header photo

Friday, September 18, 2009

கடைசி வரை யாரோ...?

வேற ஒண்ணுமில்லீங்க.. இந்த ப்ளாக் படுத்தும் பாடு தொடருதுங்கோவ்...

இடுகைக்கு டைட்டில் வைக்கிறதில நாமதான் கில்லாடின்னு இருந்தா.. கில்லாடிக்கு கில்லாடி நாட்டில உண்டுன்னு.. கன்னத்தில சப்புன்னு அறைஞ்சு சொன்னாதான் நம்ம மரமண்டைக்கு உறைக்குதுங்க.

அன்னிக்கு இப்டித்தான் பாருங்க...


'கொஞ்சம் சீரியஸ்' அப்டின்னு போஸ்ட் டைட்டில் போட்டு, தமிழ்மணம்-ல கோர்த்து விட்டு.. அப்டேட் பண்ணிட்டாய்ங்களான்னு பார்க்கலாம்னு போனா, 'நீ செத்துப் போவாய்'ன்னு யாரோ புண்ணியவான்/வாள் போட்ட இடுகையோட டைட்டில்ல தூக்கி வாரிப் போட்டுடிச்சுங்க. (அவசரப்பட்டு 'கூக்ள' வேண்டாம்.. எல்லாத்தையும் நம்பிடுறதா மக்கா..)

அதிர்ச்சில உறைஞ்சு போயீ.. நிஜம்மாவே போய்டுவேன் போலயேன்னு, என்னையே ஒரு உலுக்கு உலுக்கிக்கிட்டு ஓடிப் போய்.. 'Tom & Jerry' ல வர்ற Tom Cat மாதிரி கண்ணாடி முன்னாடி நின்னு நாக்கு, மூக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு அப்பாடான்னு வந்து நம்ம, ப்ளாக் பக்கத்த பார்த்தா.. வானம்பாடிகள் ஐயா.. இடுகை 'தொலைந்து போனவர்கள்'ன்னு இருக்குதுங்க.

எனக்கு ஒரு நிமிஷம் .. நாம இப்போ பூலோகத்ல இருக்"கோமா"? இல்ல நர/மேல் லோகத்ல இருக்"கோமா"?ன்னு புரியாம 'கோமா' லெவலுக்கு போயிட்டேனுங்க. ஆட்டோமட்டிக்கா மேல் லோகத்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, நாம இல்லைன்னா உடனேயே குஷியாகி 'தொலைஞ்சா'ன்னு ப்ளாக் போடறாங்கடா ங்கொக்கமக்கான்னு கோபம் கோபமா வருதுங்க.

இதில வேற அகதா கிறிஸ்டிய படிச்சிட்டிருக்கிறாப்ல நான் செத்ததுக்கு யாரு காரணம்னு டிடெக்டிவ் ரூட் ஒரு மூலைல ஓடிக்கிட்டிருக்கு. அந்த 'நீ செத்துப் போவாய்'தான் காரணமோ? அது என்னதான்னு பார்த்துடலாமான்னு பார்த்தா.. மேல போய்ட்டோம்ங்கிற நினைப்ப மீறி பயம்மா இருக்குதுங்க.

உள்ள போய் படிச்சா.. நீ இந்த இடுகைய இருநூறு பேருக்கு அனுப்பு.. இல்லைன்னா செத்துப் போவாய்ன்னு சொல்லுவாய்ங்களோன்னு வலது பக்க மூளை சம்மந்தமே இல்லாம லாஜிக் தேடுதுங்க. பொத்துடி உனக்கும் லாஜிக்குக்கும் என்ன சம்மந்தம்னு இடது பக்க மூளை, வலது பக்க மூளைய பக்கம் பக்கமா திட்டுதுங்க. நான் மூளையே இல்லாம செண்டர்ல நின்னு இவங்க கூட மல்லுக் கட்ட முடியுமா சொல்லுங்க?

வெறுத்துப் போய்.. இன்னொரு திரட்டில எட்டிப் பார்த்தா "நீங்களும் வெட்டியான் ஆகலாம்".. அலறிட்டேனுங்க. என்னய்யா சொல்லுதீக..? உயிர் இருக்கா இல்லியான்னே இன்னும் கன்ஃபார்ம் ஆகல. அதுக்குள்ள நான் வெட்டியான் கோர்ஸ் படிச்சு எனக்கே கொள்ளி வைக்கணுமா.. அடங்கொன்னியான்னு..

ஹார்ட் கன்னாபின்னான்னு அடிக்குதுங்க.. எத சாப்ட்டா பித்தம் தெளியும்னு.. கழுத கெட்டா குட்டிச்சுவரு.. திரும்பவும் சந்திரமுகி பக்கத்தில எட்டிப் பார்த்தா.. நம்ம பிரதர் லவ்டேல் மேடி 'மீண்டும் மலர்வாய்' அப்டின்னு திருவாய் மலர்ந்தருளி இருந்தாங்க. உஸ்ஸ்ஸப்பா.. சுடுகாட்டில விறகு தேடிக்கிட்டிருந்த என்னோட உசிருக்கு.. அப்போதானுங்க உடல் வந்திச்சு.. (அட எப்பவுமே உசிர் வந்திச்சுதானா.. வித்யாசமா திங்க் பண்ணுங்கப்பா நம்மள மாதிரி ஹிஹி..).

நாம் பட்ட துன்பத்த மத்தவங்க கிட்ட சொல்லி துன்பப் படுத்தலைன்னா நாம உயிரோட இருக்கிறதுக்கு (அப்பாடா ரீகன்ஃபார்ம்ட்டு) என்ன அர்த்தம் சொல்லுங்க...! அதான் கிளம்பிட்டேன்யா.. கிளம்பிட்டேன்.. வர்ட்டா...டாட்டா.. ஜூட்டு....!

_______

28 ஊக்கம்::

ஆரூரன் விசுவநாதன் said...

//நாம் பட்ட துன்பத்த மத்தவங்க கிட்ட சொல்லி துன்பப் படுத்தலைன்னா நாம உயிரோட இருக்கிறதுக்கு (அப்பாடா ரீகன்ஃபார்ம்ட்டு) என்ன அர்த்தம் சொல்லுங்க...! அதான் கிளம்பிட்டேன்யா.. கிளம்பிட்டேன்.. வர்ட்டா...டாட்டா.. ஜூட்டு....!//


ரொம்ப கரீட்டு.....

R.Gopi said...

அட... டைட்டில் வாழ்க்கை தத்துவத்தை அப்படியே சொல்கிறதே என்று வந்து பார்த்தால்... யப்பா....

மெய்யாலுமே டெர்ரர் மேட்டர் தான்...

இன்னா, வர வர லகலகவோட யூஷுவல் பன்ச் கொறையுதே... அது கிட்டயே சொல்லிடுவோம்...

அப்புறம் லகலக பாடு...

ஈரோடு கதிர் said...

ஞான் போட்டு அழுதிட்டிருக்கிற போட்டோவுக்கு இப்போதான் அர்த்தம் தெரிஞ்சுது...

கடைசியா எப்படியோ நம்மூரு லவ்டேல் மேடி 'மீண்டும் மலர்வாய்' னு உங்கள காப்பாத்திட்டாருங்க

vasu balaji said...

யம்மாடி! இது தாங்குமா. வரிக்கு வரி இப்படி லொல்லு பண்ணா மனுசன் என்னாறது? லிங்க் டைடில்லயே லொல்லு பண்ணி அவ்வ்வ்வ். வேலை இருக்குது. ஓடணும். வந்து வரிக்கு வரி விமரிசனம் பார்க்குறேன். இதத்தான் உக்காந்து யோசிக்கிறதுங்கறதோ?

Unknown said...

எனக்கொரு எமன் வரமாட்டேங்கிறான்னு சொல்லிகிட்டே எங்க ஊர்க்கிழவி ஒன்னு எல்லா சாவு வீட்டுக்கும் போயிட்டு வரும். ( இதுவும் உங்க ரீகன்பார்ம்டு கோஷ்டி தானோ ). இந்த கோஷ்டி மக்களப்புடிக்க எமனே வந்தாலும் பின்னூட்டம் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பான்ல..

இராகவன் நைஜிரியா said...

இப்போதைக்கு ஓட்டுப் போட்டாச்சு. மீதிய அப்பால வச்சுகிறேன்.

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

//நாம் பட்ட துன்பத்த மத்தவங்க கிட்ட சொல்லி துன்பப் படுத்தலைன்னா நாம உயிரோட இருக்கிறதுக்கு (அப்பாடா ரீகன்ஃபார்ம்ட்டு) என்ன அர்த்தம் சொல்லுங்க...! அதான் கிளம்பிட்டேன்யா.. கிளம்பிட்டேன்.. வர்ட்டா...டாட்டா.. ஜூட்டு....!//


ரொம்ப கரீட்டு.....//

இல்லியா பின்னே..

கலகலப்ரியா said...

//R.Gopi said...

அட... டைட்டில் வாழ்க்கை தத்துவத்தை அப்படியே சொல்கிறதே என்று வந்து பார்த்தால்... யப்பா....

மெய்யாலுமே டெர்ரர் மேட்டர் தான்...//

ஹிஹி.. ச்சும்மா...

// இன்னா, வர வர லகலகவோட யூஷுவல் பன்ச் கொறையுதே... அது கிட்டயே சொல்லிடுவோம்...

அப்புறம் லகலக பாடு...//

ஆஹா கண்டு புடிச்சிட்டாய்ங்கையா... வேற ஒண்ணுமில்ல.. தூக்கத்து கிட்ட பயங்கரமா சண்டை போட்டுக்கிட்டே எழுதினது... என்னங்க பண்றது "எழுதலைன்னா தூக்கம் வர மாட்டேங்குது... தூங்கினா எழுத வர மாட்டேங்குது.. " அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... (என்னா தத்துவம்..)

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

ஞான் போட்டு அழுதிட்டிருக்கிற போட்டோவுக்கு இப்போதான் அர்த்தம் தெரிஞ்சுது...//

அவ்வ்வ்வ்... (என்ன அர்த்தமுங்க..?)

// கடைசியா எப்படியோ நம்மூரு லவ்டேல் மேடி 'மீண்டும் மலர்வாய்' னு உங்கள காப்பாத்திட்டாருங்க//

பாருங்க திரும்பவும் கடைசியான்னு சொல்லி பயமுறுத்துறீங்க.. :((...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

யம்மாடி! இது தாங்குமா. வரிக்கு வரி இப்படி லொல்லு பண்ணா மனுசன் என்னாறது? லிங்க் டைடில்லயே லொல்லு பண்ணி அவ்வ்வ்வ். வேலை இருக்குது. ஓடணும். வந்து வரிக்கு வரி விமரிசனம் பார்க்குறேன். இதத்தான் உக்காந்து யோசிக்கிறதுங்கறதோ?//

அந்த லிங்க் எல்லாம் கிளிக் பண்ணி பார்த்த உசிர்ல நீங்களும் ஒண்ணா... ஹெஹெ..

தோடா... நாம எப்போ சார் உக்காந்து யோசிச்சி.. எழுதுறோம்.. பாதி தூங்கிக்கிட்டே எழுதினதுங்க..

கலகலப்ரியா said...

//rajesh said...

எனக்கொரு எமன் வரமாட்டேங்கிறான்னு சொல்லிகிட்டே எங்க ஊர்க்கிழவி ஒன்னு எல்லா சாவு வீட்டுக்கும் போயிட்டு வரும். ( இதுவும் உங்க ரீகன்பார்ம்டு கோஷ்டி தானோ ). இந்த கோஷ்டி மக்களப்புடிக்க எமனே வந்தாலும் பின்னூட்டம் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பான்ல..//

ஆஹா.. சூப்பர் மாட்டருங்க... ! இது எப்டி ரீகன்ஃபர்மேசனு.. சாவு வீட்ல போயி பார்த்து.. சாவுன்னா இதுதான்.. நான் சாவலைன்னு கன்ஃபார்ம் பண்ணுவாய்ங்களோ..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

இப்போதைக்கு ஓட்டுப் போட்டாச்சு. மீதிய அப்பால வச்சுகிறேன்.//

ஆஹா.. நடக்கறது நடக்கட்டு..

Unknown said...

//கலகலப்ரியா said...
//rajesh said...

எனக்கொரு எமன் வரமாட்டேங்கிறான்னு சொல்லிகிட்டே எங்க ஊர்க்கிழவி ஒன்னு எல்லா சாவு வீட்டுக்கும் போயிட்டு வரும். ( இதுவும் உங்க ரீகன்பார்ம்டு கோஷ்டி தானோ ). இந்த கோஷ்டி மக்களப்புடிக்க எமனே வந்தாலும் பின்னூட்டம் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பான்ல..//

ஆஹா.. சூப்பர் மாட்டருங்க... ! இது எப்டி ரீகன்ஃபர்மேசனு.. சாவு வீட்ல போயி பார்த்து.. சாவுன்னா இதுதான்.. நான் சாவலைன்னு கன்ஃபார்ம் பண்ணுவாய்ங்களோ..//

ஒரு வேளை சரியா மண்டயப்போட்டானானு போய் பார்த்து ரிப்போர்ட் குடுன்னு எம்ஸ் அனுப்பிசிருப்பாரோ!.. 'ரீகன்பார்ம்டு அவுட்சோர்சிங் டீம்'..?..

க.பாலாசி said...

தலைப்பெல்லாம் ஒரு கலகலப்புக்குதான். பயப்படாதிங்க...எல்லாரும் எங்கண்ணன் லவ்டெல்மேடி மாதிரி இருப்பாங்களா? cool........

thiyaa said...

ம்.. தலைப்பும் விசயமும் நல்லாயிருக்குது

அன்புடன் அருணா said...

கலகலப்பிரியா கலக்குறீங்க!

சிங்கக்குட்டி said...

ஹ...ஹ...ஹ...மின் அஞ்சல்தான்னு நினைச்சேன் இப்போ பதிவுமா?

ப்ரியமுடன் வசந்த் said...

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு காமெடி ஆகாதுக்கா..

கலகலப்ரியா said...

//rajesh said...

ஒரு வேளை சரியா மண்டயப்போட்டானானு போய் பார்த்து ரிப்போர்ட் குடுன்னு எம்ஸ் அனுப்பிசிருப்பாரோ!.. 'ரீகன்பார்ம்டு அவுட்சோர்சிங் டீம்'..?..
//

ஆ..! இது நம்ம அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாச்சே.. !

கலகலப்ரியா said...

//க.பாலாஜி said...

தலைப்பெல்லாம் ஒரு கலகலப்புக்குதான். பயப்படாதிங்க...எல்லாரும் எங்கண்ணன் லவ்டெல்மேடி மாதிரி இருப்பாங்களா? cool........//

அது செரி..

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

ம்.. தலைப்பும் விசயமும் நல்லாயிருக்குது//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//அன்புடன் அருணா said...

கலகலப்பிரியா கலக்குறீங்க!//

வாங்க அருணா மேடம்..! நன்றிங்க.. !

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

ஹ...ஹ...ஹ...மின் அஞ்சல்தான்னு நினைச்சேன் இப்போ பதிவுமா?//

chain-a solreengannu ninaikkiren..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு காமெடி ஆகாதுக்கா..//

அது செரி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அநியாயத்துக்கு காமடி பண்ணறீங்க ப்ரியா !! சிரிக்க வைக்கறீங்க.. இதுக்கு முன்னாடி இதோட சேர்ந்த பதிவும் படிச்சேன்.. சூப்பர் போங்க.. !! ம்ம்.. என்னையும் உங்க தொண்டி ஆக்கிடுவீங்க போல இருக்கே !!

கலகலப்ரியா said...

//Chandhana said...

அநியாயத்துக்கு காமடி பண்ணறீங்க ப்ரியா !! சிரிக்க வைக்கறீங்க.. இதுக்கு முன்னாடி இதோட சேர்ந்த பதிவும் படிச்சேன்.. சூப்பர் போங்க.. !! ம்ம்.. என்னையும் உங்க தொண்டி ஆக்கிடுவீங்க போல இருக்கே !!//

:O அப்போ.. இன்னும் தொண்டி ஆகலையா..? ச்சே.. என்னோட ப்ரோபகண்டா செரியில்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...:((

நிலாமதி said...

வணக்கம் கலகலப்பிரியா.......சென்ற சில நாட்களுக்கு முன் நானு மொருஇடுகை போட்டேன் அத்ற்குயாராவது பினூட்டம் போட் டாங்க்களா என்று பார்த்தப்போ நீங்களுமொரு தலைப்பு செப்ரம்பேர் மாதத்தில் போட்டு இருக்கிறீங்க. வீடு வரை உறவு .......எனும் பாடலின்கடைசி வரி கடைசி வரை யாரோ ?என் கதை க்கு நல்ல தலைப்பு...இது பற்றி என்ன நினைக்கிறீங்க.? முடிந்தால் என்பக்கம் வருக ....நட்புடன் நிலாமதி .mathinilaa.blogspot.com

கலகலப்ரியா said...

நன்றிங்க நிலாமதி..