header photo

Tuesday, October 26, 2010

புன்னகை எதற்கு...

ஏழு வருடங்கள் முன் என் தலை மேல் கன்னம் பதித்து விம்மிய என் தாத்தன் இன்றில்லை. தேங்காய்ப்பூவுடன் மசித்த கீரைக்கு நான் ஏங்கிக் கொண்டிருந்த போது "அம்மன் கேரட்டும் லீக்ஸும் கூட்டு செய்தேன், உனக்கு இங்க உள்ள மரக்கறி எல்லாம் சரிப்பட்டு வருமோ தெரியாது" என்றபடி சோறு பிசைந்து ஊட்டிய என் அன்னையும் இல்லை. இவற்றில் எவற்றுக்கும் வழியற்று அவசரமாக நீங்கி விட்ட அப்பாவும், பாட்டியும் இல்லை. 


கதிர் இலங்கை செல்கிறேன் என்றபோது எனக்குப் பேச்சு வரவில்லை. அங்கே யார் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கக் கூடப் பிடிக்காது மனம் அழுத்தியது. நேற்று கதிரின் இடுகையைப் படித்தபோது, ஏழு வருடங்கள் முன் யாழ்ப்பாணத்தின் விமானதளத்தை அடையும் வரை, உட்கார்ந்திருந்த வாகனம் பின்னோக்கி விரட்டிக் கொண்டிருந்த தென்னை மரங்களும், பூவரசும், ஏரிகளும், நாரைகளும், உப்புக் காற்றும் சேர்ந்து கண்ணுக்குள் இடை விடாது கரித்துக் கொண்டேயிருந்தது. 

பார்த்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு சிரிப்பானை விட்டு வந்தேன். ஏழு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், டெம்ப்ளேட் கூட இல்லை, ஒரு சிரிப்பான் மட்டுமா என்ற கேள்வியுடன் கதிர் வந்த போது, மீண்டும் கரித்தது. 

படித்து முடிக்க முடியவில்லை, பிறகு சொல்கிறேன் என்று விட்டுப் பேசாதிருந்தேன். "நானெல்லாம் அங்கே சென்று என்ன கிழித்து விட்டேன், இப்படி ஒரு இடுகை, அதற்கு நாலு பின்னூட்டம்.. ஒரு சக மனிதனா என்ன செய்ய முடிந்தது..".. என்று அங்கலாய்த்தார். "உணர்விருக்கே... அது போதும்" என்றேன். 

இன்று புதுவை சிவா என்ற பதிவர் என்னுடைய சிரிப்பானைக் குறிப்பிட்டு, அலட்சியப் புன்னகையென்று அடிக்கோடிட்டிருந்தார். 

உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துவதற்கு அவசியம் ஏதுமில்லை. அரசியல், ஆராய்ச்சி எல்லாம் தாண்டி சீமான், தாமரை போன்றவர்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் அளித்த ஆறுதலை யாரும் எப்பவும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.   

வேறு நாட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் இருந்தும், அடிபட்ட புறாக்களாகத் துடித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து விட வேண்டுமென்று ஓடிச் சென்ற அந்த உணர்வுக்கு வந்தனம். 
_______________________________________

23 ஊக்கம்::

vasu balaji said...

ம்ம். வார்த்தை வரவில்லை. உன் புன்னகையின் பின்னான வலியறிவோம். எனக்கு வேறெதுவும் சொல்ல முடியவில்லை. :((

க.பாலாசி said...

காலையில் பார்த்தபோதே சுர்ரென்று இருந்தது. வலிக்கிறது, கண்ணீர் வருகிறது என்று சொல்லிவிட்டு இதை கடக்க விருப்பமில்லை...

க ரா said...

வேண்டாங்க.. அவங்களுக்கு தெரியாது உங்க பின்புலம். உங்களின் வலி எங்களுக்கு தெரியும்.. அவர்களை புறந்தள்ளுங்கள் ....

Anonymous said...

அடிபட்டவனுக்கு தான் தெரியும் வலியின் வேதனை என்னவென்று. பொங்கி எழுந்து சீனத்துவானமாக சீறிப்பாயும் தமிழன் குணம் இன்று சிறைபட்டு கிடக்கிறது. காலம் வரும்!. பதில் சொல்லும்.

dheva said...

//ஏழு வருடங்கள் முன் யாழ்ப்பாணத்தின் விமானதளத்தை அடையும் வரை, உட்கார்ந்திருந்த வாகனம் பின்னோக்கி விரட்டிக் கொண்டிருந்த தென்னை மரங்களும், பூவரசும், ஏரிகளும், நாரைகளும், உப்புக் காற்றும் சேர்ந்து கண்ணுக்குள் இடை விடாது கரித்துக் கொண்டேயிருந்தது. //

வார்த்தைகள் ஏதும் இல்லை.. சகோதரி....! மெளனமாய் உள்வாங்கிக் கொள்கிறேன்...உணர்வுகளை....!

Unknown said...

நேற்று உங்க சிரிப்பான் பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது. உங்களை அறிவோம். வீணாக எதற்கு ஒரு விளக்கம். யாரவது ஒருத்தர் எதுக்காவது சீண்டிக்கிட்டே தானிருப்பாங்க. இதெல்லாம் கடந்து போவனும்.

Ravi kumar Karunanithi said...

enaku siripa iruku... he he he

பிரபாகர் said...

கதிரைப் படித்து மனம் கனத்து பின்னோட்டங்களைப் பார்த்துக்கொண்டு வந்த போது உங்களின் சிரிப்பானைப் பார்த்து இன்னும் மனம் கனத்தது சகோதரி, அதன் பொருள் புரிந்ததால். செயலற்றிருந்தேன் சில நேரம்...வழக்கம்போல். பின்னூட்டமிட மனமில்லாமல் வந்துவிட்டேன்.

பிரபாகர்...

vasu balaji said...

@Dhosai

பாவம்! படிக்கிற பையனாம். பேர் ராசி அப்படி போல. ஏன் ராசா? துணிய கிழிச்சிகிட்டா கிழிக்காமலா?

Muruganandan M.K. said...

உங்கள் உறவுகளை இழந்த வலி தொற்றிக் கொண்டு அழுத்துகிறது.

பவள சங்கரி said...

வார்த்தைகள் சொல்லும் விளக்கத்தைவிட மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லாமலே புரியுமே. இதற்கெல்லாம் விளக்கமா தேவை? உணர்வுகள் பேசும் போது அங்கே எழுத்துக்களுக்கு வேலை இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதானேம்மா.......

Unknown said...

எல்லாரும் சொல்றதுதான்.. நீங்க விளக்கணும்னு அவசியமே இல்லை..

எனக்கெல்லாம் படிச்ச வலியில பின்னூட்டக்கூட முடியலை..

Paleo God said...

இதைப் படித்துமட்டும் முழுதாய் விளங்கிக்கொள்ள இயலுமா?

விடுங்க..

ராகவன் said...

அன்பு கலகலப்ரியா,

எல்லோருக்கும் போல் எனக்கும் மனசு வலித்தது. கதிரின் வவுனியா போய் வநதேன் படித்த போதும் அவஸ்தையாய் இருந்தது. திரும்ப திரும்ப படிக்கும் கட்டுரைகளும் அனுபவப்பகிர்வுகளும் வேதனையாக இருக்கிறது எனக்கு.

ஐரோப்பாவிலும், கனடாவிலும், அமேரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இர்க்கும் இலங்கைத்தமிழர்கள் வாழ்வு நிலை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் என் சகோதரர்களும், சகோதரிகளும் படும் வேதனை சொல்லி மாளாது.
இன்னும் இலங்கையில் அழிந்து கொண்டிர்க்கும் எனது இனம் பற்றி படிக்க படிக்க என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றும் எனக்கு.

பேசுபவர்கள் எல்லாம் தலைவர் இறக்க இல்லை என்று சொல்ல கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும். எல்லா நிலைகளும் மாறும் என்றே தோன்றுகிறது.

அன்புடன்
ராகவன்

sakthi said...

"அம்மன் கேரட்டும் லீக்ஸும் கூட்டு செய்தேன், உனக்கு இங்க உள்ள மரக்கறி எல்லாம் சரிப்பட்டு வருமோ தெரியாது" என்றபடி சோறு பிசைந்து ஊட்டிய என் அன்னையும் இல்லை.

வருத்தமாயிருக்கு மா

ஈரோடு கதிர் said...

அங்கு ஆமிக்காரன் என்னைப் பார்த்து புன்னகைத்ததையும், நீங்கள் என் இடுகையை கொஞ்சம் வாசித்துவிட்டு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் புன்னகைத்ததையும் நான் மட்டுமே முழுக்க அறிவேன்...

எல்லாப் புன்னகைகளும் ஒன்றாகிவிடாது. ஒவ்வொன்றின் அடர்த்தியும், குணமும், புன்னகையில் வழியும் ரசமும் வேறு வேறு என்பதை நான் அறிந்தேன்ன்.

கடந்து போவோம், ஆக வேண்டியதற்காக ஏதேனும் துரும்பைக் கிள்ளி வீச முயல்வோம்

நன்றி

கலகலப்ரியா said...

எல்லாருக்கும்... ரொம்ப நன்றி...

puduvaisiva said...

"புதுகை சிவா.
இரண்டு புன்னகைகளையும் ஒப்பிட முடியாது. அதற்கான வேறுபாடுகளை நான் நேரில் அறிந்தவன்"


நன்றி கதிர் சார்

உண்மையில் பதிவுக்கு பின்னோட்டம் போடும் போது அந்த சிரிப்பானை கண்டதும் எழுந்த கோபத்தில் அவ்வாறு எழுதினேன்.

பின் தோழி கலகலப்ரியா இதற்காக பதிலை ஒரு பதிவாக அவர் எழுதியதை கண்டு உண்மையில் என்னுடைய தவறுக்கு வருந்துகிறேன்.

தோழி கலகலப்ரியா என்னுடைய தவறை மன்னிக்கவும்.

ராஜ நடராஜன் said...

கதிர் இடுகைக்கு சிரிப்பான் மட்டும் கண்டேன்.இடுகை பகிர்வுக்கு நன்றி.

கலகலப்ரியா said...

@♠புதுவை சிவா♠

நன்றிங்க.. வருத்தம் எதுவுமில்ல.. பின்னூட்டத்திற்கு பதில் சொல்லும்போது... உங்களுக்கும் விளக்கம் கொடுக்கணும்னு நினைச்சேன்... பதில் நீண்டு விட்டதால் போஸ்ட்...

கலகலப்ரியா said...

@ராஜ நடராஜன்

நன்றி நடராஜன்..

அது சரி(18185106603874041862) said...

உங்களை தெரிந்தவர்களுக்கு அந்த ஸ்மைலியின் அர்த்தம் புரியும். தெரியாதவர்கள் இந்த இடுகை படித்தால் புரிந்து கொள்ளலாம்.

அதையும் மீறி எழவு வீட்டிலும் போய் எனக்கு சிரிப்பா இருக்கு என்று சொல்பவர்களை பற்றி என்ன சொல்ல? பாலா சொல்வது போல துணியை கிழித்துக் கொண்டு சிரிக்கும் ரகங்கள் போல.

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

நன்றி அது சரி... அவங்க டைட்டில பார்த்துட்டு ஏதோ காமெடின்னு போட்டுட்டு போறாங்க போல... படிச்சா இப்டி போட்டிருக்க முடியாதுன்னு தோணுது...