header photo

Tuesday, February 14, 2012

எல்லைக்கு அப்பால்

மண்ணினுள் சுழியோடுவதொன்றும்
பெரிய வித்தையல்ல 

இதைச் சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை

கடவுளரை 
உங்களின் பால் எடை மற்றும் உயரத்தை வைத்து
அளவிடுவது போல் 

தண்ணீரை வைத்துக்கொண்டு
கண்களால் மண்ணைக் குடைகிறீர்கள் 


அவசரப்பட்டு உங்களை - நான்
குற்றம் சாட்டுவதாக எண்ணிக் கொள்கிறீர்கள்

இதைக் கூட என் முன் தீர்மானமாகவே
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் 

நான் மீனுருவில் இருப்பதை
நீங்கள் நன்றாகவே அறிந்திருந்தாலும் 

மண்ணின் அனுபவத்தை வைத்து
தண்ணீரைத் துழாவிக் கொண்டிருக்கிறாய்
என்று விரலை என் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

5 ஊக்கம்::

vasu balaji said...

செம செம:@D
/கடவுளரை உங்களின் பால் எடை மற்றும் உயரத்தை வைத்துஅளவிடுவது போல் தண்ணீரை வைத்துக்கொண்டுகண்களால் மண்ணைக் குடைகிறீர்கள் /

/நான் மீனுருவில் இருப்பதைநீங்கள் நன்றாகவே அறிந்திருந்தாலும் மண்ணின் அனுபவத்தை வைத்துதண்ணீரைத் துழாவிக் கொண்டிருக்கிறாய்என்று விரலை என் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்/

ரொம்ப பிடிச்சது

'பரிவை' சே.குமார் said...

//தண்ணீரை வைத்துக்கொண்டு
கண்களால் மண்ணைக் குடைகிறீர்கள் //

வரிகள் அனைத்தும் அருமை.

வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

super... vaalththukkal

ஓலை said...

Arumainga.

விச்சு said...

கடவுளை நாமாகத்தான் கற்பிதம் கொள்கிறோம். அருமை.