header photo

Sunday, April 25, 2010

கனநனவு...

அன்று.. 
நிகழ்தகவு ஒன்று.. 

மழையொழுக்கின் பிளவுகளில் 
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி 
கனவுக் காற்றில் தடம் பதித்து 
கன கற்றூண்களிடை பாவுகையில் 
நனவு நிலம் பட்டெகிறிய துளியில் 
பன்னீர் வாசனையுடன் உறங்கிய விடியல்

இன்று.. 
நிகழ்தகவு பூஜ்யம் புள்ளி ஐந்து.. 

கற்றூணில் நெற்றி நெட்டித் 
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி 
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில் 
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில் 
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது 
மண்வாசனையுடனான துயில்... 

54 ஊக்கம்::

vasu balaji said...

கனவு இதோ. நனவு படிச்சிட்டு

கலகலப்ரியா said...

வாங்க சார்... இது கனவு மற்றும் நனவு என்றும் கொள்ளலாம்... கனமான நனவு என்றும் கொல்ல.. ச்சே... கொள்ளலாம்..

vasu balaji said...

/மழையொழுக்கின் பிளவு
கன் கற்றூண்களிடை
நனவு நிலம் பட்டெகிறிய துளி

தூணடி சரிந்து சார்ந்தமர்கையில்
கறையானரித்த கம்பத்தில்/

ஹூம் பெருமூச்சுதான் விட முடியுது. வார்த்தைக் கட்டமைப்பு.

vasu balaji said...

மழையொழுக்கின் பிளவுகளில்
கனவுக் காற்றில் தடம் பதித்து
பன்னீர் வாசனை சூழப் பாவுகையில்
நெற்றி நெட்டித் தெறித்துச்
சரிந்தமர்ந்த மயக்கம்
நீக்கும் மண்வாசனையுடனான
தேநீர் வாசம்..

☀நான் ஆதவன்☀ said...

//திட்டுறவங்க எல்லாம் இங்க திட்டுங்க...//

அவ்வ்வ்வ்வ் கவுஜ கவுஜ... உங்களை எங்க திட்டுறது. என்னை நானே திட்டிக்க வேண்டியது தான் :)

கலகலப்ரியா said...

||☀நான் ஆதவன்☀ said...
//திட்டுறவங்க எல்லாம் இங்க திட்டுங்க...//

அவ்வ்வ்வ்வ் கவுஜ கவுஜ... உங்களை எங்க திட்டுறது. என்னை நானே திட்டிக்க வேண்டியது தான் :)||

அடப்பாவிங்களா... இதுக்கு அங்கயே திட்டி இருக்கலாம்.. ))

Paleo God said...

கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.//

:(

மண்வாசனை வலியோடு விழித்துக்கொண்டே ஒரு துயில்.

ஹும்ம்ம்..

நர்சிம் said...

பின்றீங்களே ப்ரியா.. நல்லா இருந்துச்சு..

//அன்று..
நிகழ்தகவு ஒன்று.. //

ம்ம்ம்.

balavasakan said...

கவிதை நன்றாக இருந்தது அக்கா..!! நீங்கள் எப்படி ..? நல்லா இருக்கீங்களா..??

கலகலப்ரியா said...

|| 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.//

:(

மண்வாசனை வலியோடு விழித்துக்கொண்டே ஒரு துயில்.
||

நன்றி ஷங்கர்.. :)

கலகலப்ரியா said...

||நர்சிம் said...
பின்றீங்களே ப்ரியா.. நல்லா இருந்துச்சு..

//அன்று..
நிகழ்தகவு ஒன்று.. //

ம்ம்ம்||

நன்றி நர்சிம்ம்..

கலகலப்ரியா said...

||Balavasakan said...
கவிதை நன்றாக இருந்தது அக்கா..!! நீங்கள் எப்படி ..? நல்லா இருக்கீங்களா..??||

நன்றி வாசு... நான் நலம்... நீ நலமா.. எக்ஸாம் எல்லாம் ஒவரா...

ராஜ நடராஜன் said...

வார்த்தைகளின் வலிகள் புரிந்தும் கவிதை நடை இன்னும் பழகாமலும்.

சைவகொத்துப்பரோட்டா said...

தலைப்பே ஒரு கவிதை சொல்லுதே!!

Santhappanசாந்தப்பன் said...

இதற்கு பொழிப்புரை எழுதுபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்!

www.thalaivan.com said...

Hello

Your words are wonderful.

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

நேசமித்ரன் said...

Room space


I woke up thinking I have escaped

I saw all around. Up there

Sky: all the four sides’ flowery dark

None of the roof, walls.

Paths appeared all the sides.



Thinking this the open space itself, not a room

For some moments my mind surged.



I walked west dashed a wall

I walked south dashed a wall

I walked north dashed a wall

I walked east dashed a wall



I jumped up dashed the roof.



-C. Mani


இப்போதான் இதை படிச்சுட்டு வந்தேன்

இந்த கனநனவு கனமானதுதான்

:)

கலகலப்ரியா said...

//ராஜ நடராஜன் said...
வார்த்தைகளின் வலிகள் புரிந்தும் கவிதை நடை இன்னும் பழகாமலும்//

நன்றி நடராஜன்.. :)

கலகலப்ரியா said...

||சைவகொத்துப்பரோட்டா said...
தலைப்பே ஒரு கவிதை சொல்லுதே!!||

நன்றி சைவகொத்து.. :D

கலகலப்ரியா said...

||பிள்ளையாண்டான் said...
இதற்கு பொழிப்புரை எழுதுபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்!||

நன்றி பிள்ளையாண்டான்.. என்ன சன்மானம்னு சொல்லுங்க... தக்க சன்மானமான்னு பார்த்து நான் பொழிப்புரை போடுறேன்..

கலகலப்ரியா said...

ty thalaivan..

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...//

நன்றி நேசமித்ரன்..

suryesh said...

http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

மறக்காம ஓட்டு போடுங்க

அது சரி(18185106603874041862) said...

//
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி
//

//
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
//

காலம் ஒரு கறையான்...அது எல்லாவற்றையும் அரிக்கும்...சில நேரங்களில் அரித்த மரங்களிலிருந்து பூக்கவும் வைக்கும்...

உங்களின் வார்த்தையாடல் பிரமிப்பாய்த் தான் இருக்கிறது!

நானானி said...

கனநனவின் ‘விழிதுயில்’ நல்லாருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தமிழ் வழக்கம் போலவே அழகாயிருக்கு ப்ரியா.. ம்ம்.. அர்த்தம் வலி தருது..

உறங்கிய விடியல்

விழித்துக் கொண்டிருக்கும் துயில்

ஆஹா..

பிரபாகர் said...

சகோதரி!

என்ன சொல்ல! தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்.

படித்து சிறிது நேரம் பிரம்மித்து இருந்தேன், மெலிதாய் உள்ளுள் ஆட்கொண்ட சோகத்துடன்...

பிரபாகர்...

அன்பேசிவம் said...

அருமையா இருக்குங்க ப்ரியா. :-),

ஆனா, என்ன எனக்கு ரெண்டு மூணு முறை படிச்சாத்தான் விளங்கும்ங்கிற மாதிரியே எழுதுங்க...

:-(

ஈரோடு கதிர் said...

//விழித்துக் கொண்டிருக்கிறது துயில்... //

அழகான வரி

Chitra said...

அருமையான கவிதையில் , ஒரு நிகழ்கால எதார்த்தம். :-)

Radhakrishnan said...

அழகிய தமிழ் வார்த்தைகள். கவிதை சற்று அதிகமாகவே யோசிக்க வைக்கிறது வார்த்தைகளின் அர்த்தம் தேடி.

பனித்துளி சங்கர் said...

/////கற்றூணில் நெற்றி நெட்டித்
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில்
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.../////////


எழுதும் , எண்ணமும் இங்கு புதுமைதான் அருமை . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன்

"உழவன்" "Uzhavan" said...

நிகழ்தகவு மேட்டர் அருமை

பத்மா said...

ரொம்ப நல்லா இருக்குங்க பிரியா .எழுந்தோன பரபரன்னு நெற்றிய தேச்சு விடத் தோணும்

archchana said...

வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். கவிதை நன்றாக இருக்கிறது.(ஆனால் இது நீங்கள் எதனை பற்றி நினைக்கும் பொது வந்த கவிதை என்று எனக்கு மட்டும் சொல்லுவீர்களா)

கலகலப்ரியா said...

நன்றி சூர்யேஷ்..

கலகலப்ரியா said...

||அது சரி said...
//
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி
//

//
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
//

காலம் ஒரு கறையான்...அது எல்லாவற்றையும் அரிக்கும்...சில நேரங்களில் அரித்த மரங்களிலிருந்து பூக்கவும் வைக்கும்...

உங்களின் வார்த்தையாடல் பிரமிப்பாய்த் தான் இருக்கிறது||

ரொம்ப நன்றி அதுசரி.. பூக்கட்டும்..

கலகலப்ரியா said...

||நானானி said...
கனநனவின் ‘விழிதுயில்’ நல்லாருக்கு.||

நன்றி நானானி..

கலகலப்ரியா said...

||
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
தமிழ் வழக்கம் போலவே அழகாயிருக்கு ப்ரியா.. ம்ம்.. அர்த்தம் வலி தருது..

உறங்கிய விடியல்

விழித்துக் கொண்டிருக்கும் துயில்

ஆஹா.||

நன்றி சந்தனா... :)

கலகலப்ரியா said...

||
பிரபாகர் said...
சகோதரி!

என்ன சொல்ல! தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்.

படித்து சிறிது நேரம் பிரம்மித்து இருந்தேன், மெலிதாய் உள்ளுள் ஆட்கொண்ட சோகத்துடன்...

பிரபாகர்||

நன்றிண்ணா..

கலகலப்ரியா said...

||முரளிகுமார் பத்மநாபன் said...
அருமையா இருக்குங்க ப்ரியா. :-),

ஆனா, என்ன எனக்கு ரெண்டு மூணு முறை படிச்சாத்தான் விளங்கும்ங்கிற மாதிரியே எழுதுங்க...

:-(||

:)).. நன்றி முரளி.. இத மூணு வாட்டி படிக்கறது பெரிய வேலையா என்ன.. :))

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
//விழித்துக் கொண்டிருக்கிறது துயில்... //

அழகான வரி||

நன்றி கதிர்...

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
//விழித்துக் கொண்டிருக்கிறது துயில்... //

அழகான வரி||

நன்றி கதிர்...

கலகலப்ரியா said...

||
Chitra said...
அருமையான கவிதையில் , ஒரு நிகழ்கால எதார்த்தம்.||

நன்றி சித்ரா..

கலகலப்ரியா said...

||V.Radhakrishnan said...
அழகிய தமிழ் வார்த்தைகள். கவிதை சற்று அதிகமாகவே யோசிக்க வைக்கிறது வார்த்தைகளின் அர்த்தம் தேடி.||

நன்றி ராதாகிருஷ்ணன்..

கலகலப்ரியா said...

||♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////கற்றூணில் நெற்றி நெட்டித்
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில்
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.../////////


எழுதும் , எண்ணமும் இங்கு புதுமைதான் அருமை . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன்||

நன்றி பனித்துளி சங்கர்..

கலகலப்ரியா said...

||"உழவன்" "Uzhavan" said...
நிகழ்தகவு மேட்டர் அருமை||

நன்றி உழவன்..

கலகலப்ரியா said...

|| padma said...
ரொம்ப நல்லா இருக்குங்க பிரியா .எழுந்தோன பரபரன்னு நெற்றிய தேச்சு விடத் தோணும்||

நன்றி பத்மா... ம்ம்..

கலகலப்ரியா said...

||archchana said...
வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். கவிதை நன்றாக இருக்கிறது.(ஆனால் இது நீங்கள் எதனை பற்றி நினைக்கும் பொது வந்த கவிதை என்று எனக்கு மட்டும் சொல்லுவீர்களா)||

நன்றி அர்ச்சனா... ஊரை நினைச்சேன்..

Muruganandan M.K. said...

மண்வாசனையுடனான துயில்...உங்கள் வரிகளில் கற்பனைச் சுகமோ சுகம்.

கலகலப்ரியா said...

நன்றி Dr.

'பரிவை' சே.குமார் said...

வார்த்தைக் கட்டமைப்பு பிரமிப்பாய் இருக்கிறது!.

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

கலகலப்ரியா said...

நன்றி குமார்..

நன்றி சங்கர்..