காலனின் காதலி என்றவள்
தலைவலி
கண் என்றவள்..
கனவுக்கு
கரிக்கோமியக் கோடிட்டவள்..
நகம் கீறிய பழியை
காளி மேற் போட்டவள்..
ஆந்தையை வீமனென்றவள்
நாயூளையைப் பேயென்றவள்..
கந்தகத் தீயைக்
கொள்ளிவால் என்றவள்..
நடைத்துயிலைக்
கொண்டுலாத்தி என்றவள்..
மாதக் குருதியைத்
தீட்டென்றவள்..
என்..
காலடி பதித்த
கோலத்தடியில்
கோமியம் மெழுகியவள்..
குதிக்காலூன்றிப்
பெருவிரல் சுற்றிய
சக்கரம் பூமியென்றவள்..
என்னை
வாழப் பிறப்பித்த அவள்..
சாவே சொர்க்கமென்றவள்..
23 ஊக்கம்::
/கனவுக்குகரிக்கோமியக் கோடிட்டவள்./
/நடைத்துயிலைக் கொண்டுலாத்தி என்றவள்.. /
/காலடி பதித்த கோலத்தடியில் கோமியம் மெழுகியவள்../
என்னமா கற்பனை. ம்ம்ம்.
/என்னை வாழப் பிறப்பித்த அவள்..சாவே சொர்க்கமென்றவள்.. /
ம்ம்.சாவே சொர்க்கமென்றவள்
புரியறது.
எனக்கு இலக்கியம் தெரியாட்டி நாசமா போகட்டும். எனக்கு இது அபாரம்.
தலைப்பு, கவிதை இதுக்குள்ள ஒரு ஆன்மாவின் உலகம். அம்மாவின் உலகம். சல்யூட் அம்மா.
amma pathi ithu ?
if m wrong xcuse my purithal :((
மூடப்பழக்கவழக்கங்களுக்கு சாட்டையடி.........திருந்துமா சமூகம்.....?
அதென்ன ப்ரியான்னா அதிரடின்க்ரா மாதிரி ஆயிடுச்சு. பேசாம பேர மாத்திடுங்க.
கவிதை நல்லாயிருக்கு..!!
ஆனால் //மாதக் குருதியைத்
தீட்டென்றவள்..// இங்குதான் சரியாக புரியவில்லை. மற்றபடி வரிகள் அனைத்தும் தெளிவாக புரிகிறது.
என்னை
வாழப் பிறப்பித்த அவள்..
சாவே சொர்க்கமென்றவள்.. //
இப்படிச் சொல்லிப்புட்டாளே அம்மான்னு வெக்கத்தோட போயி கேட்டு தெரிஞ்சிக்கிட்டாத்தானே மனுச/மனுசி ரெண்டு பேருக்குள்ளும் ஒரே அடிப்படை உணர்ச்சிகள்தானப்பா இருக்கின்னு மற்றவிங்கள புரிஞ்சிக்க உதவும்.
நல்ல கவிதை!
பழமையைப் பேணியவள்-ஆனால் ஒரு
புதுமைப் பெண்ணை ஈன்றவள்.
உண்மைதானே,ப்ரியா!
"என்..
காலடி பதித்த
கோலத்தடியில்
கோமியம் மெழுகியவள்.."
- தீட்டு பட்டுடுச்சுன்னு சாணி மெழுகியது.
ப்ரியா! தூள் கிளப்பறீங்க. நடத்துங்க.
மாட்டின் கழிவு சாணியப் புனிதமாக மதிக்கக் கூடிய மூடத் தனம்.
காலம் குதிரை போல
தன் போக்கில் தனியே நடந்து செல்லும்
கடிவாளம் ஏதுமில்லை.
மேடு பள்ளம்
ஆறு மலை
கடவுள் கழிவு
கணக்கு எதுவும் இல்லை.
தானே தாண்டி செல்லும்
சொல்லித் தர யாரும் தேவையில்லை.
காடு பாதை
கணக்கு சொல்பவன் எவன்
தேவையெனில் குதிரை
காடு கிழிக்கும் பாதையாக்கும்
பின்னே வருவார் பலரும் பாதையில் நடந்து.
என்றோ ஒரு குதிரை
காடழித்த தடங்கள்
நான் இன்று நடக்கும் பாதை.
முள் காடு கிழித்து
முன்னே சென்ற முகம் தெரியாத குதிரைக்கு
என்
சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.
// மாதக் குருதியைத்
தீட்டென்றவள்.. //
சாட்டையடி கொடுக்கும் வரிகள் ... அருமையான ஒரு கவிதை.
||வாழப் பிறப்பித்த அவள்..
சாவே சொர்க்கமென்றவள்.||
மிக அழகாய் கவிதை
@வானம்பாடிகள்
நன்றி சார்...
@ரோகிணிசிவா
நன்றி ரோகிணி... சமூகம் பத்தி... அம்மாவும் அதில ஒரு அங்கம்.. நானும்..
@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி நித்திம்மா... ம்ம்...
@Sethu
நன்றி சேது... இந்தப் பேரு போதாதா.. :o)
@பிரவின்குமார்
நன்றி பிரவின்குமார்... இந்நேரம் புரிஞ்சிருக்கும்...
@Thekkikattan|தெகா
நன்றி தெகா...
@சென்னை பித்தன்
நன்றிங்க பித்தன்... தெரியல..
@Sethu
நன்றி சேது...
@அது சரி(18185106603874041862)
நன்றி அது சரி... ரொம்ப நல்லாருக்கு கவிதை... ஒரு போஸ்ட்டா போட்டிருக்கலாம்..
@ankithavarma
நன்றிங்க .. ankithavarma..
@ஈரோடு கதிர்
நன்றி கதிர்..
Post a Comment