header photo

Sunday, August 2, 2009

நீயா நானா போட்டியில்.. பூகம்பமும் பனிமலையும்..

நெருப்புக் குழம்பு..
பொங்கி விடாது..
நெருப்பை விழுங்கி..
அடக்கும் பொருட்டு..
எரிமலையை..
கிளப்பி விட்டேன்..
சீறும் குழம்பில்..
அங்கொன்றும்..
இங்கொன்றுமாய்..
விழுந்த மண்ணால்..
சீறிய பொறியில்..
சிக்கிய என்னை..
எட்ட நின்று..
எள்ளி நகைத்தது..
அக்கினிக் குழம்பின்..
சுவாலை ஒன்று..
அக்கினிக் கடலை..
அகத்தே வைத்து..
புறத்தே தெறிக்கும்..
பூஞ்சுவாலையில்..
பொறி கலங்கிய..
பேதை நீயென..
என்ன செய்ய..
அகத்தை மறந்து..
புறத்தில் மயங்கி..
இறந்தே கிடக்கும்..
இந்தப் பேதை..
எழுவதெப்போ..
உயிர்ப்பதெப்போ..
கோள விழிச் சமுத்திரமே..
பனிமலை போல்..
உறையிறப்போ..
நானெப்போ..
விழிக்கப்போ..
பலமாய் சிரிக்காத..
நாசமா போன பொறி..
கண் மேல பட்டிச்சோ..
அக்கினிக் குழம்பெல்லாம்..
இமைப் பொழுதில்..
அணைந்து விடும்..
அதனாலதான் சொல்றேன்..
நான் கொஞ்சம்..
தூங்கறப்போ..
நீ சற்று ஓரம்போ..
சுற்றம் சூழல்..
பாதுகாப்பில்..
எனக்குத்தான்..
முதலிடம்.. போ..!

________________________________

42 ஊக்கம்::

நட்புடன் ஜமால் said...

அகத்தை மறந்து..
புறத்தில் மயங்கி..
இறந்தே கிடக்கும்..
இந்தப் பேதை..
எழுவதெப்போ..
உயிர்ப்பதெப்போ..]]

அருமை.

vasu balaji said...

சிங்கம் களமிறங்கிரிச்சேஏஏய்!

vasu balaji said...

கவிதையின் வீச்சை ஒரே மூச்சில் படிக்கையில் மூச்சு முட்டுகிறது. வார்த்தைகளின் தாக்கம் கருத்தையும் அமைப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாக உணர்கிறேன். பாராட்டுக்கள்.

vasu balaji said...

/அக்கினிக் கடலை..
அகத்தே வைத்து..
புறத்தே தெறிக்கும்..
பூஞ்சுவாலையில்..
பொறி கலங்கிய..
பேதை நீயென../

ம்ம். ஆஹா.

vasu balaji said...

வலி சொல்லும் போதே வலிமை காட்டும் இக்கவிதையை மொக்கை எனவும் வகைப் படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கலகலப்ரியா said...

நன்றி ஜமால்..

நன்றி பாலா ஐயா..

அன்புடன் அருணா said...

அடடா...வாங்க...வாங்க!

jothi said...

சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க,.. எனக்கு ஒன்னும் புரியல. உங்கள் நடையில் செறிந்த தமிழின் தாக்கம் உச்சகட்டம்.எனக்கு அந்த அளவிற்கு தமிழறிவு இல்லாதது ஒரு காரணமாய் இருக்கலாம். நான் தமிழ்வழியில் படித்தவன் தான் .உண்மையிலேயே என்னால் முடியவில்லை. எனக்கு பொழிப்புரை தேவைப்படும் போல. (என் கடந்த பதிவை படித்து இருப்பதால் என் மொழியின் தரத்தை வைத்து என் தரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்). மூன்று முறை படித்தேன் கொஞ்சம் புரிகிறமாதிரி இருக்கிறது.

தப்பாய் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த மனம் திறந்த பின்னூட்டம்.

கலகலப்ரியா said...

//அன்புடன் அருணா said... //

அடடா வாங்க.. வாங்க.. நான்தான் சொல்லணும்.. =).. நன்றி

கலகலப்ரியா said...

//jothi said...
தப்பாய் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த மனம் திறந்த பின்னூட்டம்//

என்ன இது.. இதில தப்பா எடுத்துக் கொள்ள என்ன இருக்கு? புரியாத தமிழ் நான் பயன்படுத்தல.. நாலு நாலு வரியா பிரிச்சி படிச்சு பாருங்கோ.. ஆனாலும் இது நானா இருந்தாதான் புரியும்.. தமிழ்ல என்ன புரியலன்னு கேளுங்கோ நான் சொல்றேன்.. =).. என்ன வேணா பயப்படாம கேளுங்கோ.. :)

கலகலப்ரியா said...

(இதையும் படிச்சிட்டு சொல்லுங்கோ.. ஜோதி.. என்ன புரியலன்னு.. )

நெருப்புக் குழம்பு..
பொங்கி விடாது..
நெருப்பை விழுங்கி..
அடக்கும் பொருட்டு..
எரிமலையை..
கிளப்பி விட்டேன்..

சீறும் குழம்பில்..
அங்கொன்றும்..
இங்கொன்றுமாய்..
விழுந்த மண்ணால்..
சீறிய பொறியில்..
சிக்கிய என்னை..
எட்ட நின்று..
எள்ளி நகைத்தது..
அக்கினிக் குழம்பின்..
சுவாலை ஒன்று..
அக்கினிக் கடலை..
அகத்தே வைத்து..
புறத்தே தெறிக்கும்..
பூஞ்சுவாலையில்..
பொறி கலங்கிய..
பேதை நீயென..

என்ன செய்ய..
அகத்தை மறந்து..
புறத்தில் மயங்கி..
இறந்தே கிடக்கும்..
இந்தப் பேதை..
எழுவதெப்போ..
உயிர்ப்பதெப்போ..

கோள விழிச் சமுத்திரமே..
பனிமலை போல்..
உறையிறப்போ..
நானெப்போ..
விழிக்கப்போ..

பலமாய் சிரிக்காத..
நாசமா போன பொறி..
கண் மேல பட்டிச்சோ..
அக்கினிக் குழம்பெல்லாம்..
இமைப் பொழுதில்..
அணைந்து விடும்..

அதனாலதான் சொல்றேன்..
நான் கொஞ்சம்..
தூங்கறப்போ..
நீ சற்று ஓரம்போ..

சுற்றம் சூழல்..
பாதுகாப்பில்..
எனக்குத்தான்..
முதலிடம்.. போ..!

vasu balaji said...

/அதனாலதான் சொல்றேன்..
நான் கொஞ்சம்..
தூங்கறப்போ..
நீ சற்று ஓரம்போ../

நானும் குறைந்தது 15 தடவைக்கு மேல் படித்திருப்பேன். உணர்ச்சிகள் கலைடாஸ்கோப் போல புது புதுப் பரிமாணம் காட்டுகிறது. குறிப்பாய் இந்த வரிகள். இயலாமையாய், கோபமாய், கெஞ்சலாய் படிக்கையில் அந்த உணர்ச்சியின் தாக்கம் அனுபவித்தேன். படிக்கிறவர் மனதில் தாக்கம் ஏற்படுத்துவது கவிதை. இப்படி உணர்வைத்தூண்டி விதம் விதமாய் உணரச்செய்வது .. வார்த்தைகளில்லை. மீண்டும் மீண்டும் பிரமிப்புடன். பாராட்டுக்கள்.

vasu balaji said...

ஏனுங். எனக்கு தெரியும் தானுங்களே. முடிஞ்சப்போ இப்படி பொட்டி தட்டி போடுங்கோ. முடியாதப்போ பழசெல்லாம் இருக்கே அத தூசி தட்டி போடுங்களேன். கொஞசம் சுவாசம் புடிக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை தோழி

கலகலப்ரியா said...

//பாராட்டுக்கள்.//
//தூசி தட்டி போடுங்களேன்//

இருங்கையா இருங்க.. கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க.. இப்போ என்னாச்சுன்னு இப்டி.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. பாராட்டுக்கு நன்றி.. ஆனா ஓவரா பாராட்டி பயமுறுத்தாதீங்கையா..

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

அருமை தோழி//

நன்றி ஞானசேகரன்.. :)

Maheswaran Nallasamy said...

அது ஒன்னும் இல்ல ஜோதி... அவங்க இப்போ தமிழ் இலக்கியம் படிக்கிறாங்கோ .. அதான் அப்படி.. நான் உங்களுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் நான் தரேன். :)

பி.கு :ஹி ஹி ஹி... ஆமா பாலா சொன்ன மாதிரி பழசு எல்லாம் போடுங்கோ..

Maheswaran Nallasamy said...

பாலா... said...
சிங்கம் களமிறங்கிரிச்சேஏஏய்!



அவ்வ்வ்வ்வ் ....

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said... //

ஆஹா.. ஆமாங்கோ.. நான் எழுதுறதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கத்தான் இவங்கள நியமிச்சிருக்கேன்...

(ஜோதி.. நீங்களாவது பரவால்ல.. மூன்று வாட்டி படிச்சி கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க.. இவங்க பத்து வாட்டி படிச்சும் ஒண்ணும் புரியலன்னு என் கிட்ட சொன்னாங்க.. )

அது என்னங்கையா பழசு பழசுன்னு.. ஆறின கஞ்சி.. ஆள விடுங்க சாமிங்களா..

vasu balaji said...

/அது என்னங்கையா பழசு பழசுன்னு.. ஆறின கஞ்சி.. ஆள விடுங்க சாமிங்களா../


அது பழங்கஞ்சின்னா உங்களுக்கென்னாங்க. நாம சுட வெச்சுக்குவோம். போடுங்கப்பு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல.. ய்யேஏன் நல்லாதானே போய்க்கிட்டிருக்கு..?? ஆ..?!

துபாய் ராஜா said...

அந்த 'ஜிமிக்கி' காது அழகாயிருக்கு. :))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said... //

:o.. காது போடாதீங்கோ.. ச்சே.. கண்ணு போடாதீங்கோ.. (வந்ததுதான் வந்தீங்க.. வந்து பதிவு பத்தி ஒரு வார்த்த கூட சொல்லாம ஜிமிக்கி பத்தி சொல்லிட்டு போறது நல்லா இல்ல சொல்லிட்டேன்.. )

Maheswaran Nallasamy said...

துபாய் ராஜா பதிவு பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை-ன்னு நினைச்சு இருப்பார்.. அவர ஏன் இப்படி கட்டாய படுத்துறீங்க..


"நானும் குறைந்தது 15 தடவைக்கு மேல் படித்திருப்பேன். உணர்ச்சிகள் கலைடாஸ்கோப் போல புது புதுப் பரிமாணம் காட்டுகிறது" - பாலா

நானாவது பத்து தடவை படிச்சு புரியலைன்னு சொன்னதாக இருக்கட்டும். மேல பாருங்க பாலா பதினஞ்சு தடவை படிச்சு பதினஞ்சு அர்த்தம் புரிஞ்சு வச்சு இருக்கார்.. போதும் இதோட நிறுத்திகுவோம்.. முடியல.. அழுதிருவேன்... அவ்வ்வ்வ்வ் ....

(ரொம்ப நாள் ஆச்சுங்கோ கலாய்ச்சு...)

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...
அவர ஏன் இப்படி கட்டாய படுத்துறீங்க..//
அவங்கள மாதிரி அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க கிட்ட இருந்து நாலு வார்த்த நல்லதோ கெட்டதோ கேட்டாதான நாம முன்னுக்கு வரலாம்.... நீங்க கூடத்தான் ஒண்ணும் சொல்லல.. நாம ஏதாவது கேட்டோமா.. அதுதான் முடியாதுன்னு தெரியும்ல..

//(ரொம்ப நாள் ஆச்சுங்கோ கலாய்ச்சு...)//
அது வேறயா..

//பதினஞ்சு அர்த்தம் புரிஞ்சு வச்சு இருக்கார்..//
நீங்க வேற.. பதினைஞ்சு அர்த்தம் "புரியாம" வச்சிருக்கார்..

//முடியல.. அழுதிருவேன்...//
அதுவும் ரொம்ப நாள் ஆயிருக்குமே.. அழுதுடுங்கோ.. இடுகை போட்டே அழலாமே.. இல்லைன்னா அழுதுகொண்டே இடுகை கூட போடலாம்.. உங்க வசதி..

vasu balaji said...

/மேல பாருங்க பாலா பதினஞ்சு தடவை படிச்சு பதினஞ்சு அர்த்தம் புரிஞ்சு வச்சு இருக்கார்.. /

ஆகா. கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கைய்யா. ஏங்க மஹேஸ். ஒரு குழந்தைக்கு 15 விதமா அழகு பண்ணி பார்த்தா குழந்தையா மாறும். அதோட அழகுதான் வேறமாதிரி. நம்மகிட்டயேவா?

கலகலப்ரியா said...

ஹும் பாவம் "குழந்தை"

jothi said...

என்ன உங்கள் பின்னூட்டங்களில் வெப்ப நிலை மிக அதிகமாக இருக்கிறது?? என் அறிவு அவ்வளவுதான் என என்னை மாதிரி ஒதுங்கிகொள்ளாமல் எதற்கு இந்த தேவையில்லாதவை,??????

அருஞ்சொற்பொருள் விளக்கம் நான் தரேன். :) //

எங்க, உங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி தெளிவாக தாங்க பார்ப்போம்,.. உங்களுக்கு எந்த அளவிற்கு புரிந்தது என்பதை நானும் பார்த்து தெரிந்து கொள்கிறேன்,.

கலகலப்ரியா said...

//jothi said... //

ஓஒ.. நான் என்னைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்.. அவங்க பின்னூட்டத்திலையும் வெப்பநிலை இல்ல.. புரியாத நிலைதான்.. ஹிஹி..

விளக்கம்தானே.. விளக்குவாங்க விளக்குவாங்க.. சாதாரணமாவே பதில் சொல்ல முடியலன்னா ஆள் அந்தர்த் தியானம் ஆய்டுவாங்க.. நீங்க வேற.. இனிமே ஒரு வருஷத்துக்கு இந்தப்பக்கம் தலை வச்சி படுக்க மாட்டாங்க..

jothi said...

//அவங்க இப்போ தமிழ் இலக்கியம் படிக்கிறாங்கோ .. //

அவுங்க படிக்கிறாங்களா இல்லையா என எனக்கு சத்தியமாய் தெரியாது,.. ஆனால் தமிழ் இலக்கியம் என்ன உமக்கு சாதாரணமாய் போய்விட்டதா?? அந்த காலத்திலேயே (2000 ஆயிரம் வருடம் என்பது சாதாரணமானது இல்லை,அதற்கு எத்தனை கோடி வினாடிகள் தேவை????) அற்புதமான எல்லைகளுக்குட்பட்ட விதிகளை பயன்படுத்தி அணி இலக்கியம் படைத்திருப்பார் திருவள்ளுவர் கவனித்திருக்கிறா?? இந்த விதிகளுக்கும் முறைப்படுத்தி வடிமகைக்கப்பட்ட "objective oriented programming" கான்செப்டிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக என தெரியவில்லை. என்ன oopsஐ பிஸினஸாக மாற்றும் கலை வெள்ளைகாரனிற்கு தெரிந்திருக்கிறது, நம் திருவள்ளுவர்களுக்கு தெரியவில்லை?. ஒரு திருக்குறளை அணி இலக்கியத்தை பயன்படுத்தி பிரித்து பின் இங்கே தமிழ் இலக்கியத்தை பற்றி நக்கலடியும் நண்பரே.

கலகலப்ரியா said...

ஐயய்யோ ஜோதி.. =)).. மகேஸ் ஒரு தமிழ்ப் பைத்தியம்.. நீங்க தமிழுக்காக இப்டி வாதாடுறது பார்த்தா நீங்க அவங்கள சொல்றீங்கன்னு இல்லாம சந்தோஷப்படுவாங்க.. தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க.. அவங்க என்னோட கால வாரிண்டிருக்காங்க அவ்ளோதான்.. என்னுடைய நெடு நாள் நண்பர்.. நல்ல உள்ளம்..

கலகலப்ரியா said...

சரியா சொல்லுங்க.. உங்களோட அந்தப் பின்னூட்டத்த கடைங்கிறீங்களா?? அத எடுத்துடுறேன்.. =))

jothi said...

மன்னிக்க,.. நெருப்புக் குழம்பில், கொழம்பாகி, ரசமாகி, தயிராகி மாற்றி எழுதிவிட்டேன். உங்க ஆம்ப்ளேட்டுக்கு நான் தான் ஆனியனா?

jothi said...

//கடைங்கிறீங்களா?? அத எடுத்துடுறேன்.. =))//

நான் எதேச்சையாக எழுதியது,.. நீங்கள் தவறு என நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் நீக்கலாம் ப்ரியா, தவறில்லை

கலகலப்ரியா said...

ச்சே ச்சே.. அது அப்படியே இருக்கட்டும்.. யாரும் எதுவும் தவறா எடுத்துக்க மாட்டாங்க..

vasu balaji said...

கலகலாதான் ரௌத்திரம் பழகுதுன்னு பார்த்தா தொண்டர்கள் கூடவா? ஆஹா. தெரிஞ்சோ தெரியாமலோ தமிழுக்கு என்னா சப்போர்ட்டு. ஜோதி. நீங்க சொன்னது ரைட்டு. தெரியலன்னா தெரியல்லன்னு இருக்க மாட்டாம நான் அடிக்கடி மாட்டிக்குவேன். இப்போதான் ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி படிச்சிட்டு பம்மி பம்மி பின்னூட்டம் போடுவன். அங்க மகேசோட பக்கத்துல திருவள்ளுவருக்கு வக்காலத்து வாங்குறாரு. இங்க நீங்க திருவள்ளுவர கொண்டாடுறீங்க. உங்க ரெண்டு பேருக்கும் தமிழ்மேலயும் தமிழ்க் கிழவன் மேலயும் எவ்வளவு பற்று. கவியரங்கம் பட்டி மன்றம்னு களை கட்டி கலகலன்னு பேருக்கேத்தா மாதிரி இருக்கு.

கலகலப்ரியா said...

ஐயா பாலா சார்.. வாங்க.. நீங்கதான் வானம்பாடிங்கிறது புரியறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் புடிச்சது.. ஜோதியே குழம்பி போய் இருக்காங்க.. நீங்க வேற குழப்பாதீங்க..

vasu balaji said...

இதென்னாங்க அனியாயம்? பாலாவா ஆரம்பிச்சி பாமரனா மாறி இப்போ வானம்பாடியா பறக்குறேன். ஒரே இடுகைல பின்னூட்டத்தில மூணுஅவதாரம். நானே குழம்பி போய் இருக்கேன் நான் யாருன்னு தெரியாம. நான் யாரை போய் குழப்புறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

கலகலப்ரியா said...

ம்ம்ம்ம்ம்.. வானம் இருக்கும்.. பாடுறதுக்கு வாய் இருக்காது.. கொன்னுப்டுவேன்.. ஓடிப் போயிருங்க..

vasu balaji said...

கவிஞரே! வானம்பாடி பறக்குமல்லவா? ஓடச்சொல்லுவது பொருட்குற்றாமாகாதா?

கலகலப்ரியா said...

அது பாடினாதான் பறக்கும் கடிஞரே.. இல்லைனா இப்டித்தான்.. இப்டியே பறந்துட்டிருந்தா பாடிப் பறந்த கிளி.. பாதை மறந்ததடி-னு... வானத்திலேயே அலைய வேண்டி வரும் சொல்லிட்டேன்..

கலகலப்ரியா said...

:-ss.. :D