- பெயர் - தமிழச்சி
- வயது - சொற்பம்
- படிப்பு - முடிக்கவில்லை
- மொழி - தமிழல்ல
- தகுதி - தகுதி அற்றிருப்பது
- தொழில் - அடிமை
- உபதொழில் - அடிமைக்குரல் எழுப்புவது
- பொழுதுபோக்கு - ஒப்பாரி
- தற்காலிக முகவரி - சிறை c/o முகாம்
- நிரந்தர முகவரி - எதுவுமில்லை
- பிறந்த இடம் - காணவில்லை
- பிரஜா உரிமை - தெரியாது
- மதம் - பௌத்தமல்லாதவை
- அங்க அடையாளம் - அங்கங்களற்றிருப்பது / அடையாளமற்றிருப்பது
- உடன்பிறப்பு - உயிருடன் இல்லை
- வேறு சொந்தங்கள் - செத்துவிட்டன
- சமீபத்திய சாதனை - பிணக்குவியல்கள் மத்தியில் புதைந்திருந்தது
- நிரந்தர சாதனை - அகதியாகி எங்கும் நிறைந்திருப்பது
- அதிர்ஷ்டம் - உணர்வற்றிருப்பது
- துரதிர்ஷ்டம் - உயிருடனிருப்பது
- பயம் - நிரந்தரம்
- நம்பிக்கை - புதைகுழிகள்
- பலம் - பதுங்கு குழிகளல்ல
- பலவீனம் - புல்லுருவிகள்
- ஆச்சரியம் - தமிழ் முனகல்கள்
- அதிர்ச்சி - அதிர்வற்றிருப்பது
- கவலை - வெளி அதிர்வுகள்
- நிம்மதி - வெடிச்சத்தம் இல்லாதது
- பிடித்தது - சனியன்
- பிடிக்காதது - அனைத்தும்
- பிடித்த பழமொழி - ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு
- பிடிக்காத பழமொழி - இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு
Friday, January 1, 2010
பதுங்குகுழிப் பயோடேட்டா..
Subscribe to:
Post Comments (Atom)
71 ஊக்கம்::
இத்தனை வலியும் தாண்டி கடைசி டேட்டா சொலவடை சிரிக்க வைக்குது.
வெயில்ல மழை பேஞ்சா மாதிரி கனத்த மனதுடன் சிரிப்பு. குட்.
//உடன்பிறப்பு - உயிருடன் இல்லை//
இருந்தும் இல்லாதது போல் நடிப்பவர்கள்.
ம்ம்.. இந்நிலை என்றாவது மாறும். அது என்று என்று தான் தெரியவில்லை :(
//
பிடித்தது - சனியன்
பிடிக்காதது - அனைத்தும்
//
சகோதரி,
எல்லாவற்றையும் அடக்கியிருக்கிறது!
பிரபாகர்.
எதிர்காலம் - எதிரிகளின் கையில்
கனமான இடுகை!!
பெயர் - தமிழச்சி
எந்த தமிழச்சிய சொல்லுறீங்க ? ப்ளாக்-ல ஒரு அம்மணி தொடர்ந்து எழுதுறாங்களே.. அவங்களா?
:)
இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு
சூப்பர் பழமொழி அக்கோய்....
வித்தியாசமான பதிவொன்று...ம்..ம் சொல்ல மறந்திட்டன் தமிழ்மணத்தில் உங்கள் இரண்டு பதிவுகள் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது ....பாத்தியளோ...நான் ஓட்டுபோட்டனான் என்ன தருவியள்...
உங்க எழுத்துக்களும் உங்க கோபமும் எனக்கு ரொம்பப்பிடிக்குது.ஆனா உங்க பக்கத்துக்கு நான் வர்றத பெரும்பாலும் தவிர்த்துடுறதுங்க.காரணம் என்னால கண்ணீர மட்டுமில்ல அதுக்கப்பறமும் எனக்குள்ள பரவுற வேதனயக் கட்டுப்படுத்தமுடியாதுங்க.ஏன்னா நா ஒரு தாய்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
http://andamantamizhosai.blogspot.com/
”சமீபத்திய சாதனை - பிணக்குவியல்கள் மத்தியில் புதைந்திருந்தது”
இது வேதனை...
எதுவும் சொல்ல தோன்றவில்லை
//•பிடித்த பழமொழி - ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு
•பிடிக்காத பழமொழி - இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு//
வலி தெரிகிறது...
என்ன சொல்வது அக்கா, :(
தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே" இடுகையை பார்த்தேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் கலகலப்ரியா.
"தமிழச்சி" என்று ஒரு பதிவர் இருக்கிறார், இது அவரை பற்றி அல்ல என்பதை ஒரு வரி சொல்லிவிடுங்கள்.
எல்லாமே மாறும்....
படிக்கும்பொழுதே நெஞ்சு கனக்கிறது.
வார்த்தைகள் வரவில்லை,இதயம் கனக்கிறது.
Bio-data Bayadata
நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றிவைக்கும் வரிகள் ப்ரியா.
200 தொடர்பவர்கள். பாராட்டுகள் தலீவி:))
இப்படி வலியான பயோடேட்டா இதுவரை படித்ததில்லை...
இடுகையை திசை மாற்றும் பின்னூட்டங்களை தவிர்த்திடுங்கள்...
வழியில்லாததால் வந்த "வலி". 200க்கு வாழ்த்துக்கள்...
இதயம் (இருந்தால் ) வலிக்கும்
இதயம் கனக்கிறது. :(
:((
என்ன இது கலகலப் பிரியா ரொம்ப சோகம் நீங்க லகலகனு சொன்னாதான் நல்லாஇருக்கு
ரொம்ப கனமான இடுகை...,
வாழ்த்துக்கள்
:(((())))))
”பய” டேட்டா. வலியை வித்தியாசமாக சொல்லியிருக்கிறீர்கள்.
அருமை பிரியா!! வழக்கம் போல கலக்குறீங்க!!
அருமை பிரியா!! வழக்கம் போல கலக்குறீங்க!!
//வானம்பாடிகள் said...
இத்தனை வலியும் தாண்டி கடைசி டேட்டா சொலவடை சிரிக்க வைக்குது.
வெயில்ல மழை பேஞ்சா மாதிரி கனத்த மனதுடன் சிரிப்பு. குட்.//
நன்றிங்க சார்... இங்க எல்லாம் மழைல வெயில் பெய்ஞ்சா நல்லா இருக்கும்... அவ்வ்வ்வ்...
//சின்ன அம்மிணி said...
//உடன்பிறப்பு - உயிருடன் இல்லை//
இருந்தும் இல்லாதது போல் நடிப்பவர்கள்.//
வாங்க அம்மிணி... அது என்னமோ வாஸ்தவம்தான்... ;)... இப்டி உண்மைய தொபுக்கடீர்னு போட்டு உடைக்கப்டாத்...
// எல் போர்ட் said...
ம்ம்.. இந்நிலை என்றாவது மாறும். அது என்று என்று தான் தெரியவில்லை :(//
மாறும்னு தெரியும்.... எப்டின்னு தெரியல... ஹிஹி...
// பிரபாகர் said...
//
பிடித்தது - சனியன்
பிடிக்காதது - அனைத்தும்
//
சகோதரி,
எல்லாவற்றையும் அடக்கியிருக்கிறது!
பிரபாகர்.//
நன்றி அண்ணா... சிலது தவிர்த்திருக்கிறேன்...
//செந்தில் நாதன் said...
எதிர்காலம் - எதிரிகளின் கையில்
கனமான இடுகை!!//
ச்சே ச்சே... எதிரிகள் யாராவது இருக்காங்களா என்ன.... எல்லாருமே நண்பர்கள்தான்... உலகம் அன்புமயமானது....(அப்டிதானுங்க சொல்லணும்...)
//Maheswaran Nallasamy said...
பெயர் - தமிழச்சி
எந்த தமிழச்சிய சொல்லுறீங்க ? ப்ளாக்-ல ஒரு அம்மணி தொடர்ந்து எழுதுறாங்களே.. அவங்களா?
:)//
இது என்ன புதுக்கதை... எனக்கு தெரிஞ்சு தமிழ் பேசுறவங்க எல்லாம் தமிழச்சி... மத்தபடி... எவா அவா..?
// Balavasakan said...
இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு
சூப்பர் பழமொழி அக்கோய்....
வித்தியாசமான பதிவொன்று...ம்..ம் சொல்ல மறந்திட்டன் தமிழ்மணத்தில் உங்கள் இரண்டு பதிவுகள் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது ....பாத்தியளோ...நான் ஓட்டுபோட்டனான் என்ன தருவியள்...//
நன்றி வாசு..! யாருக்கு ஓட்டு போட்டா..? =))... இப்போதைக்கு என் அன்பு உனக்கு எப்பவும் உண்டு... மத்தபடி வீட்டுக்கு வந்தா ஒரு ஸ்டெத் வாங்கிக் கொண்டு வரேன்... ;)
//க.நா.சாந்தி லெக்ஷ்மணன் said...
உங்க எழுத்துக்களும் உங்க கோபமும் எனக்கு ரொம்பப்பிடிக்குது.ஆனா உங்க பக்கத்துக்கு நான் வர்றத பெரும்பாலும் தவிர்த்துடுறதுங்க.காரணம் என்னால கண்ணீர மட்டுமில்ல அதுக்கப்பறமும் எனக்குள்ள பரவுற வேதனயக் கட்டுப்படுத்தமுடியாதுங்க.ஏன்னா நா ஒரு தாய்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
http://andamantamizhosai.blogspot.com///
வேதனைய கட்டுப் படுத்தக் கூடாது... வெளிப்படுத்திடனும்... ;).. (முழுங்கினது போக..)
//அண்ணாமலையான் said...
”சமீபத்திய சாதனை - பிணக்குவியல்கள் மத்தியில் புதைந்திருந்தது”
இது வேதனை...//
அதானுங்க நம்ம சாதனை...
//சங்கர் said...
எதுவும் சொல்ல தோன்றவில்லை//
அப்போ ஏன் சொன்னா..? =))
//Mrs.Faizakader said...
//•பிடித்த பழமொழி - ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு
•பிடிக்காத பழமொழி - இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு//
வலி தெரிகிறது...//
வாங்க Faiza ... நன்றி... :(
// Subankan said...
என்ன சொல்வது அக்கா, :(//
:( சுபாங்கன்...
//சிங்கக்குட்டி said...
தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே" இடுகையை பார்த்தேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் கலகலப்ரியா.//
நன்றி சிங்கக்குட்டி...
// சிங்கக்குட்டி said...
"தமிழச்சி" என்று ஒரு பதிவர் இருக்கிறார், இது அவரை பற்றி அல்ல என்பதை ஒரு வரி சொல்லிவிடுங்கள்.//
ஐயையோ... இதுதான் மகேஸ் சொன்னதா... இதேதுடா வம்பா போச்சு... இல்ல இல்ல இல்ல... அப்டி யாரையும் எனக்கு தெரியாது... தெரியாததால இது அவங்க இல்லை... (போதுமா:-/)
//☀நான் ஆதவன்☀ said...
எல்லாமே மாறும்....//
யா... பட்.. எவ்விதமு..? =))
//சைவகொத்துப்பரோட்டா said...
படிக்கும்பொழுதே நெஞ்சு கனக்கிறது.//
:( சாரிங்க... & நன்றி...
//ஜெரி ஈசானந்தா. said...
வார்த்தைகள் வரவில்லை,இதயம் கனக்கிறது.//
நன்றி ஜெரி... :)
// முகிலன் said...
Bio-data Bayadata//
hmm...
//செ.சரவணக்குமார் said...
நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றிவைக்கும் வரிகள் ப்ரியா.//
நன்றி சரவணக்குமார்...
//வானம்பாடிகள் said...
200 தொடர்பவர்கள். பாராட்டுகள் தலீவி:))//
நிலையில்லா இவ்வுலகில்.... வருவதும் போவதும் தெரியாது... இதில இது வேறயா சார்... இருக்கட்டு...
//ஈரோடு கதிர் said...
இப்படி வலியான பயோடேட்டா இதுவரை படித்ததில்லை...//
:)
//இடுகையை திசை மாற்றும் பின்னூட்டங்களை தவிர்த்திடுங்கள்...//
சரிங்..
//புலவன் புலிகேசி said...
வழியில்லாததால் வந்த "வலி". 200க்கு வாழ்த்துக்கள்...//
நன்றி புலிகேசி... (எண் மாறிக்கொண்டிருப்பது...)
//செந்தேள் said...
இதயம் (இருந்தால் ) வலிக்கும்//
ம்ம்...
//ஆறுமுகம் முருகேசன் said...
இதயம் கனக்கிறது. :(//
நன்றி முருகேசன்... :)
//கண்மணி said...
:((//
:) அழுவாதீங்..
//thenammailakshmanan said...
என்ன இது கலகலப் பிரியா ரொம்ப சோகம் நீங்க லகலகனு சொன்னாதான் நல்லாஇருக்கு//
ம்ம்... சொல்லிடுவோம்.. நன்றி தேனம்மை...
// பேநா மூடி said...
ரொம்ப கனமான இடுகை...,
வாழ்த்துக்கள்//
நன்றி பேநா மூடி..
// jothi said...
:(((())))))//
:)
//பின்னோக்கி said...
”பய” டேட்டா. வலியை வித்தியாசமாக சொல்லியிருக்கிறீர்கள்.//
நன்றி பின்னோக்கி...
// கயல் said...
அருமை பிரியா!! வழக்கம் போல கலக்குறீங்க!!//
வாங்க கயல்... பார்த்து ரொம்ப நாளாச்சு... நன்றி.. :)
இந்த பயோடேட்டாவை மாற்றியமைக்க ஈழத்தமிழர்களால் மட்டுமே முடியும்.என் மனதில் ஒரு கரு உள்ளது, அது இன்றைய சோகம் சார்ந்ததோ, அரசியல் தீர்வு சார்ந்ததோ அல்ல. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
இன்றைய தீர்வு எதிரிகளின் கையில், நிரந்தர தீர்வு எதிரி உங்கள் கையில் என்பதுதான் சுருக்கமாக.
//குடுகுடுப்பை said...
இந்த பயோடேட்டாவை மாற்றியமைக்க ஈழத்தமிழர்களால் மட்டுமே முடியும்.என் மனதில் ஒரு கரு உள்ளது, அது இன்றைய சோகம் சார்ந்ததோ, அரசியல் தீர்வு சார்ந்ததோ அல்ல. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
இன்றைய தீர்வு எதிரிகளின் கையில், நிரந்தர தீர்வு எதிரி உங்கள் கையில் என்பதுதான் சுருக்கமாக.//
சீக்கிரம் சொல்லுங்க கருவ...:-? வெயிட்டிங்கு...
அட நீங்க வேற நான் எழுதாமலே போகலாம். ஆனால் இது ஒன்றும் புதிய விசயமல்ல.
மனம் கிழிந்து சுக்கு நூறாக வைத்தது பதிவு.
என் தமிழ்ச் சகோதரர்கள் நிலையை இதைவிடவும்..., அப்பட்டமாய் முகத்திலறைந்தாற்போல..., சொல்வது கடினம்.
அவர்களோடு ஒப்பிடுகையில் நான் வாழ்வது ராஜ வாழ்க்கை.
அவர்களின் வலி, வேதனை, துயரம் அனைத்தும் பூரணமாக உணர முடிந்தாலும்.., பின்னூட்டமிடுவதைத் தவிர் ஒரு சுட்டுவிரலைக்கூடட அசைக்க முடியாத என் நிலையை நினைத்தால் வெட்கமும் அவமானமும் மட்டுமே மிஞ்சுகிறது.
//குடுகுடுப்பை said...
அட நீங்க வேற நான் எழுதாமலே போகலாம். ஆனால் இது ஒன்றும் புதிய விசயமல்ல.//
இது என்ன ஜகா....ம்ம்...
// +Ve Anthony Muthu said...
மனம் கிழிந்து சுக்கு நூறாக வைத்தது பதிவு.
என் தமிழ்ச் சகோதரர்கள் நிலையை இதைவிடவும்..., அப்பட்டமாய் முகத்திலறைந்தாற்போல..., சொல்வது கடினம்.
அவர்களோடு ஒப்பிடுகையில் நான் வாழ்வது ராஜ வாழ்க்கை.
அவர்களின் வலி, வேதனை, துயரம் அனைத்தும் பூரணமாக உணர முடிந்தாலும்.., பின்னூட்டமிடுவதைத் தவிர் ஒரு சுட்டுவிரலைக்கூடட அசைக்க முடியாத என் நிலையை நினைத்தால் வெட்கமும் அவமானமும் மட்டுமே மிஞ்சுகிறது.//
முத்து... உங்க வார்த்தைகள் எனக்கும்... என்னைப் போன்ற பலருக்கும் சாட்டையடிகள்..! :) இந்த உணர்வு இருந்தாலே போதும்..!
சிரிப்புப்போல எழுதினாலும் மனத்துள் வலிக்கிறது.
//தொழில் - அடிமை.
உபதொழில் - அடிமைக்குரல் எழுப்புவது//
இதற்கு மேலே என்ன தான் சொல்லுவது.....,,,
Thank you Dr.
Thank you Tharshayene..
வாழ்த்துகள் சகோதரி,
இலங்கையில் தமிழனாய் வாழும் அல்லத வாழ நினைக்கும் ஒவ்வொருவரினதும் மனதின் பாசைகளாய் அமைந்தது உங்கள் பதிவு
Post a Comment