header photo

Monday, May 31, 2010

நான் ரொம்ப்ப்ப்ப டீசண்டுங்க...

என் டயரி

(இன்று நான் வினவு என்ற தளத்தில் இயங்குபவர்களைக் கிழிக்கப் போகிறேன். அதில் மதிப்புக்குரியவர்களும் இருக்கலாம்... ஏக வசனத்தில் பேசப் போகிறேன்... டா போட்டுப் பேசப் போகிறேன்... ஏன்... வினவு என்ற ஒன்றை... நான் ஒரு பொருளாகவே பார்க்கிறேன்... தேவையில்லாத சொறியல்கள் வேண்டாமென்று தடுக்க அவர்களுக்கு அருகதை இல்லாத பட்சத்தில்... எனக்கு வேறு வழி இல்லை...)

முக்கிய குறிப்பு: நான் நர்சிம் பற்றியோ... முல்லை பற்றியோ... அது சம்மந்தமாகவோ... எதுவும் எழுதுவதாக இல்லை...! அதைப் பற்றி எழுதுவதில்லை என்றிருக்கிறேன்...! அவர்கள் இருவர் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது...! இந்த மரண மொக்கைக்கு நர்சிம்-இன் எழுத்துகள் பல பிடித்திருக்கின்றன. முல்லையை நான் அறிந்திராததால் படித்ததில்லை. அவ்ளவுதான்..!

என்னைப் பொறுத்த வரைக்கும் ப்ளாக் என்பதை என்னுடைய பப்ளிக் டயரி என்றுதான் புரிந்து வைத்திருக்கிறேன். நான் எழுதுபவை மொக்கையோ, மரண மொக்கையோ, ஒன்றுமே இல்லையோ அதைப் படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பின் பேரிலேயே இருக்கிறது. விமர்சனமும் அவ்வகையே. என்னுடைய டயரியில் எத்தகைய விமர்சனங்களை அனுமதிப்பது என்பது என்னுடைய முடிவாக இருக்கிறது.

நாளாந்தம் நான் பார்க்கும் விடயங்களில் எனக்குப் பிடித்தவை, பிடிக்காதவை பற்றி எனக்குத் தெரிந்த மொழியில்... அல்லது பிடித்த மொழியில் எழுதி வைப்பதும்.. விமர்சிப்பதும் என்னுடைய சுதந்திரம்.

எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு, எந்த வித ஆதாரமும் இல்லாது ஒரு விடயத்தை விமர்சிப்பதோ, தனி மனிதனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் குதறுவதோ என்னால் முடியாது. அது என் கடமையென்று யாராவது சொல்வார்களானால், மன்னிக்கவும் நான் பத்திரிகை கூட நடத்தவில்லை. (நான் பிறந்த என் ஈழ மண்ணில், கவனிக்க, என் மண்ணில் லட்சம் லட்சமாகக் கொள்ளிக்குக் கொடுத்தபோது பத்திரிகைகள் கூட ஒன்றும் புடுங்கவில்லை)

சென்ற வருடக் கடைசியில் என்னுடைய பெயர் குறிப்பிட்டு எழுதிய வினவு என்ற தளம் எனக்கு அறிமுகமானது. சென்று பார்த்தேன். "இந்துப் பெண்" கலகலப்ரியாவிற்கு.. என்று இருந்தது பார்த்துவிட்டுத் திரும்பி விட்டேன். என்னுடைய அந்தக் கவிதை என்னுடன் மிக நெருங்கிய நட்புடன் பழகும் பர்தா அணியாத முஸ்லிம் தோழிகளுக்காக என்று சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறார்களா வினவு மற்றும் அதன் ஆதரவாளர்கள்... ஹும்..

என்னுடைய ஒரு வருட நடவடிக்கையில், எத்தனை எத்தனை இஸ்லாம் நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன், கலந்துரையாடி இருக்கிறேன், சேர்ந்து பேசி உண்டு மகிழ்ந்திருக்கிறேன் என்று சொன்னால் புரியுமா? என்னுடைய பணி, நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு எதையாவது எழுதிக் கொண்டே இருப்பதில்லை என்பது புரியுமா? அதை விடுத்து தினம் தினம், பல பல விதமான மக்களுடன், அவர்களின் பிரச்சனைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் புரியுமா...? புத்தகத்தில் அரையும் குறையுமாக எதையாவது படித்து விட்டு, அதைக் கொள்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு நடைமுறையில் நத்தைகள் மாதிரி இருப்பவர்களுக்கு இது புரியுமா. வெத்து வேட்டுக் கூட்டத்திற்கு என்னிடம் கேள்வி கேட்கும் அருகதை எங்கிருந்து வந்தது?

என்னை ஒழுங்காக இருக்கச் சொல்லும்போதே தெரியவில்லையா... நீங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை. தனி மனிதத் தாக்குதல் பற்றி எழுதும் நீங்கள் எழுதித் தாக்காத தனி மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? தனி மனிதத் தாக்குதல் பற்றி எழுதுவதற்கு கூச்ச நாச்சமில்லையா. நீங்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி "GANG RAPE" செய்வதுதான் மிக உத்தமமான காரியமா.

இன்று நர்சிம் இடுகைக்கு, இந்த மரண மொக்கைக்காரி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கன அக்கறையுடன் கேள்வி எழுப்பும் வினவு (ஏன் ஐயா உங்கள் புனிதப் பத்திரிகையில் எல்லாம் எங்களைப் போன்றவர்கள் பெயர் எல்லாம்... பத்திரிகை நாறி விடாதா...), என்னுடைய பெயர் போட்டு வாய் புளித்ததா, மாங்காய் புளித்ததா என்று எழுதியபோது, நான் வாய் பொத்தி மெளனமாக இருந்தபோது கேட்கத் தெரியவில்லையா இந்தக் கேள்வியை. எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாத இந்தப் பூச்சியைப் பார்த்து (சாக்கடைப் புழுக்களைப் பார்த்து நகர்ந்து விடுகிறேன் என்று நான் காரணம் சொன்னாலும்) சொல்கிறது ஒரு முகமூடி புரர்ர்ச்சி தலைவியாம். இன்னொன்று சொல்கிறது நான் ஒழுங்கா இருக்கணுமாம். இதை என்னோட பாட்டனே என் கிட்ட சொன்னதில்லைடா புறம்போக்கு.

வினவுக் குழு மற்றவர்கள் பற்றித் தெரியாது, கண்ட மேனிக்கு எழுதித் தள்ளுவது போன்று, வினவு என்ற போர்வையில் ஒளிந்திருக்கும், அசிங்க முகங்கள் பற்றியும் எழுத முடியும்.

எப்டி..?

அவன் இந்து. அவன் முஸ்லிம். அவன் கிறிஸ்தவன். அவன் பொறுக்கி. அவன் புறம்போக்கு. அவன் மொள்ளமாரி. அவன் பேமானி. அவன் பள்ளிக் கூடமே போனதில்லையாம். அவன் மூணு வயசானப்பவே பக்கத்து வீட்டு பொம்பளைய கக்கூஸில எட்டிப் பார்த்த பயல். அந்தப் புத்திதான் இந்த அளவுக்கு மத்தவங்க தனி வாழ்க்கை பற்றிக் கேட்டுக் கேட்டு எழுதச் சொல்கிறது. அவன் ஒழுங்கா இருந்தா எதுக்கு முகம் மூடி போட்டுக்கிட்டு எழுதுறான். அசிங்கம் புடிச்சவைங்க. கூடிக் கூத்தடிச்சு, பார்-ல படுத்துக்கிட்டே பதிவு எழுதுவாங்களாம்ல. யாராவது இவனுங்களுக்கு எதிரா எழுதினா ஆட்டோ அனுப்புவாங்களாமில்ல. அட இவ்ளோ ஏனப்பா, இவனுங்களுக்குன்னே ஒரு ரவுடி கும்பலே வச்சிருக்கிறானுன்களாமில்ல.

இப்டி... எல்லாம்... என்னாலயும் சொல்ல முடியும். ஏன்னா.. என்னோட பேரு வினவு பக்கத்தில வந்ததுமே, அடிச்சு புடிச்சு எனக்கு ஆறுதல் சொல்ற அப்பாவிங்க சொல்றதெல்லாம், "அந்த நாயிங்க ரொம்ப மோசமானவங்க, ச்சீ... அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டியை எல்லாம் வீட்டில வச்சு பூட்டிட்டு வந்து வாயால மட்டும் கிழிச்சுக்கிட்டிருக்காங்க, அவங்களுக்கு பதில் போடாத, போட்டா உன்னை எவ்ளோ கேவலமா சொல்ல முடியுமோ அவ்ளோ கேவலமா சொல்லுவாங்க. இதை வச்சே வருஷக் கணக்கில, ஆயுள் கணக்கில இடுகை போட்டு, எல்லா இடுகைளையும் உன்னோட பேர இழுத்து ஏதோ ஒரு முட்டையில மயிர் புடுங்குவாங்க"

இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு, இவனுங்க என்னோட பெயரை இழுத்து கன்னா பின்னான்னு எல்லா இடத்திலயும் போஸ்டர் அடிச்சு ஓட்டுவாங்க. எல்லாம் பார்த்துக்கிட்டு நான் பொத்திக்கிட்டு இருக்கணும். ஏன்னா நான் ஒரு பெண். மொக்கை மட்டுமே எழுதத் தெரிஞ்ச புறம்போக்கு.

இப்போ என்னைப் provoke பண்ணி என்ன சாதிக்கப் போறாங்க. என்னையும் பதிவுலகத்தை விட்டு தொரத்தலாம். ஒரு நூறு நூற்றைம்பது மைனஸ் ஓட்டு குத்தலாம். இருநூற்றியம்பது எதிர்ப்பதிவு வரலாம்.

ஒன்னு இவங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற புறம்போக்கு நிலத்தில்தான் நான் இந்த ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்.

ரெண்டு... எனக்கு இந்த பதிவுலகம்தான் சோறு போடுது. மத்தவங்கள வம்புக்கு இழுத்துதான் நான் சாப்டுக்கிட்டிருக்கேன்.

__________________________________________________________________________________________

ஜாதி, மதம், புண்ணாக்கு, புளியங்கொட்டை இந்த வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடுங்க மாதிரி உழண்டு கொண்டிருக்கிறவங்க கேட்டுக்குங்க... உங்க மசிர் வட்டத்தை எல்லாம் நான் தாண்டி பல வருஷமாச்சு...

கவுண்டமணி அங்கிள்.. ஆப்பிரிக்கா தலையான்னு செந்தில திட்டினா பார்த்து சிரிக்கிறவங்க எழுதுறதுக்கெல்லாம் நான் என்ன புடுங்க முடியும்.

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே... ஏன் தெரியுமா... உங்களால அவ்ளோதான்யா சிந்திக்க முடியும்... மேல முடியாது...

இந்த மசித்துக்கு மேலயும்... என்னை இந்து... மசிரு என்ற ஒரு வரையறைக்குள் வைத்து என்ன புடுங்க முடியுமோ புடுங்குங்க...

அப்புறம்... எனக்கு பட்டமெல்லாம் கொடுத்தாங்க... எனக்கு நானே பட்டம் கொடுக்கிறேன்னு சொன்னாங்க... ஒரு விஷயம்... செக்ஸ் தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது... அவர்கள் பிழைப்புக்காகச் செய்கிறார்கள்... மிகவும் கவுரவமானவர்கள்.... அவர்கள் கூடப் படுத்தவர்களை... வினவு மாதிரி வீதி வீதியாகக் கூவிச் சொல்லும் நாகரிகம் கற்றிராதவர்கள்... அவர்களை நான் மிக மிக மதிக்கிறேன்...

ஸோ... பட்டம் கொடுக்க வேண்டியவர்கள்... எனக்கு தாராளமா கொடுத்துக்கலாம்... உங்க பட்டத்தையெல்லாம் வச்சுதான்... நான் மேல என்னோட எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று தீர்மானிக்கணும்...

கொடுத்துக்குங்கடா... எனக்கும் நிறைய மொழில... விதம் விதமா எப்டி திட்டுறது... என்ன என்ன கெட்ட வார்த்தை இருக்கோ... எல்லாம் தெரியும்... என்ன்ன்ன வேணா சொல்லி திட்டிக்குங்கடா... இப்டி பொம்பளைங்களயும், மத்தவங்களையும் ப்ளாக் மெயில் பண்ணி எத்தன நாளைக்குடா குப்பை கொட்டுவீங்க... நான் குப்பம்ன்னா குப்பம்.... சிட்டின்னா சிட்டி..... மசிரே போச்சு... அவ்ளோ உசிரே போச்சு... என்னோடது ஒரே ஒரு நாத்தம்புடிச்ச உசிர்தாண்டா...

_____________________________________________________________________________________________

72 ஊக்கம்::

கலகலப்ரியா said...

த்த்த்த்தூ..........

vasu balaji said...

நான் சொம்புதூக்குகிறேன். இதில் எனக்கு வெட்கமில்லை. வார்த்தைக்கு வார்த்தை வழி மொழிகிறேன்.’பெண்’ என்று பேசிய பெம்மான்கள் இதற்கு பதில் சொல்லட்டும். அது வினவேயானாலும். சந்தனமுல்லையை ஆதரிக்க என்ன உரிமையிருக்கிறதோ, அது தவறேயானாலும், ஆதரிக்கவோ எதிர்க்கவோ கலகலப்ரியாவுக்கு இருக்கும் உரிமையை கேள்வி கேக்க யாருக்கும் உரிமையில்லை. வன்புணர்வு என எழுதியவர்கள் யாரைக்கேட்டு யார் சம்மதத்துடன் மிஸஸ் டவுட், கலகலப்ரியா பெயரை இழுத்தார்கள். இதை அங்கு கேள்வியாக வைத்தால் பதில் வர வாய்ப்பேயில்லை என்பது தெளிவு.

vasu balaji said...

/என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... //

இதன் பின்னான நேர்மை நானறிவேன். கலாச்சார முகமூடிகளுக்கு ஹார்ட் அட்டாக் வரும்:)))

டவுசர் பாண்டி... said...

நானும் ரொம்ப டீசண்ட்டுங்க....

நீங்க சொன்னதை எல்லாம் வழி மொழிஞ்சிக்கறேன்.

வாழ்த்துக்கள்...

ராஜ நடராஜன் said...

எங்கே யாருக்கு என்ன பின்னூட்டமிடலாமென்ற குழப்பமாக இரு தினங்கள் நகர்கின்றது.


மீள் பார்வைக்கும் கருத்துக்கும் மீண்டும் வருகிறேன்.

மணிகண்டன் said...

தேவையற்று உங்களை இழுத்தது அயோக்கியத்தனம்.

இப்பொழுது இவ்வளவு கேள்வி கேட்கும் ((கருத்துக் கூறச் சொல்லி வற்புறுத்தும்) இவர்கள் ஒரு வருடம் முன்பு தீபாவை அளவுக்கு அதிகமாக அனைவரும் திட்டிய போது ஒரு பின்னூட்டமும் ஆதரித்தோ எதிர்த்தோ போட்டதில்லை. இப்பொழுது பிரச்சனை வரும் போது மட்டும் அதை பயன்படுத்துகிறார்கள். ஒருவேளை தீபாவின் ஜாதி இவர்கள் கருத்து சொல்ல உகந்ததாக இல்லையோ என்னவோ.

மற்றபடி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறான ஒரு பதிவில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்களை கருத்து சொல்லக்கூறி யாரும் கட்டாயபடுத்த முடியாது. ஆனால் இவ்வளவு பெரிய இடுகை எழுதிய நீங்கள் நரசிம் எழுதியதை படித்துவிட்டும் ஒரு சிறிய வருத்தத்தைக் கூட பதிவு செய்யாததை இனி கேள்வி கேட்க தான் செய்வார்கள். நானும் கேட்கிறேன். பல முஸ்லிம் பெண்களுடன் பழகுவதால் சுமஜ்லாவை கேள்வி கேட்ட நீங்கள் இப்பொழுது நீங்கள் சில இடுகைகள் மட்டும் படித்துள்ள ஒருவர் ஒரு பெண்ணை விபச்சாரி என்று சொல்லும்போது அவரின் குழந்தையை பற்றி அநியாயமாக எழுதும் போதும் மவுனமாக போவது ஏன் ?

கலகலப்ரியா said...

//அவரின் குழந்தையை பற்றி அநியாயமாக எழுதும் போதும் மவுனமாக போவது ஏன் ?//

குழந்தையைப் பற்றி அநியாயமாக எழுதியதாகக் கவனமில்லை...

எனக்குப் பதிவுலகில் அறிந்தவர்கள் மிகக் குறைவு... நர்சிம் யார்.. முல்லை யார்... நர்சிமுக்கு முல்லை யார்... எதனால் இது நிகழ்ந்தது... என்ற யோசனை ஓடியதால்... என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை...

நீங்கள் மிகவும் நல்லவரா? அப்படியென்றால் உங்கள் தன்மையை அறியும் சந்தர்ப்பம் எனக்கில்லை... என்னை இப்பொழுது வினவு போன்று யாராவது சொறிந்து கொண்டிருந்ததால்.. நான் இப்பொழுது என்னுடைய நிலையிலிருந்து மிகவும் இறங்கி இருக்கிறேன் இல்லையா..?

அதனால்... நானும் சட்டென்று ஒருத்தியை... அல்லது ஒருவனைக் கேவலமாகத் திட்டும் சந்தர்ப்பம் வாய்க்கலாம்.. வாய்த்திருக்கிறது..

அதனால் நான் ஒன்றும் நல்ல பிள்ளை இல்லை... அதனால் மற்றவர்களைக் கண்டிக்கும் அருகதையோ, உரிமையோ எனக்கு இல்லையெனக் கருதிகிறேன்...

ஆனால் மற்ற மதத்தை நான் இழிவு படுத்தியதில்லை.. கேள்விகள் கேட்டிருக்கலாம்... அவ்வளவே.. அதனால் அங்கு நான் கேள்வி எழுப்புவதற்கான அருகதை எனக்கு இருந்தது...

முதலில் என் முதுகைப் பார்ப்பது நலம் என்று கொண்டிருக்கிறேன்... அதைத்தான் இஸ்லாம் மதத்திலும் சொல்லி இருக்கிறார்கள்...

vasu balaji said...

//நீங்கள் நரசிம் எழுதியதை படித்துவிட்டும் ஒரு சிறிய வருத்தத்தைக் கூட பதிவு செய்யாததை இனி கேள்வி கேட்க தான் செய்வார்கள்.//

இது நர்சிம்மை எதிர்த்து கேள்வி கேட்காதவர் அனைவருக்கும் பொருந்தும் என்ற வகையில்

1. நர்சிம்மின் இடுகையை பின்விளைவாகப் பார்க்கத்தான் முடிகிறது.
2. அவரின் எழுத்துக்களை கண்டிப்பாக ஒரு நரகலாகத்தான் என்னால் கருதமுடிகிறது. அந்த நரகலைத் தேடித் தேடி விமரிசிக்க எனக்கு மனமில்லை.
3.அழுத்தத்தில் அவர் எழுதியது ஒரு மூன்றாவது மனிதருக்கு தரக்குறைவாக, அல்லது அளவுக்கு அதிகமாக, வரம்பு மீறியதாக இருக்கலாம். சட்டத்துக்கு அது ப்ரொவோகேஷன் டு ஆக்ட், எமோஷனல் அவுட் பர்ஸ்ட் அவ்வளவுதான்.
4. இதைக் கேட்பவர்கள் இப்போது அங்கு தொலைபேசி எண்கேட்டார் என பின்னூட்டம் இடுபவர் தேடித்தேடி கும்மியடித்து தனிமனித அவமதிப்பை ஏன் துவக்கவேண்டும் எனக் கேட்டார்களா?

இராகவன் நைஜிரியா said...

உங்களை அனாவசியமாக இடுகையில் இழுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அது சரி(18185106603874041862) said...

மதத்தையும் ஜாதியையும் எதிர்க்கிறேன் என்ற போர்வையில் எல்லா விஷயத்திலும் ஜாதியையும் மதத்தையும் இழுப்பவர்கள் இந்த விஷயத்திலும் இழுத்திருக்கிறார்கள், அப்படியெ உங்களையும்.

இப்படி இழுக்காவிட்டால் இவர்களின் "பொர்ச்சி" சீக்கிரம் வராது என்ற பயமோ என்னவோ? இப்பொழுதே இப்படி இழுத்து பொர்ச்சி செய்பவர்கள் ஒரு வேளை பொர்ச்சி நிஜமாகவே வந்து விட்டால் என்ன செய்வார்கள்?? சைபீரியா? புதைகுழிகள்?? நான் இப்பொழுதே எதற்கும் சொல்லி வைக்கிறேன்...வாழ்க மாவோயிஸம்...(பின்னர் அவர்கள் வர்க்க விரோதி என்று மனித நேயத்துடன் என்னை அழித்தொழிக்க வரும்போது தப்பிக்க ஒரு சிறிய வழி...)

மக்கள் போகும் ரயிலில் குண்டு வைத்து கொன்று விட்டு அதே மக்களுக்காக போராடுவதாக சொல்லும் துணிச்சல் "பொர்ச்சி" செய்பவர்களால் மட்டுமே முடியும்!

சீமாச்சு.. said...

உங்கள் கருத்துக்களில் உடன்படுகிறேன். உங்கள் சம்மதமில்லாமல் உங்களை அவர்கள் பதிவுக்குள் யார் இழுத்தாலும் அது வன்முறையே..

உங்கள் இடுகையில் உள்ள கருத்துக்களும் அதில் உள்ள நியாயமான கோபமும் வியக்க வைக்கின்றன. இதெல்லாம் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் புரிய வேண்டுமே என்பது தான் என் கவலை..

அன்புடன்
சீமாச்சு...

சீமாச்சு.. said...

//இது நர்சிம்மை எதிர்த்து கேள்வி கேட்காதவர் அனைவருக்கும் பொருந்தும் என்ற வகையில்

1. நர்சிம்மின் இடுகையை பின்விளைவாகப் பார்க்கத்தான் முடிகிறது.
2. அவரின் எழுத்துக்களை கண்டிப்பாக ஒரு நரகலாகத்தான் என்னால் கருதமுடிகிறது. அந்த நரகலைத் தேடித் தேடி விமரிசிக்க எனக்கு மனமில்லை.
3.அழுத்தத்தில் அவர் எழுதியது ஒரு மூன்றாவது மனிதருக்கு தரக்குறைவாக, அல்லது அளவுக்கு அதிகமாக, வரம்பு மீறியதாக இருக்கலாம். சட்டத்துக்கு அது ப்ரொவோகேஷன் டு ஆக்ட், எமோஷனல் அவுட் பர்ஸ்ட் அவ்வளவுதான்.
4. இதைக் கேட்பவர்கள் இப்போது அங்கு தொலைபேசி எண்கேட்டார் என பின்னூட்டம் இடுபவர் தேடித்தேடி கும்மியடித்து தனிமனித அவமதிப்பை ஏன் துவக்கவேண்டும் எனக் கேட்டார்களா?//

இதுவரை நர்சிம்-முல்லை விவகாரத்தில் கருத்து சொல்லாத வெகு மூத்த பதிவர் (!!) என்ற வகையில் வானம்பாடிகள் அவர்களின் கருத்துக்களுடன் உடன் படுகிறேன்..

Anonymous said...

என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது பிரியா. கெட்ட வார்த்தையால் திட்டுவது தீர்வு இல்லை என்று ஒரு பக்கம் தோன்றினாலும், சில வேளைகளில் காறி உமிழவேணும் போல இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்வளவு தூரம் நீங்கள் ரௌத்திரம் கொள்ளும் அளவுக்கு இழுத்து உள்ளார்கள் என்றால் வேதனையாகவும் கோவமாகவும் இருக்கிறது. பதிவுலகம் இவ்வளவு அசிங்கமானதா? பயமாக இருக்கிறது.

Anonymous said...

இவ்வளவு கேவலமாக எழுதி இருக்கும் வினவு தளத்துக்கு எதிராக கேஸ் போடவேண்டும். Mental Trauma அது இதுன்னு எடுத்து விடுங்க. யாராவது ஒருத்தர் வழக்கு போட்டு நல்ல ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும். இப்போது தான் வினவை எட்டுப்பார்த்தேன். வாயில் புதிது புதிதாக கெட்டவார்த்தை வருகிறது. இவங்களுக்குப் பெயர் தான் MF.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்களை நாங்களறிவோம் ப்ரியா!

புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு உங்களது இந்த விளக்கம் காதிலேறப் போவதில்லை!

ரவி said...

ஒரு மைனஸ் ஓட்டை குத்திவிட்டு நகர்ந்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

காரணம் பட்டை பட்டையாக தீட்டி சுஜ்மலாவுக்கு எதிராக கிளம்பிய நீங்கள், கிணத்தில் போட்ட கல்லைப்போல கள்ள மவுனம் சாதித்ததை அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்று நினைக்கிறேன். அது சரி என்று நம்புகிறேன்.

Unknown said...

வினவைப் படித்துவிட்டு வருகிறேன்.. அது வரை ஃபாலோ அப்க்காக

கலகலப்ரியா said...

//செந்தழல் ரவி said...
ஒரு மைனஸ் ஓட்டை குத்திவிட்டு நகர்ந்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

காரணம் பட்டை பட்டையாக தீட்டி சுஜ்மலாவுக்கு எதிராக கிளம்பிய நீங்கள், கிணத்தில் போட்ட கல்லைப்போல கள்ள மவுனம் சாதித்ததை அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்று நினைக்கிறேன். அது சரி என்று நம்புகிறேன்.//

தம்பி நீங்க யாரு? எந்த ஊரு? நான் சுமா அக்கா கிட்ட வாக்குவாதப்பட்டப்போ உங்க தலையை நான் காணவே இல்லையே.. வினவு என்னோட பேர அங்க போட்டு விவாதிச்சப்போ.. நீங்க எனக்காகக் குரல் கொடுத்தீங்களா...

யோவ் யாருய்யா நீங்க எல்லாம்... என்னோட பதிவ சரியா படிச்சீங்களா... மைனஸ் ஓட்ட்ட்டுத்தானே... குத்துங்கைய்யா... குத்திட்டு போய்க்கிட்டே இருங்க...

வந்துட்டானுவ... தப்பு செரி சொல்றதுக்கு... ஏன் அன்னைக்கு சீமாச்சு சார கூட ஒருத்தன் கிழிச்சான்.. யாராவது எட்டிப் பார்த்தீங்களாய்யா... அதுவும் இண்டர்நேஷனல் மாஃபியா ரேஞ்சுக்கு கிழிச்சான்..

இப்போ என்னையா அக்கறை உங்களுக்கு... எனக்கு தோணினத நான் செய்வேன்... இப்போஓஓஒ நீங்க எனக்கு பக்கத்து வீட்டுக்காரன்னு இருக்கட்டு... நீங்க உங்க பொண்டாட்டிக்கு அடிச்சா நான் பல்லு விளக்கிட்டிருப்பேன்... ஒரு வேளை பொண்டாட்டி உங்களுக்கு திருப்பி அடிச்சா... ஏதாவது சொல்லலாம்... அது என்னோட மன நிலையைப் பொறுத்தது... அதுக்காக ஊர்ல நடக்கற பிரச்சனை எல்லாம் போய்க் கேளுன்னா என்ன மசித்து நியாயம்...

Unknown said...

வினவைப் படித்தேன்..

இவர்கள் போக்கிலேயே பேசினால், நர்சிம்மின் இடுகையை வன்புணர்ச்சி என்று சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் செய்யாத வன்புணர்ச்சியா? வினவால் லீனாவுக்கு நேர்ந்ததும் மற்ற பெண்களுக்கு நேர்ந்ததும் பதிவுலகம் மறந்துவிடுமா?

அதெல்லாம் இருக்க, அந்த இடுகையில் உங்களை இழுத்தது என்பது தேவையில்லாத ஒன்று.

உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன்.

Anonymous said...

ஒரே ஒரு கட்டுரை தான் வினவு தளத்தில் படித்தேன். தூ என்று துப்ப வேண்டும் போல இருக்கு. மஞ்சள் பத்திரிகைக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். என் பிரண்டை உடனேயே கூப்பிட்டு அந்த தளத்தை பாஸ்வேட்டுடன் ப்லொக் பண்ணு என்று கேட்டு செய்தும் விட்டேன். இனிமேல் என்னால் அந்த தளத்தைப் பார்க்கமுடியாது. நிம்மதி. அவன் என்ன பாஸ்வேர்ட் கொடுத்தாரோ தெரியாது. நிம்மதி. எதுக்கு சகதியில் புரள வேண்டும். இன்னும் எனக்கு படபடப்பு குறையவில்லை.

கலகலப்ரியா said...

அனாமிகா... அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள்... மிகவும் எமோஷனலாக இருக்கிறீர்கள்... அந்த gang ரொம்ப vulgar.. எல்லாம் சொல்லும்... என்னை மாதிரி வாழ்க்கை மிகவும் குறுகியது என்றிருப்பவர்களுக்கு அது துச்சம்... உங்களை அது காயப்படுத்தி விடக் கூடும்..

நர்சிம் அவர்களை இவ்ளோ தூரம் சொல்பவர்களில் முக்கால்வாசிப் பேர் அதே தப்பைக் கண் முன்னாடி செய்வார்கள்.. இதுதான் மனிதர்கள்...

ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள்... உங்களை யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள்... உங்களை நீங்கள் அறிவீர்கள்தானே... தைரியமா இருங்கோ...

ப்ரியா..

பழமைபேசி said...

வணக்கம்; தங்கள் மனநிலையை ஒட்டி கருத்துச் சொல்லாதவர்களைச் சாடும் வினவு தோழர்களின் போக்கினால் நானும் முன்னர் பாதிக்கப்பட்டவன் ஆனேன். மன உளைச்சலுக்கு ஆளானவன். அவ்வகையில், சகபதிவர், சகோதரி கலகலப்பிரியாவைக் குறிப்பிட்டு இருந்தார்களேயானால், எனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------

அடுத்து, நர்சிம் அவர்களது எழுத்து பற்றி:

அவர் ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, அவ்வட்டத்தை ஒட்டியே சிந்திக்கிறார் என நினைக்கிறேன். ஒட்டு மொத்த பதிவுலகமும், ரோசா வசந்த் என்பவரைக் கும்மு கும்மு என்று கும்மிய போது யாதார்த்தமாக வினா எழுப்பியவன் நான். அப்போதே, நர்சிம் அவர்களை மறைமுகமாகச் சாடி, shame on you Mr.Clean எனச் சொல்லி இருந்தேன். இப்போது அந்த Mr.Clean என்பதும் Clean ஆகிவிட்டது.

க ரா said...

உங்கள் கருத்துகளோடு முழுவதும் உடன்படுகிறேன். இந்த வினவு மாதிரி ஆடகளக்கு ஒரு அஃறினைக்கு கொடுக்கும் மதிப்பை கூட கொடுக்க கூடாது என்பது என் கருத்து. ஒன்றுக்க்குமே மதிக்க தக்காத எழுத்து அதுவின் எழுத்து.

smart said...

உங்களை அனாவசியமாக இடுகையில் இழுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Sabarinathan Arthanari said...

நண்பரே,

மன அமைதி கொள்ளுங்கள். ஒரு பழைய விடயம் காரணமாக சம்பந்தமேயில்லாமல் உங்களை இழுப்பது மிக மோசமான விசயம்.

இவர்கள் பெண் உரிமைக்கு குரல் கொடுக்கும் இலட்சணம் இந்த விதமாக இருக்கிறது

Sabarinathan Arthanari said...

தொடர்வதற்கு

Sanjai Gandhi said...

அப்டி போடு அருவாள.. :)))

//இந்த மசித்துக்கு மேலயும்... என்னை இந்து... மசிரு என்ற ஒரு வரையறைக்குள் வைத்து என்ன புடுங்க முடியுமோ புடுங்குங்க...//

ஹிஹி.. அவங்களுக்கு சாதி மதம் தாண்டி எல்லாம் சிந்திக்க தெரியாது.. டோண்ட் வொரி.. பீ ஹேப்பி..

அந்த பதிவே ஒரு சாக்கடைத்தனமானது.. அதில் மங்களூர் சிவா, குசும்பன், உங்களை எல்லாம் இழுத்தது, அவங்களோட அயோக்கியத்தனத்தையே காட்டுது.. அவங்க பேசறது தான் டுபாக்கூர் கம்யூனிசம்.. ஆனால் அமெரிக்காக் காரன் மனப்பான்மை தான்.. நீ எங்களை ஆதரிக்கவில்லை என்றால் எதிரியுடன் இருக்கிறாய் என்று அர்த்தம் என்ற மனநோய் பிடித்த கும்பல் அது.. முல்லையின் குழந்தைகள் பற்றிய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவர்களை வழியிறவங்க என்று பொதுவாக சேரை வாரி இறைத்த நர்சிமுக்கும் பெண்களுடன் பேசுவதாலேயே ஜொள்ளர்கள் என சிலரைக் குறிப்பிட்டிருக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

இவர்களுக்கு பெண்கள் மீது பெரிய பாசமெல்லாம் ஒன்றும் இல்லை.. இதற்கு முன் பதிவுலகத்தில் எந்தப் பெண்ணும் பாதிக்கப் படவே இல்லையா? அப்போ எல்லாம் இந்த முகமூடிகள் எங்கே ஒளிந்துக் கொண்டிருந்தார்களாம்?..
முல்லை , வினவுக்காக கட்டுரை எழுதியவர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கிறார்கள்.. நாளையே அவர் இவர்களுக்கு பிடிக்காத ஒரு பதிவு போட்டால் அவரையும் திட்டுவார்கள்..

ஃப்ரீயா விடுங்க ஆபிசர்.. ஒரு பதிவை வீணடிச்சிட்டிங்களே..

குடுகுடுப்பை said...

நர்சிம்மின் புனைவு மிகக்கேவலமானது எனது கண்டங்கள், உங்களை வினவு கும்பல் எழுதிய புனைவில் இழுத்ததை நீங்கள் புறக்கணித்திருக்கலாம், அவர்களுக்கு தனிமனித உரிமை சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு புனைவினால் பாதிக்கப்பட்டவர்கள்.

Sanjai Gandhi said...

ப்ரியா, பதில் சொல்லும் போது கொஞ்சம் நிதானம் இருக்கட்டுமே.. ரவிக்கு நீங்க சொல்லி இருக்கும் பதில் வினவுகளின் பதில் போலவே இருக்கு.. ரவி, மரியாதைக்குரிய பதிவர் மற்றும் நண்பர்.. என்ன மசித்துக்கு என்று கேட்கும் அளவெல்லாம் அவர் எதுவும் கடினமான வார்த்தைகளில் சொல்லிவிடவில்லை.

அனாமிகா அவர்களுக்கு சொல்லி இருக்கும் அறிவுரையை நீங்களும் ஒருவாட்டிப் படிச்சிடுங்க..

( இப்போ என்னையும் திட்டுவீங்களே.. பட் புதுசா எதுனா ட்ரை பண்ணுங்க.. இது வரைக்கும் திட்டாத மாதிரி :-) )


ஏம்பா, பதிவுக்கு ப்ளஸ் ஓட்டு போட்டு தொலைச்சிட்டேன்.. பின்னூட்டத்துக்கு மைனஸ் வோட்டுப் போடும் வசதி எதும் இல்லையா? :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... . அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்...

அருமை என் எண்ணம் இதே..


செக்ஸ் தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது... அவர்கள் பிழைப்புக்காகச் செய்கிறார்கள்... மிகவும் கவுரவமானவர்கள்.... அவர்கள் கூடப் படுத்தவர்களை... வினவு மாதிரி வீதி வீதியாகக் கூவிச் சொல்லும் நாகரிகம் கற்றிராதவர்கள்... அவர்களை நான் மிக மிக மதிக்கிறேன்...

மிக சரி...அவர்கள் பணத்துக்காக செய்கிறார்கள்.. வலையில் சிலர் அற்ப புகழுக்காக வக்கிரமாய் எழுதிதங்களை விற்கிறார்கள்..

settaikkaran said...

இது தொடர்பான சில இடுகைகளைப் படித்து விட்டு, இங்கு வந்திருக்கிறேன்.

ஒரு சில பதிவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், அத்துடன் தொடர்பில்லாத பல பதிவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்கள் மீதும் சேற்றை வாரிப் பூச வினவு முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சில விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி ஒரே இடுகையில் பல பதிவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வினவு செயல்பட்டிருப்பது மாத்திரமே புரிகிறது.

காலம் காயங்களை ஆற்றட்டும்- அனைவரது காயங்களையும்!

சிவாஜி சங்கர் said...

Cool Sis :)

மணிஜி said...

நர்சிமை கண்டிக்கிறேன் பேர்வழி என்று பலரையும் சந்திக்கு இழுத்தார்கள் வினவு. சந்தடி சாக்கில் பாலியல் புகார் வேறு . பதிவுலக நாட்டாமை அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது தெரியவில்லை. ”பைத்திக்காரத்தனமாய்” எவனோ , எதியோ சொன்னதை வினவும் எழுதியிருக்கிறார்கள் . உன் ரெளத்திரத்திற்கு வாழ்த்துக்கள் ப்ரியா

தமிழ் அமுதன் said...

வினவின் பதிவில் முதல் இரண்டு வரிகளை பாருங்கள் ஒரு பெண்ணுக்கு
வக்காலத்து வாங்குவதாய் சொல்லி அவரை மேலும் கொச்சை படுத்தி இருகிறார்கள். அந்த வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் போட்ட கமெண்ட் பதினேழாவதாக வந்து இருக்கிறது. ஆனால் அந்த கமெண்டை அவர்கள் எழுபது கமெண்ட் வந்த பிறகுதான் பப்ளிஷ் செய்தார்கள்..!



இதிலிருந்து தெரிகிறது அவர்கள் யோக்கியதை...!

அன்புடன் நான் said...

மலத்தை மிதிக்காம... தள்ளி போங்க ப்ரியா.

(நீங்க கோவப்படுவதை எதிரி ரசிப்பான்)

தமிழ் அமுதன் said...

May 31, 2010 at 10:49 pm

///நர்சிம்மின் பதிவிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே வேளையில் வினவையும் எதிர்க்க வேண்டி இருக்கிறது
சந்தன முல்லை யை ஆதரிப்பதாக கூறி கொண்டு,இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு தங்கள் அரிப்பை தீர்த்து கொண்டு அவரையும் கொச்சை படுத்தி உள்ளனர்//



இது நான் அங்கே இட்டது..!
இங்கேயும் இருக்கட்டும்..!

ஈரோடு கதிர் said...

அப்ப்ப்ப்ப்ப்ப்படிப் போடு!!!!!!!

தமிழ் உதயம் said...

ரெம்ப நாள் கழிச்சு வந்து இருக்கேன்.

விஜய் said...

அக்கா, என்னை மாதிரி நிறையா தம்பிங்க உங்க கூட இருக்கோம்,நீங்க பட்டைய கிளப்புங்க அக்கா....புலிக்கு பதுங்கவும் தெரியும், பாயவும் தெரியும்னு சொல்லுங்க........

நாளும் நலமே விளையட்டும் said...

எழுதுவது எப்படி வேணும்னாலும் எழுதுவிங்களா?
இன்னமும் நரசிம் "அவர்களே"? ரொம்ப நல்லா இருக்கு!
தயவு செய்து பண்பாடு என்பதோடு எழுத முயலுங்கள்!
யார்! என்று தெரிந்தால் தான் ஒரு மனிதனை கண்டிக்க முடியும் என்று நீங்கள் சொன்னால் நீங்கள்
வேடிக்கை செய்கிறீர்கள் என்பதே சரி!
என்னையும் மயிறு என்று திட்ட வேண்டாம்!

கலகலப்ரியா said...

||நாளும் நலமே விளையட்டும் said...
எழுதுவது எப்படி வேணும்னாலும் எழுதுவிங்களா?
இன்னமும் நரசிம் "அவர்களே"? ரொம்ப நல்லா இருக்கு!
தயவு செய்து பண்பாடு என்பதோடு எழுத முயலுங்கள்!
யார்! என்று தெரிந்தால் தான் ஒரு மனிதனை கண்டிக்க முடியும் என்று நீங்கள் சொன்னால் நீங்கள்
வேடிக்கை செய்கிறீர்கள் என்பதே சரி!
என்னையும் மயிறு என்று திட்ட வேண்டாம்||

எப்டி வேணா எழுதுவீங்களான்னு வினவுக் குழு கிட்ட போய்க் கேளுங்க சார்...

பண்பாடா... அப்டின்னா என்ன?.. மசிரு அப்டிங்கிறது தமிழ்ச் சொல்... நிறையக் கெட்ட வார்த்தை இருக்குதுன்னாலும்.. இது அவ்ளோ மோசமில்லைங்கிறதாலதான் இத யூஸ் பண்றேன்... அப்ப்ப்ப்புறம்ம்ம்... இந்தப் பண்ண்ண்ண்ண்ண்பாடுன்னு சொல்றீங்கல்ல... அத நீங்க கட்டிக் காப்பாத்துங்க சார்... யாரோ ஒருத்தன் என் மூஞ்சில சேற்றை வாரி இறைச்சிட்டே இருப்பான்.. நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடனும்... அதுக்கு பேருதான் பண்ண்ண்ண்பாடா... ஆகா... நடக்கட்டு...

அப்புறம்... நர்சிம் அவர்களேயா... ஆமாம்யா... i respect him.. ஒருத்தன் ஒரு வார்த்தை சொல்லிட்டான்னு... கிராமத்தில பஞ்சாயத்தக் கூட்டி ஊரில இருந்தே ஒதுக்கி வைக்கறோம்.. சொட்டுத் தண்ணி கொடுக்கக் கூடாதுன்னு சொல்ற மாதிரி இருக்கே உங்க கூத்து... வேலைய பாருங்கைய்யா... முடிஞ்சா உங்க முகத்த கண்ணாடில பாருங்க... அவனவனுக்கு பட்டாதான் தெரியும் அவங்க அவங்க நிலமை..

எறும்பு said...

அருமை.. keep going..

butterfly Surya said...

ப்ரியா, இப்படியே டீசண்டா இருங்க.. Need of the hour..

கலகலப்ரியா said...

/SanjaiGandhi™ said...
ப்ரியா, பதில் சொல்லும் போது கொஞ்சம் நிதானம் இருக்கட்டுமே.. ரவிக்கு நீங்க சொல்லி இருக்கும் பதில் வினவுகளின் பதில் போலவே இருக்கு.. ரவி, மரியாதைக்குரிய பதிவர் மற்றும் நண்பர்.. என்ன மசித்துக்கு என்று கேட்கும் அளவெல்லாம் அவர் எதுவும் கடினமான வார்த்தைகளில் சொல்லிவிடவில்லை.

அனாமிகா அவர்களுக்கு சொல்லி இருக்கும் அறிவுரையை நீங்களும் ஒருவாட்டிப் படிச்சிடுங்க..

( இப்போ என்னையும் திட்டுவீங்களே.. பட் புதுசா எதுனா ட்ரை பண்ணுங்க.. இது வரைக்கும் திட்டாத மாதிரி :-) )


ஏம்பா, பதிவுக்கு ப்ளஸ் ஓட்டு போட்டு தொலைச்சிட்டேன்.. பின்னூட்டத்துக்கு மைனஸ் வோட்டுப் போடும் வசதி எதும் இல்லையா? :)//

சஞ்சய் காந்தி சார்ர்ர்.. மன்னிச்சுக்குங்க... எனக்கு யார் மரியாதைக்கு லைசென்ஸ் வச்சிருக்காங்கன்னு எல்லாம் தெரியலை... இவ்ளோ நாள் இவ்ளோ பிரச்சனைல அவங்க வாயே திறக்கலை... ஆகக் குறைந்தது என் சம்மந்தப்பட்ட விஷயங்கள்ல.. அதுக்கு நான் கண்டனம் சொல்லலைப்பா... அவ்ளோ முட்டாளா நானு.. ஆனா அவங்க என் கிட்ட வந்து கள்ள மௌனம்னு சொல்றப்போ... மரியாதை எப்டி எதிர்பார்க்க முடியும்..

ச்ச்சரி.. சார் அந்த பின்னூட்டத்தில இருக்கிற மசித்த வாபஸ் வாங்கிக்கறேன்.. தேவைப்படும்..

அப்புறம் அனாமிகாக்கு சொன்னது.. எனக்கு செரியா வராது.. அவ பாவம் சின்னப் பொண்ணு... நான் ரௌடி... உங்களுக்குத்தான் தெரியுமே ஆபீஸர்..

அப்புறம் திட்டனுமின்னா உங்களுக்காக ஸ்பெஷல் இடுகை போட்டு உங்களை மட்டும் திட்டுறேன்... இப்போ நான் வேற யாரையோ திட்டுறதில பிஸி... கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பு...

Sanjai Gandhi said...

//சஞ்சய் காந்தி சார்ர்ர்.. மன்னிச்சுக்குங்க..//

அந்த பயம்..

//ச்ச்சரி.. சார் அந்த பின்னூட்டத்தில இருக்கிற மசித்த வாபஸ் வாங்கிக்கறேன்.. தேவைப்படும்..//

ஏன், உங்களுக்கும் என் நிலைமையா? :))

//நான் ரௌடி... உங்களுக்குத்தான் தெரியுமே ஆபீஸர்.. //

ஸ்ஸ்ஸபாஆஆஆ.. இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலைடா நாராயணா.. :((

//அப்புறம் திட்டனுமின்னா உங்களுக்காக ஸ்பெஷல் இடுகை போட்டு உங்களை மட்டும் திட்டுறேன்... //

ரொம்பத் தேங்ஸ் ஆபிசர்.. என் ப்ளாக் லின்க் மறந்துடாதிங்க..

//இப்போ நான் வேற யாரையோ திட்டுறதில பிஸி... கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பு... //

ஹிஹி.. இதுக்கான பதில் சாட்ல :)))

Sanjai Gandhi said...

//அவ்ளோ முட்டாளா நானு..//

ம்க்கும்.. நான் சொல்லைனா இவங்களுக்கு தெரியாதாக்கும்.. இங்க என் வாயால உண்மையை வரவழைச்சிட்டு தனியா சாட்ல திட்டணுமா? இதெல்லாம் எங்கிட்ட பலிக்காதுங்க மேடம்.. :)

dheva said...

வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழி என்ற போர்வையில் வினவு நடத்தியிருப்பது இன்னுமொரு அராஜக அரசியல். வாய்க்கு வாய் பார்ப்பான் ...பார்பான் என்று விமர்சனம் செய்யும் ஒரு கேவலமான ( நான் பார்ப்பான் இல்ல ...உடனே நானும் பார்ப்பான் அத சப்போர்ட் பண்றென்னு போட்டுடாதீங்க) சாதி வெறியை காட்டும் செயல்.


பதிவுலகிற்கு ஏக போக உரிமை எடுத்துக் கொண்டு அவன் இவன் என்று பேசும் வினவு போன்றவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. அவன் அந்த தவறு செய்தான்.... என்று சொல்லி விட்டு அதை விட கீழான செய்பவன் அவனை விட அயோக்கியன் ஆக இருக்கவேண்டுமே அன்றி வேறு யாராக இருக்கமுடியும்


படித்தவர்கள்தானே நாம் தவறன இடுகையை ஒருவர் போட்டு இருக்கிறார் என்றால் அதை இடுத்துரைக்கும் உங்களுக்கு நாகரீகம் இருக்கிறதா (வினவு)? பிரச்சினையை பற்ற வைத்து குளிர் காய்ந்து விட்டீர்கள் ...பிரபலாமாக ஆயிரம் வழி இருக்கும் போது இது போன்ற நாட்டாமைத்தனமான விமர்சனங்கள் தேவைய என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஒரு பெண்ணை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று இன்னொரு பெண்ணை விமர்சிக்கும் அசிங்கம தெரியவில்லை இவர்களுக்கு.....


"ஜாதி, மதம், புண்ணாக்கு, புளியங்கொட்டை இந்த வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடுங்க மாதிரி உழண்டு கொண்டிருக்கிறவங்க கேட்டுக்குங்க... உங்க மசிர் வட்டத்தை எல்லாம் நான் தாண்டி பல வருஷமாச்சு... //


காலத்துக்கும் இந்த மக்கள் செக்குமாடு சுற்றுவது போல சாதியையும் மதத்தையும் சுற்றப் போகிறார்கள்....அதிகபட்ச புரிதல் வேண்டும் சகோதரி இதற்கு....... சம்பந்தபட்டவர்கள் அமைதியானாலும் சில பேருக்கு நெருப்பு எரியணும் அப்போதானே குளிர் காய முடியும்!


நீங்க கவலைப்படாதீங்க....பிரியா!

dheva said...

வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழி என்ற போர்வையில் வினவு நடத்தியிருப்பது இன்னுமொரு அராஜக அரசியல். வாய்க்கு வாய் பார்ப்பான் ...பார்பான் என்று விமர்சனம் செய்யும் ஒரு கேவலமான ( நான் பார்ப்பான் இல்ல ...உடனே நானும் பார்ப்பான் அத சப்போர்ட் பண்றென்னு போட்டுடாதீங்க) சாதி வெறியை காட்டும் செயல்.


பதிவுலகிற்கு ஏக போக உரிமை எடுத்துக் கொண்டு அவன் இவன் என்று பேசும் வினவு போன்றவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. அவன் அந்த தவறு செய்தான்.... என்று சொல்லி விட்டு அதை விட கீழான செய்பவன் அவனை விட அயோக்கியன் ஆக இருக்கவேண்டுமே அன்றி வேறு யாராக இருக்கமுடியும்


படித்தவர்கள்தானே நாம் தவறன இடுகையை ஒருவர் போட்டு இருக்கிறார் என்றால் அதை இடுத்துரைக்கும் உங்களுக்கு நாகரீகம் இருக்கிறதா (வினவு)? பிரச்சினையை பற்ற வைத்து குளிர் காய்ந்து விட்டீர்கள் ...பிரபலாமாக ஆயிரம் வழி இருக்கும் போது இது போன்ற நாட்டாமைத்தனமான விமர்சனங்கள் தேவைய என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஒரு பெண்ணை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று இன்னொரு பெண்ணை விமர்சிக்கும் அசிங்கம தெரியவில்லை இவர்களுக்கு.....


"ஜாதி, மதம், புண்ணாக்கு, புளியங்கொட்டை இந்த வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடுங்க மாதிரி உழண்டு கொண்டிருக்கிறவங்க கேட்டுக்குங்க... உங்க மசிர் வட்டத்தை எல்லாம் நான் தாண்டி பல வருஷமாச்சு... //


காலத்துக்கும் இந்த மக்கள் செக்குமாடு சுற்றுவது போல சாதியையும் மதத்தையும் சுற்றப் போகிறார்கள்....அதிகபட்ச புரிதல் வேண்டும் சகோதரி இதற்கு....... சம்பந்தபட்டவர்கள் அமைதியானாலும் சில பேருக்கு நெருப்பு எரியணும் அப்போதானே குளிர் காய முடியும்!


நீங்க கவலைப்படாதீங்க....பிரியா!

Joe said...

உங்கள் கோபம் நியாயமானது, பிரியா.

என்ன சொன்னாலும் பேசாம ஒதுங்கிப் போயிடணும்னு இல்லாம திருப்பிக் கொடுத்தீங்களே,hats off to you!

K.MURALI said...

for follow up

Radhakrishnan said...

ரவுத்திரம் நன்றாகவேப் பழகிவிட்டீர்கள் பிரியா.

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

எல் கே said...

ப்ரியா
வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. வினவுத் தளத்தை இன்று படிக்க நேர்ந்தது. தேவை இல்லாமல் உங்கள் பெயர் இழுக்கப் பட்டுள்ளது. அதற்கு என் கண்டனங்கள். உங்கள் பதிவு நெத்தியடி. இனி உங்களை "ரௌத்ர" ப்ரியா என்று அழைக்கப் போகிறேன்.

Anonymous said...

உங்களை அநாவசியமாக அவர்கள் இழுத்ததற்கு என் கண்டனங்கள்.

ஒரு போஸ்ட் வேஸ்ட் பண்ணீட்டீங்களே :)

கலகலப்ரியா said...

சைந்தவி என்னும் பெயரில் பின்னூட்டமிடும் கோழையே... உன்னுடைய பின்னூட்டம் இங்கு வெளியிடத் தகுதியானதல்ல...

என்னுடைய அம்மா இறந்து ஏறத்தாழ ஏழு மாதங்கள் ஆகின்றன.. அதனால் எனக்கு அவர்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இல்லை...

இல்லை தெரியாமதான் கேக்கறேன்... உன்னுடைய பதிலை ஒரு தடவை நீயே படித்துப் பார்... பார்த்து விட்டுச் சொல்... நர்சிம் உன்னை விட எத்தனை ஆயிரம் ஆயிரம் மடங்கு உயர்ந்திருக்கிறாரென்று சொல்...

என்னுடைய தெருவில் உனக்கு இடம் கிடைத்திருந்தால்... உன்னை நாய்களுக்குக் கறித்துண்டாக்கியிருப்பார்கள்... நீ சொன்ன உன்னுடைய அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விடலாம்... எனக்கு இந்தப் பின்னூட்டத்தில் உன்னுடைய தொலைபேசி எண்ணை அனுப்பி வைடா|டி பார்ப்போம்...

கலகலப்ரியா said...

அப்புறம் சைந்தவி... அந்த கற்பு இருக்கான்னு என்னமோ கேட்டியே... அது கிலோ என்ன விலை... உங்க வீட்டில அது கிடைக்குமா எனக்கு ஒரு ஐம்பது கிராம் அனுப்பி வைக்கிறியா... நான் பார்த்துத் தெரிஞ்சுக்கறேன்... ஓ.. அங்கயும் இல்லாமதான் கற்பு பிச்சை எடுத்துக்கிட்டிருக்கியா...

யாராவது இருந்தா கொடுங்கப்பு... என்னன்னே தெரியாத ஒரு எழவை நான் எங்க இருந்து எடுத்துக் கொடுக்க...

Unknown said...

priya , rendu moonu naala orey jolly-a iruku enaku.ellarum atichukidu irukaradha pakkurapo nalla pozhudhu pokudhu.

அன்பேசிவம் said...

ஒரு ஓட்டுதான் போட முடியுமா? என்ன கொடுமடா இது புடிச்சிருந்த ஒரு பத்து ஓட்டு போடமுடியாதா?

தீயவை... தீயை வை...

உங்கள் கோபம் நியாயமானது. பட்டைய கிளப்புங்க.

Unknown said...

வினவு குழுமத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

சரவணகுமார் said...

கலகலபிரியா

சூப்பர்..இந்தப் பதிவை நான் ஆதரிக்கிறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

வெண்ணை வெட்டிகளுக்கு பதில் சொல்வது,வீண் வேலை என்று, இந்த சச்சரவுகளில் தலையிடாமல் இருப்பதால், இவர்களுக்கு, ஏகத்துக்கு ஏறிப்போச்சு.....

ஒதுங்கிப் போகாமல், ஏறிப் போட்டு மிதித்தால் தான் அடங்குவார்கள்.

”நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”.இதுகளுக்கு????????

சேத்தில திரியுற பன்றிக்கு எப்ப சொரணை வரது, அது எப்ப திருந்தறது.

anyway......hats off....

Anonymous said...

இல்லை பிரியாக்கா. பெண்ணை கேவலப்படுத்தினார் நர்சிம் என்று குதிப்பவர்கள் எப்படி இன்னொரு பெண்ணை கேவலப்படுத்துகிறார்கள். அதற்கு நிறைய பேர் சப்போட் வேற. அது தான் டெஷனானேன். இப்போது கொஞ்சம் படபடப்பு குறைந்து இருக்கிறது.

@ சஞ்சேய்காந்தி , மாதவ்ராஜ் பக்கத்தில் எழுந்த கருத்து மோதல் இங்கேயும் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு அறிவுரையும் சொல்ல‌வில்லை. சொல்லும் வயது எனக்கில்லை. வழக்கைப் பற்றி சொல்கிறீர்கள் என்றால், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு திண்டாடியவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கூகிள் பண்ணி பாருங்கள். இந்தியாவில் எப்படியோ தெரியாது வெளி நாடுகளில் மன உலைச்சல் என்று சொன்னாலே அது இது சென்சிடிவ்வான விஷயம்.

Sanjai Gandhi said...

அனாமிகா, நீங்கள் என் பதிலை சரியாகப் படிக்கவில்லை என நினைக்கிறேன்.. நான் ஆளைப் பார்த்து பேசுவதில்லை.. அவர்கள் கருத்தைப் பார்த்து தான்.. உங்களுடன் கருத்து மோதல் அங்கு மட்டும் தான்.. இங்கு அதற்கான தேவை இல்லை..

//அனாமிகா அவர்களுக்கு சொல்லி இருக்கும் அறிவுரையை நீங்களும் ஒருவாட்டிப் படிச்சிடுங்க..//

இதில் எங்கே வந்தது கருத்து மோதல்? . உங்களுக்கு ப்ரியா சொன்ன பதில் அவருக்கும் பொருந்தும் என்பதால் அவரைப் படிக்க சொன்னேன்.. உங்களுடன் இங்கு எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.. மீண்டும் ஒரு முறை என் பின்னூட்டத்தை சரியாகப் படிக்கவும்..

Anonymous said...

நீங்க சொன்னதை நான் விளங்கிக்கொண்ட முறையில் தான் பிழை. அவர்களை வினவு என்று எடுத்துக்கொண்டேன். மன்னியுங்கள்.

கலகலப்ரியா said...

எல்லாருக்கும் ரொம்ப நன்றி... அப்புறம் தனித்தனியாகப் பதில் சொல்றேன் ப்ளீஸ்...

Jerry Eshananda said...

I do support you.

கலகலப்ரியா said...

நன்றி பாலா சார்..

நன்றி பாண்டி...

நன்றி நடராஜன்..

நன்றி மணிகண்டன்...

நன்றி இராகவன்..

நன்றி அது சரி..

நன்றி சீமாச்சு...

நன்றி அனாமிகா..

நன்றி சந்தனா..


செந்தழல்ரவி... உங்க வருகைக்கும் மைனஸ் ஓட்டுக்கும் நன்றி..

பழமைபேசி... வருகைக்கும்... ஆதரவுக்கும் நன்றி..

நன்றி முகிலன்..

நன்றி கண்ணன்..

கலகலப்ரியா said...

நன்றி ஸ்மார்ட்..

நன்றி அர்த்தநாரி..

நன்றி சஞ்சய்...

நன்றி குடுகுடுப்பை..

நன்றி புன்னகைதேசம்..

நன்றி சேட்டைக்காரன்..

கலகலப்ரியா said...

நன்றி சிவாஜி..

நன்றி மணிஜி..

நன்றி ஜீவன்..

நன்றி கருணாகரசு..

நன்றி கதிர்..

நன்றி உதயம்..

நன்றி விஜய்..

கலகலப்ரியா said...

நன்றி எறும்பு...

நன்றி சூர்யா..

நன்றி தேவா..

நன்றி ஜோ... :)

நன்றி முரளி...

நன்றி ராதாகிருஷ்ணன்..

நன்றி எல்.கே..

நன்றி சின்னம்மணி...

பிள்ளைவாள்.. உங்களுக்கும் நன்றி..!

நன்றி முரளி..

நன்றி கமல்..

கலகலப்ரியா said...

நன்றி சரவணகுமார்...

நன்றி ஆரூர்.. :)..

நன்றி ஜெரி...

கலகலப்ரியா said...

அனாமிகா... நாம ஈழம் ஈழம்ன்னு உசிர விடுற மாதிரி... சஞ்சய் காந்தி காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு உசிர விடுவாங்க... மத்தபடி நல்ல புள்ளைம்மா... நீ சண்டை போட்டா சிரிச்சுக்கிட்டு தானே செஞ்ச தக்காளி சாதம் சாப்புடுவாரு... அம்புட்டுதேன்...

ஸ்ஸ்ஸ்ஸபா... இந்தக் கலவரத்தில இந்த சண்டை தாங்க முடியலடா சாமி.. :))))

Anonymous said...

ஹி ஹி, தெரியும்க்கா. ரண்டு பேரும் பெரீய்ய்ய்ய் சண்டை போட்டோம். அப்புறம் சமாதானமாயிட்டோம். இப்போ அவர் Flight ஸ்பான்சர் பண்ற அளவு தோஸ்த். ஹா ஹா. பிசாசேனு நீங்க கத்தறது கேட்குது சஞ்சேய் சார். =))