header photo

Wednesday, July 29, 2009

இது ஜோதிக்கு..

ஏவ்வ்வ்வ்வ்வ்.. ஒண்ணுமில்ல விருந்து முடிஞ்சுது.. ஏப்பம் விட்டேன்.. அம்புட்டுதேன்..! விடிய காலைல எங்கூட்டை நோக்கி பறக்கோணும்.. எஞ்சோலிய பார்க்க முன்ன இந்த சோதிக்கு ஒரு பெரிய நன்றிக் கடன் பட்டிருக்கிறனுங்க. அந்தக் கடன் சன்மத்துக்கு தீர்க்க முடியாதுன்னு தெரியுமுங்க. ஆனாலும் நன்றியாவது சொல்லணுமா இல்லீங்களா.  

அதாவது வந்துங்க.. இந்த சுத்துப் பட்டிக் கிராமத்தில இருக்கிற.. சமீந்தாருங்க, பண்ணையாருங்க, நாட்டாமைங்க மத்த பெரிய பெரிய ஆளுங்க மத்தில நம்மள ஒரு மனுசியா நினைச்சு வந்து.. நாம வெத்தில மென்னு துப்பினாப்போல எதையோ.. மனசில தோணுறத.. குல தெய்வம் கிட்ட சொல்லுற மாதிரி இங்கன போட்டு வச்சாக்க.. அத படிச்சு.. அதுக்கு பின்னூட்டம் போடுறதே பெரிய விஷயம்.. அதில ஓட்டு எல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்.. இதில விருது வேற கொடுக்கிறதுன்னா.. சத்யமா ரொம்ப ரொம்ப ரொம்பப் பெரிய மனசு வேணுமுங்க..  

இந்தச் சோதிய விட்டாக்க இந்த விருத வேற யாராவது எனக்குக் கொடுத்திருப்பாங்களான்னு தோணலீங்க.. நம்மள அப்ப அப்ப இப்டி கை தூக்கி விடுறதுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. வேற வழி இல்ல.. எல்லாரும் சொல்றாப்போலதான் சொல்லி ஆவோணும்.. .. நன்றி.. நன்றி.. நன்றி...! 

:-( <-- span="">
_________________________________________________________________________

9 ஊக்கம்::

vasu balaji said...

வாங்க கலகலப்ரியா. நலமா?

கலகலப்ரியா said...

வாங்க ஐயா.. நலம்.. நன்றி..!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

கலகலப்ரியா said...

வாங்க ஜமால்.. நன்றி!

jothi said...

வாழ்த்துக்கள் கலகலப்பிரியா.

//அந்தக் கடன் சன்மத்துக்கு தீர்க்க முடியாதுன்னு தெரியுமுங்க.//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல,..

இருங்க அடுத்த ஜென்மத்துக்கும் எங்கிட்ட கடன்பட போறிங்க,..

jothi said...

//வேற வழி இல்ல.. எல்லாரும் சொல்றாப்போலதான் சொல்லி ஆவோணும்.. .. நன்றி.. நன்றி.. நன்றி...!

:-( <--(இது பீலிங்ஸு)//

இது அப்படி தெர்லயே, ஏதோ கோயம்புத்தூர் லொள்ளு மாதிரில தெரியுது??

கலகலப்ரியா said...

//jothi said...
இருங்க அடுத்த ஜென்மத்துக்கும் எங்கிட்ட கடன்பட போறிங்க,..//

ஏன் அடுத்த வருடமும் விருது கொடுக்கிறதுன்னு இப்பவே முடிவெடுத்துட்டீங்களா என்ன.. :-?.. இதுவே ஏழு சன்மத்துக்கு போறும்டா சாமி..

கலகலப்ரியா said...

//
இது அப்படி தெர்லயே, ஏதோ கோயம்புத்தூர் லொள்ளு மாதிரில தெரியுது??//

அட நெசம்மாவே பீல் பண்ணதுதானுங்க... என்னமோ நம்ம பரமவிசிறி-னு எல்லாம் பேருக்கு சொல்லிக்கிட்டு.. விருது பத்தி மூச்சே விடாம.. பெரிய பெரிய பதிவருங்களா பார்த்து விருது கொடுக்கிறாங்க.. நீங்க விருது கொடுத்ததுக்கப்புறம்தான் இப்டி ஒண்ணு உலவிக்கிட்டிருக்குங்கிற விஷயமே தெரிய வந்திச்சி.. சிலது குழந்தைப் புள்ள தனமா தோணினாலும்.. ஒரு அங்கீகாரம் கிடைக்குதுங்கிற சந்தோஷம் வர்றது இயல்புதானுங்களே.. btw நான் பேசின பாஷை கோயம்பத்தூரு பாஷைங்களா? தகவலுக்கு நன்றி.. ஹிஹிஹி...

jothi said...

//ஏன் அடுத்த வருடமும் விருது கொடுக்கிறதுன்னு இப்பவே முடிவெடுத்துட்டீங்களா என்ன.. :-?.. இதுவே ஏழு சன்மத்துக்கு போறும்டா சாமி..//

அந்த பயம் இருக்கட்டும்,.. அது