Part 14
ஸ்பெஷல் இங்கிலீஷ் கிளாஸ் சுந்தரலிங்கம் மாஸ்டர் அவர்களை யாழ் இடுகையாளர்கள் சில..பல பேருக்குத் தெரிந்திருக்கும். டியர் என்றால் பெண், டேய் என்றால் ஆண் என்று ஆங்கிலம் கற்று வைத்திருந்தவர்களுக்கு ஷால் எங்கே, வில் எங்கே போன்ற நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த மனிதர்.
அவரோட இங்கிலீஷ் ஸ்பெஷலோ இல்லையோ... அவர் பிறந்த இடம் ஸ்பெஷல். தமிழினத் தலைவர் பிறந்த... கடல் சார்ந்த.. அழகிய.. மறத்தமிழ் மண் அது. (தமிழினத் தலைவர் அவரில்லை என்று சொல்லும் டமிலர்ஸ்.. சாரி... திஸ் இஸ் நாட் ஃபார் யூ..)
கிராமத்து நாகரிகத்தை விஞ்சி "இதென்னடா கோதாரி" என்று ஒருத்தி (பாவம் அப்போ அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா பன்னிரண்டு வயதிருக்கும்) சலித்துக் கொண்டதற்கு, கிளாஸ் விட்டு வெளியில் அனுப்பப்பட்டாள். நிறையத் தடவை கேட்டிருந்தும் அந்தச் சொல்லின் அர்த்தம் இது வரை எனக்குத் தெரியவில்லை.. திட்டுவதற்குப் பயன்படுவது என்பது தவிர. சரி... இதை இங்கு சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன..?
அடிமைத்தனம் பற்றியோ.. விடுதலை பற்றியோ... போர் பற்றியோ... நான் கொஞ்சமும் அறிந்திராத வயதில்... அவ்வளவு கண்டிப்பான ஒரு ஆசான்.. தமிழினத் தலைவர் பெயர் சொல்லிச் சிலாகித்த சில நொடிகள் ஏனோ மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது..! ஒரு மகாத்மா காந்தியையோ, ஆபிரகாம் லிங்கனையோ, விவேகானந்தரையோ அல்லது நாவலரையோ அவர் மேற்கோள் காட்டி இருக்கலாம்..
"அவன்" தாயிடமும், தந்தையிடமும் வாங்கிய வசவுகள் எத்தனை? ஆனால் இப்பொழுது இவர்கள் "அவனை"ப் பார்க்கச் சென்றால் மரியாதையுடன்தான் பேச வேண்டுமென்றார். இதைக் கேட்டபோது எதுவும் தோன்றவில்லை... ஆனால் இப்பொழுது... திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்... அவர் தனயனை எவ்வாறெல்லாம் வைதிருப்பார் என்று கற்பனை விரிகிறது.. "அவனும் இருக்கான்... நீயும் இருக்கியேடா"... "உன்னைப் பெற்றதுக்கு ஒரு வாழைக்கன்றோ... தென்னம்பிள்ளையோ.."... "கழுதை.. குட்டிச்சுவர்.."... இன்னும்... என்னவெல்லாமோ... இருந்திருக்கலாம்..
"அவன்" உன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் கிட்டியிராவிடில்... இன்று நீயும்... வேடிக்கை மனிதரைப் போல்... உண்டு உறங்கி.. கதைகள் பேசி... நாலுபேர் சூழ... நாற்பது பேர் ஒப்பாரிக்கு மத்தியில்... பாடையில் ஏற்றப்பட்டிருப்பாய்.
ஆனால் இன்று.. உனக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கும் உயிர்கள் எத்தனை எத்தனை தெரியுமா..? இது உன் தனயனால் மட்டுமே ஆன சாத்தியம் என்பது... சத்தியம். நீ பெற்றதை... தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. கண்ணுக்குப் புலப்படாத மிக வலிமையான அடிமை விலங்குகள் மாட்டப்பட்டிருக்கும் தமிழை "அவன்" தத்தெடுத்துக் கொண்டான். குதறியெடுக்கும்.. நரி போன்ற "கோதாரி" விலங்குகள் மத்தியில்... ஒரு வேட்டைக்காரன்... படைத்தது வரலாறு...!
நம்மைப் போல் நாய்ப்பிழைப்பு உமக்கில்லை ஐயா... "..மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தையாக" நீர் தலை நிமிர்ந்து போகலாமையா அக்னி தேவனிடம்.
இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!
ஸ்பெஷல் இங்கிலீஷ் கிளாஸ் சுந்தரலிங்கம் மாஸ்டர் அவர்களை யாழ் இடுகையாளர்கள் சில..பல பேருக்குத் தெரிந்திருக்கும். டியர் என்றால் பெண், டேய் என்றால் ஆண் என்று ஆங்கிலம் கற்று வைத்திருந்தவர்களுக்கு ஷால் எங்கே, வில் எங்கே போன்ற நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த மனிதர்.
அவரோட இங்கிலீஷ் ஸ்பெஷலோ இல்லையோ... அவர் பிறந்த இடம் ஸ்பெஷல். தமிழினத் தலைவர் பிறந்த... கடல் சார்ந்த.. அழகிய.. மறத்தமிழ் மண் அது. (தமிழினத் தலைவர் அவரில்லை என்று சொல்லும் டமிலர்ஸ்.. சாரி... திஸ் இஸ் நாட் ஃபார் யூ..)
கிராமத்து நாகரிகத்தை விஞ்சி "இதென்னடா கோதாரி" என்று ஒருத்தி (பாவம் அப்போ அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா பன்னிரண்டு வயதிருக்கும்) சலித்துக் கொண்டதற்கு, கிளாஸ் விட்டு வெளியில் அனுப்பப்பட்டாள். நிறையத் தடவை கேட்டிருந்தும் அந்தச் சொல்லின் அர்த்தம் இது வரை எனக்குத் தெரியவில்லை.. திட்டுவதற்குப் பயன்படுவது என்பது தவிர. சரி... இதை இங்கு சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன..?
அடிமைத்தனம் பற்றியோ.. விடுதலை பற்றியோ... போர் பற்றியோ... நான் கொஞ்சமும் அறிந்திராத வயதில்... அவ்வளவு கண்டிப்பான ஒரு ஆசான்.. தமிழினத் தலைவர் பெயர் சொல்லிச் சிலாகித்த சில நொடிகள் ஏனோ மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது..! ஒரு மகாத்மா காந்தியையோ, ஆபிரகாம் லிங்கனையோ, விவேகானந்தரையோ அல்லது நாவலரையோ அவர் மேற்கோள் காட்டி இருக்கலாம்..
"அவன்" தாயிடமும், தந்தையிடமும் வாங்கிய வசவுகள் எத்தனை? ஆனால் இப்பொழுது இவர்கள் "அவனை"ப் பார்க்கச் சென்றால் மரியாதையுடன்தான் பேச வேண்டுமென்றார். இதைக் கேட்டபோது எதுவும் தோன்றவில்லை... ஆனால் இப்பொழுது... திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்... அவர் தனயனை எவ்வாறெல்லாம் வைதிருப்பார் என்று கற்பனை விரிகிறது.. "அவனும் இருக்கான்... நீயும் இருக்கியேடா"... "உன்னைப் பெற்றதுக்கு ஒரு வாழைக்கன்றோ... தென்னம்பிள்ளையோ.."... "கழுதை.. குட்டிச்சுவர்.."... இன்னும்... என்னவெல்லாமோ... இருந்திருக்கலாம்..
"அவன்" உன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் கிட்டியிராவிடில்... இன்று நீயும்... வேடிக்கை மனிதரைப் போல்... உண்டு உறங்கி.. கதைகள் பேசி... நாலுபேர் சூழ... நாற்பது பேர் ஒப்பாரிக்கு மத்தியில்... பாடையில் ஏற்றப்பட்டிருப்பாய்.
ஆனால் இன்று.. உனக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கும் உயிர்கள் எத்தனை எத்தனை தெரியுமா..? இது உன் தனயனால் மட்டுமே ஆன சாத்தியம் என்பது... சத்தியம். நீ பெற்றதை... தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. கண்ணுக்குப் புலப்படாத மிக வலிமையான அடிமை விலங்குகள் மாட்டப்பட்டிருக்கும் தமிழை "அவன்" தத்தெடுத்துக் கொண்டான். குதறியெடுக்கும்.. நரி போன்ற "கோதாரி" விலங்குகள் மத்தியில்... ஒரு வேட்டைக்காரன்... படைத்தது வரலாறு...!
நம்மைப் போல் நாய்ப்பிழைப்பு உமக்கில்லை ஐயா... "..மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தையாக" நீர் தலை நிமிர்ந்து போகலாமையா அக்னி தேவனிடம்.
இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!
(தொடரும்...)
35 ஊக்கம்::
அய்யாவுக்கு இதைவிட சிறந்த பெருமை வேறெவரும் தரமுடியாது.
//இது உன் தனயனால் மட்டுமே ஆன சாத்தியம் என்பது... சத்தியம். நீ பெற்றதை... தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. கண்ணுக்குப் புலப்படாத மிக வலிமையான அடிமை விலங்குகள் மாட்டப்பட்டிருக்கும் தமிழை "அவன்" தத்தெடுத்துக் கொண்டான். குதறியெடுக்கும்.. நரி போன்ற "கோதாரி" விலங்குகள் மத்தியில்... ஒரு வேட்டைக்காரன்... படைத்தது வரலாறு...!//
அட்சர லட்சம் பெறுமென்பார்கள். அத்தகைய உணர்விது.
/இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!//
ம்ம்ம்ம்ம்.எப்படி இப்படி எழுதத் தோணிச்சி:((
உருக்கமான பதிவு... கலகல அக்கா உண்மையும் கூட..
குதறியெடுக்கும்.. நரி போன்ற "கோதாரி" விலங்குகள் மத்தியில்... ஒரு வேட்டைக்காரன்... படைத்தது வரலாறு...!
நிச்சயம் பண்டாரவன்னியன் சங்கிலியன் போன்றோர் வரலாறு போல இவன் வரலாறும் நிச்சயம் எதிர்காலம் சொல்லும்.. பாரத்தீர்களா எல்லாவற்றுக்கும் முடிவு ஒன்றுதான்.
அதாவது ...
தமிழன் ஆளப்பிறந்தவன் அல்ல..!
ஒப்பிலா ஒரு தலைவனை
உலகிற்கு வழங்கிய
உத்தமருக்கு அஞ்சலி.
தரணி போற்றும் தலைவனை
தமிழினத்திற்கு அளித்த
தந்தைக்கு அஞ்சலி.
இப்பூவுலகை விட்டு
ஐயா உம் பூதவுடல் மறைந்தாலும்
புகழுடல் என்றும் மறையாது
தமிழர்தம் நெஞ்சை விட்டு....
//இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!//
ருத்ரதாண்டவத்திற்கு பிறகு, மூச்சு வாங்குவது போலான வரிகள்...
கண்கள் கலங்கியது,ப்ரியா.
அஞ்சலிகள் அய்யா.
என்னை நெகிழ வைத்த பதிவு பிரியா. கடைசிப் பந்தி உருக்கி விட்டது.
அவனைப் போல் ஒருவன் இனி பிறந்து தான் வர வேண்டும்.
எங்களின் அஞ்சலியும்..
//
...
அந்தத் துணியாக... நானும்..
//
அய்யா, பா.ராஜாராம் சொன்னது தான் நானும்.
இதை உங்களை விட யாரலும் சொல்ல இயலாது.
இங்கிவனை நீர் தந்து
எல்லோர் மனத்தினிலும்
தங்கிவிட்டீர் நிரந்தரமாய்
தலைவனவன் தகப்பன் வாழீர்...
பிரபாகர்.
எனது அஞ்சலி.
தலைப்பும் சொல்லியிருப்பதும் டச்சிங்க்.
அஞ்சலிகள் அவர் தந்தைக்கு
மகன் தந்தைக்காற்றுமுதவி இவன் தந்தை
எந்நோற்றாங்கொல் எனும் சொல்
தலைப்பெழுத்து தந்த தந்தைக்கே அடையாளமாக நிற்பது சரித்திரத்தில் மிகச்சிலராலேயே முடிந்திருக்கிறது....ராஜராஜ சோழன், அலெக்ஸாண்டர், காந்தி என்ற அந்த வரிசையில் பிரபாகரனும்...
பல இடர்ப்பாடுகளையும் தாங்கிய, சரித்திரத்தில் எழுதப்பட போகும் அந்த தந்தைக்கு அஞ்சலிகள்...
உண்மையில் நெகிழ்வான பதிவு அவருக்கு என் அஞ்சலி
அண்ணாருக்கு அஞ்சலி.
இப்படியொரு மகனைப் பெற்றதால் அவர் மரணத்திற்கு உலகமே அஞ்சலி செய்கிறது. என் அஞ்சலியும்..
மனதை நெகிழவைக்கும் பதிவு....
தலைவனின் தந்தைக்கு எனது அஞ்சலி்....
இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!//
உணர்வோடு படிக்கும் போது உயிர் வலிக்கிறது ப்ரியா....
தமிழ்ப்பெண்கள்
Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/
என்னை கலங்க வைத்த பதிவு. வேறு ஒன்றும் என்னால் சொல்லமுடியவில்லை
ஆசிரியர்களை பற்றிய நினைவுகள் என்றைக்குமே அலாதியானது, ப்ரியா கடைசி பத்தி பாராட்டுக்களுகப்பாற்பட்டது. உங்கள் அய்யாவிற்கு என் அஞ்சலிகளும்..
தமிழ் இனத்தலைவர் என்று சொல்வதை விட " தமிழ் தேசியத் தலைவர்" என்ற வார்த்தை சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சுய அடையாளம் இற்றுப் போன இந்தியத் தமிழனின், இதயத்தை சுத்தப்படுத்தி, மறந்துபோன தமிழன் மாண்புகளை நினைவூட்டி, " தமிழ் தேசிய இனத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய அந்த மாவீரனை எப்படிப் புகழ்வது?
//இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!//
உண்மையான வரிகள்......
"என்ன தவம் செய்தனை", என்று பாடத்தோன்றுகிறது.
//இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..!//
நெகிழ்த்துகிற வார்த்தைகள்
அய்யாவுக்கு அஞ்சலி
திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பற்றிய நினைவில் இரண்டு நாட்களாய் மனது வாடிக்கிடந்தது...
மேலும் கனமாக்கும் பகிர்வு
Certainly you have shared our feelings too Priya.
When people like us have no words to express our heavy feelings due to this depressive frame of mind, your words of wisdom recreated the strength and morel to fight.
Let us salute his brave heart.
நன்றி வானம்பாடி சார்... இப்படி சில இடத்ல... சில நேரங்கள்ல ஃபீல் பண்ணி இருக்கேன் சார்... இப்பவும் அப்டித்தான்.. .
நன்றி வாசு... ம்ம்.... ஆள வேண்டாம்.. வாழவாவது விடலாம்..
நன்றி ராஜா...
நன்றி பா.ரா... :)
நன்றி ஜெஸ்வந்தி... வாஸ்தவம்...
நன்றி சந்தனா...
நன்றி அண்ணா..
நன்றி குடுகுடுப்பை...
நன்றி சின்னம்மிணி...
நன்றி அது சரி... :).. ம்ம்...
நன்றி புலிகேசி...
நன்றி சைவகொத்துப்பரோட்டா...
நன்றி முகிலன்... :)..
நன்றி சங்கவி...
நன்றி தமிழரசி... :(..
நன்றி தமிழ்ப் பெண்கள் வலைமனைக்கு......
நன்றி தமிழுதயம்...
நன்றி முரளி...
நன்றி ஆரூர்.... சரி அப்டியே சொல்லலாம்...
நன்றி நேசமித்ரன்...
நன்றி கதிர்...
நன்றி... V.R....
தோழர் ப்ரியா ...இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதும்.. தமிழுணர்வை தூண்டிவிடுவாதும் அதை தமிழ்மணத்தில் இணைப்பதும்... தங்களுக்கு குற்ற உணர்ச்சியாக படவில்லையா? எவன் செத்தால் நமக்கென்ன நமக்கென்ன என்று இருப்பவர்களிடம் இப்படி நீங்கள் செய்யலாமா? சித்தெறும்பு சீண்டிறாற் போல் சிறிது உணர்வு வருமா? வராதா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. எங்களுக்கு டீவி சீரியல்.. திரைபடம்.. அரசியல் என்று எவ்வளவோ இந்திகாரனிடம் ஆக வேண்டிய வேலைகள் இருக்கின்றன அதை தாங்கள் கவனித்து உங்கள் கருத்துகளை எழுதுதல் நன்று...
தங்கம் மைண்ட்ல வெச்சிருக்கேன்.
பொறவு வந்து படிச்சிக்கிறேன்.
தமிழகத்தில், இருக்கும் வரை தீவிரவாதியாகவே சித்தரிக்க பட்டவர்,இறந்த பின் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகங்களாக முளைத்து இருக்கிறார்,இப்போது இதற்கும் சேர்த்து போலிஸ் பாதுகாப்பு......
நூறு சதவிகிதம் என்னை திருப்தி படுத்திய எழுத்துக்கள் சிந்தனைகள், உங்கள் வளர்ச்சியை அக்கறையுட்ன் கவனித்துக்கொண்டுருப்பவன்.
வாழ்த்தும் நன்றியும்.
//புரட்சிகர தமிழ்தேசியன்//
வாஸ்தவம்... ட்ரை பண்றேன்... =))
// சத்ரியன் said...
தங்கம் மைண்ட்ல வெச்சிருக்கேன்.
பொறவு வந்து படிச்சிக்கிறேன்.//
நன்றிண்ணே...
நன்றி ஜோதிஜி...
நன்றி kasbaby... இறந்தபின்னு சொல்ல வேணாமே...
"அவன்" உன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் கிட்டியிராவிடில்... இன்று நீயும்... வேடிக்கை மனிதரைப் போல்... உண்டு உறங்கி.. கதைகள் பேசி... நாலுபேர் சூழ... நாற்பது பேர் ஒப்பாரிக்கு மத்தியில்... பாடையில் ஏற்றப்பட்டிருப்பாய்.
என் அஞ்சலி.
கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது.. என் வலைத்தளத்துக்கு வந்து பார்த்து பின்னூட்டம் இடுங்கள் அக்கா.
//இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்//
ம்ம்
நல்ல பதிவு
அவசியமானதும்கூட....
ரசித்துப் படித்தேன் கொஞ்சம் நேரம் கிடைக்கலை இன்னும் கொஞ்சம் படிக்க இருக்கு
படிச்சிட்டு வாறன்....
நன்றி திவ்யா... பார்க்கறேன்...
நன்றி நசரேயன்...
நன்றி தியா..
கண்ணீர் அஞ்சலி!
வார்த்தை கிடைக்காமல் பிதற்ற மட்டுமே முடிகிறது!
நன்றி கயல்... ம்ம்...
Post a Comment