மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு மக்கா... புரட்சி செஞ்சு ரொம்ப ரொம்ப நாளாச்சு.... சரி இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்துடுவோம்...
முதல்ல நிவிஸ் படிங்க மக்கா.... (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)
போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...
நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________
முதல்ல நிவிஸ் படிங்க மக்கா.... (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)
போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...
நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________
கையப் பரபரன்னு தேய்ச்சுக்கிட்டு யார் முடியப் பிடிக்கலாம்னு பார்த்தா மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி.
அவரு “ஆடி வெள்ளி”ன்னு ஒரு படம் எடுத்தாராமே... அதில ஒரு நாகப்பாம்பு நடிச்சுதே... அதுக்குப் பல்லே இல்லையாம்... அது எப்டி பல்லே இல்லாத பாம்பை நடிக்க வைக்கலாம்..?! பாம்புக்கான தகுதியே அந்தப் பல்லிலதானேய்யா இருக்கு... அந்தப் பாம்புக்கு என்ன பேருன்னு எனக்குத் தெரியல.. (எங்கைய்யா நான் படம் பார்த்தாதானே.. இந்த எளவெல்லாம் தெரியறதுக்கு... போராடவே நேரம் பத்தல..) பேரு.. நாகராணியா இருக்கலாம்.. ஒரு வாட்டி ஏதோ நடந்தது நடந்து போச்சு... அப்போ நாம மிளகுப் பொங்கல் கொஞ்சம் அதிகமா சாப்ட்டு அசந்து தூங்கிட்டோம்.. ஸோ போனாப் போறதுன்னு விட்டுடலாம்... ஆனா இனிமே “போடி கள்ளி”ன்னு ஏதாவது படம் கிடம் எடுக்கிறப்போ... நாகராணி அம்மாவ நடிகையாப் போட்டா உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்... நல்லா கோல்கேட் அட்-ல வர்ற மாதிரி.. பளிச்சுன்னு பல்லுள்ள பாம்பா பார்த்துப் போடனும்.... சும்மா பொட்டுன்னு ஒரு போடு போட்டா பொட்டுன்னு போற மாதிரி இருக்கனும்... ம்க்கும்.. எங்க இருக்கிறது... சாவனும்யா... பாம்புன்னா படம் எடுத்தா மட்டும் போதுமாய்யா..... நீங்களும்தான் எடுக்கறீங்க படம்... அதுக்காக நீங்க பாம்பா நடிச்சிட முடியுமா.... படமாய்யா எடுக்கிறீங்க படம்...
__________________________
அப்புறம்... சங்கர் சார ஒரு புடி புடிக்கலாம்...
என்னையா டைரக்டரு நீரு... சப்பான் நாட்ல தடுக்கி விழுந்தா ரோபோன்னு இருக்கிறப்போ.... வேலை மெனக்கெட்டு போயும் போயும் ஒரு மனுஷனுக்கு மேக்-அப் போட்டு ரோபோன்னு சொல்லி இருக்கீரே... யாரை அய்யா ஏமாத்துறீங்க.... நம்ம மூஞ்சில கேனன்னு எழுதி ஒட்டி இருக்கா என்ன... அட வீணாப் போனவைங்களே.... ஒரு ரோபோ வாங்க ரசினிக்குக் கொடுத்த சம்பளத்தில பாதி கூட வேணாம்யா... அறிவு வேணாம்... புடிங்கைய்யா கொடிய... தூக்குங்கைய்யா ரசினிய...
___________________________
நெக்ஸ்ட் யாருப்பா...
யோவ் மணி... எங்க ஒளியறீரு... முன்னாடி வாரும்யா.... அறிவிருக்காய்யா உமக்கு... இல்ல தெரியாம கேக்கறேன் அறிவிருக்காய்யா.... ஐசுவர்யா ராய் யாருய்யா..?! அபிசேக்கு பொஞ்சாதிதானே.... என்னா தெனாவெட்டுய்யா உமக்கு... தமிழ்ப் படத்தில அந்தம்மாவ எவனோ பிருத்வியோ... பருத்துவியோ அவனுக்கு பொண்டாட்டின்னு நடிக்க வச்சீரு... அத விட மோசமா.... ஹிந்திப் படத்தில... அபிசேக்க ராவணனாக்கி... விக்ரம ஐசுவரியாக்கு ஆம்படையான் ஆக்கினீரே... மன்னிக்கவே முடியாதுய்யா.... விக்ரம தூக்கறமோ இல்லயோ... உம்மைத் தூக்கறோம்...
___________________________
அப்புறம்.... ஆ... எல்லாரும் வரிசை கட்டி வர்றாய்ங்களே.... என்னங்கையா இது... எங்க பார்த்தாலும் இதே எழவாப் போச்சு... யோ... எல்லாரும் நல்லாக் கேட்டுக்கிடுங்க... இனிமே... ஒரு படத்தில ஒருத்தன் நடிச்சா வேற படத்தில நடிக்கவே ப்டாது.... அந்தப் படத்தில அவன் அவனாவேதான் நடிக்கனும்... அவனுக்கு பொண்டாட்டி இருந்தா... அவதான் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கனும்... அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்...
சுமங்கலிய விதவையா... விதவைய சுமங்கலியா.... நல்லவன கெட்டவனா.. கெட்டவன நல்லவனா... பொறுக்கிய புறம்போக்கா... புறம்போக்க பொறுக்கியா... பல்லிய ஆமையா... ஆமைய பல்லியா... எல்லாம் நடிக்க வச்சீங்க கையக் கால உடைச்சி அடுப்பில வச்சிடுவோம்....
அப்புறம் மனுசப்பசங்க எல்லாம் சாமி வேடம் போட்டா கொன்னே போட்ருவோம்... ராமரு வேஷம் ராமர்தான் போடனும்.... லெட்சுமணன் வேடம் லெட்சுமணந்தேன் போடனும்... யேசு யேசுவாதான் இருக்கனும்...
நாம எல்லாம் இளிச்சவாயிங்களா என்ன.... கொக்கமக்கா... இருங்கடி வந்து பேசிக்கறேன்...
___________________________
46 ஊக்கம்::
//யோவ் மணி... எங்க ஒளியறீரு...//
you mean Maniratanam?... me the escape......
///நாம எல்லாம் இளிச்சவாயிங்களா என்ன.... கொக்கமக்கா... இருங்கடி வந்து பேசிக்கறேன்...///
ம்ம்ம்ம் கலக்குங்கோ...
உண்மை ஆனா?
காளியாத்தா சூலத்த தூககிட்டிகளா?
எஸ்கேப். எஸ்கேப். ஓடுங்கப்பா ஓடுங்க
ஓ!இதுக்குப் பேர்தான் மரணமொக்கையா? நான் என் னென்னமோ என்னை விலா வாரியா அரசியல்,கருவாடு,கத்திரிக்காய்ன்னு பதம் பிரிச்சிகிட்டிருக்கேன் இவ்வளவு நாளா.
எந்திரன் பாத்தாச்சா?
//மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி.//
ராமண்ணா பாவம் ராமண்ணா பாவம்.:))
//பேரு.. நாகராணியா இருக்கலாம்.. //
அது ஒரு வேள ஆம்பிளை பாம்பா இருக்கலாம்ல=))
//ஒரு போடு போட்டா பொட்டுன்னு போற மாதிரி இருக்கனும்...//
க்ளைமாக்ஸ்ல படம் ஜூப்பரா ஓடும். என்னாமா ரியலா எடுத்துருக்காருய்யான்னு
/ஒரு ரோபோ வாங்க//
இப்புடியெல்லாம் படமெடுத்தா ரோபோ சூசைட் பண்ணிக்கும்
/விக்ரம தூக்கறமோ இல்லயோ... உம்மைத் தூக்கறோம்.../
ங்கொய்யால பேட்ட ரவுடி கெட்டான். என்னா உதாரு
/அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்...//
அப்புறம் பேப்பர்காசன் எப்படி காசு பாக்கறது
ஆத்தாடி ஒரே இடுகையில, படம் எடுக்கிறவன், நடிக்கிறவன், டையரடக்கரு எல்லாருக்கும் ஆப்பா?
ha haa..superr!!
ராஜ நடராஜன் said...
ஓ!இதுக்குப் பேர்தான் மரணமொக்கையா? நான் என் னென்னமோ என்னை விலா வாரியா அரசியல்,கருவாடு,கத்திரிக்காய்ன்னு பதம் பிரிச்சிகிட்டிருக்கேன் இவ்வளவு நாளா.//
இது ஓவரு. எங்களோட மரண மொக்கை எத்தனை படிச்சிருக்கீங்க. இப்பதான் லேபில் பார்த்தேன்னு சொல்லுங்க.:))
பிரியா நல்லா சிரிக்க வைச்சிட்டீங்க......நன்றிம்மா.....நகைச்சுவையரசிக்கு ஒரு பூங்கொத்து......
நம்பியாரு, நல்லவரே இல்லையாமே ? அடப்பாவிகளா, மொத அதுக்கு ஒரு போராட்டம் பண்ணனுமே ? அப்பாடா, இப்ப தான் கலக்கல் ப்ரியாவா வந்துர்க்கீங்க, தொடருங்க
@பழமைபேசி
ஆமாம்.. நல்ல வேளை அது நீங்க இல்ல... மக்கள்ஸ் த எஸ்கேப் :o)..
@ஆ.ஞானசேகரன்
நன்றி ஞானசேகரன்... என்ன ஆனா..?!
@Sethu
பார்த்து விழுந்தடிக்காம ஓடுங்க சேது..
@ராஜ நடராஜன்
ஆ... எனக்கு இந்தக் கத்தரிக்கா... கருவாடு சமாச்சாரம் தெரியாம போச்சே... செரி விடுங்க... எல்லாருக்கும் எல்லாம் தெரியாதுன்னு இதில இருந்து தெரியுது..
@முகிலன்
தோடா வெளம்பரம்... எந்திரன் பார்த்துவிட்டீர்களா... பின்சீட்டுக்கு முந்துங்கள்ன்னு...
ம்க்கும்... நெட்ல வரட்டும்... பார்க்கறோம்..
@வானம்பாடிகள்
தோடா... நானா ஆப்பு வைக்கறேன்.. மக்கள்தான் கொடி புடிக்கறாய்ங்க...
@Mrs.Menagasathia
ஹிஹி... நன்றி மேனகா..
@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி நித்திம்மா..
@மார்கண்டேயன்
நம்பியாரு நம்பியாரா நடிக்காததுக்காகவே அவரைத் தண்டிக்கனும்... டாங்க்ஸுங்க..
@வானம்பாடிகள்
||அது ஒரு வேள ஆம்பிளை பாம்பா இருக்கலாம்ல=))||
சார்... இது என்ன புதுப் பிரச்சன.... நாகராஜன கூட்டிக்கிட்டு வந்து நாகராணின்னு சொன்னா... அதுக்கு அந்த நாகராஜன் தோல உரிச்சே கொடி புடிப்போம்... சாக்கிரத சொல்லிட்டேன்..
//
முகிலன் said...
எந்திரன் பாத்தாச்சா?
//
மொதல்ல இவரை தூக்கினா ஒலகத்துல பாதி பிரச்சினை சால்வ்ட் :))
நீங்க இவ்ளோ சொல்றீங்க. இந்த காங்கிரஸ்காரங்களுக்கு எதுனா புரியுதா பாருங்க? காந்தி பத்தி ஒரு படம் எடுக்கறாங்களாம் ஆனா அதுல காந்தி நடிக்கவே இல்லை. இதைப் பத்தி நாடு நடுங்கும் போராட்டம் ஆரம்பிச்சா என்ன?
Raittu.........
full formula irukeenka pola...
////கொடுமை கொடுமைன்னு தியேட்டருக்கு போனா... //
எத்தனை படம் இதுல தியேட்டருக்கு போனீங்க,.. ஏனா இப்ப இருக்குற நிலைமைல தியேட்டருக்கு போய் படம் பார்குறதெல்லாம் ரொம்ப கஷ்டம்,.
//யார் முடியப் பிடிக்கலாம்னு பார்த்தா மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி. //
அய்யோ அவருக்கு முடியெல்லாம் கொட்டிபோய் ரொம்ப வருசமாச்சு,. அவர் தலை முழுக்க வழுக்கை,..
//படமாய்யா எடுக்கிறீங்க படம்... //
இவுங்க எங்க எடுக்கிறாங்க,. பாம்புதான எடுக்குது,..
//ஒரு ரோபோ வாங்க ரசினிக்குக் கொடுத்த சம்பளத்தில பாதி கூட வேணாம்யா...//
இன்னும் ரஜினி சம்பளமே வாங்கலையலையாம்,..
//ஒரு படத்தில ஒருத்தன் நடிச்சா வேற படத்தில நடிக்கவே ப்டாது..../
அப்பதான் எங்க எல்லோருக்கும் சான்ஸ் கிடைக்கும்,..
//அவனுக்கு பொண்டாட்டி இருந்தா... அவதான் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கனும்... அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்... //
ஏற்கனவே தியேட்டரையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்திக்கிட்டு இருக்காங்கலாம்,.. இப்ப வர்ர படத்த dvdயிலேயே பார்க்க முடியல,.. நம்ம கதையே கொடுமை,. அடுத்தவன் கதையை பார்க்குறது மஹா கொடுமை,..
//அப்புறம் மனுசப்பசங்க எல்லாம் சாமி வேடம் போட்டா கொன்னே போட்ருவோம்...//
நல்ல ஐடியா,. அப்பதான் பாம்புக்கெல்லாம் ஹீரோ சான்ஸ் கிடைக்கும்,..
நடக்கட்டும்,.. நடக்கட்டும் ரொம்ப நாளாச்சு உங்க பதிவுல காமெடி பீஸ் படிச்சு,..
கட்டப்பஞ்சாயத்து நாட்டாம தீர்ப்பு.. நயன் சீதையா நடிச்சுட்டுப் போவட்டும்.. குத்தமில்ல.. ஆனா, ராமனா வேஷங் கட்டப்போறது பிரபு தேவாவா த்தேன் இருக்கோணும்..
(ஜாலியாத் தான் எழுதியிருக்கேன்.. யாரும் படிச்சுப் போட்டு எனக்கு அட்வைஸ் பண்ணிடப் போறாங்க..)
ரசித்தேன்..:)
raitttunga
சகோ, போராடறதுக்கு காரணம் தேடிட்டிருப்பாங்க போலிருக்கு. பாருங்களேன் போராட்டமே ஏன் பண்ணலன்னும் ஒரு போராட்டம் பண்ணுவாங்க!...
நல்லாருக்கு.
பிரபாகர்...
ஆமா, நீங்க கலகலப் பிரியாவா?
கலகப் பிரியாவா?
அல்லது கலக்கல் பிரியாவா?
||you mean Maniratanam?... me the escape......||
சொ.கா.சூ வச்சுக்கும் மாப்பு வாழ்க
//ராமர் வேஷம் ராமர்தான் போடணும், லெட்சுமணன் வேஷம் லெட்சுமணன்தான் போடணும்//
ஆத்தீ............................என்னா வில்லத்தனம்!!!
நான் இந்த விளையாட்டுக்கு வரலை, வேணும்னா சுப்பிரமணிய சாமிய வரசொல்லட்டுமா? எலேய் ஒடுங்கலே மக்கா.......... ராமகோபாலன், அத்வானி, மோடி, அர்ஜூன்சிங் எல்லாரும் வரிசை கட்டி வாராய்ங்கப்பே...........
நல்லாயிருக்கே... உங்க போராட்டக் காரணங்கள்....
ஆமா... கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்ட ரம்யா கிருஷணன் அம்மனா நடிச்சப்போ போராட்டம் பண்ணாமா விட்டுட்டிங்களே?
@அது சரி(18185106603874041862)
சொல்லாதீங்க... செய்ங்க..
@அது சரி(18185106603874041862)
ஆமாம்... வெள்ளைக்காரன் எடுத்த படத்தில கூடக் காந்தி நடிக்கல... என்ன கொடுமை இது..
@வழிப்போக்கன் - யோகேஷ்
ஹிஹி...
@jothi
நன்றி ஜோதி... காமெடி பீஸ்னா குஷி ஆய்டுவீங்களே...
@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
ம்ம்... ஆமாம் சந்தனா இப்டி எல்லாம் பேசினா சாமி குத்தமாயிடும்... :o)
@மணிநரேன்
நன்றிங்கோ..
@நர்சிம்
நன்றிங்க..
@பிரபாகர்
நன்றிண்ணா..
@vasan
நல்ல கேள்விங்க... கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு... இந்தப் போஸ்ட்ட டெடிகேட் பண்ணலாம்..
@ஈரோடு கதிர்
இப்போல்லாம் போஸ்ட்ட விட்டு காமெண்டுக்கு காமெண்டறதுதான் பேஷனாமே நிஜம்மாவா...
@நாஞ்சில் மனோ
வரட்டு வரட்டு... பார்த்துடுவோம்..
@சே.குமார்
போராடியிருப்பாங்க உங்களுக்கு நிவிஸ் தெரியல...
நல்லா சிரிச்சேன்!
@வால்பையன்
என்னது நம்ம போராட்டம் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா... இருக்கட்டு இருக்கட்டு..
Post a Comment