ஐரோப்பாவிற்கு
என்னை நாடு கடத்தியபோது
ருவாண்டாவில்
இனப்படுகொலை
மில்லியனுக்கு
சில ஆயிரங்கள் குறைவான
எண்ணிக்கையிலிருந்தது...
எரிபொருள் நிமித்தம்
அபுதாபியில் விமானம்
தரை தொட்டபோது
ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது..
நெதர்லாந்தின்
மின்சாரப் படிக்கட்டில்
விழுந்த போது நீட்டப்பட்ட
கொழுத்த கையின் மேல்
மும்பாய் மீது பறந்தபடி
முதல் முறையாக
நான் குடித்த கறுப்புக் காப்பியை
எட்டாவது தடவையாக
வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன்...
சென்ற வருடம் பேருந்தொன்றின்
முன் சக்கரத்திற்கு நாலு அடி முன்னால்
நடுவீதியில் கால் நீட்டிப் படுத்திருந்தபோது
என் தலைமாட்டில் கால் உதைத்து
உலகமே கண்ணைத் திறந்து கொள்..
இலங்கையில் இனப்படுகொலை
இலட்சத்தை எட்டிவிட்டதென்றார்கள்
எழுந்து உட்கார்ந்து உதைத்த கால் மேல்
ஒன்பதாவது தடவையாக வாந்தியெடுத்தேன்..
பக்கத்து வீட்டில் எட்டு ஆமைகள்
செல்லப்பிராணிகள்
டாண்டிலயன் பூ இல்லையென்றால்
உணவு இறங்காதாம்..
காட்டுக்கு நடையா நடந்த வழியில்
ருவாண்டாவில் இனத்தைத் தொலைத்த
கிளியொன்று மொழி பழகிக் கொண்டிருந்தது
அது உரைத்தது புரிய ஆரம்பித்தபோது
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான
என் பயண இடைவெளியில் தீர்ந்துபோன
ஆப்பிரிக்கக் கணக்குகளின் பெறுபேறு
கிட்டத்தட்டப் பூஜ்ய நிலையிலிருந்தது...
ஆஸ்திரேலியா விடு அமெரிக்கா
என்றதற்கு கிளி மூச்சு விடாது சிரித்தது..
சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்
உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்
_______________________________________________________
66 ஊக்கம்::
முதல் வெட்டு நான்தானா?
புரிஞ்சா மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு
கவிதை புரியலைன்னாலும், கரு புரிந்தது .. ஆதியிலிருந்து அந்தம் வரை தொடரக் கூடிய ஒன்று..
என்ன பிரச்சனை ?
பாதகத்தி! இப்படியுமா? என்னாச்சும்மா? இப்போ ஏன் இது?
ஒரு பக்கம் கோவம் வருது. இன்னொரு பக்கம் பிரமிப்பாயிருக்கு. நெஞ்சு கனத்து போகுது.
/சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாதுஎட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்கருமம் கருமம்....//
பன்னாட:((..
கமல்ஹாசன் பேட்டியாட்டமா இருக்கு!
//அது உரைத்தது புரிய ஆரம்பித்தபோது,ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான
என் பயண இடைவெளியில் தீர்ந்துபோன
ஆப்பிரிக்கக் கணக்குகளின் பெறுபேறு
கிட்டத்தட்டப் பூஜ்ய நிலையிலிருந்தது... //
//சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்//
ம்ம்ம்ம்ம்.......
அது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது இவ்வகை எழுத்துக்களும் அதன் மூலம் பரவியிருக்கும் மெல்லிய வலியும்....
ஒப்புக்கு கருத்து சொல்வதை விட.. ஒரு ஒரமாய் அமர்ந்து மெளனமாகிறேன்....தோழி!
யார் சொன்னது? எப்படி வேணுமின்னாலும் எழுத்தை வளைத்து வார்க்கலாம். நல்லவே வந்துருக்குங்க!
என்னப்பா கல கல பிரியா கல கலப்பான கவிதை புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
//எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்
கருமம் கருமம்.... //
Athu sari...
Kavithai nalla irukku...
இதற்கு யாராவது விளக்கவுரை எழுதினால் நல்லது..!
அண்ணன் உணமைத் தமிழனை வழிமொழிவதோடு விளக்க உரை எழுத வேண்டிய பொறுப்பும் ப்ரியாவைச் சேர்ந்தது என்று தெரிவிக்கிறேன்.
ஸ்ரீ....
//ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது.. //
//உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்
கருமம் கருமம்.... //
17 தடவை என்பது சற்று அதிகம் தான். எப்படியோ இப்போதாவது மயக்கம் தீர்ந்தால் சரி.
//ஆஸ்திரேலியா விடு அமெரிக்கா
என்றதற்கு கிளி மூச்சு விடாது சிரித்தது..//
என் கருத்து உலகம் எப்போதும் வேடிக்கை மட்டுமே பார்க்கும். ஒவ்வொரு குழுவினருக்கும் அவரவரே துணை.
மொத்தமாவே பதினேழு தடவை தானா?
மறுபடி எண்ணிப்பாக்குறேன்.
பின்னூட்டங்களில் வெகு கலகலப்பாகவும் இங்கே வெகு சீரியஸாகவும் எப்படி இயங்குகிறீர்கள்!
என்ன மேட்டர்க்கு இந்த கவிதை
ரொம்ப பிடிச்சிருக்கு.
கடைசியில், 'கருமம் கருமம்' முன்பாகவே கவிதையை வாசித்து முடித்துக் கொண்டேன்.
'கருமம், கருமம்'- மை சைலன்ட்டாக, வாசிப்பவனுக்கு உணர தந்திருக்கலாம். வாசிப்பவன் உணர்கிறான்!
just, அபிப்ராயம். அவ்வளவே. கவிஞருக்கு கோபம் வந்துராம?
போக, சகோதரி என்பதாலும்..
எனது பிரியங்களும் அன்பின் அரவணைப்பும் உங்களுக்கு ...
:))
Suthama puriyala..
ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள சக்தி உங்க கவிதைல நீங்க கையாளுகிற வார்த்தைகளின் கோர்வைல தாங்க உண்மையிலேயே தெரியுது..
||LK said...
முதல் வெட்டு நான்தானா?||
ஆமாம்... அது என்ன வெட்டு..
||புரிஞ்சா மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு||
வாழ்க்கையே இப்டித்தானே இருக்கு... :)))
||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
கவிதை புரியலைன்னாலும், கரு புரிந்தது .. ஆதியிலிருந்து அந்தம் வரை தொடரக் கூடிய ஒன்று..||
நன்றி சந்தனா..
|| நசரேயன் said...
என்ன பிரச்சனை ?||
பிரச்சனைதான் பிரச்சனை... (நல்லா கேக்கறாய்ங்கையா கேள்வி..)
||வானம்பாடிகள் said...
பாதகத்தி! இப்படியுமா? என்னாச்சும்மா? இப்போ ஏன் இது?||
போச்சிடா... ஒன்னுமில்ல சார்... தூக்கம் வரலை.. :o)
||வானம்பாடிகள் said...
ஒரு பக்கம் கோவம் வருது. இன்னொரு பக்கம் பிரமிப்பாயிருக்கு. நெஞ்சு கனத்து போகுது.
/சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாதுஎட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்கருமம் கருமம்....//
பன்னாட:((..||
அம்பூட்டு பீலிங்காவா இருக்கு... நன்றி சார்...
||Kasu Sobhana said...
கமல்ஹாசன் பேட்டியாட்டமா இருக்கு||
நன்றி சோபனா... அம்பூட்டு நல்லாவா இருக்கு... (ஹிஹி..)
||ஆரூரன் விசுவநாதன் said...
//அது உரைத்தது புரிய ஆரம்பித்தபோது,ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான
என் பயண இடைவெளியில் தீர்ந்துபோன
ஆப்பிரிக்கக் கணக்குகளின் பெறுபேறு
கிட்டத்தட்டப் பூஜ்ய நிலையிலிருந்தது... //
//சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்//
ம்ம்ம்ம்ம்......||
அன்புடன் ஆரூரன் விட்டு... இப்போ ம்ம்ம்ம்ம் ல போகுதா... :))... நன்றி ஆரூர்...
|| dheva said...
அது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது இவ்வகை எழுத்துக்களும் அதன் மூலம் பரவியிருக்கும் மெல்லிய வலியும்....
ஒப்புக்கு கருத்து சொல்வதை விட.. ஒரு ஒரமாய் அமர்ந்து மெளனமாகிறேன்....தோழி!||
ஆ..! ரொம்ப நன்றி தேவா..
||விந்தைமனிதன் said...
யார் சொன்னது? எப்படி வேணுமின்னாலும் எழுத்தை வளைத்து வார்க்கலாம். நல்லவே வந்துருக்குங்க!||
அப்டிங்கிறீங்க... நன்றிங்...
||D.R.Ashok said...
:)||
நன்றிங்க அஷோக் வருகைக்கு..
||யாதவன் said...
என்னப்பா கல கல பிரியா கல கலப்பான கவிதை புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்||
ம்ம்... நன்றி யாதவன்..
||சே.குமார் said...
//எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்
கருமம் கருமம்.... //
Athu sari...
Kavithai nalla irukku...||
நன்றி குமார்...
||உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இதற்கு யாராவது விளக்கவுரை எழுதினால் நல்லது..!||
எல்லாரும் பிஸியாம்... நீங்க எழுதுறீங்களா ப்ளீஸ்..
||ஸ்ரீ.... said...
அண்ணன் உணமைத் தமிழனை வழிமொழிவதோடு விளக்க உரை எழுத வேண்டிய பொறுப்பும் ப்ரியாவைச் சேர்ந்தது என்று தெரிவிக்கிறேன்.
ஸ்ரீ....||
இப்போதான் உண்மைத் தமிழன் சார் கிட்ட பொறுப்பைத் தட்டிக் கழிச்சேன்... நீங்க வேற... எனக்கு ஒரு பாடு ஜோலி உண்டு.. இன்னும் ரெண்டு கவுஜ ரெடி பண்ணனும்.. :o)
||Sabarinathan Arthanari said...
//ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது.. //
//உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்
கருமம் கருமம்.... //
17 தடவை என்பது சற்று அதிகம் தான். எப்படியோ இப்போதாவது மயக்கம் தீர்ந்தால் சரி.
//ஆஸ்திரேலியா விடு அமெரிக்கா
என்றதற்கு கிளி மூச்சு விடாது சிரித்தது..//
என் கருத்து உலகம் எப்போதும் வேடிக்கை மட்டுமே பார்க்கும். ஒவ்வொரு குழுவினருக்கும் அவரவரே துணை||
நன்றி அர்த்தநாரி.. மயக்கம் தீர்ந்தாதான் வாந்தியா வருதே... நான் தூங்கிட்டே இருக்கலாமின்னு டிசைட் பண்ணிட்டேன்...
||முகிலன் said...
மொத்தமாவே பதினேழு தடவை தானா?
மறுபடி எண்ணிப்பாக்குறேன்.||
இவங்க என்ன உள்ளார்த்தம் கண்டு புடிச்சு வச்சு எண்ணுறாய்ங்களோ தெரியலயே... அவ்வ்... இல்லைனா அந்த ‘எண்ணிப்’ பார்க்கறேனுக்கு அர்த்தம்.. யோசிச்சு பார்க்கறதா...
||Amudhavan said...
பின்னூட்டங்களில் வெகு கலகலப்பாகவும் இங்கே வெகு சீரியஸாகவும் எப்படி இயங்குகிறீர்கள்!||
குட் அப்சர்வேஷன்... நல்ல கேள்வி... யோசிச்சு சொல்றேன்.. :)).. ரொம்ப நன்றிங்க அமுதவன்..
||ஈரோடு கதிர் said...
என்ன மேட்டர்க்கு இந்த கவிதை||
அது மேட்டரு... நேத்து எழுத மறந்த டயரி... இன்னைக்கு உக்காந்து நேத்து என்ன நடந்திச்சு.. எழுந்திரிச்சு ப்ரஷ் பண்ணி டீ சாப்ட்டேன்... அப்புறம்... இடைல வெளில யாரோ சண்டை போட்டாங்க... அத கவனிக்க மறந்துட்டேன்.. இன்னைக்கு இவ சொன்னா அது என்ன சண்டைன்னு.. அப்டின்னு ஒரு கோர்வையா மண்டைல வர்ற மேட்டர யோசிச்சு எழுதுற மாதிரிதான்...
||பா.ராஜாராம் said...
ரொம்ப பிடிச்சிருக்கு.
கடைசியில், 'கருமம் கருமம்' முன்பாகவே கவிதையை வாசித்து முடித்துக் கொண்டேன்.
'கருமம், கருமம்'- மை சைலன்ட்டாக, வாசிப்பவனுக்கு உணர தந்திருக்கலாம். வாசிப்பவன் உணர்கிறான்!
just, அபிப்ராயம். அவ்வளவே. கவிஞருக்கு கோபம் வந்துராம?
போக, சகோதரி என்பதாலும்..||
ரொம்ப நன்றி பா.ரா. .. நானே நீங்க சொன்ன இடத்தில நிறுத்திட்டு... அப்புறம் தவிர்க்க முடியாம சேர்த்தது அந்தக் ’கருமம்’...
இத சொல்றதுக்கு எதுக்கு இவ்ளோ பில்ட் அப்... சரிதான்னு தோணிச்சுன்னா திருத்திப்போம்ல... (பண்ணிட்டோம்ல..)..
என்னோட கோபத்துக்கு இவ்ளோ பவரா... :)))... முடியல...
உங்க மேல எப்பவும் மரியாத உண்டு... அண்ணா என்ற முறையிலும்... அழகான கவிதைக்குச் சொந்தக்காரக் கவிஞர் என்ற முறையிலும்.. (போதுமா... :)))
||நியோ said...
எனது பிரியங்களும் அன்பின் அரவணைப்பும் உங்களுக்கு ...||
ஓ.. நன்றி நியோ... :)
||T.V.ராதாகிருஷ்ணன் said...
:))||
நன்றி ராதாகிருஷ்ணன்... :D
||மதன் said...
Suthama puriyala..||
ங்ங்ஙே... (இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குப் புரியலை..)
|| சூர்யா ௧ண்ணன் said...
ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள சக்தி உங்க கவிதைல நீங்க கையாளுகிற வார்த்தைகளின் கோர்வைல தாங்க உண்மையிலேயே தெரியுது..||
அவ்வ்... மெய்யாலுமேவா.. நன்றி சூர்யா...
யாருங்க சொன்ன இப்படி எழுத கூடாதுன்னு? உங்களால தான் இப்படி எழுத முடியும்..
கவிதைக்கும், போடுற பதில் பின்னுட்டத்திற்கும் வேற வேற பிரியா இருக்காங்களோ?
//////இப்படியெல்லாம் எழுதக் கூடாதா என்ன....? ////////
இன்றைய நிலையில் இப்படிதான் எழுதவேண்டும் . புரியாத வரை இது போன்ற கவிதைகள் பூக்கள்தான் . புரியும்போதும் எப்பொழுதும் யோசனைதான்
!
//
சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்
உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
//
வேடிக்கை பார்ப்பது சில. ஆனால் வேலை முடிந்ததும் தனக்கும் ஒரு பிண்டம் என்று வெறியுடன் காத்திருந்த வேட்டை நாய்களும் அதிகம். அது வேறு கதை.
இந்தக்கவிதையில் இனப்படுகொலை பற்றிய கோபம் புரிகிறது, வாந்தி எடுப்பது நீயூஸ் இல்லாட்டி அப்பப்போ சொல்றது, முட்டாளுக்கு ஒன்னும் விளங்களீங்க , ஒருவேளை எல்லாந்தெரிந்த தவிடன் கிட்ட கேட்டா சொல்வாருங்களாங்க.
புதுசா இன்னிக்கு பதிவு போடப்போறேன் மார்க்கெட்டிங்க் பின்னூட்டம்:)
||வினோ said...
யாருங்க சொன்ன இப்படி எழுத கூடாதுன்னு? உங்களால தான் இப்படி எழுத முடியும்..
கவிதைக்கும், போடுற பதில் பின்னுட்டத்திற்கும் வேற வேற பிரியா இருக்காங்களோ?||
அவ்வ்... நன்றி வினோ...
ஆகா... பின்னூட்டம் போட சம்பளத்துக்கு ஆள் வச்சது தெரிஞ்சு போச்சே... :o)
||!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////இப்படியெல்லாம் எழுதக் கூடாதா என்ன....? ////////
இன்றைய நிலையில் இப்படிதான் எழுதவேண்டும் . புரியாத வரை இது போன்ற கவிதைகள் பூக்கள்தான் . புரியும்போதும் எப்பொழுதும் யோசனைதான்
!||
ம்ம்... நன்றி சங்கர்..
|| அது சரி said...
//
சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்
உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
//
வேடிக்கை பார்ப்பது சில. ஆனால் வேலை முடிந்ததும் தனக்கும் ஒரு பிண்டம் என்று வெறியுடன் காத்திருந்த வேட்டை நாய்களும் அதிகம். அது வேறு கதை.||
அது செரி... அந்தக் கதைய போஸ்ட்டா போட்டா படிக்கறோம்...
||குடுகுடுப்பை said...
இந்தக்கவிதையில் இனப்படுகொலை பற்றிய கோபம் புரிகிறது, வாந்தி எடுப்பது நீயூஸ் இல்லாட்டி அப்பப்போ சொல்றது, முட்டாளுக்கு ஒன்னும் விளங்களீங்க , ஒருவேளை எல்லாந்தெரிந்த தவிடன் கிட்ட கேட்டா சொல்வாருங்களாங்க.||
ஆகா... மரியாத எக்கச்சக்கமா இருக்கே.... செரி செரி எல்லாம் தெரிந்த தவிடன எனக்குத் தெரியல... அவங்க மெயில் ஐ டி இருந்தா அனுப்பி வைங்க... நானும் கொஞ்சம் டவுட் கேக்கனும்...
||குடுகுடுப்பை said...
புதுசா இன்னிக்கு பதிவு போடப்போறேன் மார்க்கெட்டிங்க் பின்னூட்டம்:)||
ஓ... அதுதானா இது... லின்க் எதும் அட் பண்ண காணோம்... :o).. இல்லைனாலும் நாம மார்க்கெட்டுக்கு வருவோம்ல... (எப்பூடீ..)
Oru kathaiyil iththanai vaanthiyaa ? Nallaa kathai solreenga.
//
இப்படியெல்லாம் எழுதக் கூடாதா என்ன....?
//
யாரு சொன்னா! நீங்க எப்படி எழுதினாலும் அந்த உணர்வை உள்வாங்கிக்க கொதிக்கும் அளவுக்கு ரசிக பெருமக்கள் இருக்கொமுங்க!
ஹிட்லர் பத்தி பேசினப்போ நீங்க சொன்ன மறுமொழி இன்னும் நினைவிருக்கு தோழி!
ஏனோ இந்த இடுகை உங்களின் சாமானியத்தையும் மீறினதா படுது எனக்கு. நல்ல கோவம். தட்டி எழுப்புது எங்கடி நீ இருக்கேன்னு! அருமை!
//
என்னோட கோபத்துக்கு இவ்ளோ பவரா... :)))... முடியல...
//
:))
ம்ம்! உங்க பவரு உங்களுக்கு எப்படி தெரியும்..
தாக்குண்ட வாசகன கேளுங்க!
"ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது.."
"இலட்சத்தை எட்டிவிட்டதென்றார்கள்"/////////
மேடம் நீங்க குடிச்ச காபி உங்களுக்கு புட் பாயிசன் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன் , அப்புறம் இந்திரன் ஆடியோ கேட்டிகளா ???
||Muniappan Pakkangal said...
Oru kathaiyil iththanai vaanthiyaa ? Nallaa kathai solreenga.||
கதை மாதிரிதானுங்க... காதில ஸ்டெத் மாட்டி இருக்கறதால வாந்திதான் கண்ணுக்கு தெரியுது பார்த்தீங்களா.. :)))
|| கயல் said...
//
இப்படியெல்லாம் எழுதக் கூடாதா என்ன....?
//
யாரு சொன்னா! நீங்க எப்படி எழுதினாலும் அந்த உணர்வை உள்வாங்கிக்க கொதிக்கும் அளவுக்கு ரசிக பெருமக்கள் இருக்கொமுங்க!
ஹிட்லர் பத்தி பேசினப்போ நீங்க சொன்ன மறுமொழி இன்னும் நினைவிருக்கு தோழி!
ஏனோ இந்த இடுகை உங்களின் சாமானியத்தையும் மீறினதா படுது எனக்கு. நல்ல கோவம். தட்டி எழுப்புது எங்கடி நீ இருக்கேன்னு! அருமை!
//
என்னோட கோபத்துக்கு இவ்ளோ பவரா... :)))... முடியல...
//
:))
ம்ம்! உங்க பவரு உங்களுக்கு எப்படி தெரியும்..
தாக்குண்ட வாசகன கேளுங்க!||
ரொம்ப நன்றி கயல்... ம்ம்..
||மங்குனி அமைசர் said...
"ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது.."
"இலட்சத்தை எட்டிவிட்டதென்றார்கள்"/////////
மேடம் நீங்க குடிச்ச காபி உங்களுக்கு புட் பாயிசன் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன் , அப்புறம் இந்திரன் ஆடியோ கேட்டிகளா ???||
ஓ... நீங்க எந்திரன் ஆடியோ கேட்டுதான் இப்டி ஆயிட்டீங்களா... இலட்சம் இலங்கைல... மில்லியன் ருவாண்டால... நைண்டீன் நைண்டி ஃபோர்ல... ம்ம்... நல்லாப் ப(பு)டிக்கறீங்கையா டீட்டெயிலு...
//நேரே இரடி கடன்காரி
எத்தனை சிடுக்கு உன் தலையில் ...//
பாலகுமாரன் என்றோ எழுதியது நினைவு வந்தது.
ஹலோ என்ன இது? ஏன் இப்படி?
ரொம்ப நாள் கழிச்சு வந்தா வழக்கம் போலவே?
புரிஞ்சுச்சா புரியவில்லைன்னே புரியல...!
||கக்கு - மாணிக்கம் said...
//நேரே இரடி கடன்காரி
எத்தனை சிடுக்கு உன் தலையில் ...//
பாலகுமாரன் என்றோ எழுதியது நினைவு வந்தது.||
அட... பாலகுமாரன் இப்டி எழுதி இருக்காங்களா.. ஆமா என்ன சொல்ல வர்றாங்க பாலகுமாரன்.. :))
||சிங்கக்குட்டி said...
ஹலோ என்ன இது? ஏன் இப்படி?
ரொம்ப நாள் கழிச்சு வந்தா வழக்கம் போலவே?
புரிஞ்சுச்சா புரியவில்லைன்னே புரியல...!||
வாங்க சிங்கக்குட்டி... ஆகா... கவுஜ சக்ஸஸ்...
Post a Comment