பத்தில் வியாழன்
சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும்
அழுத்தித் துப்பும்
ஒவ்வொரு வினாடியும்
இதய அறைகளில்
ஏதோவொன்று
இறுக மூடிக் கொள்கிறது..
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
______________________________
சனி
பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..
கத்தாத வாயினால்
கெடுக்கப்படும் நுணல்கள்..
பழக் களியில் தேங்கிய
எறும்பின் உழைப்புகள்..
கொம்புடன்
காம்புமிழந்த
ஆக்களில்
முட்டி மோதும்
வாயகன்ற கன்றுகள்..
சிராய்க்கப்படாத முட்கள்
எரிக்கப்படாத எட்கள்..
இவற்றுடன் பெயர்ந்த
இக்கவிதையின் தலைப்பு..
______________________________
63 ஊக்கம்::
என்னமோ சொல்றீங்க ஆனா ஒன்னும் புரியல.
/சுழித்த கீழுதட்டுக்கும்...இதய அறைகளில்
ஏதோவொன்று
இறுக மூடிக் கொள்கிறது.. /
ம்ம். ரொம்ப பவர்ஃபுல்.
/நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது.. /
கடவுளே!
எட்கள்னா என்னம்மா?
/கத்தாத வாயினால்
கெடுக்கப்படும் நுணல்கள்..//
ம்ம்
//பழக் களியில் தேங்கிய
எறும்பின் உழைப்புகள்.. //
//கொம்புடன்
காம்புமிழந்த
ஆக்களில்
முட்டி மோதும்
வாயகன்ற கன்றுகள்.. //
:((
/இவற்றுடன் பெயர்ந்த
இக்கவிதையின் தலைப்பு../
விதி.
/பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..//
வக்கிரம்
இவ்ளோ கடினமா கேள்வித்தாள் குடுத்து லேபிள்ள வெறும் கவிதைன்னு வேற போடுறியே.அவ்வ்வ்வ்வ்வ்வ்:((
//
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
//
வரிகள் வலி மொழிகின்றன
//
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..
//
அருமை
//
கொம்புடன்
காம்புமிழந்த
ஆக்களில்
முட்டி மோதும்
வாயகன்ற கன்றுகள்..
//
சேயின் வேதனை மேவிய தாயின் பரிதவிப்பு!
கண்ணீர் பெருக்கினும் கலக்கல் பிரியா!
நல்லாருக்குங்க கிளி!
:-)
புரியுற மாதிரி இருக்கு
புலம் பெயர்ந்தோர் வியாழன், ஈழத்தில் உள்ளோர் சனியால் பாதிக்கப்பட்டவர்கள். என் அனுமானம் சரியா?
ஒண்ணும் புரியலை. ஓட்டு மட்டும் போட்டுட்டுப் போறேன்..
வரிகள் அனைத்தும் அருமை
சனி புரிஞ்சுது ... ஆனா பக்கத்தில் வியாழன் புரியல பத்துத்தரம் படிச்சுப்பாக்க நேரமில்ல பேந்து வாறன்...ஓகே..
hmmmmmmmm...... interesting.......!
!!!!!!
கலக்கல் ப்ரியா...!
ஆனால் நிறைய வார்த்தைகள் சிந்திக்கிடக்கு
இன்னொரு கவிதை செய்யும் அளவு
:)
என்னவோ சொல்றீங்கன்னு புரியுது ஆனா புரியல.
கவிதை நன்றாகவுள்ளது..
வணக்கம் பிரியா,
உங்கள் கவிதைகள் அருமை. உங்கள் எழுது முலம் பல மனங்களை எழுப்பி விடுங்கள்.
சுவாமி.
நல்லாயிருக்கு ப்ரியா.
// குடுகுடுப்பை said...
என்னமோ சொல்றீங்க ஆனா ஒன்னும் புரியல.//
=))... எதிர்க்கவுஜ ரெடி பண்ணவா..`?
// வானம்பாடிகள் said...
எட்கள்னா என்னம்மா?//
எள்(ளு) பன்மை...
வானம்பாடிகள் said...
/பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..//
வக்கிரம்//
?! கொடுமை..
//வானம்பாடிகள் said...
இவ்ளோ கடினமா கேள்வித்தாள் குடுத்து லேபிள்ள வெறும் கவிதைன்னு வேற போடுறியே.அவ்வ்வ்வ்வ்வ்வ்:((//
காய்ச்சல்ல உளறினது சார்... இதப் போய் கேள்வித்தாள்னா எப்டி..
//கயல் said...
//
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
//
வரிகள் வலி மொழிகின்றன
//
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..
//
அருமை
//
கொம்புடன்
காம்புமிழந்த
ஆக்களில்
முட்டி மோதும்
வாயகன்ற கன்றுகள்..
//
சேயின் வேதனை மேவிய தாயின் பரிதவிப்பு!
கண்ணீர் பெருக்கினும் கலக்கல் பிரியா!//
:(.. ரொம்ப நன்றி கயல்... :)
//பா.ராஜாராம் said...
நல்லாருக்குங்க கிளி!
:-)//
ஐயையோ... நான் யாரும் சொன்னதை சொல்லலையே... =)).. நன்றி பா.ரா. (கவிஞர்கள் எதுனா சொன்னா சாக்கிரதையா இருக்கனும்பா...)
// நசரேயன் said...
புரியுற மாதிரி இருக்கு//
எனக்கும்தான்.. =))
//குடுகுடுப்பை said...
புலம் பெயர்ந்தோர் வியாழன், ஈழத்தில் உள்ளோர் சனியால் பாதிக்கப்பட்டவர்கள். என் அனுமானம் சரியா?//
வியாழன் வேறு.. சனி ஓகே...:)... நன்றி குடுகுடுப்பையார்...
//முகிலன் said...
ஒண்ணும் புரியலை. ஓட்டு மட்டும் போட்டுட்டுப் போறேன்..//
உங்க கால் எங்கே..? =)) நன்றி முகிலன்..
//ஆ.ஞானசேகரன் said...
வரிகள் அனைத்தும் அருமை//
இப்டி புத்திசாலித்தனமா பின்னூட்டம் போட நிறைய பேருக்குத் தெரியல... =))... நன்றி ஞானசேகரன்..
//Balavasakan said...
சனி புரிஞ்சுது ... ஆனா பக்கத்தில் வியாழன் புரியல பத்துத்தரம் படிச்சுப்பாக்க நேரமில்ல பேந்து வாறன்...ஓகே..//
ஆண்டவா... அது புரியக்கூடாதுன்னுதான் எழுதினது... =)) நல்ல வேளை...
// Chitra said...
hmmmmmmmm...... interesting.......!//
ty chitra.. :)
//நேசமித்ரன் said...
!!!!!!
கலக்கல் ப்ரியா...!
ஆனால் நிறைய வார்த்தைகள் சிந்திக்கிடக்கு
இன்னொரு கவிதை செய்யும் அளவு
:)//
ரொம்ப நன்றி நேசமித்ரன்... (ம்ம்... இனிமே சேமிக்க பார்க்கறேன்...)
//முகிலன் said...
என்னவோ சொல்றீங்கன்னு புரியுது ஆனா புரியல.//
=)).. அப்போ அருஞ்சொல் விளக்கம் இல்லையா.. =)))
// முனைவர்.இரா.குணசீலன் said...
கவிதை நன்றாகவுள்ளது..//
நன்றி குணசீலன்..
//V. R said...
வணக்கம் பிரியா,
உங்கள் கவிதைகள் அருமை. உங்கள் எழுது முலம் பல மனங்களை எழுப்பி விடுங்கள்.
சுவாமி.//
வணக்கம் சுவாமி... நன்றி..:)
//செ.சரவணக்குமார் said...
நல்லாயிருக்கு ப்ரியா.//
நன்றி சரவணக்குமார்..
வேண்டாம்... சனி பகவான எல்லாம் வம்புக்கு இழுக்காதிங்க....நல்லதில்ல....
அப்புறம் எல்லா கொள்ளையும் அவர் வந்து உக்காந்திருவாறு....
//சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும்
அழுத்தித் துப்பும்
ஒவ்வொரு வினாடியும்
இதய அறைகளில்
ஏதோவொன்று
இறுக மூடிக் கொள்கிறது..
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
//
செஞ்சோலை சம்பவம்?
//முகிலன் said...
//சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும்
அழுத்தித் துப்பும்
ஒவ்வொரு வினாடியும்
இதய அறைகளில்
ஏதோவொன்று
இறுக மூடிக் கொள்கிறது..
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
//
செஞ்சோலை சம்பவம்?//
அச்சோ இல்லை..! அது ஈழம் சம்மந்தப்பட்டதில்லை... கோபமும்.. வலியும்.. வருத்தமும் சம்மந்தப்பட்டது..!
//
சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
//
விசிலா?
//முகிலன் said...
//
சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
//
விசிலா?//
இது ரொம்ப ஆராய்ஞ்சா வில்லங்கமாச்சே=))... வேணாம் விட்டுடுங்க.. =))
சரி விட்டுடுறேன்..
எதிர் கவுஜ எழுதலாம்தான். ஆனா நீங்க வேற எதாவது உணர்வுல எழுதப்போயி அத கிண்டல் செஞ்ச மாதிரி ஆகிடக்கூடாது.
=)).. அப்பாடா அப்போ என்னோட கவிதை தப்பிச்சதா... (அப்டி ஏதாவது தோணிச்சுன்னா எழுதலாம்... நான் தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன்.. ஓகே..?) =))
பிரமாதம்.. (எதுக்கு வம்பு? நமக்கும் ஒரு கடையிருக்கு..!)
//அண்ணாமலையான் said...
பிரமாதம்.. (எதுக்கு வம்பு? நமக்கும் ஒரு கடையிருக்கு..!)//
இது என்ன ஓசி விளம்பரமா....
என்னமோ .. போங்க .... நல்லாருங்க!
//மணிப்பக்கம் said...
என்னமோ .. போங்க .... நல்லாருங்க!//
சரி சரி டென்ஷன் ஆவாதீங்க.. =))
சகோதரி,
கவிதையை படித்து அய்யா அவர்களின் கருத்துக்களை படித்து புரிந்துகொண்டேன்...
தமிழ் எனக்குத்தெரியும் என்று சொல்வதில்லை இப்போதெல்லாம், உங்களின் தமிழை படிப்பதால்....
பிரபாகர்.
//பிரபாகர் said...
சகோதரி,
கவிதையை படித்து அய்யா அவர்களின் கருத்துக்களை படித்து புரிந்துகொண்டேன்...
தமிழ் எனக்குத்தெரியும் என்று சொல்வதில்லை இப்போதெல்லாம், உங்களின் தமிழை படிப்பதால்....
பிரபாகர்.//
நன்றிண்ணா...
ஆசானுக்கு எல்லாம் புரிஞ்சதான்னு செக் பண்ணிக்குங்க முதல்ல... =))
//பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..//
நடக்கவே முடியாது என்று நினைத்தவை நடந்து விட்ட கொடூரம். அப்படித்தான் புரிகிறது.
எழுதுங்கள் பிரியா. தெறிக்கும் வார்த்தைகள் இங்கே .
அருமையான நடை அனால்
//வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும் //
இந்த வரிகள் எனக்கு புரியல..
வளி - சுழல்காத்து.
வகரம் - வலது கரம் ????? நாக்கு??
ககரம் - க கரம்???? கணினி??
குற்று - short? சிறிய???
யாரோ தவறாக பேசியதைக் கண்ட மன வருத்தமா????????????
மூச்சு வாங்குது.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்தத படிக்கறேன்...
//இந்த வரிகள் எனக்கு புரியல..//
அப்ப மத்த வரியெல்லம்??..உங்களுக்கு பாராட்டுக்கள் சக்தியின் மனம். எனக்கு எந்த வரியுமே புரியல,.. நம்ம அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான்.
சில புரியலைன்னாலும் புரிந்த வரை ரசித்தேன்.
ஆகா அருமை, என்ன அழகான எழுத்துக்கள், அருமையாக குண்டு குண்டாக....
ஆனா எனக்குதான் புரியவில்லை.
பின்பு பொறுமையாக படிக்கிறேன் :-)
//கமலேஷ் said...
வேண்டாம்... சனி பகவான எல்லாம் வம்புக்கு இழுக்காதிங்க....நல்லதில்ல....
அப்புறம் எல்லா கொள்ளையும் அவர் வந்து உக்காந்திருவாறு....//
அதனாலென்ன கமலேஷ்... எனக்கு அவர் பிரண்டுதான்... =))
//ஜெஸ்வந்தி said...
//பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..//
நடக்கவே முடியாது என்று நினைத்தவை நடந்து விட்ட கொடூரம். அப்படித்தான் புரிகிறது.
எழுதுங்கள் பிரியா. தெறிக்கும் வார்த்தைகள் இங்கே .//
நன்றி ஜெஸ்வந்தி... :)
//சக்தியின் மனம் said...
அருமையான நடை அனால்
//வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும் //
இந்த வரிகள் எனக்கு புரியல..//
நன்றி சக்தி... அது முக்கியமில்ல விடுங்க..
//எல் போர்ட் said...
வளி - சுழல்காத்து.
வகரம் - வலது கரம் ????? நாக்கு??
ககரம் - க கரம்???? கணினி??
குற்று - short? சிறிய???
யாரோ தவறாக பேசியதைக் கண்ட மன வருத்தமா????????????
மூச்சு வாங்குது.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்தத படிக்கறேன்...//
அம்மா தாயே... சந்தனா... =))... முடியல... =))...
// jothi said...
//இந்த வரிகள் எனக்கு புரியல..//
அப்ப மத்த வரியெல்லம்??..உங்களுக்கு பாராட்டுக்கள் சக்தியின் மனம். எனக்கு எந்த வரியுமே புரியல,.. நம்ம அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான்.//
=)) ஜோதி... ரொம்பத்தான் நக்கலு... ம்ம்.. இருக்கட்டு இருக்கட்டு..
//புலவன் புலிகேசி said...
சில புரியலைன்னாலும் புரிந்த வரை ரசித்தேன்.//
அது அது அது... புலிகேசி.. நன்றி =))
//சிங்கக்குட்டி said...
ஆகா அருமை, என்ன அழகான எழுத்துக்கள், அருமையாக குண்டு குண்டாக....
ஆனா எனக்குதான் புரியவில்லை.
பின்பு பொறுமையாக படிக்கிறேன் :-)//
=))... நன்றி சிங்கக்குட்டி...
//அம்மா தாயே... சந்தனா... =))... முடியல... =))...//
அப்ப இந்த அட்டெம்ப்ட் ல ஒரு மார்க் கூட தேறலியா? :))இன்னொரு அட்டெம்ப்ட் பண்ண தெம்பு இல்ல.. ஜகா வாங்கிக்கறேன்.. :))
நல்ல கவிதை,வலிகளும்,வேதனைகளும் சாடல்களும் அருமை. உங்க ரொளத்திர பதிவு இன்னமும் குறையவில்லையா?. பதிவர்கள் வீட்டு ஸ்மையல் அறையில் என்ற பதிவு போட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படிக்கவும். நன்றி. ஆனா திட்டக்கூடாது.
Post a Comment