"யானை மனம் மனித மனதைவிட நூறுமடங்கு பெரியது. அந்த கரும்பாறைக்குள் பத்துமனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால் அது பேசுவதில்லை. புலம்புவதும் அழுவதும்இல்லை"
வாசித்து முடித்து ஒரு வாரமாகியும், அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் இம்மியளவு கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யானை என்பது உருவம் சார்ந்தும், சாராமலும் மிக மிகப் பெரிய விஷயம். இதில் நாடே சேவகம் செய்யும் யானை கேசவன், தம்புரானின் சேவகன் மற்றும் உயிர்த் தோழன். கதையின் கடைசி வரிகளில் கண்ணீருடன், ஒற்றைக் கால் தூக்கி மடித்து நிற்கும் கேசவன், நட்பிழந்து, உண்ணாது இளைத்த அதன் தேக பாரத்துடன் என் இதயத்தில் பாறாங்கல்லாக அமர்ந்து விட்டது.
"மத்தகம்", ஜெயமோகனின் குறுநாவல்! குறு நாவலா அது? எத்தகைய கரடுமுரடான பாதைகள், மலைக்குகைகள், ஆளை விழுங்கும் சகதிக் குழிகள் தாண்டிய மிக நீண்ட பயணம் அது.
//அவன் காலைப் பிடித்தபடி நானும் கூடவே சென்றேன். கேசவனுடைய பாதங்கள் மணலில் அமிழும் ஒலி பப்படம் நொறுங்குவது போல இருட்டுக்குள் கேட்டது. ஆற்றங்கரையோரத்து தாழைப்புதர் கூட்டங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி சலசலத்து ஓடியது. இன்னொரு சலசலப்பு. அது பாம்பாகவும் இருக்கலாம். ஆற்றின்கரையில் இல்லாத பாம்பு இல்லை. ”ஆனை போன வழியா போனா ஆபத்து இல்ல”//
நானும் யானையின் தேகம் மறைத்த கரடுமுரடான அப் பாதைவழி, அச்சத்தில் பாதி விழி மூடியபடி, மற்றைய உணர் புலன்களால் நடப்பவற்றை உள்வாங்கிய வண்ணம், அதன் கால் பிடிக்கவும் பயந்து சற்றுத் தள்ளியே போய்க் கொண்டிருந்தேன்..
சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன். இதனாலேயே யானை எனக்கு அறிமுகம் என்று சொல்லிக் கொள்வதில் எள்ளளவும் சம்மதமில்லை.
சிறு வயதில் ஆடுமாடுகளை மணிக்கணக்காக அருகில் இருந்து பார்த்து வளர்ந்திருந்தும், அவை பற்றி எழுத வேண்டுமெனில் "ஆட்டிற்கு நான்கு கால்கள் உண்டு", "ஆட்டிற்கு ஒரு வால் உண்டு" என்ற நர்சரிப் பாடமே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.
இந்த லட்சணத்தில்....
வெள்ளையர் காலூன்றிய கால கட்டத்தின் அரசாண்மை, அதிகாரம்:
//"இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…”
”அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? ”
”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்”
”எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா”//
யானை:
//கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல..
அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும்.”//
யானையின் காலின் கீழும், தந்தத்தின் நுனியிலும் சாவை எழுதிக் கொண்ட யானைப் பாகர்களின் வாழ்க்கை:
//”பலபட்டற எரப்பாளி. அவனுகக மத்த காலையும் ஆனை சவிட்டட்டு”
”ஆசானே இவனுக்க மேல ஆனை கேறினப்ப இவனுக்கு மலமூத்திரம் மட்டும் போகல்ல…” //
//கழுமரத்தில் சாவதற்கு யானையின் காலில் சாகலாம். அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என் தாத்தாவும் யானையால் தான் கொல்லப்பட்டார்கள். அப்பா மேலைத் தாமரைசேரி கிருஷ்ணனின் தந்தஙக்ள் மீது, ரத்தம்வழிந்த குடல் தெச்சிப்பூ மாலை போல தொங்கி மண்ணில் இழுபட, வைக்கோல் பொம்மை போல//
அதற்கு மேல் அவர்களின் துணைகளின் மிகக் கொடுமையான வாழ்க்கை முறை:
//”அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” //
தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது.
//”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து”//
இந்த வரிகளுடன் அந்தப் பெண் என்ன ஆனாள் என்ற பதைப்பு அப்படியே இருக்கிறது..
இவற்றையெல்லாம் மிக மிகத் துல்லியமாக, எழுத்தெழுத்தாக வடித்திருக்கும் ஜெயமோகன் பற்றி, மத்தகம் பற்றி நான் எழுதவதில் அர்த்தமோ அதற்கு எனக்கு அருகதையோ இருப்பதாகப் படவில்லை. குருடன் யானை பார்த்த கதை போல, நானும் இந்த மத்தகத்தைப் புரிந்து கொள்ள விழையும் செயலே இது..
ஜெயமோகனின் ரசனையான, உவமான உவமேயங்களுடன் கூடிய கவித்துவ வரிகளும், நகைச்சுவை உணர்வும் கதை முழுதும் இறைஞ்சிக் கிடக்கின்றன.
//இருட்டுக்குள் ஆறு செல்லும் களகள ஒலியும் கைதை ஓலைகளில் காற்று செல்லும் ஒலியும் கேட்டன. சின்னப்பெண்கள் பேசிச்சிரித்துச்செல்வது போல.//
வாசித்து முடித்து ஒரு வாரமாகியும், அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் இம்மியளவு கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யானை என்பது உருவம் சார்ந்தும், சாராமலும் மிக மிகப் பெரிய விஷயம். இதில் நாடே சேவகம் செய்யும் யானை கேசவன், தம்புரானின் சேவகன் மற்றும் உயிர்த் தோழன். கதையின் கடைசி வரிகளில் கண்ணீருடன், ஒற்றைக் கால் தூக்கி மடித்து நிற்கும் கேசவன், நட்பிழந்து, உண்ணாது இளைத்த அதன் தேக பாரத்துடன் என் இதயத்தில் பாறாங்கல்லாக அமர்ந்து விட்டது.
"மத்தகம்", ஜெயமோகனின் குறுநாவல்! குறு நாவலா அது? எத்தகைய கரடுமுரடான பாதைகள், மலைக்குகைகள், ஆளை விழுங்கும் சகதிக் குழிகள் தாண்டிய மிக நீண்ட பயணம் அது.
//அவன் காலைப் பிடித்தபடி நானும் கூடவே சென்றேன். கேசவனுடைய பாதங்கள் மணலில் அமிழும் ஒலி பப்படம் நொறுங்குவது போல இருட்டுக்குள் கேட்டது. ஆற்றங்கரையோரத்து தாழைப்புதர் கூட்டங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி சலசலத்து ஓடியது. இன்னொரு சலசலப்பு. அது பாம்பாகவும் இருக்கலாம். ஆற்றின்கரையில் இல்லாத பாம்பு இல்லை. ”ஆனை போன வழியா போனா ஆபத்து இல்ல”//
நானும் யானையின் தேகம் மறைத்த கரடுமுரடான அப் பாதைவழி, அச்சத்தில் பாதி விழி மூடியபடி, மற்றைய உணர் புலன்களால் நடப்பவற்றை உள்வாங்கிய வண்ணம், அதன் கால் பிடிக்கவும் பயந்து சற்றுத் தள்ளியே போய்க் கொண்டிருந்தேன்..
சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன். இதனாலேயே யானை எனக்கு அறிமுகம் என்று சொல்லிக் கொள்வதில் எள்ளளவும் சம்மதமில்லை.
சிறு வயதில் ஆடுமாடுகளை மணிக்கணக்காக அருகில் இருந்து பார்த்து வளர்ந்திருந்தும், அவை பற்றி எழுத வேண்டுமெனில் "ஆட்டிற்கு நான்கு கால்கள் உண்டு", "ஆட்டிற்கு ஒரு வால் உண்டு" என்ற நர்சரிப் பாடமே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.
இந்த லட்சணத்தில்....
வெள்ளையர் காலூன்றிய கால கட்டத்தின் அரசாண்மை, அதிகாரம்:
//"இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…”
”அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? ”
”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்”
”எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா”//
யானை:
//கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல..
வெளுத்த பெண்ணின் பெருந்தொடை போன்று பெரிய கொம்புகள் என் தலைக்கு மேல் இருந்தன. தரை தொட்டபிறகும் கால் பங்கு மிஞ்சியிருக்கும் துதிக்கை. நெற்றியிலும் காதிலும் பரவிய சிவப்பு மாம்பூத் தேமல்..
நிரம்பிச் செல்லும் நதி நீரோட்டம் அசைந்து நெளிவது போல அதன் கரியதோல் அசையும்..
அவன் வயிற்றுக்குள் பெரியதோர் செம்புக் குட்டுவத்தை நகர்த்தியது போன்ற ஒலி எழுந்தது.
கேசவன் துதிக்கையை தூக்கி நீட்டி நுனிமூக்கை அசைத்து வாசனை பிடித்தான். துதிக்கை காற்றில் துழாவித் துழாவி அலைந்தது.
அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும்.”//
யானையின் காலின் கீழும், தந்தத்தின் நுனியிலும் சாவை எழுதிக் கொண்ட யானைப் பாகர்களின் வாழ்க்கை:
//”பலபட்டற எரப்பாளி. அவனுகக மத்த காலையும் ஆனை சவிட்டட்டு”
”கொந்நே, என்னை ஆனை கொந்நே… டே அருணாச்சலம்… பெரமு ஓடிவாடா… ஓடிவாடா”
//கழுமரத்தில் சாவதற்கு யானையின் காலில் சாகலாம். அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என் தாத்தாவும் யானையால் தான் கொல்லப்பட்டார்கள். அப்பா மேலைத் தாமரைசேரி கிருஷ்ணனின் தந்தஙக்ள் மீது, ரத்தம்வழிந்த குடல் தெச்சிப்பூ மாலை போல தொங்கி மண்ணில் இழுபட, வைக்கோல் பொம்மை போல//
அதற்கு மேல் அவர்களின் துணைகளின் மிகக் கொடுமையான வாழ்க்கை முறை:
//”அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” //
//”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” //
தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது.
//”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து”//
இந்த வரிகளுடன் அந்தப் பெண் என்ன ஆனாள் என்ற பதைப்பு அப்படியே இருக்கிறது..
இவற்றையெல்லாம் மிக மிகத் துல்லியமாக, எழுத்தெழுத்தாக வடித்திருக்கும் ஜெயமோகன் பற்றி, மத்தகம் பற்றி நான் எழுதவதில் அர்த்தமோ அதற்கு எனக்கு அருகதையோ இருப்பதாகப் படவில்லை. குருடன் யானை பார்த்த கதை போல, நானும் இந்த மத்தகத்தைப் புரிந்து கொள்ள விழையும் செயலே இது..
ஜெயமோகனின் ரசனையான, உவமான உவமேயங்களுடன் கூடிய கவித்துவ வரிகளும், நகைச்சுவை உணர்வும் கதை முழுதும் இறைஞ்சிக் கிடக்கின்றன.
//இருட்டுக்குள் ஆறு செல்லும் களகள ஒலியும் கைதை ஓலைகளில் காற்று செல்லும் ஒலியும் கேட்டன. சின்னப்பெண்கள் பேசிச்சிரித்துச்செல்வது போல.//
//கொம்பனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள் என்று யாரோ கிளப்பிய கிண்டல் கிராமங்களில் பரவி பலரும் அதை நம்பினார்களாம்
பின்னர் இளையதம்புரானுக்குப் பின்னால் ஆணிக்கால் சரள்கல்லில் பட்டு வலிக்க எம்பி எம்பி பாய்ந்து சென்றார் ”வெட்டுக்வ்கிளி போவுந்நே” என்று அச்சிகளில் யாரோ சொல்ல ஒரே சிரிப்பு.//
கதையின் கடைசி ஓட்டத்தில் வரப்பில் கண்ணயர்ந்த பரமண்ணாவின் கனவு, பரமண்ணாவைப் போல் என்னையும் திடுக்கிடச் செய்கிறது.
ஏதோ அர்த்தமற்ற கனவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயல்வது போல, இதற்குள்ளும் பல விதமான அர்த்தங்களைத் தேடிப் பார்க்கிறேன், ஏதோ புலப்படுவது போலவும், பிடிபடாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகிறது.
//விக்ரமார்க்கன் கதையில் அவன் பாதாள லோகம் சென்று நாககன்னிகைகளைக் கல்யாணம் செய்துகொண்டு ஆயிரம் வருடம் வாழ்ந்து நூற்றியெட்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு பிரிந்து திரும்பிவரும்போது பூமியில் ஒரு நொடிதான் ஆகியிருக்கும். அதுபோல ஒரு மாய அனுபவம்.//
ஆம்... ஜெயமோகனின் இந்த வார்த்தைகளைப் போல், அவரின் மத்தகமும் ஒரு மாய அனுபவம், மகானுபவம்!!!
______________________________
ஜெயமோகனை வாசிக்கத் தூண்டிய முரண்தொடை 'அதுசரி'க்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மத்தகம் பற்றிய அதுசரியின் இந்த இடுகையையும் முடிந்தால் பாருங்களேன்! அங்கேயே மத்தகத்தின் இணைப்புகளும்!
____________________________________________________________ ____
108 ஊக்கம்::
துண்டு போட்டுக்கறேன்
இவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பின் ஓர் உன்னத அறிமுகம். அந்த நாவலின் சிறப்பான பகுதிகளின் ஒரு தொகுப்பு என்றாலும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. நன்றியம்மா.
/தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது./
ஆமாம். இந்த உணர்வு மிக அழுத்தமாக எழுவது உண்மை.
/சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன்./
நீ ஒரு அடி முன்னால் வைக்க மறுப்பதைக் கண்டு யானையே முன்னால் வந்தது அழகு:)
me the first?
/ஆம்... ஜெயமோகனின் இந்த வார்த்தைகளைப் போல், அவரின் மத்தகமும் ஒரு மாய அனுபவம், மகானுபவம்!!! /
இப்படிப் படிப்பது சுகானுபவம்.
ஒரு கட்டுரை கவிதை மாதிரி இருக்கிறது ! (கவனிக்க ஆச்சர்யகுறி)
வலையுலகுக்கு வந்து சரியாக ஒரு ஆண்டு நிறைந்திருக்கிறது. எத்தனை அழகான எழுத்துக்களை எங்களுக்கு தந்திருக்கிறாய். கூடவே இருந்து இந்த வளர்ச்சியை மகிழ்ச்சியுடன் கண்டு, நானும் கற்றுக் கொண்டு...பாராட்டுக்கள் அம்மா. இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.
என்ன அநியாயம். நீங்க பாலா சார்ட்ட சொல்லிட்டுதான் பதிவு போடுவீங்களா? கரெக்டா முதல் ஆளா பின்னூட்டம் போடுறார். நான் தான் பர்ஸ்ட் நினைச்சேன், பாத்ததும் பர்ஸ்ட் ஆயிட்டேன்.
ஜோதி... நக்கலா.. =))... எனக்கும் புரியல பாலா சார் எப்புடி சட்டுன்னு துண்டு போடுறாங்கன்னு.. இனிமே நானே முதல் காமென்ட் போடுறேன்.. =))
நானும் படிக்க இருப்பதால் , பதிவு படிக்கவில்லை. முரண்தொடையில் ஏற்கனவே படிச்சாச்சு.
புத்தகத்திற்கான அருமையா அறிமுகத்துக்கு நன்றி
ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்
ச்சீ,. நக்கலெல்லாம் இல்லை. ஜோக்தான்.
அடிக்கடி கனவுல யானை வரும், அதுனால எனக்கு யானைன்னா மட்டும் பயம்,. ஆனா உங்க பதிவு அப்படி அல்ல. ஒரு வேளை நாவலைபடித்தால்தான் உங்கள் பதிவினை முழுமையாக ரசிக்க முடியும் என நினைக்கிறேன்.
கதைக்கு நல்ல அறிமுகம். நான் அது சரியையும் ஜெயமோகனையும் வாசித்து விட்டு வருகிறேன்.
ஜெயமோகன் மீது எனக்கு ஒரு தவறான இமேஜ் இருக்கிறது. அதை இந்தப் பதிவு துடைத்திருக்கிறது
பாலா சார் உங்க பதிவுக்காக துண்டோட காத்துட்டே இருப்பார் போல.
மிக்க மகிழ்ச்சி . ஓராண்டு நிறைவுக்கும் இந்த விமர்சனத்துக்கும் வாழ்த்துகள்
மத்தகம் மிக நுண்ணிய வாழ்வியலின் கோட்பாடுகளை சொல்லாமல் சொல்லும் இடங்கள் கொண்ட உரக்க பேசும் குறு நூல்
நல்லதொரு பகிர்வு ப்ரியா.
ஜெய மோகனை இது வரை வாசித்தது இல்லை. உங்கள் அருமையான அறிமுகம் வாசிக்கத் தூண்டுகிறது. அதற்கு நன்றி.
முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.
உங்களுடைய இந்த இடுகையைப் படிக்கும் போது, நான் வாசிப்பது எல்லாம் மேம்போக்காக இருப்பது மாதிரி தோன்ற ஆரம்பித்துவிட்டது. இன்னும் உள் வாங்கி வாசிக்கணும் என்ற ஆசை ஏற்படுகின்றது.
படிக்கணும்னு தோணிடுச்சு. யானை என்னமோ எனக்கு ரொம்பப்பிடிக்கும்.
தமிழ்மணத்துல ஏன் தலைப்பு தெரிய மாட்டேங்குது ".." எல்லாம் இருக்கறதாலன்னு நினைக்கறேன்.
//சின்ன அம்மிணி said...
தமிழ்மணத்துல ஏன் தலைப்பு தெரிய மாட்டேங்குது ".." எல்லாம் இருக்கறதாலன்னு நினைக்கறேன்.//
illa title poda munnaadi yaaro tamilmanam la submit pannittanga.. =))
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு எனது வாழ்த்துக்கள்....
// குடுகுடுப்பை said...
நானும் படிக்க இருப்பதால் , பதிவு படிக்கவில்லை. முரண்தொடையில் ஏற்கனவே படிச்சாச்சு.
//
யோவ்.. நீரு எந்த இடுகையைத்தான் படிச்சி பின்னூட்டம் போட்டியரு..அல்லோ.. ஆனா நான் படிச்சிட்டேன்
அப்படியா !!! ஆனா ஜெயமோகன் ஒரு புத்தகம்கூட படிச்சதில்லே!!!
//
நானும் யானையின் தேகம் மறைத்த கரடுமுரடான அப் பாதைவழி, அச்சத்தில் பாதி விழி மூடியபடி, மற்றைய உணர் புலன்களால் நடப்பவற்றை உள்வாங்கிய வண்ணம், அதன் கால் பிடிக்கவும் பயந்து சற்றுத் தள்ளியே போய்க் கொண்டிருந்தேன்..
//
Damn!
ஜெ.மோ எழுதினது கதைன்னா உங்க வாசிப்பனுபவம் கவிதை மாதிரி இருக்கு...
//
சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன்.
//
நீங்க மட்டுமில்ல, அந்த யானைக் கூட அப்படித்தான் ஃபீல் பண்ணுச்சாம்...:0))))
//
வெள்ளையர் காலூன்றிய கால கட்டத்தின் அரசாண்மை, அதிகாரம்:
//
வெள்ளையர் காலூன்றிய காலம் என்றல்ல, கேசவன் யானையே ஒரு அரசியல் குறியீடு என்பது என் புரிதல்...
(கேசவன் என்ற வார்த்தையை நீக்கி, அரசியல் அதிகாரம் என்று பதிலீடு இட்டால், கதை முற்றிலும் வேறு கோணத்த்தில் திரும்புவதாக நான் நினைக்கிறேன்....அல்லது யானை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி என்று பதிலிட்டாலும் கதையின் போக்கும் செய்தியும் வேறாகிறது...)
//”அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” //
//
”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்”
//
இந்த வரிகள் மிக அழுத்தமானவை ப்ரியா...இதில் அந்த துணை பெண் என்பதை நீக்கி, அதிகார வர்க்கம் என்று இடையிட்டால்?? :0))))
//
தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது.
//
தர்மம் வெல்லும் என்பது பெரும்பாலும் நடைமுறையில் சாத்தியமில்லை...நல்லவன் மட்டுமல்ல, கெட்டவனும் வெல்வான்....
//
ஜெயமோகனை வாசிக்கத் தூண்டிய முரண்தொடை 'அதுசரி'க்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மத்தகம் பற்றிய அதுசரியின் இந்த இடுகையையும் முடிந்தால் பாருங்களேன்! அங்கேயே மத்தகத்தின் இணைப்புகளும்!
//
ஹைய்யா...எம் பேரும் வந்துடுச்சே....
அது ஒண்ணுமில்ல...தண்ணியே அடிக்காதவன் ஒரு ஃபுல் பாட்டில பார்த்த மாதிரி, எப்பனா எதுனா படிச்சா நாங்களும் படிச்சிருக்கோமில்லன்னு எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டு திரியறது என்னோட கெட்ட பழக்கம்...அப்படித் தான் இது...:0))))))
(இது எதுக்குன்னா படிப்பறிவில்லாத பயன்னு நாலு பேரு நாளைக்கு பேசப்படாது பாருங்க...அதுக்குத் தான் இப்பிடி வெளம்பரம் பண்றது...)
//
jothi said...
என்ன அநியாயம். நீங்க பாலா சார்ட்ட சொல்லிட்டுதான் பதிவு போடுவீங்களா? கரெக்டா முதல் ஆளா பின்னூட்டம் போடுறார். நான் தான் பர்ஸ்ட் நினைச்சேன், பாத்ததும் பர்ஸ்ட் ஆயிட்டேன்.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :0)))))
//
குடுகுடுப்பை said...
நானும் படிக்க இருப்பதால் , பதிவு படிக்கவில்லை. முரண்தொடையில் ஏற்கனவே படிச்சாச்சு.
//
ஆமா, தலீவரு, ரெண்டாயிரத்து தொன்னூத்தேழுக்குள்ள படிச்சிட்டி அப்புறம் வந்து கருத்து சொல்வாரு....:0)))))
(யோவ்...மொதல்ல பொன்னியின் செல்வனை படிச்சி முடிங்கய்யா...சொல்லி ரெண்டு வருஷம் ஆவுது...)
//
முகிலன் said...
ஜெயமோகன் மீது எனக்கு ஒரு தவறான இமேஜ் இருக்கிறது. அதை இந்தப் பதிவு துடைத்திருக்கிறது
//
பாண்டியரே, இதென்ன புதுக் கதை....தெளிவா சொல்லுங்கப்பு....
ஆமாம்...
வாங்க கலகலா...உடல் நலம் சரியில்லைன்னு ஐயா சொன்னாரு. இப்ப எப்புடி இருக்கீங்க? படிச்சிட்டு திரும்ப வாரேன்
பகிர்வுக்கு நன்றி ப்ரியா. படிக்கிறேன்.
நீங்களும் ஜெயமோகன் வாசகரா!
நல்ல பகிர்வு நன்றி
நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணர செய்துள்ளீர்கள்....... நன்றி
ஒரு வருடம்! வாழ்த்துக்கள்!
பதிவும் அருமை. வாழ்த்துக்கள்!
//தமிழ்மணத்துல ஏன் தலைப்பு தெரிய மாட்டேங்குது ".." //
பிரபலம் ஆயாச்சுன்னா யார் கண்லையும் சிக்க மாட்டாங்கன்னு அர்த்தம்.
:)
எங்க மத்தில வாழ்றதே ஒரு சாதனைதான். அதிலே ஒரு வருஷம் வேற ஆச்சா. அதே பெரிய சாதனை.
:)
நல்ல பகிர்வு ப்ரியா! படிக்கிறேன் !
பகிர்விற்கு நன்றி ப்ரியா.
அருமையான எழுத்து நடை.
ரைட்டு, படிச்சிர வேண்டியதுதான்.
நான் இன்னமும் அந்த புத்தகம் படிக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கின்றேன். அறிமுகத்திற்க்கு நன்றி.
பகிர்ந்தமையும் சிறப்பு...
நானெல்லாம் இந்த புத்தகத்தப்படிச்சு புரிஞ்சிக்க முடியுமான்னுதான் தெரியல...ம்ம்ம்... பாப்போம்..
//விளையும் செயலே //
விழையும் செயலே ?
:)
Unga Blog Romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
High Definition Youtube Video Download free Click here
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
Type anywhere in your language Type a word in English and press SPACE to transliterate
இதுவரை ஜெயமோகன் படித்ததில்லை. பலமுறை படிக்க விரும்பி சென்றாலும் சுஜாதா, எஸ்.ரா புத்தகங்களிடமே மனம் நின்று போகும். இப்போது என்னை நீங்கள் படிக்கத் தூண்டியிருக்கிறீர்கள். வாங்கிப் படிச்சிர வேண்டியதுதான். நன்றி லகலகா. இனிமே லீவு போட்டா லீவு லெட்டர் கொடுங்க...
ம்ம்.. நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..
//வானம்பாடிகள் said..//
கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்... உங்க ஆசீர்வாதம்... என்னோட எழுத்த படிக்கிற உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்...
// jothi said...
ஒரு கட்டுரை கவிதை மாதிரி இருக்கிறது ! (கவனிக்க ஆச்சர்யகுறி)//
அதாவது இதுவும் புரியல... ஸ்ஸ்ஸ்ஸபா... பின்னூட்டமும் கவிதை மாதிரிதான் இருக்கு... ஆனா ஆச்சரியக்குறி இல்ல.. எனக்குப் புரிஞ்சிடுத்தே... =))
//குடுகுடுப்பை said...
நானும் படிக்க இருப்பதால் , பதிவு படிக்கவில்லை. முரண்தொடையில் ஏற்கனவே படிச்சாச்சு.//
ம்க்கும்... படிச்ச மாதிரிதான்....
//ஈரோடு கதிர் said...
புத்தகத்திற்கான அருமையா அறிமுகத்துக்கு நன்றி
ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்//
நன்றி @@கதிர்... =))
// jothi said...
ச்சீ,. நக்கலெல்லாம் இல்லை. ஜோக்தான்.
அடிக்கடி கனவுல யானை வரும், அதுனால எனக்கு யானைன்னா மட்டும் பயம்,. ஆனா உங்க பதிவு அப்படி அல்ல. ஒரு வேளை நாவலைபடித்தால்தான் உங்கள் பதிவினை முழுமையாக ரசிக்க முடியும் என நினைக்கிறேன்.//
ஒரு வழியா புரியும் மார்க்கம் புரிஞ்சுடுத்து...
//முகிலன் said...
கதைக்கு நல்ல அறிமுகம். நான் அது சரியையும் ஜெயமோகனையும் வாசித்து விட்டு வருகிறேன்.
ஜெயமோகன் மீது எனக்கு ஒரு தவறான இமேஜ் இருக்கிறது. அதை இந்தப் பதிவு துடைத்திருக்கிறது//
சார் ஜெயமோகன் சார்.... கொஞ்சம் கவனிங்க... நான் எப்பேர்ப்பட்ட சேவை செஞ்சிருக்கேன் உங்களுக்குன்னு... =))
//பாலா சார் உங்க பதிவுக்காக துண்டோட காத்துட்டே இருப்பார் போல.//
அட விடுங்க.. இப்போ பாறாங்கல்லே போட்டாலும் வேலைக்காவது.. துண்டுதானே... உஃப்ப்ன்னு ஊதிடலாம்...
//நேசமித்ரன் said...
மிக்க மகிழ்ச்சி . ஓராண்டு நிறைவுக்கும் இந்த விமர்சனத்துக்கும் வாழ்த்துகள்
மத்தகம் மிக நுண்ணிய வாழ்வியலின் கோட்பாடுகளை சொல்லாமல் சொல்லும் இடங்கள் கொண்ட உரக்க பேசும் குறு நூல்//
நன்றி நேசமித்ரன்... வாஸ்தவம்...
// துபாய் ராஜா said...
நல்லதொரு பகிர்வு ப்ரியா.//
நன்றி ராஜா...
//இராகவன் நைஜிரியா said...
ஜெய மோகனை இது வரை வாசித்தது இல்லை. உங்கள் அருமையான அறிமுகம் வாசிக்கத் தூண்டுகிறது. அதற்கு நன்றி.
முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.//
ரொம்ப நன்றி ராகவன் சார்... :)
//இராகவன் நைஜிரியா said...
உங்களுடைய இந்த இடுகையைப் படிக்கும் போது, நான் வாசிப்பது எல்லாம் மேம்போக்காக இருப்பது மாதிரி தோன்ற ஆரம்பித்துவிட்டது. இன்னும் உள் வாங்கி வாசிக்கணும் என்ற ஆசை ஏற்படுகின்றது.//
நானே மேம்போக்காதான் வாசிச்சுக்கிட்டிருக்கேன்.... உங்க ஜாதிதான் நானும்... நீங்க தைரியமா வாசிங்க...
//சின்ன அம்மிணி said...
படிக்கணும்னு தோணிடுச்சு. யானை என்னமோ எனக்கு ரொம்பப்பிடிக்கும்.//
படிங்கோ படிங்கோ... எனக்கும் யானை பிடிக்கும்... பக்கத்ல போகத்தான் பயம்... =))...
//Sangkavi said...
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு எனது வாழ்த்துக்கள்....//
நன்றி சங்கவி...
// நசரேயன் said...
// குடுகுடுப்பை said...
நானும் படிக்க இருப்பதால் , பதிவு படிக்கவில்லை. முரண்தொடையில் ஏற்கனவே படிச்சாச்சு.
//
யோவ்.. நீரு எந்த இடுகையைத்தான் படிச்சி பின்னூட்டம் போட்டியரு..அல்லோ.. ஆனா நான் படிச்சிட்டேன்//
சபாஷ் நசரேயன்... இப்டி சட்டைய புடிச்சு நாலு வார்த்தை கேக்க உங்கள மாதிரி துணிச்சலான ஆளுங்க நாலு பேரு இருக்கிறாங்கன்னு நினைக்கிறப்போ... அவ்வ்வ்வ்....
//Balavasakan said...
அப்படியா !!! ஆனா ஜெயமோகன் ஒரு புத்தகம்கூட படிச்சதில்லே!!!//
ம்ம்... நான் மட்டும்..?.. இதுதான் முதலும்.... ச்சே ச்சே... ஆரம்பமும்னு சொல்ல வந்தேன்...
//அது சரி said...
Damn!
ஜெ.மோ எழுதினது கதைன்னா உங்க வாசிப்பனுபவம் கவிதை மாதிரி இருக்கு...//
இது ஜோதி மாதிரி புரியலைங்கிற அர்த்தத்ல சொல்லலைதானே... =)).. நன்றி நன்றி நன்றி... :D
//
நீங்க மட்டுமில்ல, அந்த யானைக் கூட அப்படித்தான் ஃபீல் பண்ணுச்சாம்...:0))))//
தோடா... அவிடே பாலா சாரோடே கொமென்ட் கொஞ்சம் நோக்காம்..
//வெள்ளையர் காலூன்றிய காலம் என்றல்ல, கேசவன் யானையே ஒரு அரசியல் குறியீடு என்பது என் புரிதல்...
(கேசவன் என்ற வார்த்தையை நீக்கி, அரசியல் அதிகாரம் என்று பதிலீடு இட்டால், கதை முற்றிலும் வேறு கோணத்த்தில் திரும்புவதாக நான் நினைக்கிறேன்....அல்லது யானை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி என்று பதிலிட்டாலும் கதையின் போக்கும் செய்தியும் வேறாகிறது...)//
அரசியல் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாததால் எனக்கு அவ்வாறான ஒரு புரிதல் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை.... ஜாதி என்று நோக்கினும் அப்டியே..
//
இந்த வரிகள் மிக அழுத்தமானவை ப்ரியா...இதில் அந்த துணை பெண் என்பதை நீக்கி, அதிகார வர்க்கம் என்று இடையிட்டால்?? :0))))//
பதைப்புக்குப் பதிலாக உதைப்பு வந்திருக்கும்...
//
தர்மம் வெல்லும் என்பது பெரும்பாலும் நடைமுறையில் சாத்தியமில்லை...நல்லவன் மட்டுமல்ல, கெட்டவனும் வெல்வான்....//
இது நம்மளுக்கு சொல்லித்தான் தெரியணுமோ.. =)).. அதனாலதான் வெல்றதில அக்கறை இல்லாம போய்டுத்து சாமி.. =))
//ஹைய்யா...எம் பேரும் வந்துடுச்சே....
அது ஒண்ணுமில்ல...தண்ணியே அடிக்காதவன் ஒரு ஃபுல் பாட்டில பார்த்த மாதிரி, எப்பனா எதுனா படிச்சா நாங்களும் படிச்சிருக்கோமில்லன்னு எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டு திரியறது என்னோட கெட்ட பழக்கம்...அப்படித் தான் இது...:0))))))
(இது எதுக்குன்னா படிப்பறிவில்லாத பயன்னு நாலு பேரு நாளைக்கு பேசப்படாது பாருங்க...அதுக்குத் தான் இப்பிடி வெளம்பரம் பண்றது...)//
ஐயையோ இது விளம்பரமின்னு தெரியாம வெள்ளந்தியா போஸ்ட் போட்டுட்டேனே.... சரி சரி... இந்த டீலிங் பத்தி அப்புறம் பேசிக்கறேன்..
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :0)))))//
பர்ஸ்ட் ஆனத திரும்ப பர்ஸ்ட்டா... புஸ்வாணம் பரவாயில்ல போலயே... =))
//அது சரி said...
//
குடுகுடுப்பை said...
நானும் படிக்க இருப்பதால் , பதிவு படிக்கவில்லை. முரண்தொடையில் ஏற்கனவே படிச்சாச்சு.
//
ஆமா, தலீவரு, ரெண்டாயிரத்து தொன்னூத்தேழுக்குள்ள படிச்சிட்டி அப்புறம் வந்து கருத்து சொல்வாரு....:0)))))
(யோவ்...மொதல்ல பொன்னியின் செல்வனை படிச்சி முடிங்கய்யா...சொல்லி ரெண்டு வருஷம் ஆவுது...)//
மத்தகம் பத்தி உங்க போஸ்ட் பார்த்துட்டே... இவ்ளோ நாள் வாசிக்க ஆரம்பிக்கலையாம்... அவ்ளோ பெரிய அஞ்சு பாக பொன்னியின் செல்வன் எல்லாம்... ம்க்கும்...
//அது சரி said...
//
முகிலன் said...
ஜெயமோகன் மீது எனக்கு ஒரு தவறான இமேஜ் இருக்கிறது. அதை இந்தப் பதிவு துடைத்திருக்கிறது
//
பாண்டியரே, இதென்ன புதுக் கதை....தெளிவா சொல்லுங்கப்பு....//
ஆமாம் அது பத்தி ஒரு இடுகை போடுங்க... அதுசரி ஐயா எதிர்ப்பதிவு போடுவாரு... நான் சாலமன் பாப்பையா வேலை பார்க்கறேன்... (அதுசரி.. இதுவும்சரின்னு...)
//அண்ணாமலையான் said...
ஆமாம்...//
ஆமென்..!
//புலவன் புலிகேசி said...
வாங்க கலகலா...உடல் நலம் சரியில்லைன்னு ஐயா சொன்னாரு. இப்ப எப்புடி இருக்கீங்க? படிச்சிட்டு திரும்ப வாரேன்//
நன்றி நன்றி... இப்போ பரவால்ல... (நல்லா இருக்கேன்னு சொன்னா கண்ணு படும்பா...)... சரி வாங்க..
//☀நான் ஆதவன்☀ said...
பகிர்வுக்கு நன்றி ப்ரியா. படிக்கிறேன்.//
வெரி குட்... நன்றி.. :D
//Sabarinathan Arthanari said...
நீங்களும் ஜெயமோகன் வாசகரா!
நல்ல பகிர்வு நன்றி//
நான் வாசகி... நன்றிங்க...
//இராஜ ப்ரியன் said...
நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணர செய்துள்ளீர்கள்....... நன்றி//
நன்றி இராஜ ப்ரியன்...:)
// Chitra said...
ஒரு வருடம்! வாழ்த்துக்கள்!
பதிவும் அருமை. வாழ்த்துக்கள்!//
நன்றி சித்ரா... :)
நன்றி சித்ரா... :))
//எறும்பு said...
//தமிழ்மணத்துல ஏன் தலைப்பு தெரிய மாட்டேங்குது ".." //
பிரபலம் ஆயாச்சுன்னா யார் கண்லையும் சிக்க மாட்டாங்கன்னு அர்த்தம்.
:)//
//எங்க மத்தில வாழ்றதே ஒரு சாதனைதான். அதிலே ஒரு வருஷம் வேற ஆச்சா. அதே பெரிய சாதனை.
:)//
ஹையோ... அப்போ நெசம்மாவே பிரபலமாயிட்டேனா.... இந்த எறும்பு வாயில யாராவது ஒரு கிலோ சர்க்கரையைப் போடுங்கைய்யா...
//தண்டோரா ...... said...
நல்ல பகிர்வு ப்ரியா! படிக்கிறேன் !//
ரொம்ப நன்றி மணிஜி... படிங்கோ...:D
//butterfly Surya said...
பகிர்விற்கு நன்றி ப்ரியா.
அருமையான எழுத்து நடை.//
ரொம்ப நன்றி சூர்யா... வருகைக்கும் கருத்துக்கும்...
//சைவகொத்துப்பரோட்டா said...
ரைட்டு, படிச்சிர வேண்டியதுதான்.//
ரைட்டு... படிங்கோ... ரொம்ப நன்றி பரோட்டா... :)
// பித்தனின் வாக்கு said...
நான் இன்னமும் அந்த புத்தகம் படிக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கின்றேன். அறிமுகத்திற்க்கு நன்றி.//
முதல்ல இந்த இடுகையைப் படிச்சீங்களா..? =))...
//க.பாலாசி said...
பகிர்ந்தமையும் சிறப்பு...
நானெல்லாம் இந்த புத்தகத்தப்படிச்சு புரிஞ்சிக்க முடியுமான்னுதான் தெரியல...ம்ம்ம்... பாப்போம்..//
"படிச்சு" புரிஞ்சுக்கிறதுன்னா மெய்யாலுமே கஷ்டம்தான்... ம்ம்... பாருங்...
//நேசமித்ரன் said...
//விளையும் செயலே //
விழையும் செயலே ?
:)//
அதேதானுங்க... திருத்திட்டேன்... நன்றி...
// புலவன் புலிகேசி said...
இதுவரை ஜெயமோகன் படித்ததில்லை. பலமுறை படிக்க விரும்பி சென்றாலும் சுஜாதா, எஸ்.ரா புத்தகங்களிடமே மனம் நின்று போகும். இப்போது என்னை நீங்கள் படிக்கத் தூண்டியிருக்கிறீர்கள். வாங்கிப் படிச்சிர வேண்டியதுதான். நன்றி லகலகா. இனிமே லீவு போட்டா லீவு லெட்டர் கொடுங்க..//
ஆகா... வளரட்டும் உங்கள் வாசகப்பணி... லீவு போட்டா... லெட்டர் கொடுத்ததா நெனைச்சுக்குங்க... அவ்வ்வ்வ்...
//புல்லட் said...
ம்ம்.. நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..//
நன்றி புல்லட்...
நாம இந்த மாதிரி சீரியஸ் எலக்கிய கதயெல்லாம் பொதுவா படிக்கறதில்ல.. ஒன்லி ஹாப்பி எண்டிங் ஸ்டோரிஸ்.. :) உங்க பேச்சக் கேட்டு படிச்சுட்டேன்.. யம்மே.. சும்மா சொல்லக்கூடாது.. அந்த தமிழாளமே படிக்க சூப்பரா இருக்கு.. செம்மையா எழுதியிருக்காரு.. நேர்ல இருந்து பார்க்காம - யானையாயிருந்து, பாகனா இருந்து.. எப்பிடித்தான் முடிஞ்சுதோ.. பரமன் காரக்டர் சான்ஸே இல்ல.. உங்க பாதிப்பயெல்லாம் படிச்சு வெவரமாயிட்டதால என்ன பாதிக்க விடல.. :) ஆனாலும் பத்து சுப்பரமண்யபுரம் ஒன்னாப் பாத்த ஃபீலிங்க் :)
கடைசியா மத்த பாகன் களோட பொஞ்சாதிகள நம்ம ஹீரோ (அதாங்க பரமன்) கைக்குள்ள கொண்டாற மாதிரி யானையையும் கொண்டாந்துட்டார்ன்னு முடிச்சிட்டாரு.. ஹூம்.. அது வரைக்கும் கேசவன் மேல இருந்த இமேஜ் டோட்டல் டேமேஜ்.. அதுக்கு பதிலா யான அவன தூக்கிப் போட்டு மிதிக்கற மாதிரி காட்டியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.. ஹாப்பி எண்டிங் :))))
//பரமண்ணாவின் பல செயல்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை//
என்னாலயும் நியாயப்படுத்த முடியாது.. அந்த காரக்டர் அப்படித்தான்.. விடுங்க..
ஆயிரத்தில் ஒருவன் பாத்துட்டீங்களா? இதயெல்லாம் தூக்கி சாப்புடற அளவுக்கு பாதிக்கும்.. :))
இன்னொன்னும் யோசிக்க வச்சது.. அந்தப் பொண்ணுங்க எல்லாமே ரொம்பவே டிபண்டண்ட் பொண்ணுங்களா இருக்கறது.. உங்கள விட்டா ஆருமில்ல சாமி ன்னு.. அந்தக் காலத்துல இப்படித்தான் இருந்திருக்குமோ.. ஹூம்..
ஹை !! புரிஞ்சுடிச்சு
அம்மாடி, என்ன ஒரு ஆழ்ந்த வாசிப்பு.. ரொம்ப பாதிச்சிருக்கு போல. அதை எழுத்தில் நல்லாவே கொண்டு வந்திருக்கிங்க.. ஜெமோவுக்கு இன்னொரு தீவிர வாசகி.. கலக்கல்ப்ரியா..
//எல் போர்ட் said... //
நன்றி சந்தனா... :)...
ஆயிரத்தில் ஒருவன் பார்க்கணும்... பார்ப்போம்.. :D
//பேநா மூடி said...
ஹை !! புரிஞ்சுடிச்சு//
ஐ... புரிஞ்சிடுத்தா...?
//Venkatesan said...
Hi, Can you please change the background color in ur page... (its full dark and very difficult to read the content)//
hi venkatesan.. i think.. it's yer firewall.. da background is not dark... actually.. :(.. can ya plz check it thr..?.. ty neway..
// SanjaiGandhi™ said...
அம்மாடி, என்ன ஒரு ஆழ்ந்த வாசிப்பு.. ரொம்ப பாதிச்சிருக்கு போல. அதை எழுத்தில் நல்லாவே கொண்டு வந்திருக்கிங்க.. ஜெமோவுக்கு இன்னொரு தீவிர வாசகி.. கலக்கல்ப்ரியா..//
யாரு இது..? சஞ்சய்???... ஆ... நான் எங்க இருக்கேன்... =))... ரொம்ப நன்றி சாமி.. =))
கல கல'ன்னு கலக்கிட்டீங்க
//கவிதை காதலன் said...
கல கல'ன்னு கலக்கிட்டீங்க//
ரொம்ப நன்றி கவிதைக் காதலன்... :)
உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி...
அழகாயிருக்கு!'மத்தகம்' இதுவரைக்கும் படிக்கல. இனிமே கட்டாயம் படிக்கனும்!
நன்றி கமலேஷ்...
நன்றி கயல்... கண்டிப்பா படிங்க... :)...
புரியலைங்க :)
ஆனா எழுதமட்டும் தெரியும் (ஆதாரத்தோடதான்!) படிச்சிட்டு சொல்லுங்களேன்..
http://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_8176.html
sorry i dont know ur mail id:)
நன்றி ஷங்கர்.... நான் "ங்ங்ஙே"...
இப்போதே புத்தகம் வாங்கி படிக்க ஆசை வந்துவிட்டது ,நன்றி பிரியா..
நீங்க கடைசியா பதிவு போட்டு பத்து நாளாகுது (!?) ..
மீ த 100. எழுதி நாளாச்சே. எழுத்தும்மா
கலகலப்ரியா,
நல்லதொரு எழுத்தாளனை(ரை) மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.
முடிந்தால், ஜெயமோகனின் “காடு”,
“ஏழாம் உலகம்” போன்ற நாவல்களைப் படித்துப் பாருங்கள். உயிரை உருக்கும்.
நன்றி ஜெரி...
நன்றி சூர்யா...=))... கரீட்டா எண்ணுங்கோ...
நன்றி வானம்பாடி சார்... பார்ப்போம்...
நன்றி சத்ரியன்....
ப்ரியா யா ............. .... (எங்க ஆளையே காணோம் ....?!)
vaanga mani.... hihi.. i dunno.. i think.. am lost.... searching for mahself... kandupudichiduven.. =))seekkiram..
நீண்ட இடைவேளைக்கு பிறகு அருமையான பதிவு வாழ்த்துக்கள் !
ஹலோ மேடம்,
ரொம்ப லேட்டா படிச்சிருந்தாலும் மத்தகம் படித்ததற்கு என் வாழ்த்துக்கள்.இதுக்கே இப்பிடி மிரண்டு போயிட்டீங்களே இன்னும் என் குருநாதரின் ஊமைச்செந்நாய், அனல் காற்று எல்லாம் படித்தால் என்ன சொல்லுவீங்க? கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.மத்தகம் படிப்பதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கவில்லை எனில் ஊமைச்செந்நாயும் ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.. ஊமைச்செந்நாய் http://www.jeyamohan.in/?p=767 அனல்காற்று link http://www.jeyamohan.in/?p=1761 மொத்தம் 14 பகுதிகள்.
அப்புறம் அறிவியல் புனைகதைகளின் வரிசையில் " உற்று நோக்கும் பறவை" படித்துப் பாருங்கள் http://www.jeyamohan.in/?cat=27 வாழ்த்துக்கள்.
ty shankar
ty rajeshkumar... padikkalam...
முதலில் ஜெயமோகன் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. "காடு" படித்த பிறகு, அவரது மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
பரிந்துரைக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது புத்தகம் வாங்கி வாசிக்கிறேன்.
TY Joe..
Post a Comment