பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்
குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தன
மயிலிறகுகள்
வெள்ளியன்று
வெளிவந்த முட்டைக்குள்
வைரமாகிக் கொண்டிருந்தன
பொன் கருக்கள்
உயிர்த்த ஞாயிறில்
மரித்த பறவைக் கோதில்
வானவில்லின் வர்ண ஜாலம்
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது
வர்ணப் பூச்சை - விட
சுண்ணாம்பின்
வெண்ணிறமே விருப்பாயிருந்தது..
ஆட்காட்டி விரலில்
அமிலம் தொட்டுத்
தடவ ஆரம்பித்தேன்
சிறு கிள்ளையொன்று
எட்டி நின்று முடியென்று
எதையோ பிடித்திழுத்து
வித்தை காட்டியது
கையிலிருந்ததை நழுவ விட்டு
குட்டையில் கை நனைத்துதறித்
திரும்பிப் பார்த்தேன்
சிறுமியொருத்தி
கற்றையாக எதையோ
பின்னிக் கொண்டிருந்தாள்
ஊர்ந்து கொண்டிருந்த
பேன்கள் எதையோ உறுதி செய்தன
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
பேன் முட்டைகள் பெருகலாயின
வைரக் கனவுகளுடனான
கருவை விட
முட்டையில் வளரும்
முடிக்குத்தான் எத்தனை
வீரியம்...!
_______________________________
18 ஊக்கம்::
வித்தியாசமான கவிதை! அருமை!
ம்ம்.
தூக்கம் போச்.
/மூலை மழுங்கிப்
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தனமயிலிறகுகள்/
ம்ம்ம். பஸ்ல பார்த்த கவிதை கவனம் வருது.
/உயிர்த்த ஞாயிறில்மரித்த பறவைக் கோதில்வானவில்லின் வர்ண ஜாலம்என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது/
ம்ம். எனக்கு புரிஞ்சிடுத்து. ஒற்றை வார்த்தையை இவ்வளவு அழகா சொன்னது.:)
/பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேன் முட்டைகள் பெருகலாயின
வைரக் கனவுகளுடனான கருவை விட
முட்டையில் வளரும் முடிக்குத்தான் எத்தனைவீரியம்...!/
இது ஹோம் வொர்க்..அவ்வ்வ்
//வைரமாகிக் கொண்டிருந்தன பொன் கருக்கள்//
ஆஹா.
/மூலை மழுங்கிப்
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்
குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தன
மயிலிறகுகள்/
இன்னமும் பரணிலிருக்கும் என்னுடைய புத்தகம் ஒன்றில் அந்த மயிலிறகிருக்கலாம்.
//
உயிர்த்த ஞாயிறில்
மரித்த பறவைக் கோதில்
வானவில்லின் வர்ண ஜாலம்
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது
//
ஆஹா...
இந்த வர்ணணை நல்லாருக்கு...
//
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
பேன் முட்டைகள் பெருகலாயின
வைரக் கனவுகளுடனான
கருவை விட
முட்டையில் வளரும்
முடிக்குத்தான் எத்தனை
வீரியம்...!
//
அள்ளி விழுங்கும் காலத்தையும்
காலால் எட்டி உதைக்கும் வைரங்கள்
முட்டையில் வளரும் முடி
இன்று உதிர்த்து நாளை உதிரும்.
Ethir kavuja eluthi naalaachu. Kai arikkuthu
வழக்கம் போல அருமைங்க ப்ரியா
எட்டி நின்று முடியென்று
எதையோ பிடித்திழுத்து
வித்தை காட்டியது
நல்லாயிருக்குங்க
ஒவ்வொரு வார்த்தையும் அழகு ப்ரியா. நிறைய புதிய வார்த்தைகள் கற்றுக் கொள்ள......நன்று.
நன்றாக இருக்குங்க.
நன்றி எஸ்.கே...
நன்றி பாலா சார்...
நன்றி அதுசரி...
நன்றி முகிலன்.. எழுதுங்க...
நன்றி ஞானசேகரன்..
நன்றி பூங்குழலி..
நன்றி நித்திம்மா...
நன்றி சேது..
அருமையான எழுத்து
:-) .
சூப்பர்...!குண்டுகுண்டா என்னமா இருக்கு எழுத்தெல்லாம்...!
ஆனா, எப்பவும் போல என் மர மண்டைக்கு எதுவும் புரியவில்லை.
ஏதாவது உள்குத்து இருக்கா :-) ?
@பார்வையாளன்
நன்றி பார்வையாளன்..
@சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி... என்னதான் புரியலைன்னாலும்... அப்ப அப்ப இப்டி வந்து அக்கறையா சூப்பர் சொல்லிட்டுப் போறீங்க பாருங்க... ஐ லைக் இட்...
உட்குத்து இல்லாத கவுஜையும்... உள்ளீடு இல்லாத கொழுக்கட்டையும்.. வேஸ்ட்டு... தத்துபித்துவம்ஸ்..
//மூலை மழுங்கிப்
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்//
//வெள்ளியன்று வெளிவந்த//
//ஆட்காட்டி விரலில் அமிலம் தொட்டுத் தடவ ஆரம்பித்தேன்//
வார்த்தைகளின் கோர்வை ரசிக்க வைக்கிறது..
Post a Comment