எங்கே அவர்கள்?
நெற்கதிர்கள் சிதைந்தன..
மரச் செடிகள் சாய்ந்தன..
வேலிகள் சிராய்ந்தன...
நாய்களின் குரைப்பு அலறலானது..
பரமுவின் கைகள் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தன. நீளமான பச்சைப் புகையிலைகளை நான்கைந்தாகச் சேர்த்து அளவுக்கு மீறின துரிதத்துடன் சீராகக் கீறி வைத்த பனையோலைக் கீற்றுக்கள் கொண்டு சரக் சரக்கென்று முடிச்சுப் போட்டார். சாதாரணமாகப் பேதியான குழந்தையைத் தூக்குவது போல் சற்றுத் தள்ளிப் பிடித்து ஆனால் கவனத்துடனேயே கொண்டு செல்லும் பரமு அன்றைக்கு ஏனோ அவற்றை வாரிச்சுருட்டி அள்ளி எடுத்துக் கொண்டு குடிலை நோக்கி விரைந்தார்.
விரும்பியோ விரும்பாமலோ..
எரிந்து சாம்பலாக முன்..
புகையிலையும் புகை பிடிக்கும்..
மேலும் கீழும் தட்டையாக இருக்கும் பானை போன்ற, தடித்த களிமண் சுவர் சூழ்ந்த புகைக்குடிலினுள் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு வாசல் இருக்கும். அதன் உட் கூரையில் வரிசையாகத் தடிகளை அடுக்கி, ஓலைக் கீற்றினாற் கட்டிய புகையிலைகளைத் தொங்க விட்டு, அடியில் நன்கு காய்ந்த தேங்காய் நார்கள் மற்றும் பனங்கொட்டைகளை சீராக அடுக்கித் தீ மூட்டுவர். குடிலை ஓலைப் பாய் கொண்டு மூடி, கீழே மிகமிகச் சிறிய இடைவெளி விட்டு, அதனூடு ஒரு தடியைச் செலுத்தித் தட்டித் தட்டி சுவாலை எழும்பாது தணல் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வர். பரமு கண்ணும் கருத்துமாகக் குடில் முன்னால் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.
அன்று குடிலின் முன் மூன்றிலொரு பாகம் வரைக்கும் புகையிலைகள் தொங்க விடப்பட்டன. தேங்காய் நார்களும் அவ்விதமே மூன்றிலொரு பாகம் அடுக்கப்பட்டன. தீ மூட்டி, பாய் கொண்டு மூடி, தடியை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாகி விட்டது. வியர்வை மடை திறந்து விட்டிருந்தது. தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து முகத்துடன், கழுத்து, கை எல்லாம் சேர்த்துத் துடைத்துப் பிழிந்து உதறி மீண்டும் தலையில் சுற்றிக் கொண்டார்.
தகரத்தினாலான வாயிற்கதவு மடமடத்த சத்தம் பயங்கரமாக இருந்தது. பரமுவின் நாய் குரைத்து ஓய்ந்து வீட்டின் பின்னால் ஓடியது. வாயிற்பக்கமிருந்த வாழைகளும், வாழைக்கன்றுகளும் சாய்ந்தன. பரமுவுக்கு ஓவென்று அலற வேண்டும் போலிருந்தது. கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. தடியைப் போட்டுவிட்டு, கால்கள் துவளத் துவள மெதுவாக எழுந்து நின்றார். தலையிலிருந்த துண்டெடுத்து கண்ணுடன் முகத்தையும் அழுந்தத் துடைத்து தோளில்ப் போடக் கூடத் திராணியற்று கையிலேயே இறுகப் பிடித்தபடி அசையாதிருந்தார்.
நீட்டிய துப்பாக்கியுடன் பூட்ஸ் கால்கள் சுற்றி வளைத்து நெருங்கின.
சிங்களவ தன்னுவத?.. எங்கே அவர்கள்?
பரமு ஊமையாகி இருந்தார்.. வெறித்துப் பார்த்தார்.. கண்களில் கண்ணீர் பளபளத்தது..
எங்கே? ஒருவன் எகிறி முன்னால் வந்தான்..
தலைவன் போலிருந்தவன் பரமுவை உற்றுப் பார்த்தான்.. கண்கள் என்ன சொன்னதோ.. பாய்ந்தவனை இடக்கை உயர்த்தி மறித்தான்.. போகலாம் என்று சைகை செய்தான்..
பரமு அசையாதிருந்தார்... அடி வயிற்றில் எதுவோ திரண்டு உருண்டது.. பாயைப் பார்த்தார்... தீச்சுவாலையொன்று தெரிந்தது.. பதறிப்போய் துண்டையெறிந்து தடியைப் பற்றி சரக்கென்று நுழைத்து, தட் தட் என்று தட்டி அணைத்தார். திரும்பிப் பார்த்தார்.. கூப்பிடு தூரத்தில் சிப்பாய்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்த காட்சி திகிலூட்டியது. தலைகள் மறையும் வரை நெருப்பின் மேல் நிற்பது போல் நின்று கொண்டிருந்தார். மறைந்ததும் தலை தெறிக்க ஓடி இரண்டு வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்தார். பாயை அகற்றி நெருப்பு மேல் தண்ணீர் ஊற்றினார். தலை நுழைத்து இருமினார். குற்றியுரும் குறையுயிருமாகக் கிடந்த இரண்டு ஜீவன்கள் மெதுவாக அசைந்தன. பரமு பின்வாங்கித் தொப்பென்று நிலத்திலமர்ந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தார். இதயம் மிகவும் இலேசாகிப் பறப்பது போன்றிருந்தது.
புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடாம்.. அதுவும் காத்தது ஈருயிரை.. அல்லது ஓருயிரை ஈருடலை..?
(அந்த இருவர் ஆண்டன் பாலசிங்கமும் அவரின் துணைவி அடேல் பாலசிங்கமும்..! என்னுடைய சிறுமிப் பருவத்தில், இராணுவச் சுற்றி வளைப்பு ஒன்றின் போது இவர்கள் இவ்வாறு தப்பித்துக் கொண்டனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவையெல்லாம் நடப்பை வைத்துப் புனையப்பட்டவையே!)
32 ஊக்கம்::
அருமை அருமை! ஆண்டன் இருந்தபோது அவரின் பேட்டி விகடனில் வந்திருந்தது கண்முன் கொண்டு வந்து விட்டாயம்மா. பரமுவும், சூழலும் மட்டுமே புனைவு. அற்புதமான மனிதன் பாலாண்ணையென்றால் பரமுவுக்கு தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது. :((
எதிர்பாராத முடிவு...நல்லாருக்கு...
/அதுவும் காத்தது ஈருயிரை.. அல்லது ஓருயிரை ஈருடலை..? //
எத்தனையோ தமிழரின் உயிரை, தன்மானத்தை கொஞ்ச காலத்துக்கேனும். சிங்களவனுக்கு சிம்மசொப்பனமாகி, மானங்கெட்டனின் பொய்யை நாறடித்த மாமனிதன். தான் சிரிக்காமல் சிரிக்கச் சிரிக்கப் பேசும் உன்னத புருஷன். புலிகளின் இழப்பு இவரோடு தொடங்கியதென நினைக்கிறேன்.
//சாதாரணமாகப் பேதியான குழந்தையைத் தூக்குவது போல் சற்றுத் தள்ளிப் பிடித்து ஆனால் கவனத்துடனேயே கொண்டு செல்லும் பரமு //
நல்ல உவமை
நல்ல விவரணை..
அந்த முகம் தெரியா பரமுவுக்கு தமிழினமே கடமைப் பட்டிருக்கிறது
விவரணை அழகாக இருந்தது. அருமையென்று சொல்லயியலா துயரமாய் இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.
காட்சியை, கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
கடைசி பத்தியை வாசித்த போது மனதுக்குள் திக் என்று இருந்தது..
அருமையான எழுத்து வடிவம்
nalla pakirvunnga...
vazhththukkal
nallathu
அருமை ப்ரியா.
நல்லா இருக்குங்க ப்ரியா
//////அதுவும் காத்தது ஈருயிரை.. அல்லது ஓருயிரை ஈருடலை..? ////
மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் மீண்டும் வருவேன் .
:( very nice one...
அருமை ப்ரியா.இது போன்ற அறியாத தகவல்களை உங்கள் நடையில் தொடர்ந்து தாருங்கள்.
ஹ்ம்ம்
ப்ரியா,
ஒரு சொம்பு தண்ணி கொண்டு வாங்க. ரொம்ப நாள் கழிச்சு உங்க விட்டுக்கு வந்திருக்கேன்.
இதுவரை நான் அறிந்திராத செய்தி இது. பகிர்விற்கு நன்றி ப்ரியா.
//இதயம் மிகவும் இலேசாகிப் பறப்பது போன்றிருந்தது. //
முடிக்கும்பொழுது எனக்கும்...
இதுபோல அவர்கள் தப்பிய கதையை கொஞ்சநாள் முன்பு ஒரு தினசரி நாளிதழில் படித்திருக்கிறேன்...
படிக்க படிக்க மனம் கனத்துக் கொண்டே வர, முடிந்தவுடன் நெஞ்சில் சுருக்கென ஒரு வலி வெறுமையில் பரவியது!!
அருமையாக எழுதி இருக்குறீங்க. இத படிச்ச ஞாபகம் இருக்கு.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை செந்நீரால் காத்தோம்................. இப்படி தானே பாரதி சொன்னார்....(அனைத்துமே வீணாகி விட்டது என்று தான் கவலை.)மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லாயிருந்ததுங்க!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நீங்கள் சொன்ன மாதிரியே கூகிளாயினி என்றே சொல்கிறேன். இனிமேல் கூகிள் ஆண்டவர் என்று சொல்லமாட்டேன்.
Happy New Year
http://reap-and-quip.blogspot.com/2010/04/blog-post_13.html
ம்..ம்.. ஒரு பெருமூச்சுத்தான் விட முடிகிறது..????
துயரம் தோய்ந்த பகிர்வு ப்ரியா.
ரெண்டு நாள் முன்பே வாசித்து விட்டேன்.பின்னூட்ட இயலவில்லை.(பின்னூட்டப் பெட்டி திறக்க மறுத்தது.தொடர்ந்தார் போல் உங்கள் தளத்திலும்,பாலாஜி தளத்திலும் வருகிறது.திறந்தால் லக் என எடுக்க வேண்டியது இருக்கு.)
any how,
சொல்லிய விதம் முக்கியமானது.
நன்றி பாலா சார்..
நன்றி அதுசரி..
நன்றி முகிலன்..
நன்றி அகநாழிகை..
நன்றி சைவக்கொத்து..
நன்றி கதிர்..
நன்றி குமார்..
நன்றி கார்த்திக்..
நன்றி ஆதவன்..
நன்றி சின்னம்மிணி..
நன்றி சங்கர்..
நன்றி வெறுமை..
நன்றி ராஜா..
நன்றி சஞ்சய்..
நன்றி சத்ரியன்..
நன்றி பாலாசி..
நன்றி ராமமூர்த்தி..
நன்றி அனாமிகா..
நன்றி அர்ச்சனா..
நன்றி கயல்...
வாழ்த்துக்கு நன்றி bogy..
நன்றி அனாமிகா... அது என்ன பக்கம் என்று பார்க்கறேன்.. வார இறுதியில்... புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி... இன்றைக்குத்தான் தெரியும் புத்தாண்டு பற்றி.. ))
நன்றி வாசு.. ம்ம்..
நன்றி பா.ரா... என்னன்னு தெரியல... பார்க்கறேன்..
விவரித்த பாணி அழகு...
புனைவு நல்லா இருக்குங்க!
நன்றி காதல் கவி..
நன்றி ப்ரின்ஸ்..
Post a Comment