அட ஒண்ணுமில்ல.. ஆடி மாசம் பத்தித்தான்.. நீங்க வேற!
ஆடித் தள்ளுபடி அப்படிங்கிற ஒரு விடயம் இருக்கிறது தெரியும், அது என்னவென்று எனக்குத் தெரிய வாய்ப்புக் கிடைத்தது இந்த வருடம்தான்.
ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு சென்ற பொழுது ஐந்து வாரங்கள் வைத்தியசாலை வளாகத்திலேயே கரைந்து போனது. மீதி இரண்டு வாரங்கள், தினமும் இரு தடவை ஓடி ஓடித் தியானம் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் கல்கி ஐயா போன்றவர்கள் எழுத்திலும், என் எண்ண ஓட்டத்திலும் பார்த்த பல இடங்களைச் சந்தர்ப்பம் கிடைத்தும் சென்று பார்க்கத் தவறி விட்டேனே என்ற ஆதங்கம் அரித்துக் கொண்டே இருந்தது.
அதனால் இம்முறை விடுமுறையை முறையாகச் செலவிடுதல் வேண்டும் என்று நினைத்தாலும் எதையும் திட்டமிட முடியவில்லை. கோலம் போட்டாலும் கோல மாவுடன் கோலமிடும் இடத்தில் உட்கார்ந்ததன் பிற்பாடு சிந்திக்காமலேயே கோலமிடுவதுதான் என்னுடைய வழக்கம். திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாலோ, அல்லது திட்டமிடாது செயல்படுவதில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாலோ தெரியவில்லை, இரண்டாவது வழியே வசதியாக இருக்கிறது.
இவ்வாறு திட்டமிடாது சென்று பார்த்து, பிரமித்து, வியந்து, ரசித்த இடங்கள் தவிர, ஒழுங்காகத் திட்டமிடாததால் பாதி நாள் புகையிரதத்திலேயே கழிந்து விட்டது. சென்னையில் செலவிடக் கிடைத்தது ஓரிரு நாட்களே.
இவ்வாறு இரு தடவை நெடிய விடுமுறையில் வந்து ரங்கநாதன் தெரு பார்க்கவில்லை என்று சொன்னால், சின்னக் குழந்தை கூடக் கையும் காலும் அடித்துக் கொண்டு சிரிக்கும் என்று நக்கலடித்த நண்பரின் வார்த்தையில் சுரணை வந்து, அதையும் பார்க்கலாம் என்று அவரின் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.
எந்தக் கடை என ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டு, அதையும் திட்டமிடாமலே இங்கே, இங்கே என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு கடையாக சன அலைகளின் உதவியுடன் மிகவும் நிதானமாக நீந்த ஆரம்பித்தோம். நண்பரின் மகள் நான் அச் சமுத்திரத்தில் தொலைந்து போய் விடக் கூடாது என என் கையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். அத்திரளில் மிகவும், இயல்பாகவும், லாவகமாகவும் உரசக் கற்றுக் கொண்டவர்களின் முயற்சியைக் கண்ணாலேயே துப்பி முறியடித்து, அன்னை போன்று இந்தப்பக்கம் வந்துடு, அந்தப் பக்கம் வந்துடு என்று என்னை அழைத்துச் சென்றதை அவளறியாமலேயே ரசித்துச் சிரித்தேன்.
நாம் எந்தத் தளத்திற்குப் போவது என்பதையும் கூட்டமே முடிவு செய்தது. வேண்டாம் வீட்டுக்குப் போய் விடலாம் என்பதையும் அதுவே முடிவு செய்தது. மிகவும் மும்முரமாக அக்கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு நீச்சலடித்துச் சென்று கொண்டிருந்த நண்பரும், அவரின் அடிச்சுவட்டை அச்சுப் பிசகாது பிடித்து நீந்திச் சென்ற அவர் மனைவியும் எங்களை விடப் பத்து அடிகள் முன்னாலிருந்தார்கள். நாம் பல அடிகள் பின் தங்கி விட்டோம் என்பதைத் திடீரென்று உணர்ந்தவர்களாக, பக்கத்திலிருந்த கண்ணாடி மேசையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பத்து அடியை நாம் அடைவதற்குப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அவர்களை அடைந்து, அப்பாடா என்று மூச்சு வாங்கி, நண்பரின் மகள் காதருகில் குனிந்து, இதைத்தான் "ஆடித்தள்ளுபடி" என்று சொல்லுறாங்களா? என்று கேட்டேன்.
____________________________________________________________________
ஆடித் தள்ளுபடி அப்படிங்கிற ஒரு விடயம் இருக்கிறது தெரியும், அது என்னவென்று எனக்குத் தெரிய வாய்ப்புக் கிடைத்தது இந்த வருடம்தான்.
ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு சென்ற பொழுது ஐந்து வாரங்கள் வைத்தியசாலை வளாகத்திலேயே கரைந்து போனது. மீதி இரண்டு வாரங்கள், தினமும் இரு தடவை ஓடி ஓடித் தியானம் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் கல்கி ஐயா போன்றவர்கள் எழுத்திலும், என் எண்ண ஓட்டத்திலும் பார்த்த பல இடங்களைச் சந்தர்ப்பம் கிடைத்தும் சென்று பார்க்கத் தவறி விட்டேனே என்ற ஆதங்கம் அரித்துக் கொண்டே இருந்தது.
அதனால் இம்முறை விடுமுறையை முறையாகச் செலவிடுதல் வேண்டும் என்று நினைத்தாலும் எதையும் திட்டமிட முடியவில்லை. கோலம் போட்டாலும் கோல மாவுடன் கோலமிடும் இடத்தில் உட்கார்ந்ததன் பிற்பாடு சிந்திக்காமலேயே கோலமிடுவதுதான் என்னுடைய வழக்கம். திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாலோ, அல்லது திட்டமிடாது செயல்படுவதில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாலோ தெரியவில்லை, இரண்டாவது வழியே வசதியாக இருக்கிறது.
இவ்வாறு திட்டமிடாது சென்று பார்த்து, பிரமித்து, வியந்து, ரசித்த இடங்கள் தவிர, ஒழுங்காகத் திட்டமிடாததால் பாதி நாள் புகையிரதத்திலேயே கழிந்து விட்டது. சென்னையில் செலவிடக் கிடைத்தது ஓரிரு நாட்களே.
இவ்வாறு இரு தடவை நெடிய விடுமுறையில் வந்து ரங்கநாதன் தெரு பார்க்கவில்லை என்று சொன்னால், சின்னக் குழந்தை கூடக் கையும் காலும் அடித்துக் கொண்டு சிரிக்கும் என்று நக்கலடித்த நண்பரின் வார்த்தையில் சுரணை வந்து, அதையும் பார்க்கலாம் என்று அவரின் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.
எந்தக் கடை என ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டு, அதையும் திட்டமிடாமலே இங்கே, இங்கே என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு கடையாக சன அலைகளின் உதவியுடன் மிகவும் நிதானமாக நீந்த ஆரம்பித்தோம். நண்பரின் மகள் நான் அச் சமுத்திரத்தில் தொலைந்து போய் விடக் கூடாது என என் கையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். அத்திரளில் மிகவும், இயல்பாகவும், லாவகமாகவும் உரசக் கற்றுக் கொண்டவர்களின் முயற்சியைக் கண்ணாலேயே துப்பி முறியடித்து, அன்னை போன்று இந்தப்பக்கம் வந்துடு, அந்தப் பக்கம் வந்துடு என்று என்னை அழைத்துச் சென்றதை அவளறியாமலேயே ரசித்துச் சிரித்தேன்.
நாம் எந்தத் தளத்திற்குப் போவது என்பதையும் கூட்டமே முடிவு செய்தது. வேண்டாம் வீட்டுக்குப் போய் விடலாம் என்பதையும் அதுவே முடிவு செய்தது. மிகவும் மும்முரமாக அக்கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு நீச்சலடித்துச் சென்று கொண்டிருந்த நண்பரும், அவரின் அடிச்சுவட்டை அச்சுப் பிசகாது பிடித்து நீந்திச் சென்ற அவர் மனைவியும் எங்களை விடப் பத்து அடிகள் முன்னாலிருந்தார்கள். நாம் பல அடிகள் பின் தங்கி விட்டோம் என்பதைத் திடீரென்று உணர்ந்தவர்களாக, பக்கத்திலிருந்த கண்ணாடி மேசையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பத்து அடியை நாம் அடைவதற்குப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அவர்களை அடைந்து, அப்பாடா என்று மூச்சு வாங்கி, நண்பரின் மகள் காதருகில் குனிந்து, இதைத்தான் "ஆடித்தள்ளுபடி" என்று சொல்லுறாங்களா? என்று கேட்டேன்.
____________________________________________________________________