header photo

Monday, May 10, 2010

ஆசாமி(யாரிணி)யும்.. சாமி(யாரிணி)யும்.. நானாகிய கடவுளும்..



தேவாரத்தில் ஆரம்பித்து, "உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவன், நிலவுலாவிய நீர்மலி வேணியன், அ'ழ'கில் சோதியன் அம்பலத்தாடுவான், மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.. "
வான்முகில்... கோன்முறை.. நான்மறை.. மேன்மைகொள் "சைவநீதி" விளங்குக வுலகமெல்லாம்...... 'திருச்சிற்றம்பலமி'ல் முடித்துக் கண்ணைத் திறக்கும் தாத்தாவிடம்.. "தாத்தா அது "அ'ல'கில் சோதியன்"..  டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க" எல்லாம் தெரிந்த தோரணையில் சொல்லிக் கொண்டிருக்கும்போது எனக்கு வயது ஏழோ, எட்டோ இருந்திருக்கலாம்... 

"அலகில் சோதியன் என்றுதான் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள்... ஆனால் அழகில் சோதி வடிவானவன் என்று நான் விளங்கிக் கொண்டு இப்படிப் பாடிக் கொண்டிருக்கிறேன்.." என்ற தாத்தாவின் பொறுமையான விளக்கத்திற்கு.. 

"இல்லை அலகுதான்.. அவனை அளக்கும் அலகு சோதியாம்.." டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க... 

டீச்சர் யார், என்ன அனுபவம் எதுவும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை... அடுத்த நாள் காலையில்... "அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்று மறக்காமல் பாடிக் கொண்டிருந்தார்கள்... 

யார் சொல்லிக் கொடுத்ததையோ அப்படியே பின்பற்றிப் பாடிக் கொண்டிருப்பது எளிதாக இருக்கிறதோ..? 

உலகத்தின் கருத்தா யார்? சிவபெருமான். 

சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் செய்யும் தொழில்கள் யாவை? படைத்தல்,  காத்தல், அழித்தல் மூன்றுமாம். 

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினாவிடையை  பாட்டி சத்தமாகப் படித்துக் கொண்டிருப்பதைக் கேட்டே எனக்கு மனப் பாடமாகி விட்டிருந்தது. பதிலுக்கு கேள்வியையும், கேள்விக்குப் பதிலையும் வினாடி வினா நேரத்திற்கும் குறைவான நேரத்தில் புரட்டிப் புரட்டிச் சொல்லக் கற்று வைத்திருந்தேன். 

பத்தாம் ஆண்டின் இறுதிப் பரீட்சைக்கு ஒரு தாத்தாவின் சிபார்சின் பேரில் இன்னொரு தாத்தா இராமாயணம் முதல் திருவாசகம் வரை வீட்டில் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். பரீட்சைக்கு முதல் நாள் என்ன தோன்றிற்றோ பிரசங்கக் கூட்டங்களிலும், உலக இந்து மாநாட்டிலும் மிளிர்ந்து கொண்டிருந்த தாத்தா சைவ சித்தாந்தம் பற்றி எதையோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டு.. "இதெல்லாம் ஒன்றுமில்லையென்று அப்புறம் கற்றுக் கொள்வாய்"... என்ற பொழுது... கடவுள் இல்லையென்றா... சமயம் இல்லையென்றா.. என்று குழப்பம் ஒரு புறம்.. விஞ்ஞானம் கற்றுக்கொள்ளப் போகிறோம்... இந்து நாகரிகம், சைவ சமயம் எல்லாம் படிக்கச் சந்தர்ப்பம் இராதே... இதை எவ்வாறு தெரிந்து கொள்வதென்ற கவலை மறு பக்கமாக அல்லாட்டம் ஆரம்பித்து விட்டிருந்தது. 

வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் ஏதோ ஒரு விரதத்தைக் கண்டு பிடித்துப் பிடித்துக் கொண்டிருந்த பாட்டியையும் அம்மாவையும் பின்பற்றி நவராத்திரி விரதம் இருந்து பார்த்தேன். சரஸ்வதி சலுகை கிடைக்கலாமென்ற உள்நோக்கம் அம்மாவும் அறிந்ததே. கோயிலுக்குக் கட்டும் மாலையிலும் அதே லஞ்சம் வழங்கும் உள்நோக்கம் இருந்தது. 

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையை வழிபட்டனர். உருவ வழிபாடு அதன் பிற்பாடே தோன்றியது.. இருப்பினும் முருகக் கடவுளைப் பிடித்திருக்கிறது. பார்க்கும் பொழுதே ஏதோ ஒரு அமைதி வந்து உட்கார்ந்து கொள்கிறது. மற்றைய கடவுள்களைப் பிடிக்கவில்லையென்று சொல்ல இன்னும் கற்கவில்லை. பூஜை செய்யா விட்டாலும் பூஜை அறையில் ராமரும், ஹனுமரும், சிவனும், சரஸ்வதியும் இன்ன பிற கடவுள்களும் ப்ரேமில் இருக்கிறார்கள். சிட்னி ஷெல்டன் புத்தகத்தின் பக்கத்தில் குழந்தைக் கண்ணன் சிலையும்... பாலகுமாரன் புத்தகத்தின் பக்கத்தில் ஏசுநாதர் சிலையும்... இடையில் எங்கோ கால் நீட்டிச் சயனித்திருக்கும் புத்தரும் இருக்கிறார்கள். 

நிற்க... 

சென்ற வருடம் கோயிலுக்குப் போயிருக்கிறேன்... பிறந்தநாள் தொட்டு இது வரைக்கும் ஏதோ ஒன்றின் நிமித்தம் கோயிலுக்கு அவ்வப்போது போய் வந்து கொண்டுதான் இருக்கிறேன்... 

ஆனால்... கோயிலுக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் என்னை அல்லது கடவுளை எங்கேயோ தொலைத்துவிட்டே சென்றிருப்பதாகத் தோன்றுகிறது... 

கை கூப்பி நிற்கும்போதும்... கற்பூர தீபம் கண்களில் ஒற்றும்போதும்... சிவசிவ என்று சொல்லி நிமிர்ந்து திருநீறு அணியும்போதும்... யாரோ எப்பவோ சொல்லிக் கொடுத்ததைப் பிசகாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்... போலியாக.. எதற்கென்றே தெரியாது... சில நேரம் கேள்விகளுடனேயே நவக்கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்... 

எங்கேயோ வழி தொலைந்து நிற்கும் பொழுது பக்கத்தில் நிறுத்தப்படும் வண்டியிலிருந்து எட்டிப் பார்க்கும் எங்கோ பார்த்த முகமும்... கீரைக் கடையில் வாங்கிய கீரைக்குப் பணம் கொடுக்க நினைக்கையில் பணத்தை மறந்து வந்து விட்டது நினைவு வந்து நிமிரும்போது சிரித்தபடி எதிரிலிருக்கும் பக்கத்து வீட்டுப் பாட்டியும்.. வாழ்க்கையில் இனி என்ன என்று விழிக்கும் பொழுது கை பிடித்து அழைத்துச் செல்லும் எதுவோ ஒன்றில்... பிடித்த முருகக் கடவுளின் பெயர் சொல்லிக் கண் மூடி என் உள்ளேயே பார்த்துக் கொள்கிறேன்... 

உடலிலிருந்து ஆத்மா விலகிச் செல்கையில்... எங்கோ முருகன் வேலும்... மயிலும் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கலாம் என்ற கற்பனை எனக்கில்லை... 

மதங்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... சமயங்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... பூசாரிக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... ஏசுவுக்கும்... புத்தருக்கும்... முருக.. வள்ளி.. தேவயானை சமேதருக்கும்... இன்ன பிறருக்கும்... கடவுளுக்கும் கூடச் சம்மந்தமில்லை... 

கடவுள் எங்கே... காண்பி... நம்புகிறேன்... இதெல்லாம் மேதாவிகள் எழுப்பும் கேள்விகள்.. 

காற்றைக் காண்பிக்க முடியுமா... மூச்சைக் காண்பிக்க முடியுமா இதயாதிகள்... அதி மேதாவிகள் அளிக்கும் பதில்கள்... 

என்னைப் பொறுத்த வரைக்கும் சாத்தானும் உண்டு... சாமியும் உண்டு... ஆசாமியும் உண்டு...! எனக்குள்ளேயே...! தலையில் இரு கொம்பு மற்றும் உதடு தாண்டிய  கோரப்பல் முளைக்கும் சந்தர்ப்பங்களும்... முதுகில் சிறகு முளைக்கும் சந்தர்ப்பங்களும்... நிறையவே உண்டு... அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும்... தெரியாத சந்தர்ப்பங்களும் உண்டு... 

முருகன் எனக்குப் பிடிக்கும்... முருகு என்றால் அழகு.. ஒரு மனிதனோ... விலங்கோ.. தாவரமோ... ஜடப் பொருளோ.. மற்றவர்களுக்கு அவரவர் பார்வைக்கேற்ப அழகாகவும்.. அசிங்கமாகவும் தோன்றுவது போன்று.. என்னுடைய பார்வையில் நான் அழகாகத் தெரியும் சந்தர்ப்பங்களும் உண்டு.. (நம்புங்க..)..  அப்போ.. நான் முருகு... அஹம் ப்ரம்மாஸ்மி..! 

(இங்க கடவுள் பத்தித்தான் பேச்சு... இதில நீயே பிசாசு.. நீயே பேய்ன்னு உங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போனா எப்பூடி...)

தொடர் இடுகைக்கு அழைத்த முகிலனுக்கு நன்றி... யாருக்காவது இது பத்தி எழுதணும்னு தோணினா எழுதுங்கம்மா...ய்யா... 

38 ஊக்கம்::

பிரபாகர் said...

//என்னைப் பொறுத்த வரைக்கும் சாத்தானும் உண்டு... சாமியும் உண்டு... ஆசாமியும் உண்டு...! எனக்குள்ளேயே...!//
கடவுள் பற்றி உங்களின் எண்ணங்கள் அருமை சகோதரி! மிகவும் அழகாக தொகுத்தளித்திருக்கிறீர்கள். தொடரழைப்பில் இருக்கும் நானும் இது பற்றி எழுத முயற்சிக்கிறேன்!

பிரபாகர்...

பத்மா said...

ஆக எதோ ஒண்ணு இருக்கு ன்னு நம்பி பிடித்து கொள்ளத்தான் வேண்டிருக்கு இல்லையா? எப்போவாவது atleast

சைவகொத்துப்பரோட்டா said...

ஓ......கடவுளைத்தேடியா........தலைப்பை பாத்ததும்
இன்னோர் சாமியாரா என நினைத்து விட்டேன்........
ஹி.........ஹி.........

ஜில்தண்ணி said...

\\கடவுள் எங்கே... காண்பி... நம்புகிறேன்... இதெல்லாம் மேதாவிகள் எழுப்பும் கேள்விகள்..\\

நான் கேட்க மாட்டேன்

நல்லா சொன்னீங்க போங்க!!
நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி

Unknown said...

//என்னைப் பொறுத்த வரைக்கும் சாத்தானும் உண்டு... சாமியும் உண்டு... ஆசாமியும் உண்டு...! எனக்குள்ளேயே...! தலையில் இரு கொம்பு மற்றும் உதடு தாண்டிய கோரப்பல் முளைக்கும் சந்தர்ப்பங்களும்... முதுகில் சிறகு முளைக்கும் சந்தர்ப்பங்களும்... நிறையவே உண்டு... அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும்... தெரியாத சந்தர்ப்பங்களும் உண்டு..//

சேம் பிளட்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு ப்ரியா.. ம்ம்.. தேடல் தொடரட்டும்!

எனக்கும் முருகனைப் பிடிக்கும் :)

Chitra said...

நானும் இப்பொழுதுதான், முகிலன் அழைப்புக்கு, தொடர் பதிவு போட்டு விட்டு வந்தேன். நீங்கள் எழுதி இருப்பது மெருகுடன் அருமையா இருக்குதுங்க.

vasu balaji said...

ஆசாமியாரிணியோ, சாமியாரிணியோ, நீயாகிய கடவுளோ என்னை வடைபோச்சேக்கு ஆளாக்கியதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்:)). தொடரும்..

Anonymous said...

//என்னைப் பொறுத்த வரைக்கும் சாத்தானும் உண்டு... சாமியும் உண்டு... ஆசாமியும் உண்டு...! எனக்குள்ளேயே...! தலையில் இரு கொம்பு மற்றும் உதடு தாண்டிய கோரப்பல் முளைக்கும் சந்தர்ப்பங்களும்... முதுகில் சிறகு முளைக்கும் சந்தர்ப்பங்களும்... நிறையவே உண்டு... அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும்... தெரியாத சந்தர்ப்பங்களும் உண்டு...

முருகன் எனக்குப் பிடிக்கும்... முருகு என்றால் அழகு.. ஒரு மனிதனோ... விலங்கோ.. தாவரமோ... ஜடப் பொருளோ.. மற்றவர்களுக்கு அவரவர் பார்வைக்கேற்ப அழகாகவும்.. அசிங்கமாகவும் தோன்றுவது போன்று.. என்னுடைய பார்வையில் நான் அழகாகத் தெரியும் சந்தர்ப்பங்களும் உண்டு.. (நம்புங்க..).. அப்போ.. நான் முருகு... அஹம் ப்ரம்மாஸ்மி..//

எல்லாமே நீங்களே சொல்லிட்டீங்க நான் என்ன சொல்ல....மேற்குறிப்பிட்ட உங்கள் கருத்து ஆருடம் அசத்தல் அருமை உண்மை

ராஜ நடராஜன் said...

இப்படி எழுதினாத்தானே எனக்குப் புரியும்:)

கடவுள் பாதி!மனிதம் பாதின்னு சொல்ல வர்றீங்க!

Vijay said...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் சாமி கும்பிடுவதில் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி கிடைக்கின்றது. அது போதும் எனக்கு.
ஆனால் மதங்களின் பெயரால் மனிதருள் ஏற்றத்தாழ்வுகளும், சச்சரவுகளும், நீதி கிடைக்காத நிலையும், தனி மனித சுதந்திரம் அற்றுப்போகும் நிலையும் இருப்பதுதான் வேதனையானது.

vasu balaji said...

/எனக்கு வயது ஏழோ, எட்டோ இருந்திருக்கலாம்.../
அம்புட்டு சர்வீஸ் ஆச்சா?
/என்ற தாத்தாவின் பொறுமையான விளக்கத்திற்கு..
"இல்லை அலகுதான்.. அவனை அளக்கும் அலகு சோதியாம்.." டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க... /

தாத்தா பாவம் தாத்தா பாவம்.

/பதிலுக்கு கேள்வியையும், கேள்விக்குப் பதிலையும் வினாடி வினா நேரத்திற்கும் குறைவான நேரத்தில் புரட்டிப் புரட்டிச் சொல்லக் கற்று வைத்திருந்தேன்./

பாட்டி பாவம் பாட்டி பாவம்.

/சிட்னி ஷெல்டன் புத்தகத்தின் பக்கத்தில் குழந்தைக் கண்ணன் சிலையும்... பாலகுமாரன் புத்தகத்தின் பக்கத்தில் ஏசுநாதர் சிலையும்... இடையில் எங்கோ கால் நீட்டிச் சயனித்திருக்கும் புத்தரும் இருக்கிறார்கள். /

அழகு.

/நிற்க... /

அட படுத்திருக்காரு விடும்மா.

டமாசு போதும்.

மனதுக்கு மிக நிறைவாய் இருக்கிறது. வெறொண்ணும் சொல்லத் தோணலை.நடைக்காக திரும்பவும் படிச்சிட்டிருக்கேன். புரிஞ்சிக்க நிறைய இருக்கு.

முருகு முருகு:)

VELU.G said...

நல்ல கருத்துக்களுடன் உங்கள் அனுபத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

க.பாலாசி said...

அஹா.... குருவே.......... ஏதோ சம்திங்.. அழகான கட்டுரை....

மணிஜி said...

முருகா சரணம்..

Anonymous said...

//அப்போ.. நான் முருகு... அஹம் ப்ரம்மாஸ்மி..! //

அப்படிப்போடுங்க ஆத்தா.

கலகலப்ரியா said...

நன்றிண்ணா...

நன்றி பத்மா...

நன்றி சைவ கொத்து.. அது சரி..

நன்றி ஜில்..

நன்றி முகிலன்...

நன்றி சந்தனா.. :D..

நன்றி சித்ரா...

ஆகா பாலா சார்.. வெற்றி வெற்றி... உங்களுக்கு டிமிக்கி கொடுத்து இடுகை போட்டோம்ல..

நன்றி தமிழரசி.. :)

நன்றி நடராஜன்.. நிஜம்மா புரிஞ்சதா.. 0))

நன்றி விஜய்... உண்மைதான்..

மீண்டும் நன்றி பாலா சார்..

நன்றி வேலு..

நன்றி பாலாசி.. சிஷ்யா..

நன்றி மணிஜி.. புத்தம் சரணம் கச்சாமி... முருகா சரணம் கந்தசாமியா..

வாங்... சின்னம்முணியோ... போட்டோமில்ல...

Radhakrishnan said...

நல்ல விசயங்கள் பல பிடிக்கும் எனும் போது ஒரு சந்தோசம் வந்து நிலவுவது வாடிக்கை. மிகவும் அருமை பிரியா.

ஈரோடு கதிர் said...

கலக்கலான இடுகை பிரியா....

அந்த மேதாவி / அதிமேதாவி பதம் சூப்பர்

Santhappanசாந்தப்பன் said...

தலைப்பை பார்த்துட்டு, வழக்கம் போல அறிவு ஜீவிகளுக்காக ஏதோ எழுதிருக்காங்க போலன்னு, காலையிலேர்ந்து இந்த பக்கம் வரலை..

லைட்டா, எட்டி பார்த்தா, என்னைய மாதிரி பாமரர்களுக்கும் புரியறா மாதிரி அழகாக, ஆழ்ந்த சிந்தனைகள்..

நன்றி!!

balavasakan said...

உங்க தலைப்புத்தான் புரிய மாட்டேங்குது ஏங்க்கா ????

கலகலப்ரியா said...

ரொம்ப நன்றி ராதாகிருஷ்ணன்..

நன்றி கதிர்..

நன்றி பிள்ளையாண்டான்.. ஐய்யயோ அறிவு ஜீவிகளுக்கா என்ன கொடுமை சரவணா... ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

நன்றி வாசு.. இல்ல தலைப்பில ஆசாமிக்கு பெண்பால் என்னன்னு குழப்பம் அதுதான்.. ஹிஹி.. கண்டுக்காத..

நசரேயன் said...

//(இங்க கடவுள் பத்தித்தான் பேச்சு... இதில நீயே பிசாசு.. நீயே பேய்ன்னு உங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போனா எப்பூடி...)//

நன்றி

அது சரி(18185106603874041862) said...

//
த்தாம் ஆண்டின் இறுதிப் பரீட்சைக்கு ஒரு தாத்தாவின் சிபார்சின் பேரில் இன்னொரு தாத்தா இராமாயணம் முதல் திருவாசகம் வரை வீட்டில் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். பரீட்சைக்கு முதல் நாள் என்ன தோன்றிற்றோ பிரசங்கக் கூட்டங்களிலும், உலக இந்து மாநாட்டிலும் மிளிர்ந்து கொண்டிருந்த தாத்தா சைவ சித்தாந்தம் பற்றி எதையோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டு
//

பாவம் உங்க தாத்தா...அந்த வயசுல போய் என்ன எக்ஸாம்?? :)))

அது சரி(18185106603874041862) said...

//
கடவுள் எங்கே... காண்பி... நம்புகிறேன்... இதெல்லாம் மேதாவிகள் எழுப்பும் கேள்விகள்..

காற்றைக் காண்பிக்க முடியுமா... மூச்சைக் காண்பிக்க முடியுமா இதயாதிகள்... அதி மேதாவிகள் அளிக்கும் பதில்கள்...
//

கடவுள் இருக்கிறானா(ளா) இல்லையா என்பதை விட, கடவுளால் என்ன பிரயோஜனம், யாருக்கு பிரயோஜனம் என்பது தான் கேள்வி..

எந்த பிரயோஜனும் இல்லாத ஒன்று காலப்போக்கில் அழியும். ஆனால், கடவுளத்துவம் மட்டும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மரண வியாபாரத்தின் முதலீடு தான் கடவுள்...

செந்தில் நாதன் Senthil Nathan said...

முருகா போற்றி!! :-)

//கடவுள் எங்கே... காண்பி... நம்புகிறேன்... இதெல்லாம் மேதாவிகள் எழுப்பும் கேள்விகள்..
காற்றைக் காண்பிக்க முடியுமா... மூச்சைக் காண்பிக்க முடியுமா இதயாதிகள்... அதி மேதாவிகள் அளிக்கும் பதில்கள்... //

:-)

கலகலப்ரியா said...

நன்றி நசரேயன்.. லக்கலக்கலக..

நன்றி அதுசரி.. அந்த வயசில நிறைய எக்ஸாம் வரும்.. நீங்களே தெரிஞ்சுப்பீங்க சீக்கிரம்.. அப்புறம் மரணவியாபாரம் பாக்கு வியாபாரம் எல்லாம் சொல்லிக்கிட்டிருக்காம இடுகை போட்டா படிச்சுக்கிறோம் ஆமா..

நன்றி செந்தில்நாதன்.. வருகைக்கும்.. அரோகரா..

settaikkaran said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

'பரிவை' சே.குமார் said...

நல்லா சொன்னீங்க போங்க!!

archchana said...

எனக்கும் முருகனை பிடிக்கும். ஆனால் எல்லோரையும் கும்ம்பிட்டேன் ....அவர்கள் என்னை ஏமாற்றினார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியாமல் ..........இன்றும் நம்புகிறேன் கடவுள் இருக்கிறார் என்றே...........

கலகலப்ரியா said...

நன்றி சேட்டைக்காரன்..

நன்றி குமார்..

நன்றி அர்ச்சனா.. :)

மங்குனி அமைச்சர் said...

///தேவாரத்தில் ஆரம்பித்து, "உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவன், நிலவுலாவிய நீர்மலி வேணியன், அ'ழ'கில் சோதியன் அம்பலத்தாடுவான், மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.. "
வான்முகில்... கோன்முறை.. நான்மறை.. மேன்மைகொள் "சைவநீதி" விளங்குக வுலகமெல்லாம்...... 'திருச்சிற்றம்பலமி'ல்////


இன்னும் இதெல்லாம் மறகலையா நீங்க ,

கலகலப்ரியா said...

லேது மங்குனி அமைச்சரே... லேது..

Muruganandan M.K. said...

மதங்கள் நம்பிக்கை விரிவாக ஆராய்ந்துள்ளீர்கள்.

Sanjai Gandhi said...

அட.. இத படிக்காம விட்டுட்டேனே.. முதல்ல கொஞ்சம் டரியலா இருந்துச்சி.. ஆனாலும் மனச திடப் படுத்திட்டு படிச்சேன்.. ஏமாத்தலை.. நான் அப்போவே சொன்னேன்ல.. நீங்க பெரிய எழுத்தாளர் ஆய்ட்டிங்கன்னு.. பின்றேள் போங்கோ.. சரளமான எழுத்து நடை.. ஹ்ம்ம்.. கத்துக்கிறேன்.. கடவுள் பற்றிய அபிப்ராயம் சூப்பர்.. ரொம்பத் தெளிவா இருக்கிங்க.. வீட்ல 100 பொம்மைகள் இருந்தாலும் அதுல ஒண்ணு மட்டும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்.. அதுக்காக மத்ததெல்லாம் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை.. உங்களுக்கு முருகன் என்னும் பொம்மை பிடிச்சிருக்கும் போல.. முருகனை விசாரிச்சேன்னு சொல்லுங்க :)

Paleo God said...

//ஆனால்... கோயிலுக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் என்னை அல்லது கடவுளை எங்கேயோ தொலைத்துவிட்டே சென்றிருப்பதாகத் தோன்றுகிறது.//

அருமை!
இது ஆழம்!

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

கலகலப்ரியா said...

நன்றி டாக்டர்..

நன்றி சஞ்சய்... என்னை விசாரிக்கறதும் ஒன்னுதான்.. முருகன விசாரிக்கறதும் ஒன்னுதான்.. ம்ம்..

நன்றி ஷங்கர்..