header photo

Thursday, July 29, 2010

பதிவுலகை(கில்) அளந்த மேதை மீ...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


கலகலப்ரியா.. (ஸ்ஸ்ஸபா ஆரம்பத்ல ஈஸியான கேள்வியா கேக்கறாய்ங்கப்பு..)
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம்.. இல்லை... ஹரஹரப்ரியாவ தப்பா டைப்பிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க... 


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


ஐய்யயோ... இது என்ன மஹாவிஷ்ணு உலகை அளந்த லெவலுக்கு கேக்கறீங்க... நான் கம்ப்யூட்டர்ல கால் எல்லாம் வைக்கறதில்ல.. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒசாமாவ ரெட் ஹாண்டட்டா புடிக்கறப்போ சி.என்.என்.ல ப்ரேக்கிங் நியூஸ் போடற இடைவேளைல வெளம்பரம் போடலாமின்னு யோசித்தேன்..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


ஆமா... ஆமா... வினை விதச்சா விளைவு என்ன... அதேதான்... வினை... 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என்னது... சம்பாதிக்.....அடங்..  இத இப்பதான் சொல்றதாங் கொக்கமக்கா.... ஒண்ணர வருஷம் வேஸ்ட் பண்ணீட்டன் போலருக்கே.. 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு... 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


கோபமா.. எனக்கா... ச்சே ச்சே... அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்... 

பொறாமையா.. ஆமாம்... நான் பாட்டுக்கு கேம் ஆடிக்கிட்டிருக்கேன்... இவங்க எல்லாம் டெய்லி போஸ்ட் போடறாங்களே... நறநறநறன்னு பல்ல செல்லமா கடிச்சிருக்கேன்... ஹிஹி... 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


வேற யாரு.. நாந்தேன்... ஒவ்வொரு வாட்டியும் போஸ்ட் போட்டு தோள்ல தட்டி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிப்பேன்... 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ம்ம்... நேத்து முடி வெட்டினேன்... நெக்ஸ்ட் வீக் டென்டிஸ்ட் கிட்ட போகனும்... நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் (என்னோடதுதான்..)... ஏ டி எம் ல ஃப்ளாக்ஸ் பார்த்தா... ஃபீட்ஜிட் ட்ராஃபிக்ன்னு ஆர்வமா பார்த்துட்டிருக்கேன்... அமௌண்ட் எவ்ளோன்னு கொடுத்துட்டு... ஜஸ்ட் 100 விசிட்டர்ஸ் டுடேன்னு நினைச்சுக்கறேன்...  மீதி அப்புறம் அப்டேட் பண்றேனே.. 


இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்...

பராக் ஒபாமா 
ஒஸாமா பின் லேடன்
ரணில் விக்ரமசிங்க
கனிபல் கடாஃபி 
ஸ்பான்ஜ் பாப் (ஓ சாரி... ஆட்கள் மட்டுமா..)

முகிலனின் பிதற்றல்கள் பதிவருக்கு நன்றி... (அவங்க ஸ்டைல்ல இப்டித்தான் சொல்லுவாய்ங்க..)
_______________________________________________________________

73 ஊக்கம்::

vasu balaji said...

/அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு... /

ம்கும். அதான் முகப்புல ரெண்டு இருக்கே.

/வேற யாரு.. நாந்தேன்... ஒவ்வொரு வாட்டியும் போஸ்ட் போட்டு தோள்ல தட்டி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிப்பேன்../

பொய். பொய். கலகல போடும்போது லகலக. லகலக போடும்போது கலகல. ச்செரியா.அவ்வ்வ்வ்:((

/முகிலனின் பிதற்றல்கள் பதிவருக்கு நன்றி... (அவங்க ஸ்டைல்ல இப்டித்தான் சொல்லுவாய்ங்க..)/

தலைப்பு டு முடிவு..இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.
‘கலகல’ப்ரியான்னு ஒரே வார்த்தைல போட்டிருக்கலாம். டின்னர் ஒரு ப்ளேட் லொள்ளா:))

க ரா said...

ஸப்ப்ப்ப்ப்ப்பா.. முடியல

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்த வினையோட

//நறநறநறன்னு பல்ல செல்லமா கடிச்சிருக்கேன்... ஹிஹி...//

விளைவு தான் இதுவா??

//நெக்ஸ்ட் வீக் டென்டிஸ்ட் கிட்ட போகனும்... நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்//

:))

அன்புடன் நான் said...

கல கலன்னு இருக்கு.....

பிரபாகர் said...

இந்த தொடரில் முழுக்க லொள்ளாக வந்திருக்கும் இடுகை இதுதான்.

என்னாமா யோசிக்குதுப்பா இந்த புள்ள(கவுண்டமணி செந்திலைப் பார்த்து சொல்ற மாதிரி படிக்கவும்)

ஒசாமா விஷயம் கலகல... மற்ற யாவும் வழக்கம்போல மனதில் ஒட்டி...பிரியாமல். (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா. கலகலப்ரியா வரனும்னு நினைச்சி...)

உங்க இடுகையை படிச்சிட்டு அந்த மாதிரி கொஞ்சமாவது எழுதியிருக்கோமா என என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுவிட்டு சொல்லிக்கொள்ளும் முச்சு விடுதல் போல அனிச்சையான ஒன்று பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

கலக்கல் சகோ...

பிரபாகர்...

பா.ராஜாராம் said...

//அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு..//.

:-)))

butterfly Surya said...

ஓ.. ப்ரியா... ப்ரியா..

அது சரி(18185106603874041862) said...

//

ஐய்யயோ... இது என்ன மஹாவிஷ்ணு உலகை அளந்த லெவலுக்கு கேக்கறீங்க... நான் கம்ப்யூட்டர்ல கால் எல்லாம் வைக்கறதில்ல..
//

கம்ப்யூட்டரா? வரலாறு தெரியாம பேசக் கூடாது...அது நீங்க வரும் போது...தமிழோட மொத ப்ளாக், அகநானூறு...

அது சரி(18185106603874041862) said...

//

ஒசாமாவ ரெட் ஹாண்டட்டா புடிக்கறப்போ சி.என்.என்.ல ப்ரேக்கிங் நியூஸ் போடற இடைவேளைல வெளம்பரம் போடலாமின்னு யோசித்தேன்..
//

ஓஹோ...அதான் அந்த வெளம்பரம் இன்னும் ரிலீஸ் பண்ணலியா?

அது சரி(18185106603874041862) said...

//

கோபமா.. எனக்கா... ச்சே ச்சே... அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்...
//

சரிங்க ரஜினி...ரஜினி சொன்னா சரியாத் தான் இருக்கும்...

அது சரி(18185106603874041862) said...

//

நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் (என்னோடதுதான்..)...
///

என்னா ஒரு பொய்.. உங்களுக்கு ஏது நாலு கடவாய்? ஒண்ணு ஒங்களோடது...மீதி மூணு யாரோடது?

ஜோதிஜி said...

நக்கல் என்பதற்கு கலைஞருக்கு பிறகு நீங்கள் தானா?

எல் கே said...

எப்படி இப்படிலா,

Unknown said...

இதை இதை இதைத்தான் எதிர்பாத்தேன்..

(ஸப்ப்ப்ப்ப்ப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

Unknown said...

யக்கா, அந்த லாஸ்ட் வரியை எடுத்துருங்கக்கா.. ஆட்டோ அனுப்புனது பத்தாதுன்னு லாரியெல்லாம் அனுப்பிக்கிட்டு இருக்காய்ங்க. எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. அவ்வ்வ்வ்வ்

balavasakan said...

நல்ல காமடி சென்ஸ் உங்களுக்கு கலகல ப்பா இருக்கு

இராகவன் நைஜிரியா said...

எப்போதும் போல் கலக்கல்.

Mahi_Granny said...

அருமையா இருக்கும்மா

தமிழ் அமுதன் said...

அட..! கோவமே வாராதாம்ல...
சரிதான்...!

///இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்...

பராக் ஒபாமா ///

சாரிங்க நான் கொஞ்சம் பிஸி...!

ஸ்ரீ.... said...

எந்தக் கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்லவே கூடாதுன்னு முடிவெடுத்து எழுதினால் இப்படித்தான் இருக்கும்! :)

ஸ்ரீ....

அன்பேசிவம் said...

கொஞ்சம் கூட பொருப்பே இல்ல ப்ரியா உங்களுக்கு, மதிச்சு கேள்வி கேட்டா இப்படித்தானா எகனைமொகனையா பதில் சொல்விங்க...

ஸப்ப்ப்ப்ப்ப்பா.. முடியல
:-))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அம்மா தாயீ..

இவ்வளவு நாளா எங்குட்டு தாயீ இருந்தீங்க..

கலக்கீட்டீங்க போங்க...

'பரிவை' சே.குமார் said...

கல கலன்னு இருக்கு..!

ரிஷபன்Meena said...

மொக்கை என்றால் என்ன என்று கேட்கும் புதியவர்களுக்கு இது போன்ற கேள்வி பதில் அறுவைகளைக் காட்டலாம்.

நகைச்சுவைக்கு வலிய முயன்றாலும் கை கூடவில்லை.

எதை எழுதினாலும் கலக்கிட்டீங்க என்று தாராளம் காட்டும் பதிவர்கள் வாழ்க.

Jerry Eshananda said...

ரசித்தேன்.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,... கல கல கலக்கல் பேட்டி!

ஈரோடு கதிர் said...

இனி யாராவது கேள்வி கேட்டு தொடர்பதிவுக்கு அழைப்பீங்க!!!!

vasu balaji said...

//மொக்கை என்றால் என்ன என்று கேட்கும் புதியவர்களுக்கு இது போன்ற கேள்வி பதில் அறுவைகளைக் காட்டலாம். //

அய்ங்! இப்ப லைப்ரரி மாதிரி இடுகைக்கும் ரெஃபரன்ஸ் இருக்கா? சொல்ல்ல்ல்ல்ல்லவேயில்லை:(

//நகைச்சுவைக்கு வலிய முயன்றாலும் கை கூடவில்லை. //

எனக்கு சிப்பு சிப்பா வந்திச்சி. வருது.

//எதை எழுதினாலும் கலக்கிட்டீங்க என்று தாராளம் காட்டும் பதிவர்கள் வாழ்க.//

எனி ப்ராப்ளம்ஸ்?

Anonymous said...

தளபதி நசரேயன் ஆரம்பிச்சாரு மகான்னு, நீங்க மேதை ஆகிட்டீங்க :)

க.பாலாசி said...

லொல்லுதான் போங்க... இன்னும் கூட காமடியா பண்ணியிருக்கலாம்....

அ.முத்து பிரகாஷ் said...

ரொம்ப மனம் விட்டு ரசித்து படித்தேன் ப்ரியா .. தாங்க்ஸ் பா.

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

/அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு... /

ம்கும். அதான் முகப்புல ரெண்டு இருக்கே.

/வேற யாரு.. நாந்தேன்... ஒவ்வொரு வாட்டியும் போஸ்ட் போட்டு தோள்ல தட்டி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிப்பேன்../

பொய். பொய். கலகல போடும்போது லகலக. லகலக போடும்போது கலகல. ச்செரியா.அவ்வ்வ்வ்:((

/முகிலனின் பிதற்றல்கள் பதிவருக்கு நன்றி... (அவங்க ஸ்டைல்ல இப்டித்தான் சொல்லுவாய்ங்க..)/

தலைப்பு டு முடிவு..இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.
‘கலகல’ப்ரியான்னு ஒரே வார்த்தைல போட்டிருக்கலாம். டின்னர் ஒரு ப்ளேட் லொள்ளா:))||

என்ன சொல்றீங்கன்னு எதுவும் புரியல.... பின்னூட்டத்திற்கு நன்றி சாரே...

கலகலப்ரியா said...

||இராமசாமி கண்ணண் said...

ஸப்ப்ப்ப்ப்ப்பா.. முடியல||

அவ்... நன்றி...

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்த வினையோட

//நறநறநறன்னு பல்ல செல்லமா கடிச்சிருக்கேன்... ஹிஹி...//

விளைவு தான் இதுவா??

//நெக்ஸ்ட் வீக் டென்டிஸ்ட் கிட்ட போகனும்... நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்//

:))||

ம்க்கும் ரொம்பக் கடிச்சிட்டேனாக்கும்...

கலகலப்ரியா said...

||சி. கருணாகரசு said...

கல கலன்னு இருக்கு.....||

நன்றி கருணாகரசு..

கலகலப்ரியா said...

|| பிரபாகர் said...

இந்த தொடரில் முழுக்க லொள்ளாக வந்திருக்கும் இடுகை இதுதான்.

என்னாமா யோசிக்குதுப்பா இந்த புள்ள(கவுண்டமணி செந்திலைப் பார்த்து சொல்ற மாதிரி படிக்கவும்)

ஒசாமா விஷயம் கலகல... மற்ற யாவும் வழக்கம்போல மனதில் ஒட்டி...பிரியாமல். (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா. கலகலப்ரியா வரனும்னு நினைச்சி...)

உங்க இடுகையை படிச்சிட்டு அந்த மாதிரி கொஞ்சமாவது எழுதியிருக்கோமா என என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுவிட்டு சொல்லிக்கொள்ளும் முச்சு விடுதல் போல அனிச்சையான ஒன்று பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

கலக்கல் சகோ...

பிரபாகர்...||

ஹிஹி நன்றிண்ணா.. இப்டி ஒரு சகோதரம் இருக்கிறப்போ நமக்கு என்ன கவலை...

கலகலப்ரியா said...

||பா.ராஜாராம் said...

//அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு..//.

:-)))||

:D நன்றி பா.ரா..

கலகலப்ரியா said...

|| butterfly Surya said...

ஓ.. ப்ரியா... ப்ரியா..||

ஆகா... எஸ்கேப்பு... நன்றி சூர்யா.. :))

கலகலப்ரியா said...

||அது சரி said...

//

ஐய்யயோ... இது என்ன மஹாவிஷ்ணு உலகை அளந்த லெவலுக்கு கேக்கறீங்க... நான் கம்ப்யூட்டர்ல கால் எல்லாம் வைக்கறதில்ல..
//

கம்ப்யூட்டரா? வரலாறு தெரியாம பேசக் கூடாது...அது நீங்க வரும் போது...தமிழோட மொத ப்ளாக், அகநானூறு...||

அகநானூறு கூட இப்போ கம்பியூட்டர்லதானுங்களே... அதில்லாம அகநானூற்றில மட்டும் கால் வச்சிடுவீங்களாக்கூ...

கலகலப்ரியா said...

||அது சரி said...

//

ஒசாமாவ ரெட் ஹாண்டட்டா புடிக்கறப்போ சி.என்.என்.ல ப்ரேக்கிங் நியூஸ் போடற இடைவேளைல வெளம்பரம் போடலாமின்னு யோசித்தேன்..
//

ஓஹோ...அதான் அந்த வெளம்பரம் இன்னும் ரிலீஸ் பண்ணலியா?||

அப்பாடா ஒருத்தருக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சுப்பா... ஸ்ஸபா... வாழ்க உம் தொண்டு..

கலகலப்ரியா said...

||அது சரி said...

//

கோபமா.. எனக்கா... ச்சே ச்சே... அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்...
//

சரிங்க ரஜினி...ரஜினி சொன்னா சரியாத் தான் இருக்கும்...||

உஷ்ஷ்... இந்த ரகசியம் எல்லாம் வெளில சொல்லப்டாது...

கலகலப்ரியா said...

||அது சரி said...

//

நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் (என்னோடதுதான்..)...
///

என்னா ஒரு பொய்.. உங்களுக்கு ஏது நாலு கடவாய்? ஒண்ணு ஒங்களோடது...மீதி மூணு யாரோடது?||

வாய்க் கடைல இருக்கிறது கடவாய்ப் பல்லு.. அம்புட்டுதேன்... நல்லா கேக்குறாய்ங்கைய்யா டீட்டெயிலு...

கலகலப்ரியா said...

||ஜோதிஜி said...

நக்கல் என்பதற்கு கலைஞருக்கு பிறகு நீங்கள் தானா?||

:(... வாட் அன் இன்ஸல்ட்... அவ்ளோ மொக்கையா போடறேன்..

கலகலப்ரியா said...

||LK said...

எப்படி இப்படிலா,||

தன்னால வருது...

கலகலப்ரியா said...

||முகிலன் said...

இதை இதை இதைத்தான் எதிர்பாத்தேன்..

(ஸப்ப்ப்ப்ப்ப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)||

இனிமே தொடர் இடுகைக்கு அழைக்க மாட்டீங்க போலருக்கே... அவ்வ்வ்...

கலகலப்ரியா said...

||முகிலன் said...

யக்கா, அந்த லாஸ்ட் வரியை எடுத்துருங்கக்கா.. ஆட்டோ அனுப்புனது பத்தாதுன்னு லாரியெல்லாம் அனுப்பிக்கிட்டு இருக்காய்ங்க. எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. அவ்வ்வ்வ்வ்||

அது ஷீல்ட் மாதிரி அங்க வச்சிருக்கு... அத எதுக்கு தூக்கறது.. :o)

கலகலப்ரியா said...

|| Balavasakan said...

நல்ல காமடி சென்ஸ் உங்களுக்கு கலகல ப்பா இருக்கு||

நன்றி வாசு... நீ சொன்னாதான் உண்டு.. :))

கலகலப்ரியா said...

||இராகவன் நைஜிரியா said...

எப்போதும் போல் கலக்கல்.||

நன்றி ராகவன்.. இதுவா... அவ்வ்...

கலகலப்ரியா said...

||Mahi_Granny said...

அருமையா இருக்கும்மா||

நன்றி க்ரான்னி...

கலகலப்ரியா said...

||தமிழ் அமுதன் said...

அட..! கோவமே வாராதாம்ல...
சரிதான்...!

///இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்...

பராக் ஒபாமா ///

சாரிங்க நான் கொஞ்சம் பிஸி...!||

ஆகா... அதான் தலைமுடி கூட கட் பண்ண முடியாம இருக்கிறத பார்த்தாலே தெரியுதே... பரவால்ல க்ளிண்டனுக்கு ஃபார்வர்ட் பண்ணுங்க..

கலகலப்ரியா said...

|| ஸ்ரீ.... said...

எந்தக் கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்லவே கூடாதுன்னு முடிவெடுத்து எழுதினால் இப்படித்தான் இருக்கும்! :)

ஸ்ரீ....||

நெக்ஸ்ட் கண்டுபுடிப்ஸ்...

கலகலப்ரியா said...

||முரளிகுமார் பத்மநாபன் said...

கொஞ்சம் கூட பொருப்பே இல்ல ப்ரியா உங்களுக்கு, மதிச்சு கேள்வி கேட்டா இப்படித்தானா எகனைமொகனையா பதில் சொல்விங்க...

ஸப்ப்ப்ப்ப்ப்பா.. முடியல
:-))||

என்னையும் மதிச்சுன்னுதானே சொல்ல வர்றீங்க முரளி... இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்..

கலகலப்ரியா said...

||பட்டாபட்டி.. said...

அம்மா தாயீ..

இவ்வளவு நாளா எங்குட்டு தாயீ இருந்தீங்க..

கலக்கீட்டீங்க போங்க...||

நன்றி பட்டாபட்டி... அட எங்க... நான் யாருன்னு கண்டு புடிக்கவே ரொம்ப நாளாச்சு... :o)

கலகலப்ரியா said...

||சே.குமார் said...

கல கலன்னு இருக்கு..!||

டாங்க்ஸு..

கலகலப்ரியா said...

||ரிஷபன்Meena said...

மொக்கை என்றால் என்ன என்று கேட்கும் புதியவர்களுக்கு இது போன்ற கேள்வி பதில் அறுவைகளைக் காட்டலாம்.

நகைச்சுவைக்கு வலிய முயன்றாலும் கை கூடவில்லை.

எதை எழுதினாலும் கலக்கிட்டீங்க என்று தாராளம் காட்டும் பதிவர்கள் வாழ்க.||

விடுங்க விடுங்க... வில்லன் வினுச்சக்கரவர்த்தி சோக்கு(ன்னு( சொன்னா சிரிக்கறதில்லயா.... அப்டி நினைச்சு மன்னிச்சு விட்டுடுங்க...

கலகலப்ரியா said...

||ஜெரி ஈசானந்தன். said...

ரசித்தேன்.||

நன்றி ஜெரி... :D

கலகலப்ரியா said...

||hitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,... கல கல கலக்கல் பேட்டி!||

டாங்க்ஸ் சித்ரா... ஹிஹி..

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...

இனி யாராவது கேள்வி கேட்டு தொடர்பதிவுக்கு அழைப்பீங்க!!!!||

பொழைப்ப கெடுத்துடுவீங்க போலருக்கே... ப்ளீஸ் அழையுங்க...

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

//மொக்கை என்றால் என்ன என்று கேட்கும் புதியவர்களுக்கு இது போன்ற கேள்வி பதில் அறுவைகளைக் காட்டலாம். //

அய்ங்! இப்ப லைப்ரரி மாதிரி இடுகைக்கும் ரெஃபரன்ஸ் இருக்கா? சொல்ல்ல்ல்ல்ல்லவேயில்லை:(

//நகைச்சுவைக்கு வலிய முயன்றாலும் கை கூடவில்லை. //

எனக்கு சிப்பு சிப்பா வந்திச்சி. வருது.

//எதை எழுதினாலும் கலக்கிட்டீங்க என்று தாராளம் காட்டும் பதிவர்கள் வாழ்க.//

எனி ப்ராப்ளம்ஸ்?||

ம்ம்க்கும்... நல்லா கேக்கறீங்க சார் டீட்டெயிலு....

கலகலப்ரியா said...

||சின்ன அம்மிணி said...

தளபதி நசரேயன் ஆரம்பிச்சாரு மகான்னு, நீங்க மேதை ஆகிட்டீங்க :)||

அந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே...

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...

லொல்லுதான் போங்க... இன்னும் கூட காமடியா பண்ணியிருக்கலாம்....||

தோடா நான் காமடி.. நகைச்சுவைன்னு எல்லாம் லேபல் கூடப் போடலை... மொக்ஸ் ஒன்லி... இதெல்லாம் பார்க்கறதில்லயா..?

கலகலப்ரியா said...

||நியோ said...

ரொம்ப மனம் விட்டு ரசித்து படித்தேன் ப்ரியா .. தாங்க்ஸ் பா.||

ரொம்ப நன்றி நியோ... உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு... :D

சத்ரியன் said...

என்னங்க சிஸ், இப்பிடி வெலாவரியா எழுதி வுட்டுட்டீங்க...

கலகலப்ரியா said...

||சத்ரியன் said...

என்னங்க சிஸ், இப்பிடி வெலாவரியா எழுதி வுட்டுட்டீங்க...||

இன்னா பண்ண சொல்றீங்க... மக்கள் ஆசைப்பட்டாங்க ப்ரோ... ஹிஹி...

Paleo God said...

ப்ரியங்களும் கலகலப்பும் நிறைந்த சகோதரிக்கு!

ஒரு வறண்ட பாலையின் சோலை நோக்கிய சாலைப் பயணத்தில், மெல்லிய தென்றல் வந்தபோது,

அண்ணாந்து நோக்கில் கருமேகம் குடையாகி குளிர்ச்சி வீச தயாராய் இருக்கும் தருணம் ஒன்றினில், இந்த இடுகையின் வாசிப்பானது

கானகத்தினூடே நிலம் தவழ முடியா கொடியொன்று இரு கை கொண்டு பற்ற இயலாத மரமொன்றினை சுற்றிப் பற்றியவாறே வானம் நோக்கி சுருண்டு நீள்வதைப் போல

என் எண்ணங்களின் பயணமும் மெல்லிய பச்சைக் கொடியின் பற்றுதலைப் போலவே பற்றியும் பற்றாமலுமாய் இந்த பதில்களில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடந்த போது ஒரு மெல்லிய ஒளிக்கீற்றாய் , ஒளிக்கீற்றின் புகைக் கோடாய் ஒரு இறந்த காலம் வந்து போனது .

ஏற்கனவே நீங்கள் குழு ’யாவாரம்’ செய்ததாய் ஒரு இடுகை நான் கண்டதுண்டு.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் எனும் கூற்றுக்கேற்ப இவ்விடுகையின் ஆறாவது கேள்விக்கான பதிலில் ஏதேனும் முரண் இருக்குமோ என்ற ஐய்யப்பாட்டுடனே நான் கடக்கிறேன்.

ஆகினும் இவை கடந்து சோலை அடைந்து வேர்வை துடைத்து சுவை நீர் குடித்து நா நனைத்த மகிழ்ச்சியினூடே கேட்கத் தோன்றியதை இப்பின்னூட்டத்தின் மூலமாய் கேட்டும் விட்டேன்...!


வாழ்க உங்கள் தமிழ்,


:)

ஈ ரா said...

//அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்... //

ரொம்ப நாள் கழிச்சு வரேன்..
பார்த்தா நம்பாளையும் பதிவுல சேர்த்து இருக்கீக....

கலகலப்ரியா said...

||【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ப்ரியங்களும் கலகலப்பும் நிறைந்த சகோதரிக்கு!

ஒரு வறண்ட பாலையின் சோலை நோக்கிய சாலைப் பயணத்தில், மெல்லிய தென்றல் வந்தபோது,

அண்ணாந்து நோக்கில் கருமேகம் குடையாகி குளிர்ச்சி வீச தயாராய் இருக்கும் தருணம் ஒன்றினில், இந்த இடுகையின் வாசிப்பானது

கானகத்தினூடே நிலம் தவழ முடியா கொடியொன்று இரு கை கொண்டு பற்ற இயலாத மரமொன்றினை சுற்றிப் பற்றியவாறே வானம் நோக்கி சுருண்டு நீள்வதைப் போல

என் எண்ணங்களின் பயணமும் மெல்லிய பச்சைக் கொடியின் பற்றுதலைப் போலவே பற்றியும் பற்றாமலுமாய் இந்த பதில்களில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடந்த போது ஒரு மெல்லிய ஒளிக்கீற்றாய் , ஒளிக்கீற்றின் புகைக் கோடாய் ஒரு இறந்த காலம் வந்து போனது .

ஏற்கனவே நீங்கள் குழு ’யாவாரம்’ செய்ததாய் ஒரு இடுகை நான் கண்டதுண்டு.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் எனும் கூற்றுக்கேற்ப இவ்விடுகையின் ஆறாவது கேள்விக்கான பதிலில் ஏதேனும் முரண் இருக்குமோ என்ற ஐய்யப்பாட்டுடனே நான் கடக்கிறேன்.

ஆகினும் இவை கடந்து சோலை அடைந்து வேர்வை துடைத்து சுவை நீர் குடித்து நா நனைத்த மகிழ்ச்சியினூடே கேட்கத் தோன்றியதை இப்பின்னூட்டத்தின் மூலமாய் கேட்டும் விட்டேன்...!


வாழ்க உங்கள் தமிழ்,


:)||

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா... என்ன கொடுமைடா இது... நாலு நாள் இடுகையா தேத்த வேண்டிய கவிதைக் குழந்தைங்கள இப்டி ஒன்னாக் கட்டி மாட்டு வண்டில ஏத்தின கடமுடா ரோட்ல உருட்டி விட்ட மாதிரி ஆகிப் போச்சே...

அட... அந்தக் கழுதை யாவாரம் பத்திதான் கேக்குறாய்ங்களா... ஆமா அது என்ன உங்க குழு? நீங்க அந்தக் குழுல இல்லாத மாஆஆதிரி பில்ட் அப்பு...

கலகலப்ரியா said...

||ஈ ரா said...
//அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்... //

ரொம்ப நாள் கழிச்சு வரேன்..
பார்த்தா நம்பாளையும் பதிவுல சேர்த்து இருக்கீக....||

ஆகா வாங்க ஈ.ரா. உங்க தலிவரு மேல உங்களுக்குள்ள பக்தியை மெச்சினோம்... இவ்ளோ போஸ்ட்ல இது மட்டும் டார்ச் லைட் அடிச்ச மாதிரிப் பளிச்சுன்னு தெரிஞ்சது பாருங்க... அங்கதான் நிக்கிறாரு தலிவரு...

Jey said...

போன வாரம் எங்கபோனாலும் , ஆளாளுக்கு குத்து குத்துனு குத்திகிட்டு திரிஞ்சாங்க, இந்தவாரம், எங்க இந்த போனாலும், ரோதனையா... நடத்துங்க நடத்துங்க...,

(படிக்கிர எங்க நிலமைய யாரு ரோசனை பண்ணி பாக்கக்குராங்க....)

மங்குனி அமைச்சர் said...

என் கடைய போல உங்ககடைளையும் இந்த படம் தான் ஓடுதா ??? நல்லாத்தான் கலாயிக்குரீக

மங்குனி அமைச்சர் said...

என் கடைய போல உங்ககடைளையும் இந்த படம் தான் ஓடுதா ??? நல்லாத்தான் கலாயிக்குரீக

Karthick Chidambaram said...

கலகல ... பிரியா ....
ஆமா - ரஜினி சொல்லிடாறேனு ரௌத்ரம் பழகறத நிறுத்திடிங்களா ?

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)