"யானை மனம் மனித மனதைவிட நூறுமடங்கு பெரியது. அந்த கரும்பாறைக்குள் பத்துமனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால் அது பேசுவதில்லை. புலம்புவதும் அழுவதும்இல்லை"
வாசித்து முடித்து ஒரு வாரமாகியும், அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் இம்மியளவு கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யானை என்பது உருவம் சார்ந்தும், சாராமலும் மிக மிகப் பெரிய விஷயம். இதில் நாடே சேவகம் செய்யும் யானை கேசவன், தம்புரானின் சேவகன் மற்றும் உயிர்த் தோழன். கதையின் கடைசி வரிகளில் கண்ணீருடன், ஒற்றைக் கால் தூக்கி மடித்து நிற்கும் கேசவன், நட்பிழந்து, உண்ணாது இளைத்த அதன் தேக பாரத்துடன் என் இதயத்தில் பாறாங்கல்லாக அமர்ந்து விட்டது.
"மத்தகம்", ஜெயமோகனின் குறுநாவல்! குறு நாவலா அது? எத்தகைய கரடுமுரடான பாதைகள், மலைக்குகைகள், ஆளை விழுங்கும் சகதிக் குழிகள் தாண்டிய மிக நீண்ட பயணம் அது.
//அவன் காலைப் பிடித்தபடி நானும் கூடவே சென்றேன். கேசவனுடைய பாதங்கள் மணலில் அமிழும் ஒலி பப்படம் நொறுங்குவது போல இருட்டுக்குள் கேட்டது. ஆற்றங்கரையோரத்து தாழைப்புதர் கூட்டங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி சலசலத்து ஓடியது. இன்னொரு சலசலப்பு. அது பாம்பாகவும் இருக்கலாம். ஆற்றின்கரையில் இல்லாத பாம்பு இல்லை. ”ஆனை போன வழியா போனா ஆபத்து இல்ல”//
நானும் யானையின் தேகம் மறைத்த கரடுமுரடான அப் பாதைவழி, அச்சத்தில் பாதி விழி மூடியபடி, மற்றைய உணர் புலன்களால் நடப்பவற்றை உள்வாங்கிய வண்ணம், அதன் கால் பிடிக்கவும் பயந்து சற்றுத் தள்ளியே போய்க் கொண்டிருந்தேன்..
சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன். இதனாலேயே யானை எனக்கு அறிமுகம் என்று சொல்லிக் கொள்வதில் எள்ளளவும் சம்மதமில்லை.
சிறு வயதில் ஆடுமாடுகளை மணிக்கணக்காக அருகில் இருந்து பார்த்து வளர்ந்திருந்தும், அவை பற்றி எழுத வேண்டுமெனில் "ஆட்டிற்கு நான்கு கால்கள் உண்டு", "ஆட்டிற்கு ஒரு வால் உண்டு" என்ற நர்சரிப் பாடமே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.
இந்த லட்சணத்தில்....
வெள்ளையர் காலூன்றிய கால கட்டத்தின் அரசாண்மை, அதிகாரம்:
//"இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…”
”அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? ”
”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்”
”எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா”//
யானை:
//கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல..
அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும்.”//
யானையின் காலின் கீழும், தந்தத்தின் நுனியிலும் சாவை எழுதிக் கொண்ட யானைப் பாகர்களின் வாழ்க்கை:
//”பலபட்டற எரப்பாளி. அவனுகக மத்த காலையும் ஆனை சவிட்டட்டு”
”ஆசானே இவனுக்க மேல ஆனை கேறினப்ப இவனுக்கு மலமூத்திரம் மட்டும் போகல்ல…” //
//கழுமரத்தில் சாவதற்கு யானையின் காலில் சாகலாம். அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என் தாத்தாவும் யானையால் தான் கொல்லப்பட்டார்கள். அப்பா மேலைத் தாமரைசேரி கிருஷ்ணனின் தந்தஙக்ள் மீது, ரத்தம்வழிந்த குடல் தெச்சிப்பூ மாலை போல தொங்கி மண்ணில் இழுபட, வைக்கோல் பொம்மை போல//
அதற்கு மேல் அவர்களின் துணைகளின் மிகக் கொடுமையான வாழ்க்கை முறை:
//”அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” //
தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது.
//”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து”//
இந்த வரிகளுடன் அந்தப் பெண் என்ன ஆனாள் என்ற பதைப்பு அப்படியே இருக்கிறது..
இவற்றையெல்லாம் மிக மிகத் துல்லியமாக, எழுத்தெழுத்தாக வடித்திருக்கும் ஜெயமோகன் பற்றி, மத்தகம் பற்றி நான் எழுதவதில் அர்த்தமோ அதற்கு எனக்கு அருகதையோ இருப்பதாகப் படவில்லை. குருடன் யானை பார்த்த கதை போல, நானும் இந்த மத்தகத்தைப் புரிந்து கொள்ள விழையும் செயலே இது..
ஜெயமோகனின் ரசனையான, உவமான உவமேயங்களுடன் கூடிய கவித்துவ வரிகளும், நகைச்சுவை உணர்வும் கதை முழுதும் இறைஞ்சிக் கிடக்கின்றன.
//இருட்டுக்குள் ஆறு செல்லும் களகள ஒலியும் கைதை ஓலைகளில் காற்று செல்லும் ஒலியும் கேட்டன. சின்னப்பெண்கள் பேசிச்சிரித்துச்செல்வது போல.//
வாசித்து முடித்து ஒரு வாரமாகியும், அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் இம்மியளவு கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யானை என்பது உருவம் சார்ந்தும், சாராமலும் மிக மிகப் பெரிய விஷயம். இதில் நாடே சேவகம் செய்யும் யானை கேசவன், தம்புரானின் சேவகன் மற்றும் உயிர்த் தோழன். கதையின் கடைசி வரிகளில் கண்ணீருடன், ஒற்றைக் கால் தூக்கி மடித்து நிற்கும் கேசவன், நட்பிழந்து, உண்ணாது இளைத்த அதன் தேக பாரத்துடன் என் இதயத்தில் பாறாங்கல்லாக அமர்ந்து விட்டது.
"மத்தகம்", ஜெயமோகனின் குறுநாவல்! குறு நாவலா அது? எத்தகைய கரடுமுரடான பாதைகள், மலைக்குகைகள், ஆளை விழுங்கும் சகதிக் குழிகள் தாண்டிய மிக நீண்ட பயணம் அது.
//அவன் காலைப் பிடித்தபடி நானும் கூடவே சென்றேன். கேசவனுடைய பாதங்கள் மணலில் அமிழும் ஒலி பப்படம் நொறுங்குவது போல இருட்டுக்குள் கேட்டது. ஆற்றங்கரையோரத்து தாழைப்புதர் கூட்டங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி சலசலத்து ஓடியது. இன்னொரு சலசலப்பு. அது பாம்பாகவும் இருக்கலாம். ஆற்றின்கரையில் இல்லாத பாம்பு இல்லை. ”ஆனை போன வழியா போனா ஆபத்து இல்ல”//
நானும் யானையின் தேகம் மறைத்த கரடுமுரடான அப் பாதைவழி, அச்சத்தில் பாதி விழி மூடியபடி, மற்றைய உணர் புலன்களால் நடப்பவற்றை உள்வாங்கிய வண்ணம், அதன் கால் பிடிக்கவும் பயந்து சற்றுத் தள்ளியே போய்க் கொண்டிருந்தேன்..
சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன். இதனாலேயே யானை எனக்கு அறிமுகம் என்று சொல்லிக் கொள்வதில் எள்ளளவும் சம்மதமில்லை.
சிறு வயதில் ஆடுமாடுகளை மணிக்கணக்காக அருகில் இருந்து பார்த்து வளர்ந்திருந்தும், அவை பற்றி எழுத வேண்டுமெனில் "ஆட்டிற்கு நான்கு கால்கள் உண்டு", "ஆட்டிற்கு ஒரு வால் உண்டு" என்ற நர்சரிப் பாடமே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.
இந்த லட்சணத்தில்....
வெள்ளையர் காலூன்றிய கால கட்டத்தின் அரசாண்மை, அதிகாரம்:
//"இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…”
”அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? ”
”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்”
”எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா”//
யானை:
//கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல..
வெளுத்த பெண்ணின் பெருந்தொடை போன்று பெரிய கொம்புகள் என் தலைக்கு மேல் இருந்தன. தரை தொட்டபிறகும் கால் பங்கு மிஞ்சியிருக்கும் துதிக்கை. நெற்றியிலும் காதிலும் பரவிய சிவப்பு மாம்பூத் தேமல்..
நிரம்பிச் செல்லும் நதி நீரோட்டம் அசைந்து நெளிவது போல அதன் கரியதோல் அசையும்..
அவன் வயிற்றுக்குள் பெரியதோர் செம்புக் குட்டுவத்தை நகர்த்தியது போன்ற ஒலி எழுந்தது.
கேசவன் துதிக்கையை தூக்கி நீட்டி நுனிமூக்கை அசைத்து வாசனை பிடித்தான். துதிக்கை காற்றில் துழாவித் துழாவி அலைந்தது.
அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும்.”//
யானையின் காலின் கீழும், தந்தத்தின் நுனியிலும் சாவை எழுதிக் கொண்ட யானைப் பாகர்களின் வாழ்க்கை:
//”பலபட்டற எரப்பாளி. அவனுகக மத்த காலையும் ஆனை சவிட்டட்டு”
”கொந்நே, என்னை ஆனை கொந்நே… டே அருணாச்சலம்… பெரமு ஓடிவாடா… ஓடிவாடா”
//கழுமரத்தில் சாவதற்கு யானையின் காலில் சாகலாம். அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என் தாத்தாவும் யானையால் தான் கொல்லப்பட்டார்கள். அப்பா மேலைத் தாமரைசேரி கிருஷ்ணனின் தந்தஙக்ள் மீது, ரத்தம்வழிந்த குடல் தெச்சிப்பூ மாலை போல தொங்கி மண்ணில் இழுபட, வைக்கோல் பொம்மை போல//
அதற்கு மேல் அவர்களின் துணைகளின் மிகக் கொடுமையான வாழ்க்கை முறை:
//”அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” //
//”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” //
தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது.
//”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து”//
இந்த வரிகளுடன் அந்தப் பெண் என்ன ஆனாள் என்ற பதைப்பு அப்படியே இருக்கிறது..
இவற்றையெல்லாம் மிக மிகத் துல்லியமாக, எழுத்தெழுத்தாக வடித்திருக்கும் ஜெயமோகன் பற்றி, மத்தகம் பற்றி நான் எழுதவதில் அர்த்தமோ அதற்கு எனக்கு அருகதையோ இருப்பதாகப் படவில்லை. குருடன் யானை பார்த்த கதை போல, நானும் இந்த மத்தகத்தைப் புரிந்து கொள்ள விழையும் செயலே இது..
ஜெயமோகனின் ரசனையான, உவமான உவமேயங்களுடன் கூடிய கவித்துவ வரிகளும், நகைச்சுவை உணர்வும் கதை முழுதும் இறைஞ்சிக் கிடக்கின்றன.
//இருட்டுக்குள் ஆறு செல்லும் களகள ஒலியும் கைதை ஓலைகளில் காற்று செல்லும் ஒலியும் கேட்டன. சின்னப்பெண்கள் பேசிச்சிரித்துச்செல்வது போல.//
//கொம்பனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள் என்று யாரோ கிளப்பிய கிண்டல் கிராமங்களில் பரவி பலரும் அதை நம்பினார்களாம்
பின்னர் இளையதம்புரானுக்குப் பின்னால் ஆணிக்கால் சரள்கல்லில் பட்டு வலிக்க எம்பி எம்பி பாய்ந்து சென்றார் ”வெட்டுக்வ்கிளி போவுந்நே” என்று அச்சிகளில் யாரோ சொல்ல ஒரே சிரிப்பு.//
கதையின் கடைசி ஓட்டத்தில் வரப்பில் கண்ணயர்ந்த பரமண்ணாவின் கனவு, பரமண்ணாவைப் போல் என்னையும் திடுக்கிடச் செய்கிறது.
ஏதோ அர்த்தமற்ற கனவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயல்வது போல, இதற்குள்ளும் பல விதமான அர்த்தங்களைத் தேடிப் பார்க்கிறேன், ஏதோ புலப்படுவது போலவும், பிடிபடாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகிறது.
//விக்ரமார்க்கன் கதையில் அவன் பாதாள லோகம் சென்று நாககன்னிகைகளைக் கல்யாணம் செய்துகொண்டு ஆயிரம் வருடம் வாழ்ந்து நூற்றியெட்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு பிரிந்து திரும்பிவரும்போது பூமியில் ஒரு நொடிதான் ஆகியிருக்கும். அதுபோல ஒரு மாய அனுபவம்.//
ஆம்... ஜெயமோகனின் இந்த வார்த்தைகளைப் போல், அவரின் மத்தகமும் ஒரு மாய அனுபவம், மகானுபவம்!!!
______________________________
ஜெயமோகனை வாசிக்கத் தூண்டிய முரண்தொடை 'அதுசரி'க்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மத்தகம் பற்றிய அதுசரியின் இந்த இடுகையையும் முடிந்தால் பாருங்களேன்! அங்கேயே மத்தகத்தின் இணைப்புகளும்!
____________________________________________________________ ____