்தான் அவள்...
//கழுத்தழவு நீருல செய்யிறதுக்குப் பேரு நீந்தல் இல்ல நிற்றல்.//
அடங்கொக்கமக்கா.. ஒரு அடி நீரில் படுத்து நீச்சல் அடிக்கிறவங்க கிட்ட எல்லாம் இதெல்லாம் சொல்லிப் புரிய வச்சு... ஹும்.. ஊஹும்...
//இந்த வெள்ளக்காரனுங்களே இப்படித்தான் எதுக்குப் பாராட்டுரதுன்னே தெரியாது. வானம்பாடி சார் மாதிரியே.//
வானம்பாடிய கொக்காக்கிட்டீங்களே... சார் இது உங்களுக்கு பார்த்துக்கிடுங்க...
//இப்போ உங்க ஷூவைக் கடிச்சிட்டுப் போயிடுச்சில்ல. இனி அந்த ஏரியாலயே நரி தொல்லை இருக்காது.//
அப்டிதான் நானும் நம்பறேன்... இத நீங்க இப்டி emphasize பண்ணனுமா...
//இதுல என்னோட ப்ளாக் பேரை சேக்காதத வன்மையாக் கண்டிக்கிறேன். (காலைல எந்திரிச்சி ஆபிஸுக்கு ஓடனுமேன்னு பிதற்றிக்கிட்டே இழுத்துப் போத்தி அப்பிடின்னு எழுதியிருக்கலாம்ல? ம்ஹூம் எடுத்தெல்லாம் குடுக்க வேண்டியிருக்கு)//
ஏம்பா... எலெக்ஷன் டைமா...? எதுக்கு எங்க எதை சேர்க்கிறதுன்னு விவஸ்தையே இல்லாம போய்டுத்தே....
//Sangkavi said...
//என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை//
நல்லாயிருக்கு வரிகள்.........//
நன்றி சங்கவி...
//ஈரோடு கதிர் said...
ஏன் நரி நைந்து போச்சு//
அதுக்கு அதோட பிரச்சன... நீங்க வேணா அது கிட்டே கேட்டுப் பாருங்களேன்... (கேள்வியப் பாரு...)
//☀நான் ஆதவன்☀ said...
முடியல :))))))
அதுவும்...
//என்ன கொடுமை சரவணி//
:)//
ஹிஹிஹி...
//S.A. நவாஸுதீன் said...
ப்ரியா கலகலப்ரியாவா ரீஃப்ரெஸ் ஆன மாதிரியான இடுகை.
தலைப்பு எக்கச்சக்கமா இருக்கு. சூப்பர்//
நன்றி நவாஸுதீன்
//க.பாலாசி said...
//ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//
பயப்படாதிங்க...இந்நேரம் அந்த நரி செத்திருக்கும்ங்கறது என்னோட வியூகம். அப்டியே உயிரோட இருந்தா அந்த ஷூ உங்களோடதா இருக்காது....எப்டி என்னோட கண்டுபிடிப்பு....//
பிரம்மாதம்... உங்கள மாதிரி அனுபவப் பட்டவங்க சொன்னா சரிதான்... நம்மளுக்கு என்ன தெரியும்... (ஆமா... பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இன்னும் உசிரோடவா இருக்காங்க..?..)
//பூங்குன்றன்.வே said...
தூங்காதீங்க....எழுந்திருங்க..நிறைய பின்னூட்டம் வந்திருக்கு :)//
நன்றி பூங்குன்றன்....! இப்டி அக்கறையா வந்து சொல்ல ஒரு ஆள் இருக்குன்னு நினைக்கிறப்போ... அவ்வ்வ்வ்... ஒரே ஃபீலிங்க்சுபா...
//விக்னேஷ்வரி said...
அழகான பகிர்தல்கள்.//
நன்றி விக்கி...
//அண்ணாமலையான் said...
பாரதியின் பரம விசிறி ஞான் என மலையாளம் பறஞ்சது ஏனோ?//
பாரதியாருக்கு மலையாளம் புடிக்காதுன்னு அவர் என் கிட்ட சொல்லலியே...?! தவிர பாரதிக்கு மலையாளம் ரொம்ப நல்லா தெரியும்.. ;)
//நேசமித்ரன் said...
குட்டு நைட்டு//
யப்பா... அப்டி என்ன கோபம்... இந்த குட்டு குட்டுறீங்க...
மொக்கை கூட கரகர,மொறுமொறுன்னு விறுவிறுப்பா தான் இருக்கு ப்ரியா.
படங்களும்,பகிர்வுகளும் அருமை.
பிரியமுள்ள நட்பு குறித்து பெருமை.
நரி முகத்தில் முழிச்சா நமக்கு நல்லது. ஆனா நம்ம முகத்தில் முழிச்ச பிறகு நரி நல்லாயிருக்க முடியுமா.... :))
//துபாய் ராஜா said...
மொக்கை கூட கரகர,மொறுமொறுன்னு விறுவிறுப்பா தான் இருக்கு ப்ரியா.
படங்களும்,பகிர்வுகளும் அருமை.
பிரியமுள்ள நட்பு குறித்து பெருமை.
நரி முகத்தில் முழிச்சா நமக்கு நல்லது. ஆனா நம்ம முகத்தில் முழிச்ச பிறகு நரி நல்லாயிருக்க முடியுமா.... :))//
ரொம்ப நன்றி ராஜா..! நரி பாவம்னுதான் நானும் அது மூஞ்சில முழிக்காம அவாய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்... =))
//கலகலப்ரியா said...
ஆமா... பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இன்னும் உசிரோடவா இருக்காங்க..?..//
உங்க வீட்டு பக்கத்துல உள்ளவங்க உயிரோட இருக்கிறதும் இல்லாததும் எனக்கு எப்டி தெரியும்? வாட் கேள்வி இட்?
படங்கள் நன்றாக இருந்தன.
//பித்தனின் வாக்கு said...
அருமையான தோழி. என்னது கூடைப் பந்து ஆடுறீங்களா? கூடைக்குள்ள வெங்காயம் போடுறது எல்லாம் கூடைப் பந்து விளையாட்டுன்னு யாரு சொன்னா?.
நரி வேறயா அது அந்த சூ நாத்தம் சகிக்காமல் பரலோக பிராப்தி அடைந்துருக்கும்.
நல்ல பதிவு பிரியா இரசித்தேன்.சிரித்தேன் நன்றி.//
நன்றி பித்தன்...! நீங்களும் பாலாசி மாதிரி ஒரு அனுபவாத்மா..! நான் என்ன சொல்லுறது.. =))
//க.பாலாசி said...
//கலகலப்ரியா said...
ஆமா... பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இன்னும் உசிரோடவா இருக்காங்க..?..//
உங்க வீட்டு பக்கத்துல உள்ளவங்க உயிரோட இருக்கிறதும் இல்லாததும் எனக்கு எப்டி தெரியும்? வாட் கேள்வி இட்?//
இங்க உசிரோடதான் இருக்காப்ல...! (அய்யன் நழுவினாலும் விட மாட்டோம்ல... முகிலன வைத்து துப்பறிஞ்சு கண்டு பிடிப்போம்..)
//முகிலன் said...
க.பாலாசி said...
//பயப்படாதிங்க...இந்நேரம் அந்த நரி செத்திருக்கும்ங்கறது என்னோட வியூகம். அப்டியே உயிரோட இருந்தா அந்த ஷூ உங்களோடதா இருக்காது....எப்டி என்னோட கண்டுபிடிப்பு....
//
Wise men think alike.. :))//
ரைட்டு..! wise men think alike.... ஆமாம்... சம்மந்தமில்லாம அவங்கள பத்தி நீங்க ஏன் பேசுறீங்க...
// tamiluthayam said...
படங்கள் நன்றாக இருந்தன.//
நன்றிங்க...
உ...ஊஊஊஊஊஊ.. உஉஉஊஊஊஊஊ..
ஹலோ கேகேபி!
அந்த நரிதான் திரும்ப வந்து பாதி பூட்சை கேக்குது...
//கலையரசன் said...
உ...ஊஊஊஊஊஊ.. உஉஉஊஊஊஊஊ..
ஹலோ கேகேபி!
அந்த நரிதான் திரும்ப வந்து பாதி பூட்சை கேக்குது.//
மொழிபெயர்ப்புடன் கூடிய தகவலுக்கு நன்றி..=)) அதுதான் அப்பவே தூக்கிப் போட்டாச்சே... செகண்ட் ஹான்ட் மார்க்கெட்ல ஏதாவது பூட்ஸ் இலவசமா கிடைக்குதான்னு பார்த்து சொல்றேன்... =))
//ஹலோ கேகேபி!//
ம்ம்... இது நல்லாருக்கே.... கேஏ..
//இங்க உசிரோடதான் இருக்காப்ல...! (அய்யன் நழுவினாலும் விட மாட்டோம்ல... முகிலன வைத்து துப்பறிஞ்சு கண்டு பிடிப்போம்..)
//
துப்பறியிறதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல. ஆன அதுக்கப்புறம் அந்த அனுபவத்த வச்சு ஒரு ஆறு இடுகை தேத்திடுவோம். அதையும் நீங்க தான் படிச்சித் தொலையணும்.
//முகிலன் said...
//இங்க உசிரோடதான் இருக்காப்ல...! (அய்யன் நழுவினாலும் விட மாட்டோம்ல... முகிலன வைத்து துப்பறிஞ்சு கண்டு பிடிப்போம்..)
//
துப்பறியிறதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல. ஆன அதுக்கப்புறம் அந்த அனுபவத்த வச்சு ஒரு ஆறு இடுகை தேத்திடுவோம். அதையும் நீங்க தான் படிச்சித் தொலையணும்.//
அய்யே..! கேஸ் ரிப்போர்ட் எல்லாம் யார் படிக்கறா..! மேலோட்டமா ஒரு பார்வை பார்த்து தூக்கிப் போட்... ஐ மீன்... ஓட்டுப் போடுவோம்..!
//அய்யே..! கேஸ் ரிப்போர்ட் எல்லாம் யார் படிக்கறா..! மேலோட்டமா ஒரு பார்வை பார்த்து தூக்கிப் போட்... ஐ மீன்... ஓட்டுப் போடுவோம்..!
//
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா பின்னோட்டத்துல போர் அடிக்குதுன்னு குட்டுறத சொல்ல விட்டுட்டிங்களே
மலையாளத்துல பாரதி ஏதும் பாட்டு எழுதி இருக்காரா?
//
முகிலன் said...
//அய்யே..! கேஸ் ரிப்போர்ட் எல்லாம் யார் படிக்கறா..! மேலோட்டமா ஒரு பார்வை பார்த்து தூக்கிப் போட்... ஐ மீன்... ஓட்டுப் போடுவோம்..!
//
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா பின்னோட்டத்துல போர் அடிக்குதுன்னு குட்டுறத சொல்ல விட்டுட்டிங்களே//
நான் தமாஷ் பண்றத எல்லாம் சீரியஸா பார்க்கற நல்லுள்ளம் நீங்கதான் முகிலன்... =))
//அண்ணாமலையான் said...
மலையாளத்துல பாரதி ஏதும் பாட்டு எழுதி இருக்காரா?//
விசாரிச்சு சொல்றேன்..! =))... உங்களுக்கு மலையாளத்ல படிக்கிறதுதான் இஷ்டம்னா... மொழிபெயர்த்தும் வச்சிருக்காங்க..! இது உங்களுக்காக பாரதியாரோட ஒரு தமிழ்ப்பாட்டு..
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.
//கலகலப்ரியா said...
இங்க உசிரோடதான் இருக்காப்ல...!//
அப்டின்னா அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கணும்.
//க.பாலாசி said...
//கலகலப்ரியா said...
இங்க உசிரோடதான் இருக்காப்ல...!//
அப்டின்னா அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கணும்.//
கண்டு புடிச்சிட்டாருய்யா...! அதுதான் அப்பவே சொல்லியாச்சில்ல... அனுபவாத்மாஸ்... சொன்னா கேட்டுக்கிடுறோம்..!
பரவால்ல கமெண்ட்க்கு கமெண்ட் போட்டே 84 வந்துடுச்சு.(எல்லாத்துக்கும் ஒரு திறமை வேனும்)
பின்னூட்டதிற்கு பதில் இடாதிருப்பதுதான் கஷ்டம்..! எண்ணிக்கைக்காகப் பதில் போடுவதில்லை.. நன்றி
அப்படியா..? அப்ப இந்தாங்க அந்த கஷ்டம் எனக்கு வேனாம்...
உங்கள் தோழி புல்லரிக்க வைத்து விட்டார்.
//அண்ணாமலையான் said...
அப்படியா..? அப்ப இந்தாங்க அந்த கஷ்டம் எனக்கு வேனாம்...//
:)நீங்க நல்லவரா கெட்டவரா அண்ணாமலை... =))
// நிலா முகிலன் said...
உங்கள் தோழி புல்லரிக்க வைத்து விட்டார்.//
ம்ம்... நன்றி நிலாமுகிலன்...
//
கலகலப்ரியா said...
விசாரிச்சு சொல்றேன்..! =))... உங்களுக்கு மலையாளத்ல படிக்கிறதுதான் இஷ்டம்னா... மொழிபெயர்த்தும் வச்சிருக்காங்க..! இது உங்களுக்காக பாரதியாரோட ஒரு தமிழ்ப்பாட்டு..
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.
//
இது எங்க தலை சீனியர் வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாரோட குஜமுக கொள்கை பரப்பு பாடல்....அதை நீங்க எப்படி ரைட்ஸ் வாங்காம பாடலாம்?? எனக்கு ஒண்ணுமில்லப்பா...கட்சி உங்க மேல வழக்கு போட்டாலும் போடும்...:0)))
//
கலகலப்ரியா said...
//அண்ணாமலையான் said...
பாரதியின் பரம விசிறி ஞான் என மலையாளம் பறஞ்சது ஏனோ?//
பாரதியாருக்கு மலையாளம் புடிக்காதுன்னு அவர் என் கிட்ட சொல்லலியே...?! தவிர பாரதிக்கு மலையாளம் ரொம்ப நல்லா தெரியும்.. ;)
//
பாரதிக்கு மலையாளம் பிடிக்குமான்னு எனக்கு தெரியலை...ஆனா, "சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து கேரள நன்னாட்டு இளம் பெண்களுடனே" அப்படின்னு அவர் பாட்டில் ஒரு வரி வரும்... பார்க்கப் போனா, பழைய தமிழ் தானே மலையாளம்??
//
கலகலப்ரியா said...
//
அடங்கொக்கமக்கா.. ஒரு அடி நீரில் படுத்து நீச்சல் அடிக்கிறவங்க கிட்ட எல்லாம் இதெல்லாம் சொல்லிப் புரிய வச்சு... ஹும்.. ஊஹும்...
//
நாலு ரவுண்டு ஆயிடுச்சின்னா நீரே இல்லாம தெருவுல நீச்சலடிக்கிறவய்ங்களை எல்லாம் எனக்கு தெரியும்...:0)))
//அது சரி said...
//
கலகலப்ரியா said...
விசாரிச்சு சொல்றேன்..! =))... உங்களுக்கு மலையாளத்ல படிக்கிறதுதான் இஷ்டம்னா... மொழிபெயர்த்தும் வச்சிருக்காங்க..! இது உங்களுக்காக பாரதியாரோட ஒரு தமிழ்ப்பாட்டு..
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.
//
இது எங்க தலை சீனியர் வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாரோட குஜமுக கொள்கை பரப்பு பாடல்....அதை நீங்க எப்படி ரைட்ஸ் வாங்காம பாடலாம்?? எனக்கு ஒண்ணுமில்லப்பா...கட்சி உங்க மேல வழக்கு போட்டாலும் போடும்...:0)))//
ஐயையோ... குடுகுடுப்பையார் கிட்ட போட்டுக் கொடுத்துடாதீய... ஏற்கனவே ஏகப்பட்ட காப்பி டீ... அர்ர்... ரைட் பிரச்சன... =))
//
கலகலப்ரியா said...
//அது சரி said...
//
அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
//
ஏன்?? நரிக்கிட்ட இருந்து திரும்பி பிடிங்கிக்கிற ப்ளான் இருக்கா??//
இத்துப்போன ரப்பர் அதுவே வச்சிக்கட்டும்... =))
//
அப்பிடின்னா நல்ல ரப்பரா இருந்தா நரிக்கிட்ட இருந்து பிடிங்கிருவீங்களா??? அவ்வ்வ்வ்வ்....(ஒண்ணுமில்ல, நரி அழுற மாதிரி ஒரு ஃபீலிங்...)
//அது சரி said...
//
கலகலப்ரியா said...
//அண்ணாமலையான் said...
பாரதியின் பரம விசிறி ஞான் என மலையாளம் பறஞ்சது ஏனோ?//
பாரதியாருக்கு மலையாளம் புடிக்காதுன்னு அவர் என் கிட்ட சொல்லலியே...?! தவிர பாரதிக்கு மலையாளம் ரொம்ப நல்லா தெரியும்.. ;)
//
பாரதிக்கு மலையாளம் பிடிக்குமான்னு எனக்கு தெரியலை...ஆனா, "சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து கேரள நன்னாட்டு இளம் பெண்களுடனே" அப்படின்னு அவர் பாட்டில் ஒரு வரி வரும்... பார்க்கப் போனா, பழைய தமிழ் தானே மலையாளம்??//
எனக்கும் முதல்ல கவனம் வந்தது சேர நாடுதான்... ஒரு பயபக்தி இருக்கனுமா இல்லியான்னு... சந்திரமுகிக்கு தோதா ஒரு பாட்டு போட்டேன்... விட மாட்டேங்கிறீங்களே... (ஆமாம்... திராவிட மொழிகள் அறியாதவங்களா அவங்க... நீங்க வேற..)
//
கலகலப்ரியா said...
//
இது எங்க தலை சீனியர் வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாரோட குஜமுக கொள்கை பரப்பு பாடல்....அதை நீங்க எப்படி ரைட்ஸ் வாங்காம பாடலாம்?? எனக்கு ஒண்ணுமில்லப்பா...கட்சி உங்க மேல வழக்கு போட்டாலும் போடும்...:0)))//
ஐயையோ... குடுகுடுப்பையார் கிட்ட போட்டுக் கொடுத்துடாதீய... ஏற்கனவே ஏகப்பட்ட காப்பி டீ... அர்ர்... ரைட் பிரச்சன... =))
//
சரி சொல்லலை...விடுங்க...எந்த கேஸூம் வராது பாத்துக்கலாம்...எனக்கு எவ்ளோ தருவீங்க?? :0))
//
சரி சொல்லலை...விடுங்க...எந்த கேஸூம் வராது பாத்துக்கலாம்...எனக்கு எவ்ளோ தருவீங்க?? :0))//
ஆஹா... இவங்க அவிங்க இல்ல... =))... த்தோ நீங்க கேஸ் போடுங்க... நான் கோர்ட்லயே மீட் பண்ணிக்கறேன்... =))
//
கலகலப்ரியா said...
//
சரி சொல்லலை...விடுங்க...எந்த கேஸூம் வராது பாத்துக்கலாம்...எனக்கு எவ்ளோ தருவீங்க?? :0))//
ஆஹா... இவங்க அவிங்க இல்ல... =))... த்தோ நீங்க கேஸ் போடுங்க... நான் கோர்ட்லயே மீட் பண்ணிக்கறேன்... =))
//
நான் என்ன எனக்கா கேட்டேன்? நீங்க குடுக்குறதுல கட்சி வளர்ச்சி நிதின்னு குடுகுடுப்பையாருக்கு ஒரு கட்டிங் கொடுக்கணும்...
(அடுத்த மாசம் ஸ்விஸ்ல கட்சி கிளை திறக்கறோம்...உங்களுக்குத் தான் தலைவர் போஸ்ட்டு...எவ்ளோ வளர்ச்சி நிதி தருவீங்க??)
//
நான் என்ன எனக்கா கேட்டேன்? நீங்க குடுக்குறதுல கட்சி வளர்ச்சி நிதின்னு குடுகுடுப்பையாருக்கு ஒரு கட்டிங் கொடுக்கணும்...
(அடுத்த மாசம் ஸ்விஸ்ல கட்சி கிளை திறக்கறோம்...உங்களுக்குத் தான் தலைவர் போஸ்ட்டு...எவ்ளோ வளர்ச்சி நிதி தருவீங்க??) //
நிதியா..? அது நீங்க இன்னும் எவ்ளோ வளரணும்கிறத பொறுத்து இருக்கு...
பை த வே... நீங்க கட்சி ஆரம்பிக்கிற சமயம் நான் ஸ்காட்லாந்துல இருப்பேன்...
//
கலகலப்ரியா said...
//
நான் என்ன எனக்கா கேட்டேன்? நீங்க குடுக்குறதுல கட்சி வளர்ச்சி நிதின்னு குடுகுடுப்பையாருக்கு ஒரு கட்டிங் கொடுக்கணும்...
(அடுத்த மாசம் ஸ்விஸ்ல கட்சி கிளை திறக்கறோம்...உங்களுக்குத் தான் தலைவர் போஸ்ட்டு...எவ்ளோ வளர்ச்சி நிதி தருவீங்க??) //
நிதியா..? அது நீங்க இன்னும் எவ்ளோ வளரணும்கிறத பொறுத்து இருக்கு...
பை த வே... நீங்க கட்சி ஆரம்பிக்கிற சமயம் நான் ஸ்காட்லாந்துல இருப்பேன்...
//
நீங்க எவ்ளோ குடுக்க முடியுமோ குடுங்க...அது போதும்...(வந்த வரை கட்சிக்கு லாபம் தான்...)...
தலைவரு இல்லாம எப்படி கட்சி திறக்கிறது? அதனால உங்களுக்கு எப்ப டைம் இருக்கோ அப்ப (காசு குடுத்துட்டு) கட்சி கிளையை நீங்களே திறந்துக்கங்க...:0))))
//
நீங்க எவ்ளோ குடுக்க முடியுமோ குடுங்க...அது போதும்...(வந்த வரை கட்சிக்கு லாபம் தான்...)...
தலைவரு இல்லாம எப்படி கட்சி திறக்கிறது? அதனால உங்களுக்கு எப்ப டைம் இருக்கோ அப்ப (காசு குடுத்துட்டு) கட்சி கிளையை நீங்களே திறந்துக்கங்க...:0)))) //
இந்த வியாபாரம் நல்லா இருக்குடா சாமி...! தலைவரு யாருங்கிறத கட்சிக் கூட்டத்ல முடிவெடுப்போம்... =)) அப்புறம் கட்சி நிதி பத்தி ரோசன பண்ணலாம்... (யப்பே... ரொம்ப சாக்கிரதையாதான் இருக்கோணும்..)
//
கலகலப்ரியா said...
இந்த வியாபாரம் நல்லா இருக்குடா சாமி...! தலைவரு யாருங்கிறத கட்சிக் கூட்டத்ல முடிவெடுப்போம்... =)) அப்புறம் கட்சி நிதி பத்தி ரோசன பண்ணலாம்... (யப்பே... ரொம்ப சாக்கிரதையாதான் இருக்கோணும்..)
//
அய்...இது நல்லா இருக்கே...உங்களை கட்சில அதுக்குள்ள யாரு சேர்த்தா?? மொதல்ல கையில காசு...அப்புறம் கட்சில பதவி...இது தான் எங்க கட்சிக் கொள்கை...லட்சியம்...கொள்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்...
எங்களுக்கு லட்சங்கள் பெரிதல்ல...லட்சியங்கள் தான் பெரிது...
//
அய்...இது நல்லா இருக்கே...உங்களை கட்சில அதுக்குள்ள யாரு சேர்த்தா?? மொதல்ல கையில காசு...அப்புறம் கட்சில பதவி...இது தான் எங்க கட்சிக் கொள்கை...லட்சியம்...கொள்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்...
எங்களுக்கு லட்சங்கள் பெரிதல்ல...லட்சியங்கள் தான் பெரிது...//
=)))))... ஆமாமா... இந்த அரசியல்வாதிங்க எப்டி வேணா மாத்திப் பேசுவாங்கப்பா.. (அப்போ இப்போ கட்சில சேர்க்கறதுக்குதான் முயற்சி நடக்குதாக்கும்.. நாம ரஜினிய விட உஷார் பார்ட்டி .. =)))... நடக்கட்டு நடக்கட்டு..
//
கலகலப்ரியா said...
//
அய்...இது நல்லா இருக்கே...உங்களை கட்சில அதுக்குள்ள யாரு சேர்த்தா?? மொதல்ல கையில காசு...அப்புறம் கட்சில பதவி...இது தான் எங்க கட்சிக் கொள்கை...லட்சியம்...கொள்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்...
எங்களுக்கு லட்சங்கள் பெரிதல்ல...லட்சியங்கள் தான் பெரிது...//
=)))))... ஆமாமா... இந்த அரசியல்வாதிங்க எப்டி வேணா மாத்திப் பேசுவாங்கப்பா.. (அப்போ இப்போ கட்சில சேர்க்கறதுக்குதான் முயற்சி நடக்குதாக்கும்.. நாம ரஜினிய விட உஷார் பார்ட்டி .. =)))... நடக்கட்டு நடக்கட்டு..
//
யாரு மாத்தி பேசுனா?? இப்பவும் சொல்றேன்...எங்க கட்சிக்கு லட்சங்கள் பெரிதல்ல..லட்சியம் தான் பெரிது...
லட்சியம் என்னவெனில் கோடிகளை குவிப்பது...இப்ப சொல்லுங்க, எங்க லட்சியம் பெரிதா இல்லை லட்சங்கள் பெரிதா?? :0)))
//யாரு மாத்தி பேசுனா?? இப்பவும் சொல்றேன்...எங்க கட்சிக்கு லட்சங்கள் பெரிதல்ல..லட்சியம் தான் பெரிது...
லட்சியம் என்னவெனில் கோடிகளை குவிப்பது...இப்ப சொல்லுங்க, எங்க லட்சியம் பெரிதா இல்லை லட்சங்கள் பெரிதா?? :0))) //
ஐயையோ... இன்னைக்கு அறிவு ஆறா ஓடுதே... என்ன சமாச்சாரம்... =))
அது சரி,
துணைப் பொதுச் செயலாளரை மறந்துடாதிங்க. எனக்கும் ஒரு கட்டிங் வரணும். சிபிஐ பொதுச் செயலாளரை அரெஸ்ட் பண்ண்ப்போ நான் செஞ்ச போராட்டம் எல்லாம் எதுக்கு?
//முகிலன் said...
அது சரி,
துணைப் பொதுச் செயலாளரை மறந்துடாதிங்க. எனக்கும் ஒரு கட்டிங் வரணும். சிபிஐ பொதுச் செயலாளரை அரெஸ்ட் பண்ண்ப்போ நான் செஞ்ச போராட்டம் எல்லாம் எதுக்கு?//
என்னது...... ரொம்ம்ம்ப பாலிடிக் பேசுறாங்களே... அவ்வ்வ்வ்...
அட ....!!! பூனை குட்டிக்கும் கரடி பொம்மையா? ..என்ன கொடுமை சரவணன் இது?
//Maheswaran Nallasamy said...
அட ....!!! பூனை குட்டிக்கும் கரடி பொம்மையா? ..என்ன கொடுமை சரவணன் இது?//
:>... ஹிஹிஹி...
Post a Comment